SHARE TRADING LIVE TIPS VISIT MY BLOG:www.tradersfirst.blogspot.com
ஸ்பெயினில் திவாலான வங்கிக்கு அந்நாட்டு அரசு நிதியுதவி வழங்கப் போவதாக தகவல் வெளியானதால், உலக பங்குச் சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. இதன் எதிரொலியாக, சென்செக்ஸ் 447 புள்ளிகள் சரிந்து 16,022ல் நிலைத்தது. இதன்மூலம் மூன்றரை மாதத்துக்கு முந்தைய நிலையை அடைந்தது.
கிரீஸ் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியனை சேர்ந்த ஸ்பெயின் நாட்டின் கஜாசர் வங்கி திவால் ஆனதாகவும், அதற்கு அந்நாட்டு சென்ட்ரல் வங்கி நிதியுதவி அளிக்கும் என்றும் நேற்று தகவல் வெளியானது. இதன் காரணமாக ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியதால் இந்திய பங்குச் சந்தைகளும் சரிவுடனேயே தொடங்கின. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை மளமளவென விற்றதால் சரிவு நாள் முழுவதும் நீடித்தது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றமும் சரிவுக்கு மற்றொரு காரணம். வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ் கடந்த 10 மாதங்களில் இல்லாத வகையில் 16,000 புள்ளிகளை உடைத்துக் கொண்டு கீழ் இறங்கியது.
குறைந்தபட்சமாக 15,960 புள்ளிகள் வரை இறங்கிய சென்செக்ஸ் இறுதியில், 447 புள்ளிகள் சரிவுடன் 16,022ல் நிலைத்தது. இது 2.7 சதவீத சரிவாகும். கடந்த பிப்ரவரி 10ம் தேதிக்குப் பிறகு இந்த அளவு குறைந்திருப்பது இதுவே முதன்முறை.
சென்செக்ஸ் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட 30 நிறுவன பங்குகளில் ஒன்று மட்டுமே ஏற்றம் கண்டது. இதன்மூலம் இந்த மாதத்தில் மட்டும் சென்செக்ஸ் 8.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 137 புள்ளிகள் சரிந்து 4,807ல் நிலைபெற்றது.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget