சென்னை மற்றும் புறநகர்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தமிழகம் முழுவதும் ஒரு மாதத்துக்கும் மேலாக கடும் வெயில் நிலவியது. இந்நிலையில், குமரி கடல் பகுதியில் இருந்து கடல் காற்று வீசத் தொடங்கியது. இதனால் தென் மாவட்டங்களில் கடந்த வாரம் முதல் மழை பெய்ய தொடங்கியது. தற்போது, வளிமண்டலத்தில் காற்று சுழற்சி ஏற்பட்டு வெப்ப சலனம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 9.4 மிமீ, மீனம்பாக்கத்தில் 10.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. இன்று காலையும் நகரின் பல இடங்களில் தூறல் மழை தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget