பங்கு சந்தைகள் பற்றிய தகவல்களுக்கு :www.tradersfirst.blogspot.com
 முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்தொலைத்தொடர்புத் துறையில் கால் பதிக்க திட்டம்:

அம்பானி சகோதரர்களுக்கு இடையே, கடந்த 2006ம் ஆண்டு பாகப் பிரிவினை ஏற்பட்டது. அப்போது ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, ஒருவர் தொழில் செய்யும் துறையில் அடுத்தவர் நுழைவதில்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கிடையே, இயற்கை எரிவாயு சப்ளை தொடர்பாக இருவருக்கும் இடையே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
அதில், முகேஷுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. எனினும், குடும்ப ஒப்பந்தம் பற்றி 6 வாரத்துக்குள் பேச்சு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. புதிய ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான துவக்கமாக, ஒருவர் ஈடுபட்டுள்ள துறையில் மற்றொருவர் ஈடுபடுவதைத் தடுக்கும் குடும்ப ஒப்பந்தத்தை ரத்து செய்து கடந்த ஞாயிறன்று இருவரும் அறிவித்தனர்.
இந்நிலையில், போன் நிறுவனமான ஏர்டெல்லின் தலைவர் சுனில் மிட்டலை முகேஷ் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் இறங்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2008ம் ஆண்டில் உரிமம் பெற்ற வீடியோகான் உட்பட சில போன் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது குறித்து முகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பிரிக்கப்படாத ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்த ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனம், பாகப்பிரிவினையின்போது, அனில் அம்பானி வசமானது. அந்நிறுவனம் இப்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 5  வது  எண்ணெய் கிணறு கண்டுபிடிப்பு:
பெட்ரோலிய உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், குஜராத் மாநிலத்தில் 5வது எண்ணெய் வயலை கண்டுபிடித்துள்ளது.
அகமதாபாத் நகரிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேம்பே படுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இதற்கு சிபி&ஓஎன்என்&2003/1 என பெயரிடப்பட்டுள்ளது. 635 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த படுகை ஏ மற்றும் பி என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இது அந்நிறுவனத்தின் 5வது கண்டுபிடிப்பாகும். 
அரசு துறை நிறுவனங்களின் ரூ.40,000 கோடி பங்கு விற்க அரசு திட்டம:
பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கங்கள் பற்றி கவலைப்படாமல், அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் இந்த நிதி ஆண்டில் ரூ.40,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள், கட்டமைப்பு பணிகளுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. அத்துடன், அரசு நிறுவனங்களில் பொது மக்களின் பங்கை அதிகரிக்க அரசு விரும்புகிறது. எனவேதான், முன்னணி நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் நிதி திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய நிதி நெருக்கடி மற்றும் பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் இருக்கின்றன. அதனால், அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனைத் திட்டம் தள்ளிப் போகுமா என சிலர் சந்தேகம் கொண்டுள்ளனர். ஆனால், அரசைப் பொருத்தவரை தனது பங்கைக் குறைத்துக் கொள்ளும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த நிதி ஆண்டில் (2010 &11) திட்டமிட்டபடி முன்னணி நிறுவனங்களில் அரசின் பங்குகள் குறிப்பிட்ட சதவீதம் விற்பனை செய்யப்படும். ஜூலை முதல் அந்தப் பணிகள் விரைவுபடுத்தப்படும். பங்குச் சந்தை ஏற்ற, இறக்கமாக இருப்பது எப்போதும் நடப்பதுதான். சவால் வரும்போது அதை எதிர்கொள்ள பங்கு விற்பனை அமைச்சகம் தயாராக உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உட்பட எண்ணெய் நிறுவனங்களில் அரசின் பங்குகளைக் குறைப்பது பற்றி பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்த பிறகே, விற்பனை நடவடிக்கை தொடங்கும். எந்தெந்த நிறுவனங்களின் பங்குகளை எத்தனை சதவீதம் விற்பனை செய்வது, எப்போது அதற்கான அறிவிப்பு வெளியிடுவது என அரசு விரைவில் முடிவு செய்து அறிவிக்கும்.
அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரூ.40,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பங்கு விற்பனைத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன.ஆனால் வரும் வாரங்களில்
பங்கு சந்தைகளின் போக்கு எப்படி இருக்கும் என்பதை திங்கள் கிழமை நிபிட்டி தனது
5000 புள்ளிகள் நிலையை எவ்வாறு கையாளுகிறது என்பதை வைத்து தான் சொல்ல
முடியும்.சந்தையை பொறுத்தவரை நிபிட்டி 5100 புள்ளிகள் வரை செல்ல வாய்ப்புள்ளது .
ஆனால் அதன் பிறகு சந்தையில் அதிக அளவு selling பிரஷர் ஏற்பட வாய்ப்புள்ளது .
எனவே முதலீட்டார்கள் மிகவும் கவனமாக செயல்படவும். லாபங்களை உடனுக்குடன்
பதிவு செய்யவும்.நீண்ட கால முதலீட்டிற்கு இது தகுந்த நேரமல்ல. கவனம். 

 


 அமெரிக்கர்களின் மனதை கவர்ந்த நம்பகமான நிறுவனங்களின் வரிசையில் மைக்ரோசாப்ட் முதல் இடத்தை பிடித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் மக்களுக்கு சேவை அளிப்பதில் முதன்மையான 25 நிறுவனங்கள் குறித்து ஆன்லைனில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 1,752 பேர் பங்கேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். அதன் விவரம் ;
உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனம் உலக அளவில் சாப்ட்வேர் சேவையை சிறப்பாக செய்து வருகிறது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவிகளை பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை செய்து வருவதாலும் அமெரிக்க மக்கள் மனதில் முதலிடத்தை பிடித்துள்ளது. இன்றைய காலத்தில் ஒருவருக்கு தேவையான எந்த செய்தியாக இருந்தாலும் அதனை உடனுக்குடன் தனது இணைய தளம் மூலம் வழங்கி வரும் கூகுள் நிறுவனம் இரண்டாவது இடத்தையும், ஆப்பிள் நிறுவனம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இதை தொடர்ந்து போர்டு கார் நிறுவனம் (4), சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் வால்மார்ட் (5), பாஸ்ட்புட் தயாரிப்பு நிறுவனம் மெக்டொனால்டு (6), ஜெனரல் எலக்டிரிக் (7), ஜான்சன் அண்ட் ஜான்சன் (8) முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. 
மைக்ரோசாப்ட் அமெரிக்க மக்களின் மனதில் முதலிடம் பிடித்தாலும், வியாபாரத்தில் 
இதுவரை தன்னிடம் இருந்த முதலிடத்தை ஆப்பிள் நிறுவனத்திடம் இழந்துள்ளது.


 புதிய மொபைல் போன் வாங்கப்போறீங்களா? கண்டிப்பாக உஷாராக பார்த்து வாங்குங்க; ‘சீல்’ செய்யப்பட்டு தானே இருக்கிறது என்று நம்பி விட வேண்டாம். நன்றாக சோதித்து வாங்குங்க. இல்லாவிட்டால், பழைய போனை புதிய போனுக்குரிய விலை கொடுத்த ஏமாந்து வீடுவீங்க.
ஆம், மும்பையில் பெண் தொழிலதிபர் ஒருவர் இப்படித்தான் ஏமாந்து இப்போது, இந்த விவகாரம் போலீஸ் வரை போய் விட்டது. மொபைல் போனை விற்ற கடைக்காரர், உண்மையில் அங்கீகாரம் பெறாத சட்டவிரோத டீலர் என்பது தெரியவந்து, கம்பெனியும் நடவடிக்கை எடுக்க உள்ளது.
மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்தவர் ஜோதி தாகுல்தார்; இவர் கணவர் சுப்ரஜித்துடன் சேர்ந்து ஆன்லைன் பைனான்ஸ் பிசினஸ் செய்து வருகிறார். ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற்று கடன் பெற்றுத்தரும் தொழில் செய்யும் இந்த பெண் தொழிலதிபர் சமீபத்தில், இர்லா என்ற பகுதியில் உள்ள பிரபல நோக்கியா மொபைல் போன் டீலர் கடையில் புதிய நோக்கியா போன் வாங்கினார்.
‘சீல்’ உடைத்து போனை காட்டி அதை பரிசோதித்து தந்தார் வியாபாரி. ப்ளூடூத் உட்பட பல வசதிகளை கொண்ட இந்த போனை வாங்கி வீட்டுக்கு வந்த ஜோதி, அதை திறந்து பார்த்தார்.
போனில் சில எஸ்.எம்.எஸ்.கள் இருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பழைய போனை கொடுத்து வியாபாரி ஏமாற்றி விட்டாரே என்று ஆத்திரம் வந்தது. பழைய போன் என்பதற்கு இன்னும் ஆதாரங்களை சேகரிக்க திட்டமிட்ட அவர், போனை முழுமையாக ஆராய்ந்தார்.
மொபைல் போன் ப்ளூடூத் ‘யூசர் நேம்’ வேறு ஒருவர் பெயரில் இருந்தது. மொத்தம் 20 எஸ்.எம்.எஸ்.கள் இருந்ததை கண்டுபிடித்தார். இந்த விஷயத்தை தன் கணவரிடம் சொன்னார்.
உடனே கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு இது பற்றி விவரம் தெரிவித்தார். ஆனால், கடைக்காரர் அதை ஒப்புக் கொள்ளவில்லை. ‘நான் பல ஆண்டாக இந்த கடையை நடத்தி வருகிறேன். ஆயிரக்கணக்கான பேர் என்னிடம் வாடிக்கையாளர்கள்; நீங்கள் வேண்டுமென்றே என் மீது பழி போடுகிறீர்கள்’ என்று பதிலுக்கு குற்றம் சாட்டினார்.
ஆனால், இந்த விஷயத்தை ஜோதி விடுவதாக இல்லை. போனை எடுத்துக் கொண்டு கடைக்கே சென்று விட்டார். ‘இதோ பாருங்கள். நான் திறக்கவே இல்லை. டப்பாவில் சீல் வைக்கப்பட்டு உள்ளது. அப்படியிருக்க, எப்படி எஸ்.எம்.எஸ்.கள் இருக்கும். ப்ளூ டூத் ‘யூசர் நேம்’ எப்படி வேறு பெயரில் இருக்கும்’ என்று கேட்டார்.
‘சாரி மேடம், உங்கள் பக்கத்தில் இருந்த இன்னொரு வாடிக்கையாளர் இந்த போனை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தான் இப்படி தவறு செய்திருக்க வேண்டும்’ என்று பல்டி அடித்தார். கம்பெனியில் கேட்டு, புது போன் வாங்கித் தருவதாகவும் உறுதி அளித்தார். ஆனால், ஜோதி திருப்தி அடையவில்லை.
வீடு திரும்பிய ஜோதி, நோக்கியா வெப்சைட்டில் அதன் தலைமையகத்தை தொடர்பு கொண்டு இது தொடர்பாக புகார் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு இ மெயிலில் பதில் வந்தது.‘எங்களுக்கு இர்லா பகுதியில் டீலராக இருந்த மன்னு ஜெஸ்வானி என்பவர் டீலர்ஷிப்பை ரத்து செய்ய கடிதம் எழுதி விட்டார். அவர் இப்போது எங்கள் டீலர் அல்ல. நீங்கள் தவறான வியாபாரியிடம் போன் வாங்கியிருக்கிறீர்கள்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
ஜோதிக்கு இன்னும் கோபம் அதிகமானது. மீண்டும் கடைக்கு போனார். விஷயத்தை சொன்னதும், மன்னு எகிறி குதித்தார். ‘என்ன மேடம், என்னை நம்ப மாட்டேங்கறீங்க. நான் தான் டீலர்; நீங்க எங்கே போயும் புகார் செய்யுங்க’ என்று பதிலுக்கு கத்தினார்.
டென்ஷனான ஜோதி, தன் கணவரை அழைத்துக் கொண்டு ஜுஹு பகுதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ‘போன் வியாபாரி என்னை ஏமாற்றி விட்டார். அவர் சட்டவிரோதமாக நோக்கியா போன் விற்று வருகிறார்’ என்று கூறியிருந்தார். இப்போது வியாபாரி மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
போதாக்குறைக்கு, நோக்கியா நிறுவனமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. ‘எங்கள் டீலர்ஷிப்பை ரத்து செய்து கொண்ட ஒருவர் சட்டவிரோதமாக எங்கள் நிறுவன மொபைல் போன்களை விற்பது அதிர்ச்சியாக உள்ளது. அதுவும், பழைய போன்களை புதிய போன் போல விற்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம்’ என்று கூறியுள்ளது.


 மேஷம்:
மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்ந்தாலும் தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.
ரிஷபம்:
மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
மிதுனம்:
நீண்ட நாளாகத் தள்ளிப்போன சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். தந்தைவழி உறவினர்கள் பாராட்டுவார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர் கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமா வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
கடகம்:
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.
சிம்மம்:
நட்பு வட்டம் விரியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.
கன்னி:
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உற வினர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர் கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சாதிக்கும் நாள்.
துலாம்:
இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
விருச்சிகம்:
மதியம் 2 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தை குறையுங்கள். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்
தனுசு:
கணவன்,மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வாகனம் பழுதாகும். எதிர்பாராத பயணங்களும், செலவுகளும் வந்து போகும். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மதியம் 2 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் நிதானம் தேவைப்படும் நாள்.
மகரம்:
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய திட்டங்கள் நிறை வேறும் நாள்.
கும்பம்:
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர் பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உங் களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்பு கூடும் நாள்.
மீனம்:
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.


 
 
29.5.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 15ம் நாள், சனிக் கிழமை,
தேய்பிறை. துவிதியை திதி மறுநாள் விடியற்காலை மணி 6.01 வரை; பிறகு, திருதியை திதி. சமநோக்குள்ள கேட்டை நட்சத்திரம் மதியம் மணி 2.04 வரை; பிறகு, கீழ்நோக்குள்ள மூலம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவன் நிறைந்த சித்தயோக நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 7.00 to 8.00, பிற்பகல் 10.30 to 1.00, மாலை 5.00 to 8.00, இரவு 9.00 to 10.00 மணி வரை. 
ராகுகாலம்:9.00 to 10.30
எமகண்டம்:1.30 to 3.00
மேற்கண்ட நேரங்களில் புதிய முயற்சிகளையும், சுபகாரியங்களையும் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: கார்த்திகை,ரோகினி நட்சத்திரங்கள் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் புதிய முயற்சிகளையும்,வீண் வாக்குவாதங்களையும் 
தவிர்க்கவும்.
பொதுப் பலன்:
பிரார்த்தனைகள் நிறைவேற்ற, பழைய நட்பை புதுப்பிக்க நன்று. 
 
 


 நிராயுதபாணியை மறைந்திருந்து கொல்வதை போன்ற கோழைத்தனம் வேறேதுமில்லை. துப்பாக்கிகள், கண்ணிவெடிகளுடன் திரியும் பயங்கரவாத இயக்கங்கள் எல்லாமே அதை செய்திருக்கின்றன. மாவோயிஸ்ட் என்ற பெயர் சூட்டிக் கொண்டு அலையும் இந்திய நக்சலைட்களும் தங்கள் கோழைத்தனத்தை அதே பாணியில் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்.
மேற்கு வங்கத்தில் தண்டவாளத்துக்கு குண்டு வைத்து பயணிகள் ரயிலை கவிழ்த்து அதன் மீது சரக்கு ரயில் மோதி 75 நிராயுதபாணி அப்பாவிகளை மிகக் கொடூரமாக கொன்றிருக்கிறார்கள். எந்த இடத்தில் தண்டவாளம் எப்படி வளைந்தால் ரயில் பெட்டிகள் அடுத்த தண்டவாளத்தில் கவிழும் என்பதை துல்லியமாக கணக்கிட்டு நாசவேலையை கச்சிதமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் கொலைகாரர்கள். உழைத்து சம்பாதித்த பணத்தில் ஒரு மாதம் முன்பே டிக்கட் பதிவு செய்து தொலைதூரத்தில் வசிக்கும் உறவுகளை சந்தித்து விடுமுறையை கழிக்க குடும்பம் குடும்பமாக புறப்பட்ட சாதாரண மக்களுக்கு மாவோயிஸ்டுகளோடு என்ன பிணக்கு? கண் மூடித் தூங்கி கனவுகளில் மிதந்த ஆண், பெண், குழந்தைகளை அடையாளம் காணமுடியாத அளவுக்கு சிதைத்ததால் மாவோயிஸ்டுகளின் இலக்கு நெருங்கிவிட்டதா?
மது பணம் புகழ் அதிகாரம் போன்றவை சுவைக்க சுவைக்க போதையேறி இன்னும் இன்னும் என்று ஏங்க வைப்பது போல ரத்த தாகமும் இறுதிவரை தணியாது. நாட்டில் 90 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் வன்முறை தொடர்ச்சியாக நடக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன் 9 மாநிலங்களில் 55 மாவட்டங்களில் இந்த நக்சலைட் நடமாட்டம் இருப்பதாக ஆய்வு மூலம் தெரியவந்தது. இன்றைய நிலவரப்படி அது 20 மாநிலங்கள், 223 மாவட்டங்கள் என பெருகியிருக்கிறது. சென்ற ஆண்டு ரயில்வே சொத்துக்கள் மீது 32 முறை மாவோயிஸ்ட் தாக்குதல் நடந்தது. இந்த ஆண்டு தாக்குதல் எண்ணிக்கையை குறைத்து உயிர் பலியை அதிகரித்துள்ளனர். தண்டேவாடாவில் இரண்டு அட்டாக்கில் சதம் தாண்டிவிட்டனர்.
ஆதிவாசி நலன் காக்க என்று சொல்லி கொடி தூக்கியவர்களின் கொலைவெறி உச்சத்துக்கு செல்வதை சமீபத்திய சம்பவங்கள் பிரதிபலிக்கின்றன. இந்த நிலையிலாவது மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து தெளிவான திட்டத்துடன் களமிறங்க வேண்டும். இனியும் தாமதமானால், மக்களின் நம்பிக்கை காளஹஸ்தி கோபுரம் போல முற்றிலுமாக தகர்ந்துவிடும்.





பிறக்கும் போதே யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. வளர்ப்பும்,
சூழ்நிலையும்தான் அவர்களை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் மாற்றுகிறது.அதுவே அவர்களது வாழ்க்கையின் அடையாளமாகவும் மாறி விடுகிறது.
இளம்ரத்தம் பயமறியாது என்பார்கள்.உண்மை தான். சில குழந்தைகள் செய்யும் செயல்கள்கிரிமினல் குற்றவாளிகளையே அதிர வைத்து விடுகின்றன. அந்தளவுக்கு ‘பிளான்பண்ணி’ கொலை   செய்யத் துணிகின்றனர். செல்போன் வாங்க ஆசைப்பட்டு, சக மாணவனைகடத்தி பணம் கேட்டதும், கொடுக்க மறுத்ததால் அவனை கொன்று கூறு போட்டதும்சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த பயங்கரம்.அது, இது என்று
எந்த வரையரையும் இல்லாமல் கைதேர்ந்தவர்கள் செய்யும்  எல்லாவிதமான
குற்றங்களிலும் இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 14 வயது வரை குழந்தைகள்
என்று சொல்லும் அதே சட்டம் தான், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள்
தவறிழைக்கும்போது இளம் குற்றவாளிகள் என்கிறது. அதேநேரத்தில் இவர்களை
மிகவும் கவனத்துடன் பார்க்கிறது. மற்றவர்கள் குற்றம் செய்து
நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை, மரண தண்டனை என்கிறது சட்டம். 18
வயதிற்குட்பட்டவர்களை விவரம் அறியாத பருவத்தினராக கருதி, சிறுவர்
கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறது.
சீர்திருத்த இல்லங்களில்
அவர்களின் நிலைமையை  ஆராய்வதற்கு முன்பே சமூகம் ஒதுக்கும் குற்றவாளிகளாக
அவர்கள் மாறி விடுகின்றனர்.
நாட்டில் நடைபெறும் குற்றங்களில் 2
சதவீதம்  இளம் குற்றவாளிகள் செய்பவை. இந்த குற்றங்கள் இரண்டு வகையாக
நடக்கின்றன. ஒன்று சம்பந்தப்பட்ட குற்றவாளியின் விருப்பம்,தேவையின்
அடிப்படையில் நடைபெறுபவை. மற்றவை சமூக விரோதிகள் அல்லது குடும்பத்தினர்
தூண்டுதலின் பேரில் நடைபெறுவவை. எப்படியிருந்தாலும் அதற்கு
சூழ்நிலைகளும், குடும்பமும் முக்கிய காரணம். எனவே இளம் குற்றவாளிகளின்
குற்றங்களுக்கு பின்னால் மற்றவர்களின் செயல்பாடுகளும், தூண்டுதலும்தான்
இருக்கின்றன’’.குறிப்பாக இளம்
குற்றவாளிகள் உருவாவதில் குடும்பத்தினர், உறவினர் ஆகியோர் அதிக பங்கு
வகிக்கின்றனர். இது சமூக விரோதிகளின் தாக்கத்தை விட பல மடங்கு அதிகம்
என்பது இன்னொரு அதிர்ச்சித் தகவல். அதே நேரத்தில் குடும்ப பொருளாதாரமும்
குற்றம் நடப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.
      பிள்ளைகள் தங்கள் பழக்க, வழக்கங்களை
பெற்றோரையும், உறவினர்களையும் பார்த்துதான் கற்றுக் கொள்கின்றனர். இதில்
முதலிடத்தில் இருப்பது குடிப் பழக்கத்திற்கு ஆளான பெற்றோர். பலர், தங்கள்
குழந்தையின் எதிரிலேயே சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களை
செய்கின்றனர். அதை பார்க்கும் பிள்ளைகள், குடிப்பதும், பிடிப்பதும்
தவறில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்.
இன்னும் சிலர்,
பிள்ளைகளிடமே வாங்கி வரச் சொல்கின்றனர். ஏன், எதற்கு என்று கேள்விகள்
நிரம்பிய பிள்ளைகள், சுவைத்தும் பார்த்து விடுகின்றன. தொட்டக்குறை,
விட்டக்குறையாக இருக்கும் இந்தப் பழக்கம் மெல்ல தொடர்கதையாகி விடுகிறது.
முதலில் மிச்சம், மீதி, பிறகு முழுவதுமாக நண்பர்களுடன் களத்தில்
இறங்குவார்கள். காசுக்கு வீட்டில் கை வைப்பார்கள். பிறகு வெளியில்.
முடிவில் போதையுடன், கிரிமினல்கள் என்று பட்டம். இப்படி
கெடுப்பவர்களின் பட்டியலில் பெற்றோர்கள் மட்டுமல்ல, உறவினர்கள், நண்பர்கள்
என பலரும் இருக்கிறார்கள். எனவே பிள்ளைகள் யாருடன் பழகினாலும்
எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
     வீட்டில் பிள்ளைகளுடன் பேச ஆள்
இல்லாவிட்டால், பல்வேறு சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்து விடும். அப்போது
சிக்குபவர்கள் காட்டும் தவறான வழியில் போய் பிள்ளைகள் சின்னாபின்னமாகி
விடும். எனவே குழந்தைகளின் தேவைகளை சரியாக பூர்த்தி செய்வதுடன், நல்வழி
காட்டும் கதைகளையும், போதனைகளையும் சொல்லித் தருவது நல்லது. குறிப்பாக
தவறான வழியில் போனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் எடுத்து சொல்வது
மிக முக்கியம். இதற்கு வீட்டில் தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் இருப்பது
நல்லது.
தேசிய
அளவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகள் எண்ணிக்கை கடந்த 10
ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்துள்ளது. அதே போல் சிறுமிகளின் எண்ணிக்கையும்
3 மடங்கு குறைந்துள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறுவர், சிறுமிகள்
16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்.
     சிகரெட் அட்டைகளை சேகரித்து அதில் சீட்டு ஆடினாலே
சூதாட்டம் என்று சீறுவது அந்தக் காலம்.  இந்த நாகரீக காலத்தில் சீட்டாட்டம்
இன்டோர் கேம் ஆகிவிட்டது. பணக்கார வீடுகளில் மட்டுமல்ல, நடுத்தர
குடும்பங்களிலும் சீட்டு விளையாட்டு ஜஸ்ட் FUN அதனால் ஏற்படும்
விளைவுகள் சீரியஸானது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சம்பவம். சீட்டாட்டத்தில்
தோற்ற சிறுமியை உடைகளை கழற்றச் சொல்லி சக சிறுவர்கள் கட்டாயப்படுத்தினர்.
அவமானத்தில் துடித்த சிறுமி கடைசியில் தூக்கில் தொங்கிளாள். தூண்டிய
குற்றத்திற்காக சக நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும்
வயது 18க்குள். மிக முக்கியான விஷயம், இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள்.
 திருட்டுக்

குற்றங்களில்தான் அதிக அளவில் இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 80 சதவீத
திருட்டுக்கள் மற்றவர்களின் தூண்டுதலின் பேரில், மற்றவர்களுக்கு துணை
நின்றதால் நடந்தவை. 2007 ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 5606 திருட்டுக்கள்
இளம் குற்றவாளிகள் மூலம் நடைபெற்றுள்ளன. இன்னொரு அதிர்ச்சி தகவல்... 2007ம்
ஆண்டு மட்டும் 672 கொலைகள் நடந்துள்ளன. இதில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு
முதல் இடம். அதாவது 141 கொலைகள். அடுத்து மத்திய பிரதேசம். தமிழ்நாட்டிற்கு
10வது இடம். 28 கொலைகள் தான். 746 கற்பழிப்புகளுக்கு துணை போயுள்ளனர்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து கலவரத்தில் ஈடுபட்டதாக 1400
சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதங்கள்,

போதைப் பொருள், சூதாட்டம், சாராயம் விற்பனை என 22க்கும் அதிகமான
குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குகளில் எல்லாம்
இளம் குற்றவாளிகள் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுகின்றனர். அதனை சட்டமும்
கவனிக்கிறது.
2007ம் ஆண்டில் நடந்த இளம் குற்றவாளிகள் செய்த குற்றங்களை
விட 2008ம் ஆண்டு குறைவான சம்பவங்களே நடந்துள்ளன. அதாவது 2007ம் ஆண்டில்
இதர சட்டங்களின் கீழ் 4163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது 2008ம்
ஆண்டில் 3156 ஆக குறைந்துள்ளது.நாகரீகத்திலும், குடும்ப உறவுகளிலும் ஏற்படும்
மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கையும்
அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய தண்டனைச்
சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் செய்த குற்றங்கள்
விவரம்:
இளம் குற்றவாளிகள்
பட்டியலில் தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள் தான் முதலிடத்தை
பிடிக்கின்றனர். தெருவோரத்தில் வசிப்பவர்கள் என்று சொன்னாலும்,  தங்குவது
ரயில், பேருந்து நிலையங்களில்தான். வறுமையின் பிடியில் இருப்பவர்கள்
முதலில் பிச்சை எடுப்பார்கள். பின்னர் மற்றவர்களுடன் கூட்டு சேருவர்கள்.
அப்பாவிகளை மிரட்டி காசை பறிப்பார்கள். மறுத்தால் அடி உதையில் இறங்குவர்.
பிக்பாக்கெட், செயின் பறிப்பு என்று உள்ளூர் திருட்டுகளில் தேறிய பின்னர்
இளம் குற்றவாளிகள் பட்டியலில் சேருவர்கள். இல்லாவிட்டாலும் மாசக் கடைசி
கேஸ்’ பிடிக்கும் போலீசார் புண்ணியத்தில் கேடிகள் லிஸ்டில் வந்து
விடுவார்கள். சமூக விரோதிகள் பழக்க்கம் கிடைத்ததும் இளம் குற்றவாளிகள்
பட்டியலில் இருந்து பதவி உயர்வு பெற்று பெரும் குற்றவாளிகள் ஆவார்கள். பல
சமூக விரோதிகள், சின்ன பையன்கள் என்றால் சந்தேகம் வராது என்பதால், குற்றச்
செயல்களிலும், துப்பு கொடுக்கவும் சிறுவர்களை பயன்படுத்துகின்றனர். சென்னை,
மதுரை போன்ற நகரங்களில் அதிக அளவில் நடக்கிறது.இளம் குற்றவாளிகள் அதிகரிக்க, இல்லாமை எனும் வறுமை முக்கிய
பங்கு வகிக்கிறது. அன்றாடத் தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத
குடும்பங்களில் பிள்ளைகளை கவனிக்க நேரமிருப்பதில்லை. எப்படியாவது
சாப்பிட்டால் போதும் என்ற நிலை, அவர்களை கண்டும் காணாமல் இருக்க வைத்து
விடுகிறது. அதனால் வறுமை அவர்களின் நேர்மையை வென்று விடுகிறது. தேசிய
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வு அறிக்கை இப்படி பட்டியல்
போடுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2008ம் ஆண்டு பதிவுகளின் படி இளம்
குற்றவாளிகளில் 62.2 சதவீதத்தினர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்.
அதாவது ஆண்டு வருமானம் ரூ.25,000 வரை உள்ளவர்கள். அதேபோல் ரூ.25,000 முதல்
ரூ.2 லட்சம் வரை வருமான உள்ள குடும்பங்களை சேர்ந்த இளம் குற்றவாளிகள் 13.6
சதவீதம். எஞ்சிய 24.2 சதவீதத்தினர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான வருவாய்
உள்ளவர்கள். தமிழகத்திலும் இளம்
குற்றவாளிகளால் அரங்கேறிய குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து
வருகின்றன. 2006 முதல் 2008 வரையில் பதிவான குற்ற விவரங்களை மாநில குற்ற
ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டின் குற்றங்கள் தொகுக்கப்பட்டு
வருகின்றன.
குற்றம்                          2006           2007           2008
கொலை                          23              38               26

கொலை முயற்சி          18              17               17        
கற்பழிப்பு                           8             13                  7
 கடத்தல்                           0                4                3
பெண் கடத்தல்                 0                2                3
வீடுபுகுந்து திருட்டு        1               14               3
வழிப்பறித் திருட்டு         6                 1              13
கொள்ளை                       119             138            106
திருட்டு                            304             387            410
ஆட்டோதிருட்டு            44               56              56
வன்முறை                        6                26              23
அடிதடி                             41                42             158
மானபங்கம்                       5                 2                 5
பாலியல் தொந்தரவு        5                0                 0
அலட்சியம் காரணமாக
ஏற்படுத்திய உயிரிழப்பு   78               0                 6
மற்ற
குற்றங்கள்                          29              65               75
மொத்தம்                           687              805            911
விவரம் அறியாத சிறுவர், சிறுமியர்களை வீட்டில் வைத்துக்
கொண்டு பாலுறவில் ஈடுபடும் பெற்றோர்கள், உறவினர்கள் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும். குழந்தைதானே என்று அலட்சியத்துடன் அவர்கள் செய்யும் செயல்கள்
குழந்தைகளின் மனதை கெடுப்பதுடன், வளர்இளம் பருவத்திலேயே அது குறித்த
ஆர்வத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. சிகரெட், மது போல் அதையும் முயற்சித்து
பார்ப்பதால், குற்றவாளியாக மாறி விடுகின்றனர். அது வெளியில் தெரியவரும்
போது இரு தரப்பையும் பாதிக்கிறது. 2008ம் ஆண்டு தகவல் இது. நாட்டில்
30 லிருந்து  50 லட்சம் சிறுவர், சிறுமிகள் கட்டாயத்தின் பேரில் பாலியல்
தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றனர்.
இது ஏதோ கதை என்று நினைத்து விடாதிர்கள்.ஒவ்வொரு பெற்றோரும் தங்கள்
குழந்தைகள் மேல் எப்போதும் கவனுத்துடன் இருக்க வேண்டும்.கவனுத்துடன்
இருப்பதால் உங்களுக்கு ஒரு நல்ல சந்ததி கிடைக்கும்.இந்த சமுகத்துக்கு ஒரு நல்ல
மனிதன் கிடைப்பான். இந்தியாவில் சிறந்த சமூகத்தை உருவாக்க நாம் ஒவ்வொருவரும்
நல்ல குழந்தைகளை உருவாக்குவோம். ஜெய் ஹிந்த்!


 
 மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் ரயில் பாதையை மாவோயிஸ்ட் நக்சலைட்கள் குண்டு வைத்து தகர்த்தனர். இதனால் தடம் புரண்ட மும்பை பயணிகள் ரயில் மீது, சரக்கு ரயில் மோதியதில் 65 பேர் உடல் சிதறி இறந்தனர். 150 பேர் படுகாயம் அடைந்தனர். 
பீகார், மேற்கு வங்கம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சமீபகாலமாக பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் நக்சல்களின் கண்ணிவெடியில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் படை போலீசார் பலியாகி உள்ளனர். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தை நக்சல்கள் குண்டு வைத்து தகர்த்ததால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 65 பேர் பலியாகி உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மும்பைக்கு லோக்மான்ய திலக் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு புறப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள கெமாசோலி மற்றும் சர்தியா ரயில் நிலையங்களுக்கு இடையே மும்பை ரயில் நள்ளிரவு 1.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. வேகமாக வந்த ரயில் தடம் புரண்டதில் 13 பெட்டிகள், அருகில் உள்ள ரயில் பாதையில் கவிழ்ந்தன.
அதே நேரத்தில் பக்கத்து தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் பயணிகள் ரயில் கவிழ்ந்து கிடப்பதை பார்த்த சரக்கு ரயிலின் இன்ஜின் டிரைவர், பிரேக் போட்டு ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால், அதற்குள் கவிழ்ந்து கிடந்த பெட்டிகள் மீது சரக்கு ரயில் மோதியது.
எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தனர். என்ன நடந்தது என்று தெரியாமல் அவர்கள் சுதாரிப்பதற்குள் சரக்கு ரயில் மோதியதில் பெட்டிகளில் இருந்த பல பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். படுக்கை வசதிகளுடன் கூடிய ஒரு பெட்டி, முன்பதிவு செய்யப்பாடாத ஒரு பெட்டி, பேன்ட்ரி வேன் ஆகியவை பலத்த சேதமடைந்தன. அவற்றில் இருந்த 65 பேர் உடல் நசுங்கி பலியாயினர். 150 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
 மும்பை ரயிலின் 11 பெட்டிகள் சேதமடையாமல் இருந்தன. கவிழ்ந்த பெட்டிக்குள் சிக்கி காயமடைந்த பயணிகளை மீட்டு காரக்பூர் கொண்டு சென்றனர். அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் கலைகுண்டா விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து இரு ஹெலிகாப்டர்களில் விமானப்படையினர் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயம் அடைந்த பயணிகள் 45 பேர் விமானப்படை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். சிலர் காரக்பூர் ஐஐடி ஆஸ்பத்திரி மற்றும் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தின் பின்னணியில நக்சல்கள் சதித்திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. எக்ஸ்பிரஸ் ரயில் வந்த தண்டவாளத்தை நக்சல்கள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். அதனால்தான் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
 பலியான பயணிகளுக்கு ரயில்வே சார்பில் தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும். மேலும் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான ரயில் பயணிகள் பற்றி விவரங்கள் அறிய காரக்பூர் மற்றும் ஹவுராவில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காரக்பூர் உதவி மையத்தை 0322 255751 என்ற எண்ணிலும், ஹவுரா உதவி மையத்தை 033 -26382217 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


 தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உடல் நலத்தைக் காப்பதுடன், மூளையின் வளர்ச்சிக்கு குடிநீர் அவசியம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
டீன் வயது இளைஞர்களின் மூளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் மூளையின் வளர்ச்சிக்கும், சீரான இயக்கத்துக்கும் குடிநீர் மிகவும் அவசியம் என்பது தெரியவந்துள்ளது. போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் போனால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், சீரான இயக்கமும் தடைபடுவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 நிமிடங்களுக்கு தொடர்ந்து வியர்வை வெளியேறினாலும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.
தண்ணீர் தாகத்துடன் இருப்பவர்களால் வேலை மற்றும் படிப்பில் உரிய கவனம் செலுத்த முடியாமல் போகிறது. எனினும், தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் குடித்தால் உடனடியாக மூளை இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உடலின் எடைக்கு ஏற்ப தண்ணீர் தேவை மாறுபடுகிறது. மொத்த உடல் எடையில் 57 சதவீதம் அதாவது 70 கிலோ எடை உள்ள ஒருவருக்கு 40 லிட்டர் தேவைப்படுகிறது.
குடிநீர் பொதுவாக, உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதுதவிர, உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கவும், சீரான ஜீரணத்துக்கும், உறுப்புகளுக்கு மசகு பொருளாகவும், ஊட்டச் சத்துக்களை உடலின் பல பாகங்களுக்கு எடுத்துச் செல்லவும், நோய்க் கிருமிகளை அழிக்கவும் தண்ணீர் பயன்படுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.



 
TRADING LIVE TIPS VISIT MY BLOG : www.tradersfirst.blogspot.com
நடப்பு நிதியாண்டில் வங்கிகளின் வசூலாகாத கடன்கள் (என்பிஏ) ரூ.1 லட்சம் கோடியைத்தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதுகடந்தநிதியாண்டைவிட
இரண்டு மடங்கு அதிகம்.கிரீஸ் நாட்டின் நிதி நெருக்கடி விஸ்வரூபம் எடுத்துள்ளதால் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, டெக்ஸ்டைல்ஸ் துறை வெளிநாட்டு ஆர்டர்களை பெருமளவில் நம்பி உள்ளன. இவற்றை அதிக அளவில் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆர்டர்கள் மிகவும் குறைவாக உள்ளன.
இதுதவிர, ஸ்டீல், டெக்ஸ்டைல்ஸ், விமான போக்குவரத்து, ரியல் எஸ்டேட், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வருமானமும் நடப்பு நிதியாண்டில் குறையும். இதனால் இத்துறை சார்ந்த நிறுவனங்கள் வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பித் தருவதில் தாமதம் ஏற்பட்டு வசூலாகாத கடன்கள் அதிகரிக்கும் என வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மார்ச் 31 உடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டின் இறுதியில் வங்கிகளின் வசூலாகாத கடன் ரூ.68 ஆயிரம் கோடியாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டில் இரண்டு மடங்காகி ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும்.
கடந்த நிதியாண்டில் வசூலாகாத கடனை வசூலிக்க ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை வங்கிகள் ஏலம் விட்டன. ஆனால், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள் (ஏஆர்சி) ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை மட்டுமே ஏலம் எடுத்தன. நிதி பற்றாக்குறையே இதற்குக் காரணம்.எனவே, சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களில் 49 சதவீதமாக உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்துறை சார்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


28.5.2010,

விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 14ம் நாள், வெள்ளிக்கிழமை,
தேய்பிறை. பிரதமை திதி மறுநாள் விடியற்காலை மணி 5.33 வரை; பிறகு, துவியை திதி. சித்தயோகமுடைய அனுஷம் நட்சத்திரம் மதியம் மணி 1.13 வரை; பிறகு, மரணயோகமுடைய கேட்டை நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சமநோக்கு நாள். அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி.
நல்ல நேரம்:
காலை மணி 6&9, மதியம் 1&3, மாலை 5&6, இரவு 8&10 மணி வரை.
ராகுகாலம்:10.30 to 12.00
எமகண்டம்:3.00 to 4.30
சந்திராஷ்டமம்: பரணி,கார்த்திகை நட்சத்திரங்கள்
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்
பொதுப்பலன்:
கடன் பைசல் செய்ய நன்று.


 INDIA'S FIRST REAL TIME (every 30 minutes) TRADING TIPS VISIT MY BLOG: tradersfirst.blogspot.com
சர்வதேச பங்குச் சந்தைகளின் உயர்வு காரணமாக, நேற்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 365 புள்ளிகள் உயர்ந்து 16,388ல் நிலை பெற்றது.
ஆசிய பங்குச் சந்தைகளின் ஏற்றம் காரணமாக, நேற்று வர்த்தகம் தொடங்கும்போதே சென்செக்ஸ் உயர்வுடன் இருந்தது. பிற்பகலில் ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மேலும் உற்சாகம் அடைந்து பங்குகளை வாங்கிக் குவித்தனர்.
குறிப்பாக நிதி நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கின. இதையடுத்து, வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 365 புள்ளிகள் உயர்ந்து 16,388ல் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 111 புள்ளிகள் உயர்ந்து 4,917 புள்ளிகளில் முடிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை நிர்ணயிக்கும் 30 நிறுவன பங்குகளில் 24 உயர்வுடன் முடிந்தன. அதிகபட்சமாக ஐடி துறை பங்குகள் 3.48 சதவீதம் உயர்ந்தன. ஐடி நிறுவனங்களின் வெளிநாட்டு வருமானத்தின் பெரும்பகுதி அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து வருவதால் வருமானம் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. ஐடி துறை பங்குகளின் உயர்வுக்கு இதுவே முக்கிய காரணம். அடுத்தபடியாக உலோக துறை பங்குகள் 2.98 சதவீதம் உயர்ந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை நிர்ணயிப்பதில் முன்னிலை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.08 சதவீதமும் இரண்டாம் இடத்தில் உள்ள இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் 3.37 சதவீதமும் உயர்ந்தன.
இன்றும் பங்கு சந்தைகள் 2 % வரை உயர்வை கண்டன.கடந்த ஒருவாரமாக முதலிட்டார்கள் இடையில் நிலவி வந்த பயம் நீங்கி நம்பிக்கை பிறந்தது.



கூகுள் நிறுவனத்தின் பேக் மேன் கம்ப்யூட்டர் கேம் விளையாட்டால் உலகம் முழுவதும் அலுவலக ஊழியர்களின் 50 லட்சம் மணி நேரம் வீணாகிப்போனது. பொருளாதாரத்துக்கு ரூ.570 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
பேக் மேன் கம்ப்யூட்டர் கேம் கண்டுபிடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. இதைக் கொண்டாடும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை கூகுள் நிறுவனம், கூகுள் சர்ச் இன்ஜின் அருகே, கூகுள் என்ற ஆங்கில வார்த்தையின் வடிவத்தில் இந்த கம்ப்யூட்டர் கேமையும் போட்டிருந்தது. சர்ச் இன்ஜினில் தேட வந்தவர்கள் அனைவரும் பேக் மேன் கேமை பார்த்ததும் விளையாட ஆரம்பித்துவிட்டனர். 48 மணி நேரம் வரை இந்த கூகுள் லோகோ பேக் மேன் கேம் இருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 50.5 கோடிப் பேர் கூகுள் சர்ச் இன்ஜினை பயன்படுத்தியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானாவர்கள் கூகுள் லோகோ பேக் மேன் கேமை பார்த்ததும் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். இதனால் உலகம் முழுவதும் அலுவலக ஊழியர்களின் 48 லட்சத்து 19 ஆயிரம் மணி நேரம் வீணாகிப் போனது. அலுவலக பணி நேரத்தில் விளையாடியதால் ரூ.570 கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக ரெஸ்க்யூ டைம் என்ற ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இத்தனை கோடி பணத்துக்கு கூகுள் நிறுவனர்களான லாரி, செர்ஜி மற்றும் அங்கு பணிபுரியும் 19,385 ஊழியர்களையும் 6 வாரங்களுக்கு வேலைக்கு அமர்த்தலாம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேக் மேன் கேமுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததும் அசந்து விட்டோம். இதனால் கூகுள் டாட் காமில் இந்த கேமை நிரந்தரமாக விளையாட வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளார் கூகுள் நிறுவன துணைத் தலைவர் மரிஸா மேயர்.


 
 காளஹஸ்தி சிவன் கோயில் ராஜகோபுரம் நேற்றிரவு 8 மணியளவில் முழுவதுமாக அடியோடு இடிந்து விழுந்து தரைமட்டமானது.
பஞ்ச பூத சிவத் தலங்களில் வாயு தலமாக விளங்குவது ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில். திருப்பதியில் இருந்து 38 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இக்கோயிலில் ராகு, கேது தோஷ நிவர்த்திக்கான பரிகார பூஜைகள் செய்யப்படுவதால் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்த கோயிலின் ராஜ கோபுரம் 140 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளித்துவந்தது. கி.பி. 1510ம் ஆண்டு கிருஷ்ண தேவராய மன்னர் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக இந்த பிரம்மாண்ட ராஜகோபுரத்தை கட்டியதாக வரலாற்று சுவடுகள் தெரிவிக்கின்றன.
இந்த ராஜகோபுரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லேசான விரிசல் ஏற்பட்டது. ஆனால், அப்போது இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. தற்போது திடீரென ராஜகோபுரத்தின் மேல் முதல் நிலையிலிருந்து ஆறாம் நிலை வரை கோபுரத்தின் இடதுபுறம் இரண்டாக விரிசல் ஏற்பட்டு பிள வுபட்டது போல் காணப்பட்டது. 
மின்னல் வெட்டு போல் காணப்பட்ட இந்த இடத்திலிருந்து செங்கற்கள், சுண்ணாம்பு கற்கள் விழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் ராஜகோபுரம் முழுவதும் நேற்றுறிரவு இடிந்து விழுந்தது.


 
 
 
 
 
எப்படியெல்லாம் எதிரி நாட்டை எரிச்சல்படுத்தலாம் என ரூம் போட்டு யோசிப்பார்கள் போல் இருக்கிறது. இந்தியாவை எரிச்சல் படுத்த பாகிஸ்தான் தீவிரவாதத்தை பயன்படுத்துகிறது என்றால், வட கொரியாவை நோகடிக்க, மெகா சைஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்துகிறது தென் கொரியா.
ஒரே நாடு, ஒரே இனமாக இருந்த கொரியாவை ஜப்பான் ஆண்டு வந்தது. பசிபிக் போருக்குப் பிறகு, 1945ல் அமெரிக்கா ஆதரவுடன் தென் கொரியாவும் சீனா, ரஷ்யா ஆதரவோடு வட கொரியாவும் உருவானது. இந்தப் பக்கம் ஜனநாயகம், அந்தப் பக்கம் கம்யூனிசம் என இரு துருவங்களாகி போனது. தென் கொரியாவின் போர்க் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதலில் கடலில் மூழ்க, அதற்குக் காரணம் வட கொரியாதான் என முஷ்டியை மடக்கியது தெ.கொ. இது அபாண்டம் என வ.கொ. மறுக்கிறது. இந்த நிலையில்தான் வித்தியாசமான பிரசாரத்தை தொடங்கியிருக்கிறது தென் கொரியா.
இரு நாடுகளுக்கும் இடையில் 155 மைல் நீள எல்லைப் பகுதியில் மெகா சைஸ் ஸ்பீக்கர்களை வைத்து இரவும் பகலும் பிரசாரம் செய்து வருகிறது. ஜனநாயகத்தின் சிறப்பு, தென்கொரியர்களின் சந்தோஷமான வாழ்க்கை முறை பற்றி 4 மணி நேரம் கொண்ட நிகழ்ச்சியை தினமும் மூன்று முறை ஒலிபரப்புகிறது. அதோடு, வட கொரியாவைப் போல் பஞ்சம் எதுவும் இல்லை என்றும் எல்லோரும் நிறைய சாப்பிட்டு குண்டாக இருப்பதுதான் பிரச்னையாக இருக்கிறது என்றும குத்திக் காட்டுகிறது. இதைக் கேட்கும்  வட கொரியர்கள் எல்லை தாண்டி வந்தால், வரவேற்று வாழ்வளிக்கிறது. அதோடு எல்லை நெடுகிலும் பெரிய பெரிய டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகளை வைத்துள்ளது. அவற்றில் தென் கொரியாவின் வானுயர்ந்த கட்டிடங்கள், சந்தோஷமான குடும்பங்கள், பெரிய பெரிய தொழிற்சாலைகள் ஒளி வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதுபோக ஹீலியம் பலூன்களில் போட்டோக்கள் நிரம்பிய துண்டுப் பிரசுரங்களை எதிர்ப் பக்கம் கொட்டி வருகிறது. இப்படி பல விதங்களில் வட கொரிய அரசை வெறுப்பேற்றி வருகிறது தென் கொரியா.
எவ்வளவுதான் பொறுக்கும் வட கொரியா. ஸ்பீக்கர் பிரசாரத்தை நிறுத்தாவிட்டால், பீரங்கித் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது. இன்னொரு போருக்கு தயாராகிறது ஒரே இனம்.


 
 மேஷம்:
சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். வேலைச்சுமை மிகுந்த நாள்.
 
ரிஷபம்:
சாவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர் கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திறமைகள் வெளிப்படும் நாள்.
 
மிதுனம்:
எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
 
கடகம்:
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடி வெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
 
சிம்மம்:
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
 
கன்னி:
பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.
 
துலாம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
 
விருச்சிகம்:
ராசிக்குள் சந்திரன் செல்வதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
 
தனுசு:
குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
 
மகரம்:
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.
 
கும்பம்:
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். இனிமையான நாள்.
 
மீனம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த வாக்குவாதம், காரியத்தடை யாவும் நீங்கும். கணவன்,மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.



27.05.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 13ம் நாள், வியாழக்கிழமை,
வளர்பிறை. பௌர்ணமி திதி மறுநாள் விடியற்காலை மணி 5.34 வரை; பிறகு தேய்பிறை பிரதமை திதி. கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம் மதியம் மணி 12.53 வரை; பிறகு, சமநோக்குள்ள அனுஷம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோக நாள். வைகாசி விசாகம், திருவண்ணாமலை கிரிவலம்.
நல்ல நேரம்:
காலை மணி 9.00 to 12.00, மாலை 4.00 to 7.00, இரவு 8.00 to 9.00 மணி வரை. 
ராகுகாலம்: 1.30 to 3.00
எமகண்டம் :6.00 to 7.௩௦
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும் 
சந்திராஷ்டமம்: அஸ்வினி, பரணி நட்சத்திரங்கள் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் புதிய முயற்சிகளையும்,வீண்வாக்கு வாதங்களையும் 
தவிர்க்கவும்.
பொதுப்பலன்:
புது வேலைக்கு விண்ணப்பிக்க, அரசு அதிகாரிகளை சந்தித்து உதவி பெற நன்று. 
இன்று விசாக நட்சத்திரம்.முருகன் கோவில் சென்று வழிபடலாம்.


பாலியல் உறவு வைத்துக்கொள்வதில் முழு திருப்தியை ஆண்களுக்கு அளிக்க அறிமுகமான வயாகரா என்ற நீல நிற மாத்திரை போலவே, பெண்களுக்கும் வரப்போகிறது ஒரு வயாகரா பாணி மாத்திரை. இந்த மாத்திரை பிங்க் கலரில் இருக்கும்.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த மருந்துக்கம்பெனி, இந்த மாத்திரையை தயாரித்துள்ளது. இந்த மாத்திரையின் பெயர் ‘பில்பன்சரின்’ என்பது. பாலியல் உறவில் முழு திருப்தியை அளிக்க உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்த வல்ல இந்த மாத்திரை, பல கட்ட சோதனைகள் செய்யப்பட்டு விட்டன. சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள், இந்த மாத்திரை சாப்பிட்டதும், ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளும் போது சிறிதளவு கூட தொய்வே ஏற்படவில்லை, முழு திருப்தி அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.
    ஆண்களின் வயாகரா போல பெண்களுக்கு ஒரு வயாகரா மாத்திரையாக இது அறிமுகமாக உள்ளது. இந்த மாத்திரையை தயாரித்து விட்டாலும், அதற்கு, அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி பெற வேண்டும். அப்போது தான், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்ய முடியும்.
ஜெர்மனியில் போரிங்கர் இங்ஹெய்ம் என்பது பிரபல மருந்து கம்பெனி. இது தான் பெண்களுக்கான வயாகரா மாத்திரையை ‘பில்பன்சரின்’ என்ற பெயரில் உருவாக்கி, சோதனைகளை செய்து நிரூபித்தும் காட்டியுள்ளது.
ஆண்களுக்கான வயாகரா மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பிஷர் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் இதைப் பயன்படுத்தலாம்’ என்று கூறியது.
ஆனால், அமெரிக்க கட்டுப்பாட்டு துறை அனுமதிக்கவில்லை.
‘பெண்களுக்கு உடல் பிரச்னைகள் உள்ளன. ஆண்களை போல, அவர்கள் இது போன்ற விஷயங்களுக்கு மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட முடியாது; அப்படி சாப்பிட்டால், பெரும் கோளாறுகளுக்கு வழிவகுத்து விடும்; அதனால் தான் பெண்கள் விஷயத்தில் பாலியல் தொடர்பான மாத்திரைகளை, மருந்துகள் அனுமதிப்பதில் உஷாராக இருக்க வேண்டியிருக்கிறது’ என்று அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு துறை கூறி விட்டது..
சோர்வை நீக்கும் மாத்திரையாகத்தான் முதலில் ஜெர்மனி நிறுவனம் ‘பில்பன்சரின்’ மாத்திரையை தயாரித்தது; இதை மாற்றி, இப்போது பெண்களுக்கான வயாகரா போல வடிவமைத்துள்ளது.
இந்த மாத்திரைக்கு அமெரிக்கா பச்சைக்கொடி காட்டி விட்டால், பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பார்த்து விடலாம் என்று ஜெர்மனி நிறுவனம் எதிர்பார்க்கிறது. அதுபோலவே, வேறு நிறுவனங்களும் பெண்களுக்கான வயாகராக்களை புதுப்புது பெயர்களில் விற்பனைக்கு விட தயாராக உள்ளன


SHARE TRADING LIVE TIPS VISIT MY BLOG:www.tradersfirst.blogspot.com
ஸ்பெயினில் திவாலான வங்கிக்கு அந்நாட்டு அரசு நிதியுதவி வழங்கப் போவதாக தகவல் வெளியானதால், உலக பங்குச் சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. இதன் எதிரொலியாக, சென்செக்ஸ் 447 புள்ளிகள் சரிந்து 16,022ல் நிலைத்தது. இதன்மூலம் மூன்றரை மாதத்துக்கு முந்தைய நிலையை அடைந்தது.
கிரீஸ் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியனை சேர்ந்த ஸ்பெயின் நாட்டின் கஜாசர் வங்கி திவால் ஆனதாகவும், அதற்கு அந்நாட்டு சென்ட்ரல் வங்கி நிதியுதவி அளிக்கும் என்றும் நேற்று தகவல் வெளியானது. இதன் காரணமாக ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியதால் இந்திய பங்குச் சந்தைகளும் சரிவுடனேயே தொடங்கின. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை மளமளவென விற்றதால் சரிவு நாள் முழுவதும் நீடித்தது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றமும் சரிவுக்கு மற்றொரு காரணம். வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ் கடந்த 10 மாதங்களில் இல்லாத வகையில் 16,000 புள்ளிகளை உடைத்துக் கொண்டு கீழ் இறங்கியது.
குறைந்தபட்சமாக 15,960 புள்ளிகள் வரை இறங்கிய சென்செக்ஸ் இறுதியில், 447 புள்ளிகள் சரிவுடன் 16,022ல் நிலைத்தது. இது 2.7 சதவீத சரிவாகும். கடந்த பிப்ரவரி 10ம் தேதிக்குப் பிறகு இந்த அளவு குறைந்திருப்பது இதுவே முதன்முறை.
சென்செக்ஸ் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட 30 நிறுவன பங்குகளில் ஒன்று மட்டுமே ஏற்றம் கண்டது. இதன்மூலம் இந்த மாதத்தில் மட்டும் சென்செக்ஸ் 8.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 137 புள்ளிகள் சரிந்து 4,807ல் நிலைபெற்றது.


                 TRADING LIVE DATA VISIT MY BLOG : http://www.tradersfirst.blogspot.com/
அம்பானி சகோதரர்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.18,000 கோடி லாபம் கிடைத்தது.
அம்பானிகளுக்கிடையில் சமரசம் ஏற்பட்டதால், கடந்த திங்கட்கிழமை இந்திய பங்குச் சந்தையில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும், இந்த இரு குழும நிறுவன பங்குகளும் ஏற்றத்துடன் இருந்தன. அதிகபட்சமாக அனில் அம்பானியின் ஆர்என்ஆர்எல் பங்கு 22.6 சதவீதம் உயர்ந்து ரூ.55 ஆனது. இதுபோல் முகேஷின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ப்ரா 11.3 சதவீதம் உயர்ந்தது. இதுதவிர, இந்த இரு குழுமங்களைச் சேர்ந்த 9 நிறுவன பங்குகளும் அதிக அளவில் உயர்ந்தால் இவற்றின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு ரூ.18 ஆயிரம் கோடி அதிகரித்தது.
‘‘அம்பானி சகோதரர்களிடையே சமரசம் ஏற்பட்டதால் பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கியது. குறிப்பாக, முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் குழும பங்குகளை அதிக அளவில் வாங்கிக் குவித்தனர்’’


செல்போன் பயன்படுத்துவதால் மூளை புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடக்கத்தில் வசதியானவர்கள், தொழிலதிபர்கள் செல்போன் பயன்படுத்தினர். தற்போது இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர். கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்கள், வகுப்பறைகளில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது. சில தனியார் நிறுவனங்கள் கூட, அலுவலகத்தில் செல்போன் பேச தடை விதித்துள்ளன.
இவற்றை மீறி, பல்கலைக்கழக, கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துகின்றனர். வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்கு தெரியாமல் எஸ்.எம்.எஸ் அனுப்புகின்றனர். கார், பைக், பஸ்களில் போகும்போது, சாலைகளில் நடந்து செல்லும் போது, வீட்டில் இருக்கும்போது இரவு, பகல் பாராமல் மணிக்கணக்கில் செல்போனில் பேசுகின்றனர். நண்பர்கள் அருகே இருந்தால் கூட எஸ்.எம்.எஸ். மூலம் சாட்டிங் செய்யும் அளவுக்கு, செல்போனுக்கு இன்றைய இளைஞர்கள் அடிமையாகி விட்டனர்.
சாலையில் நடக்கும்போது, வாகனத்தை ஓட்டும்போது செல்போனில் பேசினால் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. மேலும், அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடல் நிலை பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர்.
ரேடியோ பிரீக்வன்சி (வானொலி அலைவரிசை) மூலம் செல்போன் செயல்படுகிறது. நமது உள் காது மற்றும் மூளை பகுதியும் அதே போன்ற அலைவரிசையில்தான் செயல்படுகின்றன. செல்போனை காதின் அருகில் வைத்து பேசுவதால், உள் காதின் செவித்திறன் கடுமையாக பாதிக்கிறது. இதுபோல் தொடர்ந்து பேசுபவர்களுக்கு முதலில் காதில் வலி ஏற்படும். இரைச்சல் உருவாகும், அதன்பின் காது கேட்கும் திறன் படிப்படியாக குறையும். இறுதியாக காது கேட்கும் திறன் முழுமையாக நின்றுவிடும்.
செல்போனில் தொடர்ந்து பேசுவதால், வெளி காது, நடு காது, உள் காது மற்றும் மூளையில் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன. மனநிலையும் பாதிக்கலாம். சில நேரங்களில் மயக்கம், தலை சுற்றல் போன்றவைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்த ஆராய்ச்சி தற்போது நடந்து வருகிறது. ஆனால் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் செல்போன் பேசுவதால் ஏற்படும் இந்த பாதிப்புகளை இதுவரை மறுக்கவில்லை.
செல்போன் பேசுவதால் பாதிக்கப்பட்டு காது வலி, காது சரியாக கேட்கவில்லை என்று தினமும் சராசரியாக 10 பேர் ஆஸ்பிட்டல் செல்கின்றனர். இதில் இளைஞர்கள்தான் அதிகம். அவசர தேவைகளுக்கு மட்டும் செல்போனை பயன்படுத்தலாம். முடிந்த அளவு ஹெட்போன், புளுடூத் பயன்படுத்தி பேசலாம்.


இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதையே முழு நேர வேலையாக வைத்திருக்கும பாகிஸ்தான், அதற்கான விலையைக் கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது. பாகிஸ்தானை சேர்ந்தவர்களை அனைத்து நாடுகளும் தீவிரவாதியோ என சந்தேகக்கண் கொண்டு பார்க்கத் தொடங்கிவிட்டன.
அமெரிக்காவில் உலக வர்த்தக மையத்தை விமானம் மூலம் மோதி தீவிரவாதிகள் தகர்த்த சதிச் செயலுக்குப் பிறகு, கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை அமெரிக்கா பின்பற்றி வருகிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கூடுதலாக பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கிறது. இப்போது டைம்ஸ் ஸ்கொயர் கார் வெடிகுண்டு சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானியர் மீது மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் இருந்து வந்து பல தலைமுறைகளாக அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டவர்கள் மீதும் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. உயர் கல்விக்கும், வேலைக்கும் அமெரிக்கா செல்வதையே விரும்பிய பாகிஸ்தான் மக்களுக்கும் அந்த ஆர்வம் குறைந்துபோய் விட்டது. விசா வழங்குவதற்கு அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை வைத்துள்ளதும், விமான நிலையங்களில் சோதனைகளை கடுமையாக்குவதும் பாகிஸ்தான் இளைஞர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க விசா கிடைத்தவர்களும் கூட, தேவையில்லாமல் ஏதாவது சிக்கலில் மாட்டிவிடுவோமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா செல்வதை தவிர்க்கின்றனர்.
அமெரிக்கா வளமான பூமி. திறமையானவர்கள் உலகில் எந¢த மூலையில் இருந்தாலும் அவர்களை இரு கரம் நீட்டி அழைத்துக் கொள்ளும். வாழ்க்கையில் உயர அனைத்து வாய்ப்புகளையும் அள்ளித் தெளிக்கும். அதுதான் அமெரிக்கா. இந்த வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பு பாகிஸ்தானியர்களுக்கு இனி கிடைப்பது கஷ்டம்.
பாகிஸ்தான் மக்களை இந்த பரிதாபமான நிலைக்கு தள்ளிய பெருமை, அந்நாட்டு ராணுவத் தளபதிகளுக்கும் ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கும்தான் போய்ச் சேரும். அவர்களின் பிள்ளைகள் அனைத்து வசதிகளுடன் அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் படிப்பார்கள். உயர் வேலையில் சேர்வார்கள். அது தனிக் கதை. ஆனால் அப்பாவி மக்கள்...? பல ஆண்டுகளாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் கொடுத்த மிகப்பெரிய விலை அது.



மேஷம்:

கணவன்,மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்:
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்:
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.

கடகம்:
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்:
சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சாதிக்கும் நாள்.

கன்னி:
கணவன்,மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்:
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

விருச்சிகம்:
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

தனுசு:
துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மகரம்:
பெரியோர்களின் ஆசி கிட்டும். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். இனிமையான நாள்.

கும்பம்:
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மீனம்:
சந்திராஷ்டமம் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.


26.5.2010, 

விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 12ம் நாள், புதன் கிழமை,
வளர்பிறை. திரயோதசி திதி காலை மணி 7.04 வரை; பிறகு, சதுர்த்தசி திதி. சமநோக்குள்ள சுவாதி நட்சத்திரம் மதியம் மணி 12.59 வரை; பிறகு, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோக நாள்.
நல்ல நேரம்: காலை 9.30 to 10.30
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்க, வியாபாரம் தொடங்க, புது வேலையில் சேர, தாலிக்குப் பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று.
ராகுகாலம்:12.00 to 1.30
எமகண்டம்:7.30 to 9.00
மேற்கண்ட நேரங்களில் நல்லகாரியங்கள் செய்வதை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: ரேவதி,அஷ்வினி நட்சத்திரங்கள்
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் புதிய முயற்சிகளையும்,வீண் வாக்கு வாதங்களையும்   தவிர்க்கவும்.


இரவு நேரத்தில் வானத்தை பார்த்தால் பல கோடி நட்சத்திரங்கள் தெரியும். ஆனாலும், இவற்றில் இருந்து அஸ்வினி, பரணி என 27 நட்சத்திரங்களை மட்டுமே சப்தரிஷிகளும் யோகீஸ்வரர்களும் நமக்கு தேர்வு செய்து தந்திருக்கிறார்கள். இவை ஒவ்வொன்றும் ஒரு வடிவம் கொண்டவை. உதாரணமாக, நூறு நட்சத்திரங்கள் கொண்ட சேர்க்கையே ‘சதயம்’ எனப்படுகிறது. இப்படி ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு குணாதிசயம், சிறப்பம்சம் உண்டு. கடவுள்களின் அவதாரங்கள் பல நட்சத்திரங்களில் நடந்திருக்கின்றன. கிருஷ்ண அவதாரத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணன் அவதரித்தார். ராமாவதாரத்தில் அதே பரந்தாமன் ஸ்ரீராமன் என்ற பெயரில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். இதுபோல கடவுள் அவதாரத்தில் பெருமை பெற்ற நட்சத்திரங்களில் ஒன்று விசாகம்.
6 நட்சத்திரங்கள் இணைந்த அமைப்பே விசாக நட்சத்திரம். அதனால், ஆறுமுகப் பெருமானாகிய கந்தன் இந்த நட்சத்திரத்தில் உதித்ததாக ஐதீகம். இதையே திருப்புகழ் ‘இன்சொல் விசாகா கிருபாகரா’ என்று குறிப்பிடுகிறது. வைகாசி விசாகம் 27.05.2010
வியாழக்கிழமை அன்று வருகிறது.
முருகனுக்கு உகந்த ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரம் போல வைகாசி விசாகமும் மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.
முருகப் பெருமான் அவதரித்த தினம் என்பது மட்டுமல்லாமல் இந்த நட்சத்திரத்துக்கு மேலும் பல சிறப்புகள் இருக்கின்றன. அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை சிவபெருமான் வழங்கிய நாள். புத்தர் பெருமான் அவதரித்த நாள் (புத்த பூர்ணிமா). ‘வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்’ என்று போற்றப்படும் நம்மாழ்வார் அவதரித்த தினம். இப்படி பல சிறப்புகள் கொண்டது வைகாசி விசாகம்.
ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் கோயில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் மிகவும் உகந்த நாள். இங்கு சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் பெருமாள் இந்த நாளில் மட்டுமே சந்தனக் காப்பு நீக்கி அருள் பாலிக்கிறார். அதற்கு அடுத்த நாளே 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி மீண்டும் காப்பு தயாராகி, சுவாமி மீண்டும் அதற்குள் சென்றுவிடுவார்.
தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான்தான் சாஸ்திர ஜோதிடக் கலைக்கும் அதிபதி. எனவே, அவரது அவதார திருநாளாம் இந்த நன்னாளில் அவரை போற்றி, துதிசெய்து அபிஷேக, ஆராதனைகள் செய்து வர சகல சங்கடங்களும் நீக்கி வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் அருள்வார். மனமுருக பிரார்த்தனை செய்தால் இறைவன் அருள் கட்டாயம் கிடைக்கும்.
சிவகுமாரனாகவும் திருமாலின் மருமகனாகவும் விளங்கும் ஞானபண்டிதன் முருகப் பெருமான் அவதரித்த விசாகம் குருவின் நட்சத்திரமாகும். எனவே குருதிசை, குருபுத்தி, குருவால் ஏற்படும் தடங்கல்கள் எல்லாம் நீங்க குரு ஸ்தலங்களில் பரிகாரங்கள் செய்து வழிபடலாம். குரு ஸ்தலமான திருச்செந்தூரில் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி, குருவின் அம்சமாகவே அருள்பாலிக்கிறார். வைகாசி விசாக தினத்தன்று அங்கு பரிகார பூஜைகள் செய்தால் பகை தீரும். திருஷ்டி, தோஷங்கள் விலகும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தடைபட்டுவந்த சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும். அருகே உள்ள முருகன் கோயிலுக்கு சென்றும் வழிபாடுகள் செய்யலாம். வைகாசி விசாக தினத்தில் முருகனை வணங்கி சகல யோகங்களும் பாக்யங்களும் பெறுவோமாக.


"அதிசய மனிதர்", "விஞ்ஞான மேதை" என்று புகழப்பட்டவர் ஜி.டி.நாயுடு. கோவையை சேர்ந்த தொழில் அதிபராக விளங்கிய அவர் தன்னுடைய அயராத உழைப்பால் பல அரிய பொருட்களை கண்டுபிடித்து இவ்வுலகிற்கு வழங்கினார்.

கோவை மாவட்டம் கலங்கல் என்ற கிராமத்தில் 31_3_1894_ல் ஜி.டி.நாயுடு பிறந்தார். அவருடைய தந்தை பெயர் கோபால் நாயுடு. சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். பிறகு மாமனார் வீட்டில் வளர்ந்தார். ஆனால் அங்கு அவரால் சரியாகப் படிக்க முடியவில்லை.
எனவே, அவரது கவனம் தொழில் துறையில் திரும்பியது. வாலிப வயதில் மருந்து வியாபாரம் செய்தார். பின்னர் மோட்டார் சைக்கிள் "மெக்கானிக்" காக வேலை பார்த்து வந்தார். தனது விடாத முயற்சியாலும், தொழில் நுட்ப திறமையாலும் விரைவில் பஸ் அதிபர் ஆனார். அவரது முதல் பஸ் பழனிக்கும் _ பொள்ளாச்சிக்கும் இடையே ஓடியது. அதை ஓட்டிய டிரைவரும் அவரே.
பிறகு படிப்படியாக முன்னேறி பல தொழிற்சாலைகளை நிறுவினார். பல புதிய இயந்திரங்களையும், விஞ்ஞான கருவிகளையும் கண்டுபிடித்தார். ஜி.டி.நாயுடு பல வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார். ஜெர்மன் சென்றிருந்தபோது, ஹிட்லரை சந்தித்துப் பேசினார். வெளிநாட்டு தொழில் நுட்ப திறன்களை நேரில் கண்டறிந்து, அதைப்போன்ற தொழில் நுட்ப கருவிகளை உருவாக்கினார்.
அப்படி அவர் உருவாக்கிய தொழில் கருவிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து கோவையில் விஞ்ஞான கூடமாக அமைத்தார். இது இன்று எல்லோரும் கண்டுகளிக்கும் காட்சிக் கூடமாக இருக்கிறது. குறைந்த விலையில், ஒரே நாளில் வீடு கட்டி முடித்துக் காட்டியது அவரது சிக்கன திறனுக்கும், தொழில் திறமைக்கும் எடுத்துக்காட்டு ஆகும்.
தொழில் மேதையான ஜி.டி.நாயுடு, விவசாயத் துறையிலும் வல்லவர். அவர் கண்டுபிடித்த பப்பாளி மரங்கள், பூசணிக் காய் அளவுள்ள பப்பாளிக்காய்களை கொடுத்தது. அதோடு அவர் கண்டு பிடித்த அவரைச்செடி, மரம் போல் வளர்ந்து நல்ல பலனை தந்தது.
அதிகப் படிப்பு படிக்காமலேயே, பல அரிய காரியங்களை ஆற்றி "அதிசய மனிதர்" என்று பெயர் பெற்றார். இவருக்கு சித்த வைத்தியத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. சித்த வைத்திய ஆராய்ச்சியும் செய்து வந்தார்.
ஜி.டி.நாயுடு போட்டோ கலையில் அதிக விருப்பம் உள்ளவர். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில், மேல் நாட்டு வகையைச் சேர்ந்த சிறிய காமிராவால், அவரே படம் எடுத்து விடுவார். இவரது பிரசிடெண்டு ஹாலில் பெரிய _ பெரிய போட்டோக்கள் நிரம்பி உள்ளன.
தனது கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளிக்கவில்லை என்பதற்காக, 1953_ல் சென்னை கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி, மறைந்த ஈ.வெ.ரா. பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் முன்னிலையில் ரேடியோக்களையும் மற்றும் பல விஞ்ஞான கருவிகளையும் உடைத்து நொறுக்கி பரபரப்பை உண்டாக்கினார்.
ஜி.டி.நாயுடுவுக்கு செல்லம்மாள், ரெங்கநாயகி என்று 2 மனைவிகள். முதல் மனைவிக்கு கிட்டம்மாள், சரோஜினி என்ற 2 மகள்களும், 2_வது மனைவிக்கு கோபால் என்ற ஒரே மகனும் பிறந்தார்கள். ஜனாதிபதி வி.வி.கிரியும், மறைந்த தலைவர் பெரியாரும் நண்பர்களாக இருந்தார்கள்.
1973_ம் ஆண்டு இறுதியில் 80 வயது ஆனபோது ஜி.டி.நாயுடுவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. ரத்தக்கொதிப்பினாலும், வாத நோயினாலும் அவதிப்பட்டார்.
இதற்காக வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு கோவைக்கு திரும்பி வந்து வீட்டில் இருந்தவாரே சிகிச்சை பெற்றார்.
ஜி.டி.நாயுடு உடல் நலம் இல்லாமல் இருப்பதை அறிந்த ஜனாதிபதி வி.வி.கிரி, மனைவி சரசுவதி அம்மாளுடன் கோவைக்கு வந்து அவரை பார்த்து உடல் நலம் விசாரித்தார். அவருடன் ஜி.டி.நாயுடு பேசினார்.
4_1_1974 அன்று அதிகாலையில் ஜி.டி.நாயுடு உடல் நிலை மோசம் அடைந்தது. நினைவு இழந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆயினும் சிகிச்சை பலன் இன்றி காலை 9_45 மணி அளவில் ஜி.டி.நாயுடு மரணம் அடைந்தார். உயிர் பிரிந்தபோது மனைவி ரெங்கநாயகி, மகன் கோபால், மகள்கள் கிட்டம்மாள், சரோஜினி, மருமகள் சந்திரலேகா ஆகியோர் அருகில் இருந்தார்கள்.
ஜி.டி.நாயுடுவின் உடல் அவர் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. தமிழக அரசு சார்பிலும், முதல்_அமைச்சர் கருணாநிதி சார்பிலும் ஜி.டி.நாயுடு உடல் மீது மாவட்ட கலெக்டர் சிவகுமார் மலர் வளையம் வைத்தார். தொழில் அதிபர்கள் ஜி.கே.சுந்தரம், ஜி.கே.தேவராஜலு, ஜி.ஆர்.கோவிந்தராஜலு, பி.ஆர்.ராம கிருஷ்ணன் மற்றும் பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
மாலையில் அவருடைய உடல் அலங்கரிக்கப்பட்ட தேரில் அவருடைய வீட்டுக்கு எதிரே உள்ள "பிரசிடெண்டு மண்டபத்துக்கு கொண்டு போகப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர வடிவேலு, கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ரெங்கசாமி, பழைய மந்திரி அவினாசிலிங்கம் செட்டியார் மற்றும் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
பிரசிடெண்டு மண்டபத்தில், "சிதை" அடுக்கப்பட்டு இருந்தது. அதன் மீது, உடல் வைக்கப்பட்டது. சடங்குகள் நடந்த பின் "சிதை"க்கு, ஜி.டி.நாயுடுவின் மகன் கோபால் தீ மூட்டினார். தகனம் நடந்த இடத்தில் ஜி.டி.நாயுடுவுக்கு நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.
கோவையில் அவினாசி ரோட்டில் குடியிருந்த ஜி.டி.நாயுடு தனது வீட்டு எதிரிலேயே பெரிய வளாகம் ஒன்றை அமைத்தார். அங்கு மிகப்பெரிய காட்சிக்கூடம், கலை அரங்கம், திருமண மண்டபம் போன்றவை இடம் பெற்றுள்ளன. "பிரசிடெண்ட் ஹால்" என்று அது அழைக்கப்படுகிறது. இந்த காட்சி கூடத்தில் ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த அனைத்து கருவிகள், பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவருடைய சாதனைகளை சித்தரிக்கும் புகைப்படங்களுடன் அலங்கரிக்கப்படுகின்றன.
நுழைவு வாயிலில் அமைந்துள்ள இரு பெரிய கண்ணாடிகள் நம்மை திகைப்பில் ஆழ்த்திவிடும். (நம் உருவத்தை நாமே நம்ப முடியாத அளவுக்கு குட்டை நெட்டையாக காட்டும்).
வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், கல்லூரி, பள்ளிக்கூட மாணவ_மாணவிகள் இந்த காட்சிக்கூடத்தை பார்க்காமல் ஊர் திரும்பமாட்டார்கள். அந்த அளவுக்கு அது பிரசித்தி பெற்று விளங்குகிறது.
ஜி.டி.நாயுடுவின் அயராத உழைப்புக்கும், கண்டுபிடிப்புக்கும் சான்று கூறுவது போல அது அமைந்திருக்கிறது


மங்களூரில் 158 பேரின் உயிரை குடித்த விமான விபத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பதற்கான ஆய்வு தொடங்கியுள்ளது.

இதற்காக உருவாக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவினர் மங்களூரில் முகாமிட்டு விபத்து நடந்த இடம் மற்றும் ஓடு தள பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
விபத்து ஏற்பட்டதற்கு விமானி செய்த தவறு காரணமா அல்லது விமானம் தரை இறங்கும்போது தொழில் நுட்ப கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா? என்பதற்கு இன்னமும் உறுதியான முடிவு கிடைக்கவில்லை. விமான கருப்புப்பெட்டிகளில் ஆய்வு செய்தால்தான் விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க முடியும் என்ற நிலை நிலவுகிறது.
விபத்துக்குள்ளான போயிங் 737 ரக விமானத்தில் சிவிஆர் என்றழைக்கப்படும் விமானியின் உரையாடல் பதிவு கருவி, டிஎப்டிஆர் என்றழைக்கப்படும் விமான இயக்கத்தை பதிவு செய்யும் தொழில்நுட்ப கருவி ஆகிய 2 கருவிகள் உண்டு. இந்த 2 கருவிகளும் கருப்புப்பெட்டிகள் என்றழைக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கருப்புப்பெட்டிகளை தேடும் பணி தொடங்கியது. அன்று சிவிஆர் கருப்புப்பெட்டி சிக்கியது. இதில் விமானியின் கடைசி நிமிட உரையாடல்கள், விமான அறையில் எழுந்த சத்தங்கள் அனைத்தும் பதிவாகி இருக்கும்.
டிஎப்டிஆர் கருப்புப்பெட்டி மட்டும் கிடைக்காமல் இருந்தது. டெல்லியில் இருந்து வந்த விமான இயக்குனரக அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை சல்லடை போட்டுத்தேடினார்கள். 4-வது நாளாக இன்று காலை 9 மணிக்கு கருப்புப்பெட்டியை தேடினார்கள்.
காலை 9.55 மணிக்கு டிஎப்டிஆர் கருப்புப்பெட்டியை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். 72 மணி நேர தேடுதலுக்குப்பிறகு இந்த கருப்புப்பெட்டி கிடைத்துள்ளது. விபத்து நடந்த பகுதியில், இடம் மாறி விமான சிதைவுகளுக்குள் போய் சிக்கியதால், இந்த கருப்புப்பெட்டி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினார்கள்.
டிஎப்டிஆர் கருப்புப் பெட்டிதான் மிக, மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த கருவியில்தான் விமானம் எவ்வளவு வேகத்தில் வந்தது? எந்த கோணத்தில் இருந்து தரை இறங்கியது? விமானத்தில் எவ்வளவு எரிபொருட்கள் இருந்தது? காற்றின் வேகம், நீர்ப்பதம் எவ்வளவு இருந்தது? என்பன போன்றவை பதிவாகி இருக்கும்.
இவை தவிர விமான என்ஜின்கள் எப்படி செயல் பட்டன? மற்ற கருவிகள் எத்தகைய நிலையில் இயங்கின? ஆகியவையும் இந்த கருப்புப் பெட்டியில்தான் பதிவாகும்.
விமானம் ஏன் தறி கெட்டு ஓடியது? மீண்டும் உயரே கிளம்பியதா? ஆகிய கேள்வி களுக்கு இந்த கருப்புப்பெட்டியில்தான் விடை உள்ளது. விமானி விமானத்தை 1,500 அடி தூரத்தில் தரை இறக்குவதற்கு பதில் 3 ஆயிரம் அடியை கடந்து சென்று தரை இறக்கி விட்டதாக ஒரு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கும் டிஎப்டி ஆர் கருப்புப்பெட்டியில் விடை கிடைக்கும்.
இந்த கருப்புப்பெட்டி இன்று உடனடியாக டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு விமான இயக்கு னரக அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள். 15 நாட்களில் இந்த ஆய்வு முடிவு தெரியவரும்.
அந்த ஆய்வறிக்கை பின்னர் அமெரிக்காவில் உள்ள போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்களும் இதுபற்றி ஆராய்ச்சி செய்வார்கள். இந்த ஆய்வு முடிவுகள் தெரிய சுமார் 6 மாதம் கூட ஆகலாம் என்று தெரிகிறது.
இன்று கண்டெடுக்கப்பட்ட கருப்புப்பெட்டி முழுமையாக சேதம் அடையாமல் கிடைத்துள்ளது. எனவே ஆய்வு முடிவில் எல்லா தகவல்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


விமான விபத்தில் பலியானவர்களின் சடலங்கள் மங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன. செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களின் கவனத்தை அங்கிருந்த முஸ்லிம் ஒருவர் ஈர்த்தார். விபத்து நடந்த இடத்தில் இருந்து கரிக்கட்டைகளாக கொண்டு வரப்பட்ட சடலங்களை, ஆம்புலன்ஸ் வேனில் இருந்து இறக்கி சவக்கிடங்குக்கு கொண்டு செல்ல உதவினார். விமான விபத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறு மதத்தினரும் பலியானார்கள். மத வேறுபாடு பார்க்காமல் சடலங்களை அடையாளம் காட்ட வந்த உறவினர்களுக்கு தண்ணீர் கொடுத்து ஆறுதல் சொன்னார்.

இப்படி, எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்த அவர் யார்? ஒரு வேளை மருத்துவமனை ஊழியராக இருப்பாரா? இல்லை, சேவை அமைப்பை சேர்ந்தவரா? என்ற சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரித்தபோது, அவர் மங்களூர் அருகே உள்ள மஞ்ஜேஷ்வர் நகரை சேர்ந்த அப்துல் ஹமீத் அலி (60) என்று தெரிந்தது. ‘‘மக்கள் வேதனையில் அலறி துடித்துக் கொண்டிருக்கும் போது வீட்டில் ஓய்வு எடுக்க என்னால் முடியவில்லை. இதனால், உடனடியாக உதவ புறப்பட்டேன். 60 சடலங்களை வேனில் இருந்து இறக்கி சவக்கிடங்கில் வைத்தேன்’’ என்று அப்துல் ஹமீத் அலி கூறினார்.


இயற்கையான நோய் எதிர்ப்பு சக்திப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட சாக்லேட்களை சாப்பிட்டால் தோல் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். அதன்மூலம் வயதாவதை தள்ளிப் போடலாம் என்று தெரிய வந்துள்ளது.

அதுபோன்ற சாக்லேட்டை உலகின் மிகப் பெரிய சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான ஆக்டிகோவா அறிமுகம் செய்கிறது. தோல் பாதிப்புகளைத் தடுக்கும் பொருளாக ப்ளேவோனால் கருதப்படுகிறது. அது அதிகமுள்ள இயற்கையான பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் சாக்லேட்டை சாப்பிடுவதால் தோல் சுருக்கங்களைக் குறைக்கலாம். சாக்லேட்டுக்கு முக்கியத் தேவையான கோகோவில் ப்ளேவோனால் அதிகம் உள்ளது. எனவே, தினமும் 20 கிராம் அளவுக்கு சாக்லேட் சாப்பிடுவதால் தோல் சுருக்கங்களை தடுக்க முடியும். கோகோவில் அதிமுள்ள ப்ளேவோனால், தோலின் ஈரத்தன்மை போகாமல் காத்து, விரிந்ததும் பழைய நிலைக்கு வரும் திறனை அதிகரிக்கிறது. இதனால், தோலில் சுருக்கங்கள் ஏற்படாது. தோல் சுருக்கங்கள்தான் வயதான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. சுருக்கங்கள் தவிர்க்கப்படுவதால், வயதாவதைத் தள்ளிப் போட முடியும். புகை பிடித்தல், சுற்றுச்சூழல் மாசு, காபியில் உள்ள காபைன், தூக்கமின்மை ஆகியவைதான் வயதாவதை விரைவுபடுத்துகின்றன. இந்த பிரச்னைகளை சந்திப்பவர்கள் தினமும்
 20 கிராம் சாக்லேட் சாப்பிட்டால், வயதான தோற்றத்தை தள்ளிப் போடலாம்.அதிக கோகோ கொண்ட டார்க் சாக்லேட், ரத்த அழுத்தத்தை குறைக்கும், பக்கவாத ஆபத்தைத் தடுக்கும்.

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget