எ‌ளிமையாக, ‌மிக ‌விலை‌க் குறை‌ந்த பழமாகவு‌ம் உ‌ள்ளது வாழை‌ப்பழ‌ம். ஆனா‌ல் அத‌ற்கு‌ள்ள மக‌த்துவ‌ங்க‌ள் சொ‌ல்‌லி மாளாதவை. வாழை‌ப்பழ‌த்‌தி‌ன் எ‌ய்‌ட்ஸையே எ‌தி‌ர்‌க்கு‌ம் ஆ‌ற்ற‌ல் இரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல் ஒரு ‌நி‌மிட‌‌ம் உ‌ங்களு‌க்கு ஆ‌ச்ச‌ரிய‌ம் ஏ‌ற்படு‌ம்.

வாழை‌யி‌ல் லெ‌க்டிக‌ன் எ‌ன்ற ச‌ர்‌க்கரையு‌ம், புரோ‌ட்டீனு‌ம் கல‌ந்து ச‌த்து‌ள்ளது. இதை பே‌ன்லே‌க் எ‌ன்று மரு‌த்துவ உலக‌ம் சொ‌ல்‌கிறது.
இது ம‌னித உட‌லி‌ல் செ‌ல்களை உருவா‌க்கு‌ம் ஆ‌ற்ற‌ல் படை‌த்தது. ‌நிறைய தாவர வகைக‌ளி‌ல் இ‌ந்த‌ச் ச‌த்து இரு‌ந்தாலு‌ம், வாழை‌யி‌ல் அ‌திக‌ப்படியாக இரு‌க்‌கிறது.
எனவே எ‌‌ச்.ஐ.‌வி. என‌ப்படு‌ம் எ‌ய்‌ட்‌ஸா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், இ‌ன்த பே‌ன்லெ‌க் ஆனது எ‌‌ய்‌ட்‌‌‌ஸ் வைரஸை சு‌ற்‌றி‌க் கொ‌ண்டு ம‌ற்ற செ‌ல்களு‌க்கு பரவாதபடி பாதுகா‌க்கு‌ம்.
எனவே எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிக‌ள் அ‌திக‌ம் சா‌ப்‌பிட வே‌ண்டிய பழ‌ம் வாழை‌ப் பழமாகு‌ம். இது எ‌ய்‌ட்‌‌‌ஸ் நோயா‌ளிகளு‌க்கு ம‌ட்டு‌ம‌ல்ல ம‌ற்றவ‌ர்களு‌க்கு‌ம் இ‌னி‌ப்பான செ‌ய்‌திதா‌ன


சருமம் பொலிவுடன் விள‌ங்க தினமும் 8 டம்ளர் த‌ண்‌ணீ‌ர் அருந்தவும்.

உட‌ல் கு‌ண்டாவதை‌த் த‌வி‌ர்‌க்க அ‌திகமாக த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்‌தினா‌ல் உட‌ல் எடை கூடாது. உட‌ல் எடை அ‌திகமானவ‌ர்களு‌ம் த‌ண்‌ணீ‌ர் குடி‌த்து வர க‌ணிசமாக உட‌ல் எடை குறைவதை‌க் காணலா‌ம்.
சுடு ‌நீ‌ரி‌ல் எலு‌மி‌ச்சை சாறு கல‌ந்து குடி‌த்து வர அ‌திக‌ப்படியான உட‌ல் எடை குறையு‌ம்.
உணவு சா‌ப்‌பிடு‌ம் போது இடை இடையே கு‌ளி‌ர்‌ந்த ‌நீரை‌ப் பருகுவதை‌த் த‌வி‌ர்‌ப்பது ந‌ல்லது. பொதுவாக சா‌ப்‌பிட‌த் துவ‌ங்கு‌ம் மு‌ன்பு‌ம், சா‌ப்‌பிடு‌ம் போது‌ம் த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்துவதை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்.
வெ‌ளி‌யி‌ல் வெ‌யி‌லி‌ல் செ‌ன்று ‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு வ‌ந்தது‌ம் அ‌திகமாக ‌நீ‌ர் அரு‌ந்த வே‌ண்டா‌ம். ‌விய‌ர்வை சுர‌ப்பது ‌நி‌ன்று கா‌ற்றோ‌ட்டமான இட‌த்‌தி‌ல் இரு‌‌ந்து‌வி‌ட்டு ‌பிறகு த‌ண்‌ணீ‌ர் குடி‌க்கலா‌ம்.
உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்து‌க் கொ‌ள்ள குடி‌நீரை ந‌ன்கு கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் குடி‌க்கவு‌ம்.


சென்னை: 'லஞ்சம் வாங்காதீர்கள்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொது மக்களின் காலில் விழுந்து 'சத்தியாகிரக இயக்கத்தை' சேர்ந்த இளைஞர்கள் நூதன முறையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகில் இளைஞர்கள் சிலர் பொது மக்களின் காலில் விழுந்து லஞ்சம் கொடுக்காதீர்கள், லஞ்சம் வாங்காதீர்கள் என்று துண்டு பிரசுரங்களை வினியோகித்தப்படி காலில் விழுந்தனர்.
ஆண், பெண் , வயது வித்தியாசம் பார்க்காமல் அவர்கள் பொது இடத்தில் மக்கள் காலில் விழுந்தனர்.
இது குறித்து அந்த இளைஞர்கள் கூறுகையில், நாட்டில் வன்முறை , லஞ்சம், சாதி உணர்வு போன்றவற்றை ஒழித்திடவும், நாட்டுப்பற்றை வளர்க்கவும், 2015ம் ஆண்டில் இந்தியாவை வல்லரசாக்கவும், அதற்காக மக்களை ஒருங்கிணைக்கவும், பொது மக்கள் காலில் விழுந்து இந்தியாவெங்கும் இந்த சத்தியாகிரக இயக்க்ததை நடத்தி வருகிறோம் என்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த இயக்கம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


வாஷிங்டன்: இந்தியாவின் பில்கேட்ஸ் அஜீம் பிரேம் என பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.

இந்திய ஐடி துறையில் ஜாம்பவான் நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோவின் நிறுவனர், தலைவர் அஜீம் பிரேம்ஜி. வர்த்தகத்துடன் நில்லாமல் பல சமூக நோக்குத் திட்டங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கெனவே அஜீம் பிரேம்ஜி பவுண்டேஷன் என்ற அமைப்பைத் துவங்கியுள்ளார். இந்த அமைப்பின் சார்பில் இந்தியாவின் 600 மாநிலங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி மைய ஆசிரியர்களுக்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் அளிக்கும் உலகத் தரமான பல்கலைக் கழகம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார், பிரேம்ஜி.
இந்தியப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சியாக, இதனை மேற்கொண்டுள்ளார் அவர். கிட்டத்தட்ட ரூ 450 கோடி செலவு பிடிக்கும் பணி இது. இதற்கான முழு செலவையும் அவரது பவுண்டேஷனே ஏற்கிறது.
அஜீம் பிரேம்ஜியின் இந்த அரிய பணியினை முன்னிலைப்படுத்தி கட்டுரை வெளியிட்டுள்ள ஃபோர்ப்ஸ், இந்தியாவிந் பில் கேட்ஸ் என்றால் அது அஜீம் பிரேம்ஜிதான் என அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எப்படி, தனது வருவாயின் ஒரு பகுதியை தொடர்ந்து சமூக நலப் பணிகள், மருத்துவ சேவைகள் போன்றவற்றுக்கு செலவிட்டு வருவதைப் போலவே, பிரேம்ஜியும் செய்து வருவதாக அக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் அஜீம் பிரேம்ஜியின் பேட்டியும் இடம்பெற்றுள்ளது.
அதில், தனது சொத்துக்களில் பெரும் பகுதியை இதுபோன்ற பணிகளுக்காகவே தந்துவிடப் போவதாகவும், தனது வாரிசுகளுக்கு ஒரு சிறு பகுதியைக் கொடுத்தாலே போதும் என்றும் பிரேம்ஜி குறிப்பிட்டுள்ளார்.
"என் காலத்திலேயே எனது சொத்துக்களின் பெரும் பகுதியை சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காகக் கொடுத்து விடப்போகிறேன். என்னுடைய சொத்துக்களின் ஒரு சிறு பகுதியை மட்டும் என் குழந்தைகளுக்குக் கொடுத்தால் போதும். பல தலைமுறைகளுக்கு அதுவே அவர்களுக்குத் திருப்தியாக இருக்கும்..." என்கிறார் பிரேம்ஜி.
17 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 28 வது பணக்காரராக இருக்கும் அஜீம் பிரேம்ஜிதான், ஆசிய அளவில் இந்த அளவு நற்பணிகளைச் செய்து வரும் ஒரே தொழிலதிபர் என ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தமிழகம் முழுவதும் ஒரு மாதத்துக்கும் மேலாக கடும் வெயில் நிலவியது. இந்நிலையில், குமரி கடல் பகுதியில் இருந்து கடல் காற்று வீசத் தொடங்கியது. இதனால் தென் மாவட்டங்களில் கடந்த வாரம் முதல் மழை பெய்ய தொடங்கியது. தற்போது, வளிமண்டலத்தில் காற்று சுழற்சி ஏற்பட்டு வெப்ப சலனம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 9.4 மிமீ, மீனம்பாக்கத்தில் 10.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. இன்று காலையும் நகரின் பல இடங்களில் தூறல் மழை தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உலகின் அதிகாரமிக்க 100 பேருக்கான இந்த ஆண்டின் டைம்ஸ் பத்திரிகையின் பட்டியலில் பிரதமர் மன்மோகன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த டைம்ஸ் பத்திரிகை, ஆண்டுதோறும் அதிகாரமிக்க உலக பிரபலங்கள் பட்டியலை வெளியிடுகிறது. இந்த ஆண்டின் பட்டியலை அது நேற்று வெளியிட்டது. அதில் பிரதமர் மன்மோகன் சிங், சச்சின் டெண்டுல்கர், தமிழ்நாட்டை சேர்ந்த நம்பெருமாள்சாமி உட்பட 9 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இந்த ஆண்டின் சிறந்த அரசியல் தலைவர்கள் வரிசையில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனசியோ லுலா 1397904493 சில்வா முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவுக்கு 4வது இடம் கிடைத்தது. பிரதமர் மன்மோகன் சிங், 19வது இடத்தில் உள்ளார்.
அவரைப் பற்றி பெப்சி நிறுவன தலைவரும், இந்தியருமான இந்திரா நூயி கூறுகையில், “1991 முதல் 1996 வரை நிதி அமைச்சராக இருந்த மன்மோகன், இந்திய மக்கள் பயன்பெறத் தேவையான நாட்டின் வளங்களை அடையாளம் கண்டார். பிரதமராக இப்போது நாட்டை வழிநடத்திச் செல்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
டாப் 25 வீரர்கள் வரிசையில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு 13வது இடம் கிடைத்தது. வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்டி வரும் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனும் அந்த வரிசையில் உள்ளார்.
டெண்டுல்கர் பற்றி குறிப்பிடுகையில், “சர்வதேச ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த சச்சினுக்கு இந்தியாவில் பல கோடி ரசிகர்களும், உலகில் கணக்கிலடங்கா எண்ணிக்கையில் ரசிகர்களும் உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
டைம்ஸ் வெளியிட்ட முந்தைய பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்து இப்போதும் ஜொலித்து வருவோர் வரிசையில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இடம்பெற்றுள்ளார்.
1976 முதல் இதுவரை சுமார் 36 லட்சம் பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து வரும் தமிழரான அரவிந்த் கண் மருத்துவ மனை டாக்டர் பெருமாள்சாமி நம்பெருமாள்சாமி, பெண் தொழிலதிபர் கிரண் மஜும்தார், டொரான்டோவை சேர்ந்த டாக்டர் ராகுல் சிங் உட்பட மொத்தம் 9 இந்தியர்கள் இந்த ஆண்டு பிரபலங்கள் பட்டியலில் உள்ளனர்.


இதயம் சீராக இயங்கி நோய்களை தவிர்க்க, ரத்தத்தில் இன்சுலின் அதிகரித்து டயபடீஸ் ஆபத்தை குறைக்க திராட்சை சாப்பிடுங்க என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.
திராட்சைப் பழத்தால் உடல்நலனுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். பச்சை, சிகப்பு, கருப்பு ஆகிய பல வண்ணங்களில் கிடைக்கும் திராட்சைகளை பவுடராக மாற்றி எலிகளுக்கு உணவாக கொடுத்து வந்தனர். இன்னொரு எலி குரூப்புக்கு திராட்சைக்கு இணையான கொழுப்பு, சர்க்கரை சத்துள்ள உணவுகளை கொடுத்தனர். 3 மாதங்கள் கழித்து ஆராய்ந்தனர்.
திராட்சையை அதிகளவில் சாப்பிட்டு வந்த எலிகளுக்கு ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. இதயம் சிறப்பாக செயல்பட்டது. இதயம், ரத்தத்தில் எரிச்சல் உணர்வு மறைந்து போயிருந்தது.
இதுபற்றி இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்டீவன் போலிங் கூறுகையில், “பல்வேறு ரக திராட்சைகளின் பவுடரை சாப்பிட்ட எலிகளின் இதய செயல்பாடு முன்னேற்றம் அடையவும், ரத்த அழுத்தம் குறையவும் உடலின் இயக்கத்தில் திராட்சையின் சத்துக்கள் ஏற்படுத்தும் மாற்றமே காரணம்” என்றார்.
ரத்த அழுத்தத்தை சீராகவும், டயபடீஸ் ஆபத்தை குறைக்க விரும்புவோர் திராட்சை உட்பட பழங்களை தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஸ்டீவன் தெரிவித்தார்.


உலக கோப்பை டி20 தொடரில், இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதுகிறது.

மூன்றாவது உலக கோப்பை டி20 தொடர் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதில் 12 அணிகள் பங்கேற்கின்றன. சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதுகிறது. செயின்ட் லூசியா, பியூசெஜோர் ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியில் விஜய், கம்பீர், ரெய்னா, யுவராஜ், யூசுப் பதான், டோனி, ரவீந்திர ஜடேஜா ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் உற்சாகமாகக் களமிறங்குகிறது. ஜாகீர், பிரவீன், நெஹ்ரா வேகத்துடன் ஹர்பஜனின் அனுபவ சுழலும் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும். இவர்களுடன் யுவராஜ், ரெய்னா, பதான், ஜடேஜா ஆகியோரும் சுழற்பந்து வீச்சில் கை கொடுக்கலாம்.
இந்திய வீரர்கள் பலரும், ஐபிஎல் தொடரில் விளையாடி நல்ல பார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், கற்றுக் குட்டி அணியான ஆப்கானிஸ்தானை அலட்சியமாக நினைத்தால் இந்திய அணிக்கு ஆபத்துதான். கொஞ்சம் சறுக்கினாலும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேற வேண்டியிருக்கும்.
2007ல் நடந்த முதலாவது உலக கோப்பை டி20 தொடரில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. நவ்ராஸ் மங்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி எந்தவித எதிர்பார்ப்பும், நெருக்கடியும் இல்லாமல் களமிறங்குகிறது.
அந்த அணியின் பயிற்சியாளர் கபிர் கான் கூறுகையில், ‘எங்கள் அணி வீரர்கள் பற்றி யாருக்கும் அதிகம் தெரியாது. அதுவே சாதகமான அம்சம்தான். ஆனால், இந்திய அணி வீரர்களின் ஆட்ட முறையை நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம். ஐபிஎல் தொடரில் அவர்கள் விளையாடியதை கவனித்து, அதற்கேற்ப வியூகங்கள் வகுத்துள்ளோம். வெற்றிக்காகப் போராடுவோம்’ என்றார்.
தொடக்க வீரர் கரிம் சாதிக், அதிரடி பேட்ஸ்மேன் நூர் அலி ஸர்டான் இருவரும் இந்திய பந்துவீச்சை சிதறடிக்க காத்திருக்கின்றனர். நூர் அலி முதல் தர அறிமுக போட்டியின் 2 இன்னிங்சிலும் சதம் விளாசியுள்ளார். ஹமித் ஹசன், ஷபூர் ஸத்ரான் வேகப்பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.
முன்னாள் சாம்பியனும், அறிமுக அணியும் மோதும் இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான்
நவ்ராஸ் மங்கள் (கேப்டன்),
அஸ்கர் ஸ்டானிக்ஸாய், தவ்லத் அகமத்ஸாய், ஹமித் ஹஸன், கரிம் சாதிக், மிர்வாய்ஸ் அஷ்ரப், முகமது நபி, முகமது ஷாஷத், நஸ்ரதுல்லா, நூர் அலி, ரயீஸ் அகமதுஸாய், சமியுல்லா ஷென்வாரி, ஷபீர் நூரி, ஷபிகுல்லா, ஷபூர் ஸத்ரான்.
இந்தியா
டோனி (கேப்டன்),
கம்பீர், விஜய், ரெய்னா, யுவராஜ், யூசுப் பதான், ரோகித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஹர்பஜன், பியுஷ் சாவ்லா, ஜாகீர் கான், பிரவீன் குமார், ஆசிஷ் நெஹ்ரா, வினய் குமார்.


 சென்னையில் மேலும் பத்தாயிரம் ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓட அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இப்போது 52 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன.
இதைவிட சிறிய பெரு நகரங்களான பெங்களூரில் 78 ஆயிரம், ஹைதராபாதில் 64 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடும்போது சென்னையின் ஜனத்தொகைக்கு இன்னும் அதிகமான ஆட்டோக்களை அனுமதிக்கலாம் என சட்டப் பேரவையில் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்த கருத்தை மறுப்பதற்கில்லை.
மெரினா கடற்கரை, கூவம் நதி ஆகியவற்றுக்கு நிகராக சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக உலகப் புகழ் பெற்றது ஆட்டோ ரிக்ஷா. ஒருமுறை பயணித்தால் போதும், வாழ்வில் என்றும் மறக்க முடியாத அனுபவமாக மாற்றும் ஆற்றல் மிகுந்தவர்கள் நமது ஆட்டோ டிரைவர்கள். லட்சக்கணக்கான நடுத்தர மக்களை பைக் அல்லது கார் வாங்க தூண்டியதில் இவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. அழைக்கும் இடத்துக்கு வருவதிலும், கட்டணம் கேட்பதிலும், விதிகளை மதிப்பதிலும் சென்னை டிரைவர்கள் அனுபவிக்கும் வானளாவிய சுதந்திரம் ஏனைய பெருநகரங்களில் இதே தொழிலில் ஈடுபட்டுள்ள உழைப்பாளிகளை பொறாமையில் புகைவிட வைக்கிறது.
மற்ற பிரிவினரை போல இவர்களையும் கட்டுக்குள் கொண்டுவர அரசுகள் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத சூழலில், புதிய ஆட்டோக்கள் குறித்த அறிவிப்பு வந்திருக்கிறது. தேவைக்கு ஏற்ப அல்லது அதிகமாக சப்ளை இருந்தால் விலை குறையும் என்பது பொருளாதாரம். ஆட்டோ தொழிலில் போட்டி அதிகமானால் அதிக கட்டணம் கேட்க மாட்டார்கள் என்று அமைச்சர் நம்புகிறார். அது சாத்தியமே.
அரசின் முடிவு, நெரிசலான சென்னை சாலைகளில் பயணிகள் நிலைமையை இன்னும் பரிதாபமாக்கிவிடும் என்று சிலர் விமர்சிக்கின்றனர். கார், பைக், பஸ், லாரிகள் எல்லாம் போக்குவரத்து விதிகளை மதித்து இயங்குவது போலவும், ஆட்டோ டிரைவர்கள் மட்டுமே அடாவடியாக ஓட்டி பிரச்னை ஏற்படுத்துவது போலவும் பேசுவதில் உண்மை இல்லை. வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் பிடியிலிருந்து ஆட்டோ பெர்மிட்டை விடுவித்து, தகுதியுள்ள இளைஞர்கள் தேர்வு செய்யக்கூடிய தொழிலாக இது மாறுமானால் சென்னையின் சாலைகளில் இதுவரை கண்டிராத ஒழுங்கு நிலைபெற வழி பிறக்கும். நகரின் பெருமையை மீட்டெடுக்கும்.


மேற்கிந்திய தீவுகளில் இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட்டை முன்னிட்டு நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தானையும் ஜிம்பாப்வே அதிர்ச்சித் தோல்விஉறச்செய்தது.

முன்னதாக ஆஸ்ட்ரேலியாவிற்கு ஜிம்பாப்வே அதிர்ச்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செயிண்ட் லூசியாவில் நேற்று நடைபெற்ற இந்த பயிற்சி ஆட்டத்தில் ஜிம்பாப்வேயிடம் பாகிஸ்தான் தர்மசங்கடமான 12 ரன்கள் தோல்வியைத் தழுவியது.
64/5 என்று இருந்த நிலையில் ஜிம்பாப்வேயிற்கு மீண்டும் எல்டன் சிகும்பரா வாழ்வு அளித்தார். அவர் 35 பந்துகளில் 49 ரன்களை விளாச அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்தது.
இலக்கைத் துரத்தியபோது துவக்க வீரர் கம்ரன் அக்மல் 4 சிக்சர்களுடன் 27 பந்துகளில் 37 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ஆனால் பாகிஸ்தான் முன்கள வீரர்கள் சொதப்பியதால் கம்ரன் அவுட்டாகும்போது 10 ஓவர்களில் 67/5 என்று ஆனது பாகிஸ்தான்.
அதன் பிறகு ஃபவாத் ஆலம், மிஸ்பா இணைந்து 7.4 ஓவர்களில் 51 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் பிராஸ்பர் உத்சேயா இருவரையும் 3 பந்துகள் இடைவெளியில் பெவிலியன் அனுப்பிவைத்தார். இதன் மூலம் உத்சேயா 15 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார்.
118/5 என்று இருந்த பாகிஸ்தான் உடனடியாக 124/9 என்று ஆனது கடைசியில் 131 ரன்களுக்கு சுருண்டது.
சிகும்பரா பந்து வீச்சிலும் அசத்தி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


சிங்கப்பூர் விமானத்தில் வந்த பயணியின் இரண்டரை கிலோ தங்கத்தை ஜட்டிக்குள் வைத்து கடத்திக்கொடுக்க முயன்ற விமான நிலைய ஊழியர் பிடிபட்டார்.

சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வந்தது. பயணிகளின் பொருட்களை குடியுரிமை அதிகாரிகள் சோதித்தனர். அப்போது, ஜெட் லைட் விமானத்தில் லோடராக பணியாற்றும் கணேசன் (26) வரிசையில் நின்றார். “உனக்கு இங்கே என்ன வேலை“ என்று அதிகாரிகள் கேட்டபோது சரியான பதிலை கூற முடியாமல் திணறினார். இதனால் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்றனர். பேன்ட், சர்ட்டுகளை கழற்றியபோது ஜட்டிக்குள் பெரிய பார்சலை பதுக்கிவைத்திருப்பது தெரிந்தது.
அவற்றை பிரித்தபோது ரூ.36 லட்சம் மதிப்புடைய இரண்டரை கிலோ புத்தம்புதிய செயின்கள், மோதிரங்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கணேசன் கூறுகையில், “ சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணி இந்த தங்கத்தை கொடுத்தார். விமான நிலையத்துக்கு வெளியே கொண்டுவந்து கொடுத்தால் 5 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார். இதனால் ஜட்டிக்குள் வைத்து கடத்தினேன்” என்றார்.
இதையடுத்து, கணேசன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் வந்த பயணி யார், கணேசனுக்கும் அவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருக்கிறதா? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
விமான நிலையத்தில் வேலை செய்யும் ஊழியரே தங்கம் கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னை விமான நிலையத்தில் அதிநவீன ராடார் கருவி அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம், குளிர்காலத்தில் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்படும் நிலை இனி ஏற்படாது.

இந்தியாவை பொறுத்த வரையில் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் விமானப் பயணிகளுக்கு சோதனைக் காலமாகும். பனிமூட்டம், மோசமான வானிலை காரணமாக விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் கடும் சிக்கல் ஏற்படும். இதனால், அருகில் உள்ள மற்ற விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். பனிமூட்டத்தால் பல விமானங்கள் ரத்து செய்யப்படும். இது காலம், காலமாக நடந்து வரும் சம்பவமாகும். இதிலிருந்து சென்னை விமான நிலையம் மட்டும் விதிவிலக்காக மாற உள்ளது.
மேலை நாடுகளைப் பொருத்தவரையில், பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இதற்கு காரணம், அங்குள்ள விமான நிலையங்களில் ‘சர்பேஸ் மூவ்மென்ட் கைட்னஸ் கன்ட்ரோல் சிஸ்டம்’ என்ற அதிநவீன கருவி அமைக்கப்பட்டிருக்கும். இந்த கருவியை, இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை விமான நிலையத்தில் அமைக்க விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அனுமதியும் கிடைத்து விட்டது.
‘சர்பேஸ் மூவ்மென்ட் கைட்னஸ் கன்ட்ரோல் சிஸ்டம்’ என்பது, தரைவழிப் போக்குவரத்தை கண்காணிக்கும் ஒரு அதிநவீன ராடார். இந்த கருவி விமான ஓடுபாதையில் அமைக்கப்படும். பிறகு, விமான கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து கருவி இயக்கப்படும். தற்போது, ஓடுபாதையில் பனிமூட்டம் தென்பாட்டாலே, விமானத்தை இயக்க முடியாது என்று அறிவிக்கப்படுகிறது. விமானம் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
ஆனால், சர்பேஸ் ராடார் கருவி பொருத்தப்பட்ட பின்பு, சுமார் 100 மீட்டர் தூரம் வரை ஓடுபாதையில் எவ்வளவு பனிமூட்டம் இருந்தாலும், பனியின் அடர்த்தி என்ன என்பதை அறிந்து, அதையும் ஊடுருவி ஓடுபாதை தெளிவாக தெரிவதற்கு வழிவகுக்க முடியும். எனவே, பனிமூட்டம் காரணமாக விமானம் புறப்படுவது, தரையிறங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
சர்பேஸ் ராடார் கருவி இங்கிலாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதன் விலை சுமார் ரூ.5 கோடியாகும். இதை, சென்னை விமான நிலையத்தில் அமைக்கும் பணி வரும் ஜூன் மாதம் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால், வரும் மழைக்காலம், குளிர்காலத்தில் எவ்வளவு பனிமூட்டம் இருந்தாலும், மேலை நாடுகளைப் போல சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்காது என்று விமான நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நவீன காலத்துக்கு ஏற்றாற்போல், சென்னை விமான நிலையம் அதிநவீன மயமாக்கப்பட்டு வருவது பயணிகளுக்கும், விமான நிறுவனங்களுக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கூடுதல் பாதுகாப்பு வசதி
‘சர்பேஸ் மூவ்மென்ட் கைட்னஸ் கன்ட்ரோல் சிஸ்டம்’ கருவி பனிமூட்டத்தை கட்டுப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், கூடுதல் பாதுகாப்பு வசதியையும் ஏற்படுத்தக்கூடியது. இந்த கருவி மூலம், விமானத்தில் ஏற்றப்படும் பொருட்களில் என்ன இருக்கிறது, ஆபத்தான, அபாயகரமான பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை கண்காணிக்க முடியும். இதனால், விமானத்துக்கும், விமான பயணிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே முதல் முறையாக அமைக்கப்படுகிறது


உஷார் மக்களே உஷார்
தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் பல தரப்பட்ட மோசடி பேர் வழிகள் குறுக்கு வழிகளில் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.போன் மூலமாகவும்,பேப்பர்கலில் விளம்பரம் மூலமாகவும் மக்களை கவர்ச்சி வலைகளில் விழ வைக்கிறார்கள்.பிரபலமான கம்பனிகளில் வேலை வாங்கி தருவதாகவும்,மற்றும் அரசு துறை நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும்
அதற்க்கு முன் பணமாக DD எடுத்து போலி முகவரிகள் கொடுத்து அந்த முகவரிக்கு DD களை அனுப்புமாறு கேட்கிறார்கள்.
அப்புறம் மொபைல் போன்களில் SMS முலமாக உங்களுக்கு பரிசு அடித்துள்ளது என்று மெசேஜ் அனுப்பி அதன் மூலமாகவும் ஏமாற்றுகிறர்கள்.
இதில் அதிகம் ஏமாறுகிறவர்கள் நன்கு படித்த இளையோர் தான் எனவே இது மாதிரி யாராவது உங்களை தொடர்பு கொண்டால் உடனே கூகுள் வெப்சைட் சர்ச் செய்து அந்த கம்பெனி அல்லது அந்த விஷயம் உண்மைதானா? என்று செக் செய்த பின்பு தான் அதனுடன் தொடர்பு வைக்கவும்
கவனமாக இருக்கவும்.
இது மாதிரி யாரும் பாதிக்கபட்டுரிந்தால் பின்னுட்டமிடவும்
இது சம்பந்தமான் கருத்துக்களை எங்களுடன் BLOG முலமாக பகிர்ந்து கொள்ளவும்.
http://iwwh.blogspot.com/2010/02/dont-send-dds-to-gci-enterprises-and.html
மேற்கண்ட லிங்கில் சர்ச் செய்யவும்


உலகின் மிக அழகான நடிகைகள் பட்டியலில் ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் முதலிடம் பிடித்தார்.  அழகு
சர்வதேச பிரபல பத்திரிகையான ‘பீப்பிள்’, ஆண்டுதோறும் சிறப்பு இதழை வெளியிடுகிறது. அதில் உலகின் அழகான நடிகைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி முடிவை அறிவிக்கிறது. முதலிடம் பிடிப்பவரை அட்டைப் படத்தில் இடம்பெறச் செய்து கட்டுரையையும் வெளியிடுகிறது.
இந்த ஆண்டின் சிறப்பிதழ் வெளியாகியுள்ளது. அதில் உலகின் மிக அழகான நடிகையாக ஜூலியா ராபர்ட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். பீப்பிள் பத்திரிகையின் ஆண்டு சிறப்பிதழில் ஜூலியா இடம் பிடிப்பது இது 12வது முறையாகும். இப்போது 42 வயதாகும் ஜூலியாவுக்கு 5 வயதில் இரட்டைக் குழந்தைகளும், 2 வயது மகனும் உள்ளனர்.
இந்த ஆண்டின் அழகிய நடிகை பட்டியலில் 2வது இடத்தை ஹேலே பெரியும், 3வது இடத்தை ஏஞ்சலினா ஜூலியும் பிடித்தனர். ஜெனீபர் லோபசுக்கு 4வது இடம் கிடைத்தது. இயக்குனர் கேரி மார்ஷலின் ‘ப்ரெட்டி உமன்’ என்ற படம்தான் ஜூலியாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவரைப் பற்றி கேரி கூறுகையில், “எனது படத் தலைப்புக்கு ஏற்ப ஜூலியா ஒரு பேரழகி. இப்போது ஒரு தாயாக அமைதியான, பதட்டமில்லாத வாழ்க்கையை கொண்டுள்ளார்” என்றார்.
‘எரின் ப்ரோக்கோவிச்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்ததற்காக ஜூலியா ராபர்ட்ஸ் 2001ல் ஆஸ்கர் விருது பெற்றார். ‘ஈட், ப்ரே, லவ்’ என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். ஆகஸ்ட் மாதத்தில் அந்தப் படம் வெளியாகிறது. அழகிய நடிகைகள் பட்டியலில் ஜெனீபர் அனிஸ்டன், பியான்ஸ் நோலஸ், பிராட்லி கூப்பர், பேட்ரிக் டெம்சேவும் இடம்பெற்றுள்ளனர்.


 ஜேம்ஸ்பாண்ட் படங்களை பார்க்கும்போது உலகத்திலேயே ஜாலியான வேலை உளவாளியாக இருப்பதுதான் என்று தோன்றும். மது, மாது, பணம், சூப்பர் கார் என்று வாழ்க்கையின் அத்தனை சுகங்களையும் அனுபவிப்பான் 007. உண்மையில் அப்படி கிடையாது. சுத்தமாக போரடிக்கும் வேலை அது.
மாதுரி குப்தா மாதிரி உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு எதிரி நாட்டுக்கு உளவு சொல்வது அந்த வகையில் சேராது. இது பகுதிநேர பணி. கவுரவம் இல்லாத வேடம். பெண்களை உளவாளியாக பயன்படுத்துவது உலகப் போருக்கு பின்னர் வல்லரசுகள் கையிலெடுத்த உத்தி. இளம்பெண்ணாக வேலைக்கு எடுத்து பயிற்சி அளிப்பதில்லை. நடிகை, டான்சர், இசைக்கலைஞர், விளையாட்டு வீரர் என்று ஏதோ ஒரு துறையில் திறமையானவராக தேர்வு செய்வார்கள். தேசப்பற்று, நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமை என்றெல்லாம் மூளைச்சலவை செய்வார்கள். அப்புறம் வழி சொல்லிக் கொடுத்து வசதிகளும் செய்து தருவார்கள். வரி கட்ட தேவையில்லாத வருமானம் கிடைக்கும் என்றால் யாருக்குதான் கசக்கும்? மாட்டிக் கொண்டால் என்ன சொல்லி தப்பலாம் என்பதையும் முதலிலேயே உருவேற்றி இருப்பார்கள்.
இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் செயலாளராக இருந்தவர் மாதுரி. உருது பத்திரிகைகளை படித்து நமக்கு பயன்படக்கூடிய செய்திகளை மொழிமாற்றம் செய்து தருவது அவருக்கு தரப்பட்ட பணி. பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதில் விழுந்துவிட்டார். ஆறு ஆண்டுக்கு முன்பே மாதுரி மதம் மாறிவிட்டதாக பாகிஸ்தான் பத்திரிகை சொல்கிறது. ஆறு மாதம் முன்னால் அவர் மீது நமது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்து கண்காணித்திருக்கிறார்கள். மாட்டிக் கொண்டதும் தவறான தகவல்களை சொல்லி திசை திருப்ப பார்க்கிறார்.
மேலதிகாரிகள் அவமதித்த கோபத்தில் எதிரிக்கு வேவு பார்த்ததாக கதை அளக்கிறார். எதிரி நாடுதான் என்றில்லை, நட்பு நாடுகளும் நமது அதிகாரிகளை வளைத்துப் போட்டு உளவாளிகளாக மாற்றுகின்றன. சந்தேக நிழல் விழும்போது ‘காணாமல்’ போவார்கள். அதாவது, வேறு பெயரில் சம்பந்தப்பட்ட நாட்டின் பிரஜையாக மாறியிருப்பார்கள். அப்படி 9 பேரின் பெயர்கள் பிரதமர் பார்வைக்கு போயிருப்பதாக தகவல். இது களையெடுக்கும் காலம்.


அடுத்த 15 ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையில் சீனாவை இந்தியா மிஞ்சிவிடும் என பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் அறிக்கை கூறுகிறது.
‘எமர்ஜிங் மல்டிநேஷனல்ஸ்’ என்ற பெயரில் வெளியாகி உள்ள இந்த அறிக்கையில் அடுத்த 2024ம் ஆண்டுக்குள் 2,200 இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளன. உலகமயமாக்கல், தகவல் தொழில்நுட்பப் புரட்சி காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகளை திறப்பது அதிகரித்துள்ளது. என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கட்டிய ஐ.என்.எஸ். ஷிவாலிக் கடற்படையில் சேர்ப்பு
எதிரிகளின் ரேடார்களில் சிக்காமல் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடிய இந்தியாவின் முதல் அதிநவீன போர் கப்பலான ‘ஐ.என்.எஸ். ஷிவாலிக்’, கடற்படையில் சேர்க்கப்பட்டது.
இந்திய கடற்படை நவீனப்படுத்தப்பட்டு, போர் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து போர் கப்பல்கள் வாங்கப்பட்ட நிலைமை மாறி, இப்போது உள்நாட்டு தொழில்நுட்பத்தில் அதிநவீன போர் கப்பல்களை கட்டும் திறனை இந்தியா பெற்றுள்ளது.
எதிரிகளின் ரேடார்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகளின் கண்ணில் சிக்காமல், மாயாவி போல் ஊடுருவித் தாக்குதல் நடத்தக் கூடிய அதிநவீன போர் கப்பல்களை (ஸ்டீல்த் பிரிகேட்ஸ்) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கட்டும் திறனை அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகள் மட்டுமே இப்போது பெற்றுள்ளன.
இதுபோன்ற கப்பலை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, மும்பையில் உள்ள மஜ்காவ் கப்பல் கட்டும் தளத்தில் 3 கப்பல்களை கட்டும் பணி தொடங்கியது. அதில், ‘ஐ.என்.எஸ். ஷிவாலிக்’ என்ற போர் கப்பல் ரூ.2,300 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தலைமையில் மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில் இந்த போர் கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட்டது.
இதன் மூலம், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ‘ஸ்டீல்த்’ ரக போர் கப்பல் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இந்த கப்பல் 6,100 டன் எடையும், 142.50 மீட்டர் நீளமும் 16.9 மீட்டர் அகலமும் கொண்டது. விமானங்களையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும் தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகளை வீசும் வசதியை பெற்றது. ஹெலிகாப்டரையும் தாங்கிச் செல்லக் கூடியது. இந்த கப்பலில் 35 அதிகாரிகள் உட்பட 257 பேர் பணியில் இருப்பார்கள்.
ஷிவாலிக்கை தொடர் ந்து இதே ரகத்தில் ஐ.என்.எஸ். சத்புரா, ஐ.என்.எஸ். சயாத்ரி ஆகிய போர் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவை இந்த ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளன.
ஏ.கே.அந்தோணி பேச்சு
கடல் பகுதி பாதுகாப்பு
சவாலாக மாறிவிட்டது
மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் ஏ.கே. அந்தோணி பேசியதாவது:
நாட்டின் கடற்பகுதி கடந்த காலத்தில் அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளது. மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, இந்திய பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பால் நம்மை சுற்றியுள்ள கடற்பகுதி பாதுகாப்பு சூழ்நிலை பதற்றமானதாக உள்ளது. கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நாட்டின் வர்த்தக கப்பல் போக்குவரத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு எந்த ஒரு சூழ்நிலையையும் சந்திக்க இந்திய கடற்படை தயாராக இருக்க வேண்டும். கடல் பகுதி பாதுகாப்பு சவாலாக மாறி விட்டது.
இவ்வாறு அந்தோனி பேசினார்.


ஐசிசி உலக கோப்பை டி20 தொடர், வெஸ்ட் இண்டீசில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் இலங்கை & நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

மூன்றாவது உலக கோப்பை டி20 போட்டி, வெஸ்ட் இண்டீசில் ஏப்.30 முதல் மே 16 வரை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், முன்னாள் சாம்பியன் இந்தியா உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலக கோப்பையில் களமிறங்குகிறது.
தென் ஆப்ரிக்காவில் நடந்த (2007) முதலாவது உலக கோப்பை டி20 தொடரில், டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 2வது உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி கோப்பையை தட்டிச் சென்றது. வெஸ்ட் இண்டீசில் நடக்கும் 3வது தொடரில் கோப்பையை வெல்ல கடும் போட்டி நிலவுகிறது.
டி20 போட்டியில் ஒரு சில ஓவரில் ஆட்டத்தின் முடிவு தலைகீழாக மாறிவிடும் என்பதால், எல்லா அணிகளுக்குமே சம வாய்ப்பு உள்ளது. மொத்தம் உள்ள 12 அணிகளும், தலா 3 அணிகள் கொண்ட 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நடக்கும் லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இதில் தலா 4 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளில் மீண்டும் லீக் ஆட்டங்கள் நடக்கும்.
இ மற்றும் எப் பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டி மே 16ம் தேதி நடக்கவுள்ளது. எல்லா அணிகளிலுமே அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகம் உள்ளதால், இந்த தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இரவு 10.30 மணிக்கு நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை & நியூசிலாந்து (பி பிரிவு) அணிகளும், அதிகாலை (மே 1) 2.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் & அயர்லாந்து அணிகளும் மோதுகின்றன.
சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நாளை இரவு 7 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. அடுத்து, பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்க அணியுடன் நாளை மறுநாள் விளையாடுகிறது. ஆப்கானிஸ்தானை மட்டும் வென்றால் கூட, இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவது உறுதி.
இந்த தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் டோனி கூறுகையில், ‘கற்றுக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானை எளிதாக எடை போட மாட்டோம். கவனமாக விளையாடி வெற்றி பெறுவோம். ஐபிஎல் தொடரில் விளையாடியது நல்ல பயிற்சியாக இருந்தது. எல்லா வீரர்களும் நல்ல பார்மில் இருப்பதால், மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றுவோம்’ என்றார்.
நேரடி ஒளிபரப்பு


ஏப். 30 & மே 8: ஸ்டார் கிரிக்கெட்

மே 9 & மே 16: இஎஸ்பிஎன்


குஜராத்தில் 65 ஆண்டுகளாக உணவு, தண்ணீர் இல்லாமல் வாழும் அதிசய மனிதர்
மருத்துவர் குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் சுதிர் ஷா என்பவர் கூறுகையில், ‘‘பிரகலாத் ஜானியின் சிறுநீரகத்தில் சிறுநீர் உற்பத்தியாகிறது. அதே நேரம், அதை அவர் தனது திறன் மூலம் உடலுக்குள் மறு சுழற்சி செய்கிறார். யோகக் கலை மூலம் இதுபோன்று அவர் செய்து வருவதாகக் கருதுகிறோம். இதுபற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். பிரகலாத் ஜானியை முழுமையாக பரிசோதித்து உண்மைகளை தெரிந்து கொண்ட பின் மக்களுக்கு சொல்வோம்’’ என்றார்.
குஜராத்தில் 65 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் வாழ்ந்து வருகிறார் பிரகலாத் ஜானி என்ற 82 வயது முதியவர். இவரை பரிசோதித்து வரும் டாக்டர்கள் குழுவினர் வியப்படைந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் பிரகலாத் ஜானி. இவர் கடந்த 65 ஆண்டுகளாக உணவு சாப்பிடுவதில்லை என்றும் தண்ணீர் குடிப்பதில்லை என்றும் கூறுகிறார். இதைத் தொடர்ந்து, ராணுவ மருத்துவமனையைச் சேர்ந்த 35 டாக்டர்கள் கொண்ட குழுவினர் பிரகலாத் ஜானியை சோதித்தனர். பிரகலாத் சொல்வது உண்மைதான் என்றும் உணவும் தண்ணீரும் அவர் உட்கொள்வதில்லை என்றும் சோதனையில் டாக்டர்கள் உணர்ந்து கொண்டனர்.
ஆனால், உணவும் தண்ணீரும் இல்லாமல் பிரகலாத் ஜானி எப்படி உயிர் வாழ்கிறார் என்பதை டாக்டர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரைத் தொடர்ந்து கண்காணித்தும் பரிசோதித்தும் வரும் டாக்டர்கள், இது ஒரு மருத்துவ அதிசயம் என்று கூறுகின்றனர்.
உணவு சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் பிரகலாத் ஜானி எப்படி வாழ்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ராணுவ மருத்துவமனை டாக்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஜானி கடைபிடிக்கும் வழிகளைக் கையாண்டு பசியையும் தாகத்தையும் வென்று விட்டால் போர் முனையில் வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.


தங்கள் மார்பகம் பெரிதாக இல்லையே என கவலைப்படும் பெண்கள் ஏராளம். இந்நிலையில், சோயா பீன்ஸ் உட்பட எளிய உணவு பழக்கம் மூலம் மார்பகத்தை பெரிதாக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிய மார்பகம் கொண்ட பெண்கள் தன்னம்பிக்கை இழக்கின்றனர். மார்பகத்தைப் பெரிதாக்கும் வழிகளை ஆராய்கின்றனர். இதற்குத் சில அறுவை சிகிச்சை முறைகள் இருந்த போதிலும் அதற்கான செலவு அதிகமாவதால் பலருக்கு எட்டாக் கனியாகி விடுகிறது.
மார்பகம் பெரிதாக இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைவது ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன். குறிப்பாக, பெண்கள் பருவம் அடையும் வயதில் இந்த ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும். இந்த நேரத்தில்தான் மார்பக வளர்ச்சி ஏற்படுகிறது. ஒருவேளை ஹார்மோன் குறைவாக சுரந்தால் மார்பகம் சிறிதாகி விடுகிறது. பெரும்பாலான பெண்கள் குறிப்பிட்ட வயதுக்கு முன்னதாகவே பூப்பெய்தி விடுவதாலும் மார்பக வளர்ச்சி தடைபடுகிறது.
எனவே, இளம் வயதில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவை அதிகரிக்கும் உணவை உட்கொள்வதன் மூலம் இயற்கையாக மார்பகத்தை பெரிதாக்கிக் கொள்ள முடியும். அதாவது, ஆளி விதை, சோயா பீன்ஸ் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்த ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இதன்மூலம் இளம் வயதிலேயே தேவையான அளவு மார்பக வளர்ச்சியைப் பெற முடியும்.
மார்பகத்தை பெரிதாக்கிக் கொள்ளும் ஆர்வத்தில் அளவுக்கு அதிகமாக அவற்றை சாப்பிடக் கூடாது. அதனால் மற்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்


பெரும்பாலான புராணங்களில் அசுரர்களின் அட்டகாசத்தால் தேவர்கள் இன்னலுறுவதும் இறை அவதாரங்களால் அசுரர்கள் அழிக்கப்படுவதுமாக இருக்கும். தேவர்கள் இறைவனின் திருவடி பரவி, தோத்திரங்களால் அர்ச்சித்து வழிபடுவர். அவ்வாறு தேவர்கள் வழிபட்ட தலம் யாவும் கோயில்களாக மலர்ந்திருக்கும். இதற்கு மாறாக கந்தனிடம் போரிட்ட ஒரு அசுரனுக்கும் கோயில் உள்ளது. ஆம், அந்த ஆலயம் இருப்பது பழநியில்தான். எப்படி உருவாயிற்று இந்த ஆலயம்?
அந்த அசுரனின் பெயர் இடும்பாசுரன். பண்டைய காலத்தில் அகத்திய மாமுனிவரின் கட்டளைக்கு அசுரர்கள் செவிசாய்ப்பார்கள். அப்படி சக்திகிரி, சிவகிரி என்ற இரண்டு பிரமாண்டமான மலைகளை தமிழகத்தின் தென்பகுதியில் அமைக்க இடும்பாசுரனை பணித்தார் அகத்தியர். இரண்டு மலைகளின் உச்சிகளையும் கயிற்றில் கட்டி, அவற்றினூடே ஒரு நீண்ட கழியைப் பொருத்தி காவடி தூக்குவதுபோல அநாயசமாகத் தூக்கிவந்தான் அசுரன். பழநிக்கு அருகில் அவற்றை வைத்தான். அதே தலத்தில் எதிரே குமரனும் மலைமீது நின்றிருப்பதை கவனித்தான். இதென்ன எங்கு போனாலும் தேவர்களின் தொல்லை அதிகமாக இருக்கிறதே என சீற்றம் கொண்டான். குழந்தை குமரனை சிறிய பாலகன்தானே என அலட்சியத்தோடு பார்த்தான். அடேய்... பாலகா என பாலமுருகனை விளித்தான். போருக்கு வருகிறாயா, அல்லது இப்பொழுதே பணிந்து விடுகிறாயா? என கேட்டான்.
போரிட்டுதான் பார்க்கிறேனே என்று பாலமுருகனும் போருக்கு நின்றான். தொடக்கத்திலிருந்தே சிறுவன் மிகப்பெரிய வீரனாக விஸ்வரூபம் எடுத்ததைப் பார்த்து இடும்பன் மிரண்டான். ஈசனின் ஞானாக்னியிலிருந்து உதித்தவன் எரிமலையாக வெடித்தது கண்டு தலைதெறிக்க ஓடினான். ஆஹா... இது இறையாயிற்றே தவறாக உரசிப் பார்த்து சூடு போட்டுக் கொண்டோமே என பயந்தான். பாலமுருகன் விடாது தொடர்ந்தான். இடும்பனின் மனைவி இடும்பி கந்தா... என் கணவனை மன்னித்து ஏற்றுக் கொள் என பாதம் பணிந்து கதறினாள். இடும்பனும் ஞானமே உருவான பாலமுருகனின் திருவடி பரவினான். தான் எப்போதும் உங்களை தரிசித்தபடியே இங்கேயே இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டான். முருகனும் அப்படியே ஆகட்டும் என அருளினார்.
இன்றும் ஒரு மலையில் இடும்பன் தங்கி இருக்க, மற்றொரு மலையில் முருகன் அருள்புரிகிறார். பழநி மலைப்படி பாதையில் இடும்பனின் சந்நிதானம் உள்ளது. பழநி மலைக்கு அருகில் உள்ள மலை இடும்பன்மலை என்று அழைக்கப்படுகிறது. ஏதோ தியானத்தில் இருக்கும் யோகி போல தோற்றமளிக்கிறது இடும்பன் மலை. திடப்பட்ட பக்தியை மலைபோல் இருந்து உணர்த்துவது போல் உள்ளது. இந்த மலையின் 13 அடி உயரத்தில் இடும்பனுக்கு சிலை உள்ளது. இரு மலைகளையும் காவடிபோல் தூக்கிக் கொண்டிருக்கும் சிலை அற்புதம். அதிலும் அபிஷேகத்தின் போது பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இறைவனுக்கு தேவர்கள், அசுரர்கள் என்ற பாரபட்சம் எப்போதும் இல்லை. அதர்மம் தர்மத்தை உரசும்போது அழியும். அசுரர்கள் தர்மம் என தெளிந்தால் இறைவனோடு கலப்பர். அப்படி ஞானக்குழந்தை தன்னுடனே வைத்துக் கொண்ட அசுரக் குழந்தையில் இடும்பனும் ஒருவன்.
பழநி முருகன் மலைக்கு இணையாக உள்ள இடும்பன் மலைக்குச் செல்ல 570 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இடும்பன் மலைக்கு கிழக்குப்பகுதியில் மிக அழகான இடும்பன் குளம் பக்தர்கள் நீராட வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்காலங்களில் இக்குளத்தில் பக்தர்கள் நீராடி இடும்பனை வழிபடுகின்றனர். இதுதவிர இடும்பனை வழிபடவென்றே பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்து பழநிக்கு வருகின்றனர். அசுரர் கோலத்தில் பக்தர்கள் வேடமிட்டு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். கடவுளுக்கு இணையாக அசுரனுக்கு கோயில் அமைந்திருப்பது பழநியில் மட்டும்தான் என்றே சொல்லலாம்.
இடும்பன் கோயிலுக்கு செல்ல பழநி பஸ் நிலையத்தில் இருந்து மினி பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.



கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, நிலாவுக்கு சந்திரயான்-1 விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. அது, நிலாவில் தண்ணீர் இருப்பதை ஏற்கனவே கண்டுபிடித்தது. இந்நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு அடியில் குழிவான சுரங்கப்பாதைகள் இருப்பதை சந்திரயானில் உள்ள இந்திய கேமரா படம் பிடித்துள்ளது. எரிமலை வெடித்ததால் `லாவா' எனப்படும் எரிமலைக்குழம்பு வெளியானதை தொடர்ந்து, இந்த சுரங்கப்பாதைகள் உருவானதாக தெரிய வந்துள்ளது. இந்த சுரங்கப்பாதைகளில், எதிர்காலத்தில் மனிதர்கள் வசிக்கும் வாய்ப்பு இருப்பதாக, ஆமதாபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ரங்கநாத் ஆர்.நவல்குண்ட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, விஞ்ஞானிகள் மேலும் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


உலகமே வியக்கும் அளவுக்கு 2008 செப்டம்பர் 10 அன்று ஒரு சோதனை நிகழ்த்தப்பட்டது. இந்த உலகம் எப்படித் தோன்றியது என்பதைக் கண்டுபிடிக்கும் சோதனை அது. இச்சோதனை முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மார்ச் 30 அன்று மீண்டும் ஒரு அதிரடிச் சோதனையை சத்தமில்லாமல் செய்து முடித்துள்ளனர் ஐரோப்பிய அணு ஆய்வு மைய (செர்ன்) விஞ்ஞானிகள்.
ஏன்? எதற்கு? எப்படி? இந்தக் கேள்விகளில்தான் அறி வியலே அடங்கியிருக்கிறது. மனிதன் எப்படித் தோன்றினான் என்ற கேள்வி எழுந்ததால்தான் டார்வின் கோட்பாடு கிடைத்தது. இதுபோலவே உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்வியும். இந்தக் கேள்விக்கும் பதில் உள்ளது.
‘ஆயிரத்து 370 கோடி ஆண்டு களுக்கு முன் அண்டவெளியில் நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறி அணுப்பொருட்கள் தோன்றின. பின்னர் அந்த அணுப்பொருட்கள் இணைந்தே கிரகங்களும், அதன் பின் உயிரினங்களும் தோன்றின’ என்கிறது உலகத்தின் தோற்றம் குறித்து சொல்லும் பெருவெடிப்புக் கொள்கை (பிக் பேங் தியரி).
வெடித்துச் சிதறிய அணுப் பொருட்கள் இணைந்து உருவான கிரகங்களில் ஒன்றுதான் நாம் வாழும் பூமி. தீப்பிழம்பாக இருந்த பூமி, படிப்படியாக வெப்பம் தணிந்து, எரிமலைகளாகவும் தீக்குழம்புகளாகவும் புகைந்து கொண்டிருந்தன. பின்னர் மீத்தேன், ஹைட்ரஜன், கார்பன் &டை&ஆக்ஸைடு ஆகியவை சேர்ந்து ‘காஸ்மிக் ஸூப்’ என்ற கலவை உருவானது. அதில் மின்னல் பாய்ந்தபோதே முதன் முதலாக அமினோ அமிலம் தோன்றியது. இந்த அமிலம் அமோனியாவுடன் சேர்ந்து படிப் படியாக உயிரினங்கள் தோன்றக் காரணமாக இருந்தது. உலகின் முதல் உயிரிகளின் தோற்றம் குறித்து புட்டுப்புட்டு வைக்கும் இந்தக் கோட்பாடு இதுவரை முற்றிலும் நிரூபிக்கப்படவில்லை. இதை நிரூபிப்பதற்காகவே 2008 செப்டம்பர் 10 அன்று ஜெனீவா அருகில் பிரான்ஸ்&சுவிட்சர்லாந்து எல்லைப்பகுதியில் செயற்கை முறையில் அணு மோதல்&வெடிப்புச் சோதனை நடத்தப்பட்டது. அதன் பெயர் ‘அண்டப் பெருவெடிப்புக் கொள்கை பரிசோதனை’.
உலகிலேயே செயற்கையாக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அறிவியல் சோதனை இதுதான். இதை செர்ன் வெற்றிகரமாக முடித்துக் காட்டியது. இந்த ஆராய்ச்சியில் 85 நாடுகளைச் சேர்ந்த 8500 இயற்பியல் வல்லுனர் கள் ஈடுபட்டனர். இதில் 70 இந்தியர்களும் இடம் பெற்றனர். பூமிக்கடியில் 50 & 175 மீட்டர் ஆழத்தில், 27 கிலோமீட்டர் நீளம் கொண்ட நீள்வட்ட வடிவிலான பரிசோதனைக் கூடக் குழாயை இதற்காகவே உருவாக்கினர். ‘ஹார்ட்ரோன் கோலைடர்’ என்றழைக்கப்படும் அணுக்களை உமிழும் ராட்சதக் குழாய்கள் அமைக்கப்பட்டன. இக்குழாயின் விட்டம் 3.8 மீட்டர். கான்கிரீட் சுரங்கத்தில் இக்குழாயை அமைக்க மட்டுமே 17 ஆயிரம் கோடி செலவானது. இக்குழாய் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது என்பது இன்னொரு பெருமை!
இச்சோதனை எப்படி மேற் கொள்ளப்பட்டது? குழாய் அமைப்பின் இருமுனைகளிலும் பெரிய தூண் வடிவில் புரோட் டான் அணுத்துகள்களை உட்செலுத்தும் வகையில் தூண்கள் நிறுவப்பட்டன. டன் கணக்கிலான எடைகொண்ட இந்த இரு தூண் களும் எதிரெதிர் கடிகாரச் சுற்றில் சுற்றி மோதும். தூண்கள் மோதும்போது அதிலிருந்து புரோட்டான், எலக்ட்ரான் என ஏராளமான அணுத்துகள்கள் பெருகும். அவற்றின் எண்ணிக்கை நூறாயிரம் கோடி அளவில் இருக்கும். அப்போது சூரியனைப் போல பலமடங்கு வெப்பம் ஏற்படும். தூள் தூளாகப் பிரிந்த அணுத்துகள்கள் வினாடிக்கு 11 ஆயிரத்து 245 முறை என்ற வேகத்தில் அக்குழாயைச் சுற்றும்.
ச்சோதனை முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின் அதுபற்றிய எந்தத் தகவலும் உலகுக்குத் தெரியாமலேயே இருந்தது. பெரும் மோதலால் ஏற்பட்ட அணு மாற்றங்களை வெளியில் இருந்தபடியே விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர். இதற்காகவே 85 நாடுகளில் உள்ள முக்கிய ஆய்வு மையங்களில் 60 ஆயிரம் சிறப்பு கம்ப்யூட்டர்கள் இணைக்கப்பட்டன.
இந்நிலையில், முதல் கட்டமாக நடைபெற்ற பரிசோதனையில் அணுக் கள் மோதும் தூண்களில் உடைப்பு ஏற்பட்டது. இத னால் கசிவும் ஏற்பட்டது. இதன்பின் மாற்றுவேலைகள் மேற்கொள்ளப்பட்டு மார்ச் 30ம் தேதி இரண் டாம் கட்டமாக அதே சோதனையை மீண்டும் வெற்றி கரமாகச் செய்து முடித்துள்ளனர் செர்ன் விஞ்ஞானிகள்.
கடந்த முறை 2.36 லட்சம் கோடி கி.மீ. வேகத்தில் புரோட்டான் அணுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்தமுறையோ இது வரை இல்லாத அளவுக்கு 3 மடங்கு வேகத்தில், அதாவது 7 லட்சம் கோடி கி.மீ. வேகத்தில் புரோட்டான் அணுக்களை ஒன்றோடு ஒன்று மோதச் செய் துள்ளனர்.
இந்த மோதலால் புரோட்டான் அணுக்களில் ஏற்படும் மாறுதல் களை வைத்து உலகம் எப்படி, எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் என்று நம்பு கின்றனர் விஞ்ஞானிகள்.
இச்சோதனை சுற்றுச்சுழலை பாதிக்குமா? ‘ஏற்கனவே புவி சூடாகும் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் பூமிக்கடி யில் அணுக்களை மோத வைப்பதால், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெப்பம் உருவாகும். இது சுற்றுச்சூழலை கெடுத்துவிடும்’ என்று எச்சரிக்கின்றனர் சுற்றுச் சூழலாளர்கள். ஆனால், ‘எந்தப் பாதிப்பும் வராது’ என்கிறார் செர்ன் இயக்குனர் ஸ்டீவ் மையர்ஸ். ‘அதற்கான எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சோதனை மையத்தில் செய்துள்ளோம். சுற்றுச்சூழல் கெடும் என்ற கேள்விக்கே இட மில்லை’ என்கிற அவர், ‘உலகம் எப்படித் தோன்றியது என்ற சோதனை, இன்னும் முதல் கட்ட முயற்சியில்தான் உள்ளது. அணுக்கள் இடையே ஏற்பட்ட மோதல்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். 2013&ல் ஆய்வு முடிவுகள் வெளியாகும்’ என்கிறார்.




















வண்ண விளக்குகள் வசீகரமானவை. கண்களை கவர்ந்திழுக்கும். பலரும் விரும்புவதால் வண்ணவிளக்குகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பூஜையறை, படுக்கை அறை மற்றும் பெரியவர்களின் படங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் `ஜீரோ வாட்ஸ்’ பல்புகளாவது ஒவ்வொரு வீடுகளிலும் ஒளிரும். அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக நரம்பியல் வல்லுனர்கள், விளக்கு ஒளியால் ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்கள். இதில் வண்ண விளக்குகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிப்பது தெரியவந்துள்ளது.

இதற்காக ஆய்வகத்தில் பல வண்ண விளக்குகளுக்கு இடையே எலிகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. ஆய்வில் விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் எலக்ட்ரிக் கதிர்வீச்சு மூளை செல்களான நிரான்களைப் பாதிக்கின்றன. அவற்றின் செயல்பாட்டை தடுப்பதால் பல விபரீத வியாதிகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக உடல் வலி, பார்கின்சன் என்னும் ஞாபகமறதி வியாதி, மூளை முடக்கம், இதயக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு அமைப்பு (இம்ன் சிஸ்டம்) செயல்களில் பாதிப்பு மற்றும் இன்னும் பல வியாதிகளுக்கு வழி வகுக்கிறது.
ஒவ்வொரு வண்ண விளக்கும் வேறுவேறு பாதிப்புகளை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. சிவப்பு வண்ண விளக்கு நிரான்களை செயலிழக்கச் செய்கிறது. நீல வண்ண விளக்குகள் ஒரு வகை ஜீன்களைப் பாதிக்கிறது. மஞ்சள் விளக்குகள் வேறுவகை ஜீன்களைப் பாதிக்கிறது. உடலியக்கம் பல மின்தூண்டல்களால்தான் நடைபெறுகிறது. இதற்கிடையே விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் மின் அதிர்வுகள், மூளையை பாதிக்கிறது என்கிறது ஆய்வு.








வெஸ்ட் இண்டீஸ்ல் நடைபெறும் ட்வென்டி 20
உலக கோப்பை போட்டிக்கு முன்னர் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில்
ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி.

முதலில் ஆடிய ஜிம்பாப்வே 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது
அதிகபச்சமாக சகும்பர 76 ரன் குவித்தார்
பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது


எலு‌மி‌ச்சை‌யி‌ல் வை‌ட்ட‌மி‌ன் ‌சி ச‌த்து உ‌ள்ளது. இது உடலு‌க்கு நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தியை அ‌ளி‌க்‌கிறது. அ‌தி‌ல்லாம‌ல் ப‌ல்வேறு மரு‌த்துவ குண‌ங்களை‌க் கொ‌ண்டிரு‌ப்பது எலு‌மி‌ச்சையாகு‌ம்.

த‌ற்போது ‌சிறு‌நீரக‌த்‌தி‌ல் க‌ல் உருவாகாம‌ல் தடு‌க்கு‌ம் ஆ‌ற்றலு‌ம் எலு‌மி‌ச்சை‌க்கு உ‌ண்டு எ‌ன்று மரு‌த்துவ ‌நிபுண‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
சிறு‌நீரக‌த்தை நலமுட‌ன் பராம‌ரி‌ப்ப‌தி‌ல் எலு‌மி‌ச்சை‌யி‌ன் செய‌ல்க‌ள் ப‌ற்‌றி அமெ‌ரி‌க்கா‌வி‌ன் சா‌ன்டியகோ‌வி‌ல் உ‌ள்ள ஒரு‌ங்‌கிணை‌ந்த ‌சிறு‌நீரக நலமைய‌த்‌தி‌ன் இய‌க்குந‌ர் ரோஜ‌ர் ச‌ர் தலைமை‌யி‌லான குழு‌வின‌ர் ஆ‌ய்வு நட‌த்‌தின‌ர்.
ஆ‌ய்‌வி‌ல், ‌சிறு‌நீரக‌த்‌தி‌ல் க‌ல் உருவாகாம‌ல் தடு‌ப்ப‌தி‌ல் எலு‌மி‌ச்சை ‌சிற‌ப்பாக செய‌ல்படு‌கிறது. ம‌ற்ற ‌சி‌ட்ர‌ஸ் ‌நிறை‌ந்த பழ‌ங்களை‌க் கா‌ட்டிலு‌ம் எலு‌மி‌ச்சை ‌ந‌ல்ல ‌வித‌த்‌தி‌ல் செய‌ல்படுவது‌ம் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.
எனவே, ‌தினச‌ரி உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் உ‌ப்பு, கா‌ல்‌சிய‌ம், புரோ‌‌ட்டீ‌ன் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் பா‌தி‌ப்பை‌க் குறை‌க்க, எலு‌மி‌ச்சை சாறு ‌மிகவு‌ம் உதவு‌ம்.


‌சில குழ‌ந்தைக‌ள் பா‌ர்‌க்கு‌ம் இட‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் ம‌ண்ணை அ‌ள்‌ளி வா‌யி‌ல் போ‌ட்டு‌க் கொ‌ள்வா‌ர்க‌ள். இதனை‌த் தடு‌க்க குழ‌ந்தைகளை அடி‌ப்பதோ, ‌தி‌ட்டுவதோ ‌மிகவு‌ம் தவறு.

ஓ‌ம‌ம், ‌மிளகு, துள‌சி, ‌கீழாநெ‌ல்‌லி வே‌ர், கடு‌க்கா‌ய்‌த் தோ‌ல் இவ‌ற்றை சம அளவு எடு‌த்து பொடி செ‌ய்து மோ‌ரி‌ல் கல‌ந்து கொ‌ள்ளவு‌ம். இதை 3 முத‌ல் 5 நா‌ட்க‌ள் வரை ஒரு ச‌ங்களவு ‌வீத‌ம் உ‌ள்ளு‌க்கு கொடு‌க்க குழ‌ந்தைக‌ள் ம‌ண் ‌தி‌ன்பதை ‌வி‌ட்டு‌‌விடுவா‌ர்க‌ள்.
குழ‌ந்தைக‌ளு‌க்கு வ‌யிறு இரை‌ந்து ‌‌நீரா‌ய் க‌ழி‌ச்ச‌ல் ஏ‌ற்படு‌ம். ‌நீ‌ர் அ‌திகமாக‌ப் போவதா‌ல் நாவற‌ட்‌சியு‌ம் உ‌ண்டாகு‌ம். இத‌ற்கு‌ம் ஓம‌ம், வச‌ம்பு, பூ‌ண்டு, ‌பிர‌ண்டை ஆ‌கியவ‌ற்றை 5 ‌கிரா‌ம் எடு‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு ந‌ன்கு கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.
அ‌தி‌ல் 30 ‌மி‌ல்‌லி அளவு காலை, மாலை இரு வேளையு‌ம் கொடு‌த்து வர உட‌ல் நல‌ம்பெறு‌ம்.
குழ‌ந்தைகளு‌க்கு வ‌யி‌ற்று‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் போது ஓம‌த்தை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளவு‌ம். ஓம‌த்தை சுடு‌நீ‌ரி‌ல் போ‌ட்டு வெறு‌ம் ‌நீரை ம‌ட்டு‌ம் கொடு‌த்தா‌ல் கூட குழ‌ந்தை நலமடையு‌ம்.


வாஷிங்டன்: மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அதிகளவில் புகை பிடிப்பதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

இதுபற்றி அமெரிக்க தேசிய சுகாதார புள்ளிவிவர மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை:
20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களில் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 43 சதவீதம் அதிகம் புகை பிடிக்கின்றனர். மனஅழுத்தம் பாதிக்காத இதே வயதினரில் 22 சதவீதத்தினரே புகை பிடிப்பது தெரிய வந்தது. எனினும், 40 முதல் 54 வயதுக்கு உட்பட்ட ஆண்களிடம்தான் இந்த நிலை முன்பு இருந்தது. இப்போது இளைஞர்களிடமும் மனஅழுத்தம் ஏற்பட்டு புகைப் பழக்கம் அதிகரித்துள்ளது. 40 முதல் 54 வயது ஆண்களில் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் புகை பிடிக்கின்றனர். அதே வயது கொண்ட, மனஅழுத்தம் இல்லாதோரில் 25 சதவீதத்தினர் மட்டுமே புகைப் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். பெண்களில் 20&39 வயது பிரிவில் மனஅழுத்தம் கொண்டவர்களில் 50 சதவீதத்தினர் சிகரெட் பிடிக்கின்றனர். அதுவே, மனஅழுத்தம் இல்லாதவர்களில் புகை பிடிக்கும் பெண்கள் 21 சதவீதம் மட்டுமே.
மனஅழுத்தம் கொண்ட ஆண்கள் 10ல் 3 பேர் தினமும் ஒரு பாக்கெட்டுக்கு மேல் சிகரெட் பிடிக்கின்றனர். இது மனஅழுத்தம் இல்லாதவர்கள் பிடிக்கும் அளவைவிட இருமடங்கு. மனஅழுத்தம் இல்லாதவர்களைவிட அதனால் பாதிக்கப்பட்ட அதிகம் பேர் சிகரெட் பழக்கத்தை கைவிட முடியாமல் தவிக்கின்றனர்.


டெல்லி: நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் மத்திய அரசு வழங்கவுள்ள தேசிய அடையாள அட்டை 'ஆதார்' என்ற பெயரில் வழங்கப்படவுள்ளது.

இந்த அடையாள அட்டைக்கான புதிய சின்னமும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தேசிய அளவில் போட்டி நடத்தப்பட்டு இந்த சின்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சின்னத்தில் சூரியனும், விரல் ரேகையும் இடம் பெற்றுள்ளது.
திட்டக் கமிஷனின் கீழ் இயங்கும் தேசிய அடையாள அட்டை ஆணையகத்தின் தலைவர் நந்தன் நிலேகனி இதனை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், இந்த அடையாள அட்டை 16 இலக்க அடையாள எண் கொண்டதாக இருக்கும்.
இந்த அடையாள அட்டை வினியோகம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும். 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இவை நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் வினியோகிக்கப்பட்டுவிடும் என்றார்.


வரும் ஏப்ரல் 30ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளில் 3-வது ஐ.சி.சி. உலகக் கோப்பை இருபதுக்கு 20 போட்டிகள் துவங்குகின்றன.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இது 3 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களுக்கு வரும் அணிகள் மீண்டும் பிரிவு ஈ, பிரிவு எஃப் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
இந்த சூப்பர் 8 பிரிவில் அந்தந்தப் பிரிவுகளில் உள்ள அணிகள் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடும். ஆனால் முதல் பிரிவு ஆட்டங்களில் பெற்ற புள்ளிகள் சூப்பர் 8 பிரிவுகளில் கணக்கில் சேர்க்கப்படமாட்டாது.. சூப்பர் 8 பிரிவு தனி புள்ளிகளைக் கொண்டது.
இந்த சூப்பர் 8 முடிவில் பிரிவு ஈ, பிரிவு எஃப் ஆகியவற்றில் முதல் இரண்டு இடங்களில் வரும் 4 அணிகள் அரையிறுதியில் மோதும்.
அதாவது பிரிவு ஈ-யில் முதலிடம் பிடிக்கும் அணி பிரிவு எஃப்-இல் இரண்டாவது இடம் பிடிக்கும் அணியுடன் ஒரு அரையிறுதியிலும், பிரிவு எஃப்-இல் முதலிடம் பிடிக்கும் அணி பிரிவு ஈ-யில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணியுடன் இரண்டாவது அரையிறுதியிலும் மோதும்.
பிறகு இறுதிப் போட்டி.

பிரிவு விவரங்கள்:
பிரிவு ஏ : பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்ட்ரேலியா
பிரிவு பி: இலங்கை, நியூஸீலாந்து, ஜிம்பாப்வே.
பிரிவு சி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான்
பிரிவு டி : மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, அயர்லாந்து.
சூப்பர் 8 பிரிவு விவரம்:
இதில் அந்தந்தப் பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2, டி1 டி2 என்று பிரிக்கப்படும்.
பிரிவு "இ" அணிகள்: ஏ1, பி2, சி1, டி2
பிரிவு "எஃப்" அணிகள்: பி1, ஏ2, சி2, டி1
போட்டி அட்டவணை, மைதானம், ஆட்டம் நடைபெறும் இந்திய நேரம்:
ஏப்ரல் 30, வெள்ளிக்கிழமை, பிரிவு பி - இலங்கை/நியூசீலாந்து, கயானா, இரவு 10.30 மணி.
ஏப்ரல் 30, வெள்ளிக்கிழமை, பிரிவு டி - மே.இ.தீவுகள்/அயர்லாந்து, கயனா, பகல்/இரவு : இந்திய நேரம் : நள்ளிரவு 2.30 மணி.
மே 1. சனிக்கிழமை, பிரிவு ‌சி - இந்தியா/ஆப்கானிஸ்தா‌ன், செயின்ட் லூசியா, இரவு 7.00 ம‌ணி.
மே 1. சனிக்கிழமை, பிரிவு ஏ - வங்கதேசம்/பாகிஸ்தான், லூசியா, இரவு 11.00 மணி
மே 2. ஞாயிற்றுக் கிழமை, பிரிவு சி - இந்தியா/தென் ஆப்பிரிக்கா, லூசியா, இரவு 7.00 ம‌ணி.

மே 2. ஞாயிற்றுக் கிழமை, பிரிவு ஏ - ஆஸ்ட்ரேலியா/பாகிஸ்தான், லூசியா, இரவு 11.00 மணி.
மே 3. திங்கள், பிரிவு பி - இலங்கை/ஜிம்பாப்வே, கயானா, இரவு 7.00 மணி.
மே. 3. திங்கள், பிரிவு டி - மே.இ.தீவுகள்/இங்கிலாந்து, கயானா, இரவு 11.00 மணி.
மே 4. செவ்வாய், பிரிவு பி - நியூசீலாந்து/ஜிம்பாப்வே, கயானா, இரவு 7.00 மணி
மே 4. செவ்வாய், பிரிவு டி - இங்கிலாந்து/அயர்லாந்து, கயானா, இரவு 11.00 மணி.
மே 5. புதன், பிரிவு ஏ - ஆஸ்ட்ரேலியா/வங்கதேசம், பார்படாஸ், 7.00 மணி.
மே 5. புதன், பிரிவு சி - ஆப்கானிஸ்தான்/தென் ஆப்பிரிக்கா, பார்படாஸ், இரவு 11.00 மணி
சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள்:
மே 6. வியாழன், பார்படாஸ், ஏ1 / டி2, இரவு 7.00 மணி
மே 6. வியாழன், பார்படாஸ், சி1 / பி 2, இரவு 11.00 மணி
மே 7. வெள்ளி, பார்படாஸ், ஏ2 / சி2 , இரவு 7.00 மணி
மே 7. வெள்ளி, பார்படாஸ், பி1 / டி1, இரவு 11.00 மணி
மே 8. சனிக்கிழமை, பார்படாஸ், ஏ1 / பி2, இரவு 7.00 மணி
மே.8. சனிக்கிழமை, பார்படாஸ், டி2 / சி1, இரவு 11.00 மணி
மே 9. ஞாயிற்றுகிழமை, பார்படாஸ், சி2 / டி1, இரவு 7.00 மணி
மே 9. ஞாயிற்றுக்கிழமை, பார்படோஸ், பி1 / ஏ2, இரவு 11.00 மணி
மே 10. திங்கள் கிழமை, செயின்ட் லூசியா, ஏ1 / சி1, இரவு 7.00 மணி
மே 10. திங்கள் கிழமை, செயின்ட் லூசியா, பி2 / டி2, இரவு 11.00 மணி
மே 11. செவ்வாய்கிழமை, செயின்ட் லூசியா, பி1 / சி2, இரவு 10.30 மணி
மே 11. செவ்வாய்க்கிழமை, செயின்ட் லூசியா, பகலிரவு ஆட்டம், டி1 / ஏ2, இரவு 2.30 மணி.
மே 13. வியாழக் கிழமை, முதல் அரையிறுதி, செயின்ட் லூசியா, இரவு 9.00 மணி.
மே 14. வெள்ளிக்கிழமை, இரண்டாவது அரையிறுதி, செயின்ட் லூசியா, இரவு 9.00 மணி
மே 16. ஞாயிற்றுக்கிழமை, கென்சிங்டன் ஓவல், பார்படாஸ், இறுதிப் போட்டி இரவு 9.00 மணி.

 











இ‌ந்‌தியா‌வி‌ன் வட மா‌நிலமான இமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ல் அமை‌ந்து‌ள்ள அழகான சு‌ற்றுலா‌த் தல‌ம்தா‌ன் மணா‌லியாகு‌ம். இது சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌‌ளி‌ன் சொ‌ர்‌க்கமாக‌த் ‌திக‌ழ்‌கிறது.

இமயமலை‌யி‌ன் அடிவார‌த்‌தி‌ல் கட‌ல் ம‌ட்ட‌த்‌தி‌லிரு‌ந்து 2 ஆ‌யிர‌ம் ‌மீ‌ட்ட‌ர் உயர‌த்‌தி‌ல் மணா‌லி அமை‌ந்து‌ள்ளது. ‌பீ‌ஸ் ந‌தி‌க்கரை‌யி‌ல் இ‌ந்த ‌சி‌றிய புக‌ழ்பெ‌ற்ற சு‌ற்றுலா‌த் தல‌ம் அமை‌ந்‌திரு‌ப்பது இ‌ன்னுமொரு ‌சிற‌ப்பாகு‌ம்.
மணா‌லியை‌ச் சு‌ற்‌றி அட‌ர்‌ந்த பை‌ன், செ‌ஸ்‌ட்ந‌ட், டியோட‌ர் மர‌க் காடுக‌‌ள் அழகு‌க்கு அழகு சே‌ர்‌க்‌கி‌ன்றன. இ‌தி‌ல் ம‌ற்றுமொரு ‌‌விஷயமு‌ம் இரு‌க்‌கிறது. அதாவது 6,600 ‌மீ‌ட்டரு‌க்கு மே‌ல் உய‌ர்‌ந்த, ப‌னி பட‌ர்‌ந்த ‌சிகர‌ங்களு‌ம் அமை‌ந்‌திரு‌ப்பது க‌ண்‌ணி‌ற்கு‌ம் ‌விரு‌ந்தா‌கிறது.
மணாலி, குலு மாவட்டத்தின் ஒரு பகுதியாகும், இதன் மக்கள்தொகை சுமார் 30,000. சப்தரிஷிகள் அல்லது ஏழு துறவிகளின் தாயகமாக மணா‌லி கூறப்படுவதால், மணாலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் மிக உயர்ந்த முக்கியத்துவம் பெற்றதாகும்.
மணா‌லி அமை‌ந்து‌ள்ள குலு ப‌ள்ள‌த்தா‌க்கு‌ப் பகு‌தி‌யி‌ன் எ‌ல்லா இட‌ங்களையு‌ம் போல இ‌ங்கு‌ம் ஆ‌ப்‌பி‌ள் அ‌திக அள‌வி‌ல் ‌விளை‌வி‌க்க‌ப்படு‌கிறது. சாலையோர‌ங்க‌ளி‌ல் கூட ஆ‌ப்‌‌பி‌ள் மர‌ங்க‌ள் கா‌ட்‌சிய‌ளி‌க்‌கி‌‌ன்றன.
சாதாரணமாக சு‌ற்‌றி‌ப்பா‌ர்‌க்கு‌ம் சு‌ற்றுலா‌ப் ப‌ய‌ணிகளை ‌விட, இய‌ற்கையை அ‌திக‌ம் நே‌சி‌ப்பவ‌ர்களு‌க்கு‌ம், சாகச‌ம் பு‌ரிய ஆவ‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌க்கு‌ம் மணா‌லி ஒரு சொ‌ர்‌க்கபு‌ரியாகு‌ம்.
கு‌றி‌ப்பாக இ‌ப்பகு‌தி‌க்கு வர வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் ந‌ல்ல உட‌ல் ஆரோ‌க்‌கிய‌ம் இரு‌ப்பது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். ஏனெ‌னி‌ல் இ‌ங்கு அட‌ர்‌ந்த கா‌ட்டு‌க்கு‌ள் நடை‌‌ப் பயணமாக செ‌ன்று கா‌ட்டினை ர‌சி‌க்கு‌ம் வச‌தியு‌ம் உ‌ண்டு. மலை ஏறலா‌ம், மலை‌‌ப் பாதை‌யி‌ல் வாகன‌ம் ஓ‌ட்டலா‌ம், ப‌னி‌ச்சறு‌க்கு, பாரா‌‌கிளைடி‌ங், ந‌தி‌யி‌ல் படகு செலு‌த்துவது போ‌ன்ற சாக‌சங்க‌ள் பு‌ரிய ஏ‌ற்ற இடமாக மணா‌லி இரு‌க்‌கிறது.
மலை ஏ‌ற்ற‌ம் கு‌றி‌த்து ப‌யி‌ற்‌சி பெற ‌விரு‌ம்‌பினாலு‌ம், இ‌ங்கு‌ள்ள மலையே‌ற்ற‌க் க‌ல்‌வி ‌நிறுவ‌ன‌த்‌தி‌ன் மூலமாக ப‌யி‌ற்‌சி பெறலா‌ம்.
இ‌ந்த மணா‌லி நகர‌த்‌தி‌ற்கு பெ‌ய‌ர் காரண‌ம் கூற‌ப்படு‌கிறது. பிராமண சாஸ்திர உருவாக்குனரான மனுவின் பேரில் மணாலி என்ற பெயர் இடப்பட்டிருக்கிறது. மணாலி என்னும் வார்த்தையின் பொருள் “மனுவின் இருப்பிடம்” என்பதாகும். உலகத்தை பெருவெள்ளம் மூழ்கடித்த போது மனித வாழ்க்கையை மீண்டும் படைப்பதற்காக மணாலியில் தனது படகில் இருந்து துறவியான மனு இறங்கி வந்ததாக புராணக் கதை கூறுகிறது. மணாலி "கடவுள்களின் பள்ளத்தாக்கு" என்று‌ம் அழைக்கப்படுகிறது.அவரது ‌நினைவாக மணா‌லி‌யி‌ன் பழைய நக‌ர்‌ப்பகு‌தி‌யி‌ல் ஓடி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் மனா‌ல்சு ந‌தி‌க்கரை‌யி‌ல் மனுவு‌க்கு ஒரு கோ‌யி‌ல் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது.



திருப்பதி ஏழுமலையா‌ன் கோ‌யி‌லி‌ல் த‌ற்போது நடைமுறை‌யி‌ல் உ‌ள்ள ரூ..300 விரைவு டிக்கெட் கட்டண தரிசனம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி கிருஷ்ணராவ் கூறினார்.

திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் கிருஷ்ணாராவ் சென்னையில் நேற்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சினா‌ர். அ‌ப்போது, ஆ‌ந்திர மாநிலத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மலைவாழ் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெங்கடாசலபதியை தரிசனம் செய்யும் வகையில் லோககல்யாண்ரதம் கொண்டு செல்லப்பட்டது. இது ஒரு நடமாடும் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ரதம் ஆகும். இந்த ரதம் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் 7 நாட்கள் வரை நிறுத்தப்பட்டு வருகிறது. இந்த ரதத்தில் இருந்த வெங்கடாசலபதியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதற்கு பக்தர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் தமிழ்நாட்டிலும் இந்த லோக் கல்யாண் ரதத்தை கொண்டு செல்வது குறித்து ஆலோ‌சி‌த்து வருகிறோம். இலவச தரிசனம் செய்பவர்கள் நீண்டநேரம் வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்காக அக்சஸ் கார்டு என்ற ஒரு முறை 3 மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை மூலம் தரிசனம் செய்வதற்கான நேரத்தை குறித்து கொண்டு அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சாமி சரிசனம் செய்யலாம். இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
எளிதாக சாமி தரிசனத்துக்காக ரூ.300 டிக்கெட் கட்டணம் செலுத்தி விரைவு தரிசனம் என்ற முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு எந்த விதமான சிபாரிசும் தேவை இல்லை என்பதால் ஏழை முதல் பணக்காரர்கள் வரை மிகவும் எளிதாக சாமி தரிசனம் செய்ய மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது என்று பொதுமக்கள் பெரிதும் பாராட்டுகிறார்கள்.
ரூ.300 டிக்கெட்டுக்கு இலவசமாக 2 லட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக ரூ.100 வழங்குபவர்களுக்கு 4 லட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்டுகள் வாங்குவதில் உள்ள முறைகேடுகள் குறைக்கப்பட்டுள்ளது எ‌ன்று அவ‌ர் கூ‌றினா‌ர்


அஜர்பெய்ஜான் நாட்டில் உள்ள பாக்குவில் நடைபெறும் இளையோர் உலகக் குத்துச் சண்டையில் 3 இந்திய  வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

ஆசிய இளையோர் சாம்பியன் விகாஸ் க்ரிஷன், தேவேந்திரோ சிங் லைஷ்ராம், சுமித் சங்வான் ஆகிய 3 வீரர்களும் அடுத்த சுற்றுக்கு முன்ன்றினர்.
48 கிலோ உடல் எடைப்பிரிவில் தேவேந்திரோ டொமினிகன் குடியரசு வீரர் யுவான் கேப்ரியல் மெதினாவை 17- 8 என்று எளிதில் வீழ்த்தினார்.
விகாஸ் க்ரிஷன், இரான் வீரர் ரூமியானி என்பவரை 60கிலோ உடல் எடைப்பிரிவு போட்டியில் வீழ்த்தினார்.
சுமித் சங்வான், கானா வீரர் சுமித் சங்வான் என்பவரை 14- 1 என்று வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

வால் பைய்யன் கமெண்ட் : common பாய்ஸ்



ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களான நடிகை ஷில்பா ஷெட்டி, லலித் மோடி ஆகியோரின் நெருங்கிய உறவினர்கள் அன்னிய செலாவணி விதிமுறைகளை மீறி இருப்பதாக, வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். தலைவர் லலித்மோடிக்கு எதிரான ஊழல் புகார்களை தொடர்ந்து, அவரை பதவி நீக்கம் செய்துள்ளது பிசிசிஐ.
ஆனால் மோடியின் விசுவாசிகளான ஷாரூக்கான், ப்ரீத்தி ஜிந்தா மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகியோர் லலித் மோடிக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.
லலித் மோடி மூலம் நேரடியாக பல கோடி ரூபாய் ஆதாயம் அடைந்தவர்கள் இம்மூவரும் என்று, மோடியின் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஷில்பா ஷெட்டி மூலம் முதலீடு செய்யப்பட்ட பணம் பெரும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் அணியின் பினாமி உரிமையாளர் ஷில்பா என்றும் ஐபிஎல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதே அணிக்கு லலித் மோடியின் நெருங்கிய உறவினரும் முக்கிய பங்குதாரராக உள்ளார்.
இந்த நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் லலித்மோடியின் நெருங்கிய உறவினர் இருவருமே அன்னிய செலாவணி விதிமுறைகளை மீறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜெய்ப்பூர் ஐ.பி.எல். பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இது, மொரீஷியஸ் நாட்டில் செயல்பட்டு வரும் இ எம் ஸ்போர்ட்டிங் ஹோல்டிங் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
இந்த மொரீஷியஸ் நிறுவனத்தில், லலித்மோடியின் மைத்துனர் சுரேஷ் செல்லாராம் என்பவருக்கு இங்கிலாந்தின் வர்ஜின் தீவு நிறுவனத்தின் மூலமாக 44.15 சதவீத பங்குகள் உள்ளன. மோடிக்கு நெருக்கமான இங்கிலாந்தில் உள்ள மனோஜ் படாலேவுக்கு 32.4 சதவீத பங்குகள் உள்ளன.
பிரபல டி.வி. அதிபர் ராபர்ட் முர்டோக்கின் மகனுக்கு 11.7 சதவீத பங்குகளும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் வழி உறவினர்களுக்கு 11.7 சதவீத பங்குகளும் இருப்பது வருமானவரி சோதனையில் தெரிய வந்துள்ளது.
மொரீஷியஸ் நாட்டில் வருமானவரி செலுத்த வேண்டியது இல்லை என்பதால், அங்குள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிறுவனம் மூலம் பெரிய அளவில் அன்னிய செலாவணி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
இது தொடர்பாக ஏற்கெனவே ஷில்பா ஷெட்டிக்கு விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல் அணியின் பினாமி உரிமையாளர் ஷில்பா என்பதை நிரூபிக்கும் வேலையிலும் தீவிரமாக உள்ளது மத்திய அமலாக்கப் பிரிவு.

வால் பையன் கமெண்ட் : இவங்க ரொம்ப நல்லவங்க?



சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து மும்பை கேப்டன் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது: முக்கியமான கட்டத்தில் கேட்ச்களை தவறவிட்டதால் தோல்வியடைந்தோம். சுருக்கமாக சொல்ல போனால் கேட்ச்கள்தான் ஆட்டத்தை வெற்றி பெறச்செய்துவிட்டன. 2&வது பேட் செய்த நாங்களும் இலக்கை எட்டுவதற்கான உத்வேகத்தில் ஆடவில்லை. இன்று எங்களுக்கு கொஞ்சம் சரிவு ஏற்பட்டுவிட்டது. பொல்லார்டு அற்புதமாக தொடங்கினார். ஆனால் அவர் இறங்குவதற்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது. இருப்பினும் தேவைப்படும் ரன்ரேட்டுக்கு ஏற்றார்போல் விளையாட முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை.


இன்றைய நாள் எங்களுக்கு இல்லை. இன்றைய நாளை தவிர இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். அனைத்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கும் நன்றி. இறுதிப்போட்டியில் நுழைவது என்பது மிகப்பெரிய பயணம். அதே மிகப்பெரிய மரியாதைதான். வெற்றி பெற்ற சென்னை அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இன்று எங்களைவிட அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். வெற்றிக்கு உரியவர்கள் அவர்கள். அணியின் உரிமையாளர், ஊழியர்கள் அனைவரும் எங்களுக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தனர். அனைவருக்கும் எனது நன்றி. அனேகமாக அடுத்த வருடமும் ஐபிஎல்லில் நான் விளையாடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

வால் பையன் கமெண்ட் : கை விரல் காயத்தோடும் மும்பை அணியின் வெற்றிக்காக போராடிய உங்கள் விளையாட்டு ஆர்வத்துக்கு -SALUTE



ஐபிஎல் கோப்பையை முதன் முறையாக வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கூறியதாவது: எல்லா புகழும் அணிக்குதான் சொந்தம். இந்த தொடரின் நடுப்பகுதியில் நாங்கள் நெருக்கடியில் இருந்தோம். அதை ஜெயித்து அரையிறுதி, இறுதி என நுழைந்து கடைசியாக இன்று சாம்பியன் ஆகிவிட்டோம்.  நல்ல ஒரு இலக்கை மும்பைக்கு நிர்ணயித்தோம். வேகப்பந்து வீச்சுக்கு உதவுகிற மைதானத்தில் போலிங்கர், அஸ்வின் சிறப்பாக பந்து வீசினார்கள். தொடக்கத்திலேயே விக்கெட்டை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் வளர்ந்து கொண்டே வருகிறது. அடுத்த வருடம் கூடுதலாக 2 அணிகள் வருகின்றன. எங்களுக்கு இனி கூடுதல் நெருக்கடி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்

வால் பையன் கமெண்ட் : இதே பொன்சிரிப்போடு மீண்டும் ட்வென்டி ட்வென்டி உலக கோப்பையை வென்று தருவிர்கள் என நம்பும் ரசிகர்கள் .



 இந்த தொடர் முழுவதுமே சிறப்பான வெற்றிகளை குவித்துவந்த மும்பை அணியும், கடைசி கட்டத்தில் அதிரடியை கையாண்டு அரையிறுதியில் நுழைந்த சென்னை அணியும் மோதின. டாசில் வெற்றி பெற்று முதலில் பேட் செய்த சென்னை அணி ரெய்னா 57 (அவுட் இல்லை; 35 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ரன் விளாசியதால் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்தது.

அதன்பிறகு விளையாடிய மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன் மட்டுமே எடுத்ததால் 22 ரன் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டெண்டுல்கர் 48, நாயர் 27, ராயுடு 21, பொல்லார்டு 27 (10 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ரன் எடுத்தனர். இந்த தொடர் முழுவதும் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டம் பெறும் என்று நினைத்த மும்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அதேசமயம் அரையிறுதியில் நுழையக்கூட ரன்ரேட்டை நம்பி கடைசியில் ஜெயித்த சென்னை அணி இறுதிகட்ட ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
சாம்பியனாக விளையாடிய அணியை பதுங்கி அடித்தது

மும்பை தோல்விக்கு காரணம் என்ன?

11.2 ஓவர் வரை சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 67 ரன் தான் எடுத்திருந்தது. அதன்பின் டோனி இறங்கிய பிறகுதான் ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டது. டோனியும், ரெய்னாவும் அதிரடியாக விளாசி ரன்குவித்தனர். 17.1 ஓவரில் 139 ரன்னாக இருந்த போது டோனி அவுட்டானார். 35 பந்தில் இருவரும் சேர்ந்து 62 ரன் குவித்தனர். இந்த கட்டத்தில் ரெய்னா கொடுத்த 2 கேட்ச்களை பெர்னாண்டோவும், ஜாகீர்கானும் தவறவிட்டனர். அதேபோல் கடைசி 8 ஓவரில் சென்னை 100 ரன் குவித்தது. பேட்டிங்கில் பொல்லார்டுவை தாமதமாக களமிறக்கினர். இதனால் சாம்பியனாக விளையாடிவந்த மும்பை கடைசியில் சரிந்தது.
அவர் இறங்குவதற்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது. இருப்பினும் தேவைப்படும் ரன்ரேட்டுக்கு ஏற்றார்போல் விளையாட முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை.
ஐபிஎல் 3 சீசன் போட்டிகள்  முடிவுக்கு வந்தன. மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுவிழா நடந்தது. 40 நிமிடம் நடந்த இந்த விழாவில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசை திருவிழா நடத்தினார். 55 ஆயிரம் பேர் நேரில் ரசித்த இந்த நிகழ்ச்சி முழுவதும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான்.ரகுமான் ‘சாலே சாலோ’ (லகான்), வந்தேமாதரம், ஜெய்ஹோ (ஸ்லம்டக் மில்லியனர்) பாடல்களை பாடி அசத்தினார். ரேஸ் படத்தில் உள்ள டைட்டில் பாடலுக்கு பிபாஷாபாசு, ஷாகித்கபூர் ஆடினர்.
ஐபிஎல் போட்டி இறுதி ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 57 ரன் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்ற சுரேஷ்ரெய்னா கூறியதாவது: அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த அணியில் இருப்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டு எங்களுக்கு நல்லவிதமாக அமைந்திருக்கிறது. 3 ஐபிஎல் போட்டிகளில் 2 போட்டிகளில் இறுதிப்போட்டியில் நுழைந்திருக்கிறோம். இப்போது சாம்பியன் ஆகியிருக்கிறோம். தன்னம்பிக்கையோடு விளையாடுவதற்கு டோனி தான் காரணம். என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்படி கூறி அடிக்கடி என்னை உற்சாகப்படுத்துவார். டெண்டுல்கரும் அடிக்கடி வழிநடத்துவார். இவ்வாறு அவர் கூறினார்

வால் பையன் கமெண்ட் : KEEP IT UP சூப்பர் கிங்க்ஸ்













கொ‌ச்‌சி அ‌ணி ஏல ‌விவகார‌ம், ‌சூதா‌ட்ட‌த்‌தி‌ல் ‌கி‌ரி‌க்கெ‌‌ட் வீர‌ர்களு‌க்கு உ‌ள்ள தொட‌ர்பு, வெ‌ளிநாடுக‌ளி‌ல் உ‌ள்ள கரு‌ப்பு பண முத‌‌‌‌‌லீடு எ‌ன்று அடு‌த்தடு‌த்து ‌ஐ.‌பி.எ‌ல். போ‌‌ட்டிகளை மையமான வை‌த்து எழு‌ந்த ‌ச‌ர்‌ச்சைக‌ளினா‌ல் அத‌ன் தலைவ‌ர் பொறு‌ப்‌பி‌ல் இரு‌ந்து ல‌‌லி‌த்மோடியை ‌நீ‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அர‌சிய‌ல் க‌ட்‌சிகளு‌ம், ப‌ல்வேறு தர‌ப்‌பின‌ரு‌ம் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து வ‌ந்தன‌ர்.

ஐ.‌பி.எ‌ல். போ‌‌ட்டிகளை மையமாக வை‌த்து ச‌ர்‌‌ச்சைக‌ள் எழு‌ந்ததையடு‌‌த்து அத‌ன் தலைவ‌ர் பத‌வி ம‌ற்று‌ம் ஆணைய‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ல‌லி‌த்மோடி‌யை ‌கி‌ரி‌க்கெ‌ட் வா‌ரிய‌ம் இடை ‌நீ‌க்க‌ம் செ‌ய்து உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.
‌ஐ.‌பி.எ‌ல். இறு‌தி‌‌ப்போ‌ட்டி முடி‌ந்தது‌ம் ல‌லி‌த்மோடி‌க்கு இ-மெ‌யி‌ல் மூல‌ம் இடை‌நீ‌க்க‌ம் உ‌த்தரவு‌ம், அவ‌ர் ‌மீதான 22 கு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ள் ப‌ற்‌றிய தா‌க்‌கீது‌ம் அனு‌ப்ப‌ப்ப‌ட்‌டிரு‌ந்தன.
அ‌‌தி‌ல், ல‌‌லி‌த்மோடி‌யி‌ன் தவறான நடவடி‌க்கை‌யினா‌ல் ‌கி‌ரி‌க்கெ‌ட் அமை‌ப்‌பி‌ற்கே அவ‌ப்பெய‌ர் ஏ‌ற்ப‌ட்டு ‌வி‌ட்டதாகவு‌ம், கட‌ந்த ‌சில நா‌ட்களாக நடைபெ‌ற்ற ச‌ர்‌‌ச்சை‌க்கு‌ரிய ச‌ம்பவ‌ங்க‌ள் ‌‌கி‌ரி‌க்கெ‌ட் வா‌ரிய‌த்‌தி‌ற்கு வரு‌த்த‌த்தை ஏ‌ற்படு‌த்‌தி உ‌ள்ளதாகவு‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
இ‌ந்த கு‌ற்ற‌ச்சா‌‌ற்றுக‌‌ள் அடி‌ப்படை‌யி‌ல் ஏ‌ன் நடவடி‌க்கை எடு‌க்க‌க் கூடாது எ‌ன்று 15 நா‌ட்களு‌க்கு‌ள் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌க்கு‌ம்படியு‌ம் ‌ல‌லி‌த்மோடி‌யிட‌ம் ‌கி‌ரி‌க்கெ‌ட் வா‌ரிய‌ம் கே‌ள்‌‌வி எழு‌ப்‌‌பியு‌ள்ளது.
கி‌‌ரி‌க்கெ‌ட் வா‌ரிய‌த்‌தி‌ன் துணை‌த்  பத‌வி உ‌ள்பட ‌ல‌லி‌த்மோடி வ‌கி‌க்கு‌ம் ‌கி‌ரி‌க்கெ‌ட் தொட‌ர்பான அனை‌த்து பத‌வி‌க‌ளி‌ல் இரு‌‌ந்து அவரை இடை ‌நீ‌க்க‌ம் செ‌ய்து ‌‌கி‌ரி‌க்கெ‌ட் வா‌ரிய‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது எ‌ன்று அ‌ந்த இ-மெ‌யி‌‌லி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
ஐ.பி.எல். ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் நீக்கப்பட்ட லலித் மோடிக்கு பதிலாக இடைக்கால  ஐ.பி.எல். தலைவராக சிரயு அமின் அந்தலி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று கூடிய ஐ.பி.எல். ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷஷாங் மனோகர், நீக்கப்பட்ட தலைவர் லலித் மோடி மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அறிவித்தார். மேலும் அது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்பதையும் தெரிவித்தார்.
"கடந்த சில தினங்களாக குற்றச்சாட்டுகளும், எதிர்குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டன. வாரியம் அந்தக் குற்றச்சாட்டுகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு லலித் மோடிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது." என்றார் ஷஷாங் மனோகர்.
"போட்டித் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், இந்த நோட்டீஸை இறுதிப் போட்டி முடிவடைந்த பிறகு அனுப்ப முடிவு செய்தோம்." என்று அவர் மேலும் கூறினார்.
லலித் மோடி 22 முறைகேடுகள் பட்டியலிடப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பி.சி.சி.ஐ. இடைக்காலக் குழுவை நியமித்துள்ளது. இதன் தலைவராக சிரயு அமின் அந்தலி நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய இடைக்காலக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரவி சாஸ்திரி, மன்சூர் அலிகான் பட்டௌடி, சுனில் கவாஸ்கர் ஆகியோரும் உள்ளனர்.
லலித் மோடியிடம் 34 பக்க குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டது. இதற்கான பதிலை அவர் 15 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் வெளிப்படையானது, ஊழலற்றது என்று லலித் மோடி தெரிவித்தார்.

வால் பையன் கமெண்ட் : விடுங்க மோடி சார் பிசிசிஐ இன் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று .
வாழ்த்துக்கள் CHIRAYU சார் ,அடுத்த IPL இதை விட சூப்பர் ஆக இருக்கும் என நம்புகிறோம்.

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget