மாதுள‌ம் பழ‌ம் அ‌திக ச‌த்து‌க்க‌ள் ‌நிறை‌ந்தது எ‌ன்பது பலரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் அது எ‌ந்த வகை‌யி‌ல் உடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌த்தை அ‌ளி‌க்‌கிறது எ‌ன்பதை பா‌ர்‌க்கலா‌ம்.
ஏதேனு‌ம் நோ‌யினா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு அ‌திக நா‌ள் ‌சி‌கி‌ச்சை எடு‌த்து‌க் கொ‌‌ண்டவ‌ர்களு‌க்கு நோயின் பாதிப்பால் பலகீனம் ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம். அதுபோ‌ன்றவ‌ர்க‌ள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடையு‌ம் கூடும்.
மு‌க்‌கியமாக மாது‌ள‌ம் பழ‌ம் உட‌லி‌ல் தொண்டை, மார்பு, நுரையீரல், குட‌ல் பகு‌திகளு‌க்கு அதிக வலிமையை உண்டாக்குகிறது.
ஆண்மை குறைவு உ‌ள்ளவ‌ர்க‌ள் மாதுளம்பழம் சாப்பிடுவதால், ச‌க்‌தி கூடு‌ம். குழ‌ந்தை‌ப் பேறு‌ம் ஏ‌ற்படு‌ம்.
க‌ர்‌ப்‌பி‌ணிகளு‌க்கு ஏ‌ற்படு‌ம் ர‌த்த சோகையை‌த் த‌வி‌ர்‌க்க, கெலா‌க்‌ஸ் போ‌ன்றவ‌ற்றுட‌ன் மாதுள‌ம் பழ‌த்தை‌ச் சே‌ர்‌த்து பா‌ல் ஊ‌ற்‌றி சா‌ப்‌பி‌ட்டா‌ல் ர‌த்த ‌விரு‌த்‌தி ஏ‌ற்படு‌ம்.
மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.







0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget