ஐரோப்பாவின் மிகப் பெருமைக்குரிய சேதம் கிரீஸ் எனும் கிரேக்கம். உலக நாகரிகத்தின் பிறப்பிடமாகப் பார்க்கப்பட்ட நாடு.

பொருளாதார வளர்ச்சியிலும், அரசியல் ஆளுமையிலும் உலகின் பெரிய வல்லரசுகளுக்குச் சமமான அந்தஸ்து பெற்ற கிரீஸ் இன்று மொத்தமாக திவால்!.
முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது அந்த நாடு. வர்ணிக்க முடியாத அளவு மோசமான பணவீக்கம், மைனஸ் 3 ஆக பயமுறுத்தும் ஜிடிபி வீழ்ச்சி, மலைக்க வைக்கும் வெளிநாட்டுக் கடன், எங்கும் வேலையின்மை ஓலம்... இனி மீள முடியுமா என்ற பயத்திலும் சோகத்திலும் மக்கள். நிலைமை கைமீறிப் போனதில் உள்நாட்டுக் கலகம் மூள ஆரம்பித்திருக்கிறது. நாடு தழுவிய புரட்சி வெடிக்குமோ என்ற கேள்வி எங்கும் தொக்கி நிற்கிறது.
என்ன ஆனது இந்த நாட்டுக்கு... எப்படி இந்த நிலைமை வந்தது?
எல்லாவற்றுக்கும் மூல காரணம் அரசின் தவறான நிதிக் கொள்கைதான். ஐரோப்பிய யூனியனில் முக்கிய அங்கமான கிரீஸ், 2001ம் ஆண்டிலிருந்து யூரோ நாணயத்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கியது.
வளர்ச்சித் திட்டங்களுக்காக செலவழிக்கிறோம் என்று கூறி, பல ஆயிரம் கோடி யூரோக்களை கடன் வாங்கிக் குவித்துள்ளது கிரீஸ். இன்றைய தேதிக்கு கிரீஸின் கடன் அளவு 300 பில்லியன் யூரோக்கள் (ஒரு யூரோவி்ன் மதிப்பு ரூ. 58). நாட்டின் மொத்த உற்பத்தியை விடச 125 சதவீதம் அதிகம் இந்தக் கடன்!.
கடன்களுக்கான தவணை மற்றும் வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு பல லட்சம் கோடி யூரோக்களைச் செலுத்த வேண்டிய கட்டாயம். ஆனால் கஜானாவில் பணமில்லை. காரணம் உள்நாட்டில் நடக்கும் பெருமளவு வரி ஏய்ப்பு. கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்கு வருமானத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள், வரி செலுத்தவே மறுக்கின்றனர்.
உற்பத்தியிலும் பெரும் வீழ்ச்சி. கடன்களை மட்டுமே நம்பியிருந்த நாட்டுக்கு, அந்தக் கடன்வரத்து முற்றிலும் நின்றுபோக, விழி பிதுங்கியது. நாட்டின் மொத்த உற்பத்தியோ பூஜ்யமாகி, மைனஸுக்கும் போய்விட்டது.
இதையெல்லாம் குறிப்பிட்ட காலம் வரை சாமர்த்தியமாக மறைத்து வந்த கிரீஸ், சமாளிக்க முடியாத நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் உண்மையைச் சொன்னது. அதுவரை கிரீஸ் மீதிருந்த நம்பிக்கையில் கடன் கொடுத்து வந்த பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் இப்போது கடனை திருப்பிக் கேட்கத் துவங்கின.
கிரீஸுக்கு கடன் வழங்கிய ஐரோப்பிய வங்கிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக, அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பயத்தில் தங்கள் டெபாஸிட்டுகளைத் திரும்பப் பெற ஆரம்பித்துள்ளனர்.
இப்படி கிரீஸில் ஆரம்பித்த பொருளாதார நச்சுச் சுழல் ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனையே பாதிக்க, இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிக்கலாம் என்று தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
கிரீஸுக்கு இந்த ஆண்டு 25 பில்லியன் யூரோ அளவுக்கு குறைந்த வட்டிக்கு கடன் அளித்து நிலைமையைச் சமாளிக்க வைக்கலாம் என்று ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிதி நிறுவனமும் உதவ முன் வந்துள்ளது.
ஆனால், கிரீஸ் வாங்கிய பழைய கடன்களுக்கான ஆண்டு தவணையே 55 பில்லியன் யூரோ எனும்போது, இந்த 25 பில்லியன் யூரோவை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையே, உள்நாட்டில் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்துப் பொருள்கள், பணிகளின் வரிகளை தாறுமாறாக உயர்த்திவிட்டது கிரீஸ் அரசு. உபயம்- சில தனியார் நிறுவன முதலாளிகள். இதனால் கடுப்பான மக்கள் வீதிக்கு வந்துவிட்டனர் போராட.
கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் மூண்டு விட்டதோ என்ற அச்சம் ஏற்படுத்தும் அளவுக்கு ஆக்ரோஷமான போராட்டமாக அமைந்துவிட்டது. ஏதென்ஸில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். நாட்டின் பிற பகுதிகளிலும் இதே போன்ற கலவரங்கள் மூண்டன. இந்தக் கலவரங்களில் 3 பேர் பலியாகியதும் நேற்று நடந்தது.
'பிரான்ஸ் புரட்சிக்கு முன்பு வெர்சைல்ஸ் நகரில் குவிந்த மக்களின் ஆக்ரோஷத்தைப் படித்திருக்கிறோம். அதை நேற்று கிரீஸில் நேரில் பார்த்தோம்', என்கிறார் ஒரு செய்தியாளர்.
கிரீஸின் இந்த நிலை ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகப் பெரியது. அமெரிக்காவின் வீழ்ச்சி எப்படி உலகம் முழுக்க கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியதோ, அதுபோல, கிரீஸின் வீழ்ச்சி ஐரோப்பா மட்டுமின்றி, ஆசிய நாடுகளையும் பாதிக்கும் என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.
கிரீஸின் இந்த வீழ்ச்சியால், யூரோ நாணயத்தின் மதிப்பே, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் 1.45 டாலராக இருந்த யூரோ மதிப்பு, இன்று 1.27 டாலராக குறைந்துவிட்டது.
நிலைமை இப்படியே போனால் டாலரை விட யூரோ மதிப்பு குறைந்துவிடும். இதனை ஐரோப்பிய யூனியன் நிச்சயம் விரும்பாது... அத்தகைய சூழலில் கிரீஸை ஐரோப்பிய யூனியனை விட்டேகூட விலக்க வேண்டிய நிலை வரலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
சர்வதேச பங்கு வர்த்தகத்திலும் கிரீஸ் வீழ்ச்சியின் தாக்கம் தெரியத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் இன்று கூடிப் பேசவிருக்கின்றனர். அதில்தான் கிரீஸின் தலை எழுத்து நிர்ணயிக்கப்பட உள்ளது!.

வால் பையன் கமெண்ட் : கிரிஸின் வீழ்ச்சி அமெரிக்கா மற்றும் யுரோப்பா பங்கு சந்தைகளில் வெகுவாக எதிரொலித்தது.கடந்த மூன்று தினங்களில்
6 % வரை வீழ்ச்சியை கண்டுள்ளன.இதே மாதிரி மேலும் இரண்டு பெரிய நாடுகள் தாங்கள் பொருளாதார சரிவிலிருந்து மீண்டுள்ளதாக பொய் சொல்லியுள்ளனவாம்.எல்லாம் வெளிச்சத்துக்கு வரும் நாள் தொலைவில்
இல்லை.ஆசிய பங்கு சந்தைகலும் ஆடிபோயுள்ளன.  இந்த சூழ்நிலையில் இந்திய பங்கு சந்தைகளும் விழுவதற்கு தயாராக உள்ளன.மீண்டும் 2008 போல் ஒரு சம்பவம் பங்கு சந்தைகளில் ஏற்படாமல் கடவுள் காப்பற்றுவார் என நம்புவோம்..வரும் வாரங்களில் நிலைமை தெரிய வரும். 
                                                         ஹாப்பி வீக் END


வேலைவாய்ப்பு விஷயத்தில் மீண்டும் தன் பழைய பரபரப்புக்குத் திரும்புகிறது அமெரிக்கா.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே 2,90,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
கடந்த நான்காண்டுகளில் ஆறுதலளிக்கும் முதல் செய்தி இதுவே என அமெரிக்கர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் வேலையின்மையின் அளவும் இரட்டை இலக்கத்திலிருந்து 9.9 சதவீதம் என ஒற்றை இலக்கத்துக்கு இறங்கி வந்துள்ளது.
உற்பத்தித் துறை, மருத்துவத் துறை என பல துறைகளில் இதுவரை 8,05,000 பேர் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளனர். கடந்த பிப்ரவரியில் 1,20,000 பேருக்கு வேலை அளிக்கப்பட்டது.
விரைவில் அமெரிக்க காங்கிரஸுக்கு தேர்தல் வரவிருப்பதால், வரும் மாதங்களில் அதிக அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் குறியாக உள்ளது ஒபாமா நிர்வாகம்.
அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பினாலும், நிறுவனங்கள் வேலைக்கு ஆளெடுப்பதில் தயக்கம் காட்டின. இப்போது நிலைமை நம்பிக்கை தரும் அளவுக்கு மேம்பட்டுள்ளதால், மீண்டும் அதிக அளவு ஆட்களை எடுக்க ஆரம்பித்துள்ளன.

வால் பையன் கமெண்ட்: COMMON GUYS


ஜென்ம லக்னத்திற்கு 2 ஆம் வீடான தனஸ்தனாமானது ஒருவருடைய பண நடமாட்டத்தை பற்றி கூறுவது ,தனஸ்தனாமான 2 ஆம் அதிபதி ஆட்சி உச்சம்
பெற்றாலும் கேந்திர திரிகோண ஸ்தானத்தில் அமைய பெற்று,சுபர்சேர்க்கை பெற்றாலும் நல்ல பண நடமாட்டம் உண்டாகிறது.இத்துடன் தான காரகன் என
வர்ணிக்கப்படும் குரு பகவான் வலுவிழக்காமல் இருப்பதும் மிகவும் உத்தமம்.
பொதுவாக தனஸ்தானத்தில் பாவிகள் அமைய பெறாமல் இருப்பது உத்தமம் .
      2 ஆம் அதிபதியும் குருவும் நல்ல நிலையில் அமைய பெற்றால் நல்ல பண
நடமாட்டம் உண்டாகும்.2 ஆம் அதிபதியும் ,குருவும் வலுவிழக்காமல் இருப்பதும்
6 ,8 ,12  ஆம் வீட்டின் அதிபதிகள் மற்றும் பாதகாதிபதியின் சாரம்,சேர்க்கை ஏற்படாமல் இருப்பதும் செல்வம்,செல்வாக்கை உண்டாக்கும்.
பாதகாதிபதி மற்றும் 6 ,8 ,12 ஆம் வீட்டின் தொடர்பு வலுவாக இருந்தால் செல்வம் ,செல்வாக்கை இழக்கும் அமைப்பும்,எவ்வளவு பணம் வந்தாலும்
அதனை எதிர்பாரதவிதமாக இழக்கும் அமைப்பும் உண்டாகிறது.
    ஆக 2 ஆம் அதிபதியும் ,குரு பகவானும் பலம் பெறுவது மிகவும் நல்லது.


சந்திரனுக்கு 6 ,7 ,8 ல் சுப கிரகங்கள் இருந்தால் சந்திர அதி யோகம்(சுபம்:புதன்,குரு,சுக்கிரன்).
சந்திர அதி யோகத்தில் பிறந்தவர்கள் அரசனுக்கு நிகரான வாழ்வு அமையும்.தீர்காயுள்,பகைவர்களை வெற்றி கொள்வர்.ஆரோக்கிய மணவாழ்வும்,வாழ்வில் சுபமுடன் வாழ்வார்கள்.
   நான் சில ஜாதகங்களில் சந்திர அதியோகம் அமைந்து இருந்தும்
 யோக பலனை அனுபவிக்க முடியாமல் உள்ள ஜாதகங்களை பார்த்தேன்
ஏன் இவர்களுக்கு யோகம் அமையவில்லை என்று எண்ணினேன்.
புலிப்பாணி முனிவரின் பாடல்களை பார்த்தபோது விடை கிடைத்தது.
        ஆரப்பாயின் மொன்று அரிய கேளு
         அப்பனே அம்புலிக்கு ஆறேலேட்டில்
         சிறப்பாக மேதினில் நலமாய் வாழ்வான்
        பூரப்பா பேய் பூதமா வசியமாகும்
        பூதலத்தில் அரசனிடம் சேனை காப்பான்
       கூறப்பாகுடி நாதன் கேட்டானால்
       குமரனுக்கு யோகங்கள் குலைந்து போச்சே!
லக்னாதிபதி  பலம் இழந்து விட்டால் யோகத்தை அனுபவிக்க முடியாது .இது நடை முறையில் சரியாகத்தான் உள்ளது.


யுனைடெட் கிங்டம் ஆஃப் கிரேட் பிரிட்டன் என்றால் விளம்பர வாசகம் போல ஒலிக்கும். சுருக்கமாக சொன்னால் பிரிட்டன். இங்கிலாந்து, வட அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்த தேசம் அது.
நம்மை 200 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தி ஆட்சி நடத்தியதற்கு வெள்ளையர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? ‘இந்தியர்களுக்கு ஆளத் தெரியாது, நிர்வாகம் தெரியாது’. அவர்கள் வகுத்துத்தந்த நாடாளுமன்ற, நீதிமன்ற, அரசு நிர்வாக நடைமுறைகளையே இன்றும் பின்பற்றுகிறோம். தனக்கென ஒரு அரசியல் சாசனம் எழுதி வைக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு நேரவில்லை. ‘எங்கள் மரபுகளே மாபெரும் சாசனம்’ என்றார்கள். உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக திகழ்ந்த மமதை. இந்தியாவில் நிறைய கட்சிகள் இருப்பதையும், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இங்கே கூட்டணி ஆட்சி அமைவதையும் பிரிட்டிஷ் அரசியல்வாதிகளும் மீடியாவும் கிண்டல் செய்வதுண்டு.
வியாழக்கிழமை நடந்த தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தொங்குகிறது. கன்சர்வேடிவ், லேபர் என இரண்டு பெரிய கட்சிகள் இதுவரை மாறி மாறி ஆட்சி செய்தன. இப்போது லேபர் அரசு. கார்டன் பிரவுன் பிரதமர். சுமார் 100 இடங்களை இழந்துள்ளது அந்த கட்சி. மொத்த தொகுதிகள் 650. மெஜாரிட்டிக்கு 326 தேவை. லேபர் ஜெயித்திருப்பது 261தான். கன்சர்வேடிவ் கட்சி 306 இடங்களை பிடித்திருக்கிறது.மூன்றாவது கட்சியான லிபரல் டெமக்ராடிக் கட்சி 57 இடங்களை கைப்பற்றி கிங் மேக்கராக எழுந்து நிற்கிறது. அதன் தலைவர் நிக் கிளக். அவரது ஆதரவு கிடைத்தால் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் டேவிட் கேமரூன் பிரதமர் ஆகலாம்.
ஆனால், லிபரல் கட்சியின் கொள்கைகள் லேபர் கட்சியோடுதான் ஒத்துப்போகும். ஐரோப்பிய யூனியனையே இன்னமும் ஜீரணிக்க முடியாத கன்சர்வேடிவ் கட்சியுடன் லிபரல்களால் கைகோர்க்க முடியாது.
குழப்பமான இந்த நிலையில் குதிரை பேரமும், ரகசிய ஒப்பந்தங்களும் லண்டன் வதந்தி மார்க்கெட்டை கலக்குகின்றன. 27 இடங்களை கையில் வைத்திருக்கும் உதிரி கட்சிகள் இந்திய அரசியல்வாதிகளிடம் ஆலோசனை கேட்க துடிக்கின்றன.
சக்கரம் முழுச்சுற்று வந்துவிட்டது.


உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 8 சுற்றில், இந்தியா & ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, பிரிட்ஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

உலக கோப்பை டி20 தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. தொடக்க லீக் சுற்றில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. நான்கு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. இ பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகளும், எப் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளும் இடம் பிடித்தன.
எப் பிரிவில் இன்று நடக்கும் சூப்பர் 8 லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான இந்திய அணி, மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. வயிற்றுக் கோளாறு காரணமாக தென் ஆப்ரிக்க அணியுடனான லீக் ஆட்டத்தில் விளையாடாத கவுதம் கம்பீர், இப்போட்டியில் களமிறங்குகிறார்.
விஜய், ரெய்னா, யுவராஜ், யூசுப் பதான், டோனி, ஜடேஜா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். குறிப்பாக ரெய்னாவின் அதிரடி ஆட்டம், ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும். ஹர்பஜன், பிரவீன், ஜாகீர் ஆகியோரும் அதிரடியாக ரன் குவிக்கக் கூடியவர்கள் என்பதால், இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிக வலுவாக அமைந்துள்ளது. ஜாகீர், பிரவீன், நெஹ்ரா வேகத்துடன் அனுபவ வீரர் ஹர்பஜனின் சுழலும் ஆஸி. வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும்.
யுவராஜ், பதான், ஜடேஜா, ரெய்னா ஆகியோரும் பந்துவீச்சில் கைகொடுக்க முடியும் என்பது இந்திய அணிக்கு சாதகமான அம்சம். டி20 உலக கோப்பையில் இதுவரை பெரிதாக சாதிக்க முடியாத ஆஸ்திரேலிய அணி, இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன் உள்ளது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சு மிக வலுவாக அமைந்துள்ளது.
பார்படாஸ் களம் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நேன்னஸ், வாட்சன், ஹாரிஸ், டெய்ட் ஆகியோரை சமாளிப்பது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிரமமாகவே இருக்கும். இந்திய அணியுடனான போட்டி குறித்து ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில், ‘இந்திய அணி மிக வலுவாக உள்ளது. ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது டோனிக்கு சாதகமாக இருக்கும். எனினும், சுழற்பந்து வீச்சை கண்டு பயப்படமாட்டோம். அதை சமாளிக்கக் கூடிய திறமையான வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் உள்ளனர்.
காயம் அடைந்துள்ள ஜான்சன் விளையாடுவது பற்றி போட்டி தொடங்கும் முன்பே முடிவு செய்வோம். அவர் விளையாட முடியாவிட்டால், அவருக்கு பதிலாக ஹாரிஸ் சேர்க்கப்படுவார்’ என்றார்.
அரை இறுதிக்கு முன்னேற, சூப்பர் 8 சுற்றில் குறைந்தபட்சம் 2 வெற்றியாவது தேவை என்பதால் இரு அணிகளுமே முனைப்புடன் களமிறங்குகின்றன. சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இப்போட்டி, மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.


ரமணருக்கு அவர் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட ராமன்.அம்மா அப்பா பெயரை உச்சரிக்கும் முன்பே ரமணரின் உள்ளம் ஆர்வத்தோடு உச்சரித்த பெயர் 'அருணாசலம்' என்பதாகும்.
     ரமணருக்கு இளமையிலேயே மரண பயத்தை வெல்லும் ஆற்றல் ஏற்பட்டது.'மனிதன்' தன மனவலிமையால் மரணத்தையும்,மரண பயத்தையும் வெல்ல முடியும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தார் ரமணர்.
    மலையே சிவனாக மலர்ந்த திருவண்ணாமலையை  ரமணர் இதயம் விரும்பியது.
அந்த அருணாச்சல பக்தி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது,திடீரென்று ஒருநாள் மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டார்.ரயில் முலமே பயணம் மேற்கொண்டார்.
     ஞானியர் பூமியான திருவண்ணாமலைக்கு ரமணர் வந்த அந்த புனித நாள் 29 .08 .1896 ஆகும்.
    அருணாச்சல சிவலிங்க திருமேனியை தரிசித்து பக்தி ததும்பி கட்டி தழுவி அப்பா! அருணாச்சலா! இதோ வந்து விட்டேன் என்று கதறி கண்ணீர் மல்கினார்.
  திருவண்ணாமலை ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பாதாள லிங்க குகையில் நீண்ட காலம் தங்கினார் ரமணர்.இளமையிலேயே தவம் மேற்கொண்ட வேங்கட ராமனின் மேம்பாட்டை உணர்ந்த கணபதி முனிவர் என்பவரே,வேங்கட  ராமனை 'ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி' என்று முதன் முதலாக அழைத்தார்.
  ரமணரின் தாயார் அழகம்மை ,ரமணர் மீது வைத்த பேரன்பின்
காரணமாக1898 இல் திருவண்ணாமலைக்கு வந்து விட்டார்.1914 இல் மகனை பிரிய மனம்இல்லாமல் திருச்சுளிக்கே வருமாறு அழைத்தார்.
ஞான வழியில்ஈடுபட்ட ரமணரோ இதனை மறுத்து விட்டார்.1916 முதல்
 தாய் அழகம்மை ராமனுருடன் நிரந்தரமாகவே தங்கலானார்.
   ரமணர் குரு மூர்த்தம்,விருப்பாச்சி குகை ,ஸ்கந்த ஆசிரமம்,பாதாள லிங்க குகை ,பவள குன்று ஆகிய இடங்களில் தவ நிலையும்,யோக நிலையும் மேற்கொண்டார் .மௌன விரதம் பூண்டிருந்த மகன் தன்னுடன் பேசமாட்டானா? என்று ஏங்கினார்.ரமணரின் அன்னை.
   ஆனால் மௌன விரதம் பூண்டிருந்த ரமணரோ ஒரு காகிதத்தில் பின்வருமாறு எழுதி தனது தாயிடம் கொடுத்தார்."அவரவர் ப்ராப்தம் பிரகாரம் அதற்க்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான் என்றும்,நடவாதது என் முயற்சிக்குனும் நடவாது நடப்பது என் தடை செய்யினும் நில்லாது இதுவே திண்ணம்,ஆதலால் மௌனமாய் இருத்தல் நன்று. தனது தாய்க்கே இந்த முதல் உபதேசத்தை செய்தார் ரமணர்.
   நோய் வாய்பட்டிருந்த அன்னை அழகம்மை 19 .05 .1922 இரவு எட்டு மணிக்கு அமரர் ஆனார்.அன்னை போய் விட்டதை பற்றி ரமணரிடம் ஒரு அன்பர் கேட்டபோது  இல்லை !போய் விட்டலாவது?தானேதான் ஆனாள்" என்றார் ரமணர் .
   ஆதிசங்கரர் போன்றும் முற்றும் துறந்த பட்டினத்தார் போன்றும் தாய் மீது அளவற்ற பாசமே கொண்டார்.மலை மீதுள்ள ஸ்கந்த ஆசிரமத்திலிருந்து மலை அடிவாரத்திலுள்ள அன்னையின் சமாதிக்கு அடிக்கடி போய் வருவது வழக்கம்,ஒருநாள் அன்னையின் சமாதிக்கு சென்றவர் மலைக்கு திரும்பவில்லை.அங்கேயே தங்கி
அன்னைக்கு ஓர் ஆலயம் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். 
    அழகான சிற்ப வேலைபாடுகளுடன் அமைந்த மாத்ரு பூதேச்வர் ஆலயம் 1949 மார்ச் 17 ம் நாள் பகவான் ரமணர் முன்னிலயில் கும்பாபிஷேகம் கண்டது.14 .04 .1950 வெள்ளிகிழமை இரவு 8 .47 மணிக்கு பகவான் ரமணர் மஹா நிர்மாணம் பெற்றார்.
   அப்போது வானில் ஒரு பெரிய நட்சத்திரம் தெற்கிலிருந்து வட கிழக்காக மெதுவாக
நகர்ந்து அருணாச்சல மலையின் பின்புறம் சென்று மறைந்த அற்புத நிகழ்ச்சியை பக்தர்கள் இந்தியாவின் பல பாகம்களிருந்தும் பார்த்தனர்.ஆம் ரமணர் அருணாச்சல
ஜோதியுடன் கலந்து விட்டார்.
               ரமணர் முக்தி அடையும் கால கட்டத்தில் பக்தர்கள் கதறி அழுதனர்.அப்போது "நான் எங்கு போக முடியும்? நான் இங்கு தான் இருக்கிறேன்"
     இதுவே ரமணர் கூறிய இறுதி பொன்மொழி.

,


மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறிக்கும் சர்வதேச அளவுகோளுக்கான புதிய விதிமுறைகளின்படி, இந்தியாவில் நடுத்தர பிரிவினர் யாருமே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஏழைகள் அல்லது பணக்காரர்கள் என்று மட்டுமே அழைக்க முடியும்.

சர்வதேச வளர்ச்சி மையத்தின் தலைவரும், பொருளாதார வல்லுநருமான நான்சி பேர்டுசால், வளரும் நாடுகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தர அடிப்படையில் நடுத்தர மக்களுக்கான புதிய விதிமுறையை வகுத்துள்ளார். இது உலக வங்கியின் அடுத்த இதழில் வெளியாக உள்ளது. அவரது கணிப்புப்படி, வளரும் நாடுகளில் வசிப்பவர்களில் ஒரு நாளைக்கு ரூ.450க்கு மேல் சம்பாதிப்பவர்கள் நடுத்தர மக்களாக கருதப்படுவார்கள். எனினும், அவர்களில் மிக அதிக வருவாய் உள்ள 5 சதவீதத்தினர் பணக்காரர்களாகவும், ரூ.450க்கு கீழ் சம்பாதிப்பவர்கள் ஏழைகளாகவும் கருதப்படுவர்.
இதன்படி பார்த்தால், இந்தியாவில் நடுத்தர வருவாய் பிரிவினர் யாருமே இருக்க மாட்டார்கள். ஏனெனில், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஒரு நாளைக்கு ரூ.450க்கு மேல் சம்பாதிப்பவர்கள் 5 சதவீதம் மட்டுமே. எனவே, இவர்கள் அனைவரும் உயர் வருவாய் பிரிவினராக கருதப்படுவார்கள். இதற்குக் கீழ் சம்பாதிப்பவர்கள் ஏழைகள்.
இதற்கு முன் நடுத்தர பிரிவினர் என்பதற்கு வேறு அளவுகோல் இருந்தது. சட்டத்தை மதிப்பதுடன் சராசரி சம்பளத்துடன் வேலையில் இருப்பார்கள். பணக்காரர்களைப் போல தலைமுறை சொத்தை நம்பி இருக்க மாட்டார்கள் என்பது அது. இப்போது உலக வங்கி இதழின் புது விதிப்படி இந்தியாவில் மிடில் கிளாஸ் மிஸ் ஆகி விடும். சீனாவில் 3.4 சதவீதத்தினர் நடுத்தர பிரிவின் கீழ் வருகின்றனர். இது தென்னாப்பிரிக்காவில் 7.6%, பொலிவியாவில் 12.2%, பிரேசிலில் 19.4%, ரஷ்யாவில் 29.8 சதவீதமாகவும் உள்ளது. அமெரிக்காவில் 91 சதவீதமும், ஸ்வீடனில் 95 சதவீதமும் நடுத்தர மக்கள் இருப்பார்கள்.

வால்பையன் கமெண்ட் : என்ன செய்வது இந்தியாவின் மொத்த பணமும் தொழிலதிபர்கள் ,அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகள் கைகளில் அல்லவா
உள்ளது.,கடந்த வாரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி வீட்டில் இருந்து 1500 கிலோ தங்கம்,1500 கோடி பணம் கைப்பற்றபட்டுள்ளது.ஒரு அரசு அதிகாரி வீட்டிலே இவ்வளவு பணம் என்றால்? இந்தியா முழுவதும்! யார் சொன்னது இந்தியாவை ஏழை நாடென்று


வேலை நாளில் தம்பதிகள் அலுவலக வேலை, வீட்டு வேலைகளை முடித்து விட்டு ஒன்றாக அமரும் நேரம் இரவு 8.44 மணி என்று இங்கிலாந்து ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இந்த நேரம் பொதுவாக பொருந்தும் என்றாலும், சிறிது மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனின் லான்கேஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்ததாவது:
திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நாட்களில் குடும்பத்தில் தம்பதியர் அனைத்து வேலைகளையும் முடித்து, மனஅழுத்தம் குறைந்து ஒன்றாக அமரும் சரியான நேரம் குறித்து 3,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. வேலையில் இருந்து வீடு திரும்பியதும், வீட்டு வேலைகளை முடித்து கணவன் & மனைவி ஒன்றாக அமரும் நேரம் இரவு 8.05 என்று தெரிய வந்தது.
எனினும், அலுவலக வேலையில் ஏற்பட்ட மனஅழுத்தம், அன்றாட வேலைகளில் ஏற்பட்ட அனுபவங்கள் என அனைத்தையும் மறந்து இருவரும் ரிலாக்சாக அமரும் துல்லியமான நேரம் இரவு 8.44 மணி. இது வேலைகளை முடித்து அவர்கள் விடுதலை பெறும் 8.05ஐ விட 39 நிமிடங்கள் அதிகம்.
அதாவது, வேலைகள் முடிந்தாலும், அன்றைய தினத்தில் ஏற்பட்ட மனஅழுத்தங்களில் இருந்து முற்றிலும் விடுதலை பெற்று ஒருவரையொருவர் முழு அன்புடன் அருகில் பார்த்துக் கொள்ளும் நிமிடமாக 8.44 உள்ளது. பணிச் சுமை, வீட்டுப் பொறுப்புகள் காரணமாக நகரங்களில் தம்பதிகள் ஒன்றாக செலவிடும் நேரம், ஒரு நாளில் 75 நிமிடங்களுக்கும் குறைவே.
நவீன வாழ்க்கை முறையால் நகரங்களில் பணிச்சுமை மற்றும் வீட்டுப் பொறுப்புகள் கூடுவதால் விவாகரத்து பெறும் தம்பதிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மனவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு நாளில் வேலை நேர முடிவு என்பது ஆண், பெண் இடையே வேறுபடுகிறது. அலுவலகம் முடிந்து வந்த பிறகு உணவு தயாரிப்பு உட்பட வீட்டு வேலைகளில் 10ல் 6 பெண்கள் ஈடுபடுகின்றனர். அதுவே 3ல் ஒரு ஆண் மட்டுமே வீட்டு வேலையில் ஈடுபடுவதாக ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.


 அஜ்மல் கசாபுக்கு மரண தண்டனை. ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி தீர்ப்பு வழங்கி விட்டார். ஐந்து மரண தண்டனைகளும், ஐந்து ஆயுள் தண்டனைகளும் ஏழாண்டு கடுங்காவல் தண்டனை ஒன்றும் கசாபுக்கு கிடைத்திருக்கிறது. ஒரு முறைதான் மரணம் வரும். வெவ்வேறு குற்றங்களுக்கான சட்டப்படியான தண்டனைகள் அவை.
நேராக தூக்கு மேடைக்கு போகப்போவதில்லை அவன். மரண தண்டனை சரிதானா என்பதை ஐகோர்ட் ஆராய்ந்து உறுதி செய்ய வேண்டும். ஆறு மாதம் ஆகலாம். பிறகு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் போடலாம். கடைசியாக ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுக்க வாய்ப்பு உண்டு. ஏற்கனவே பெண்டிங்கில் உள்ள 25 மனுக்களுடன் இதுவும் சேராது என்று சொல்லிவிட முடியாது.
யாரையும் நொந்து பலனில்லை. நமது நீதிமுறை அப்படி. பல நாடுகளில் இதெல்லாம் கிடையாது. அது பெருமையா சாபமா புரியவில்லை. அரசு வக்கீல் சொன்னதுபோல கசாப் ஒரு சாத்தான். குடிக்க தண்ணீர் கொடுத்தவரை துப்பாக்கி குண்டுகளால் துளைத்தெடுத்த நாய் என்றார் அவர். கசாப் என்ன செய்தான் என்பதை உலகமே டீவியில் பார்த்தது. இருந்தாலும் ஜனநாயக கட்டமைப்பு வழியாக நீதி ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கிறது. 2001ல் பார்லிமென்டை தாக்கிய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சலை இன்னும் தூக்கில் போடாததால் மும்பைவாசிகளுக்கு இதில் சந்தேகம் இருக்கிறது.
கசாபை தூக்கில் போட்டால் தீவிரவாதிகள் திருந்திவிடுவார்களா? என்று சிலர் கேட்கிறார்கள். மடையர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். என்றாலும், கசாப் வெறும் கருவி. அவனை இயக்கியது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள். அவற்றுக்கு தீனி போட்டு வளர்ப்பது உளவுத்துறையும், ராணுவ தளபதிகளும். அந்த சதிகாரர்களை கூண்டில் ஏற்ற நமக்கு வக்கில்லை என்பது எதார்த்தம்.
இங்கிருப்பவர் உதவியின்றி வெளியாள் ஊடுருவ முடியாது. துரோகிகளை கண்காணித்தால் எதிரிகளை தடுக்க முடியும். அதற்கான டெக்னாலஜி இருக்கிறது. அரசிடம் பணம் இருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்ட மனம் வேண்டும். குடிமக்களின் உயிரை பாதுகாப்பது பிரதான கடமை. அதற்கு ஏற்பாடு செய்யும்வரை அடுத்த குண்டு எங்கே வெடிக்குமோ என்ற அச்சத்துடனே இந்தியர்கள் வாழவேண்டும்


வேலைப் பளுவால் ஏற்படும் மனஅழுத்தத்தால் பெண்களுக்கு மாரடைப்பு உட்பட இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக டென்மார்க் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அதில் நர்ஸ்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடிய நர்ஸ் வேலை உட்பட வேலைப் பளு அதிகமுள்ள பெண்களிடம் டென்மார்க் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். வேலைப் பளுவால் அவர்களுக்கு ஏற்படும் மனரீதியான, உடல்நிலை பாதிப்புகளை ஆராய்ந்தனர். 12,000 நர்ஸ்கள் உட்பட ஏராளமான பெண்களிடம் வேலைச் சுமை பற்றி கேள்விகள் கேட்டு தகவல்கள் திரட்டப்பட்டன.
தினசரி வேலை நேரம், செய்யும் வேலைகள், கூடுதல் சுமை, வேலைப் பளு ஏற்படும்போது மனநிலை குறித்து தகவல்கள் பெறப்பட்டன. 1993ல் தொடங்கிய இந்த ஆராய்ச்சியில் 45 முதல் 64 வயதுக்கு உட்பட்ட நர்ஸ்களின் 15 ஆண்டுகால பணிகள் பற்றி சமீபத்தில் ஆராயப்பட்டது.
அதிக வேலைச் சுமையை அனுபவித்ததாக கூறிய பெண்களில் 25 சதவீதத்தினருக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருந்தது ஆய்வில் தெரிய வந்தது. தங்கள் வேலைப் பளு சமாளிக்க கூடிய அளவில் இருந்ததாக கூறியவர்களுக்கு மனஅழுத்தம், இதய நோய் அறிகுறி இல்லை. வேலைப் பளு மிக மோசமாக இருந்ததாக கூறியவர்களில் 35 சதவீதத்தினருக்கு இதய நோய் ஏற்பட்டிருந்தது.
வேலைச் சுமையால் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் சிகரெட், மதுப் பழக்கம் உட்பட வாழ்க்கை முறை மாறிப் போனது தெரிய வந்தது. குறிப்பாக 51 வயதில் உள்ளவர்களுக்கு இதய நோய் பாதிப்பு அதிகமிருந்தது.
இதுகுறித்து டென்மார்க் பல்கலைக்கழக மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
வேலைப் பளுவால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து இதுவரை ஆண்களுக்கு மட்டுமே ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
முதல்முறையாக பெண்களின் வேலைப் பளு குறித்து ஆராய்ந்தோம். மனரீதியான கூடுதல் வேலைகள், அதனால் ஏற்படக்கூடிய பதட்டம், மனஅழுத்தம் ஆகியவை பெண்களை இதய நோயில் தள்ளும் அபாயம் கொண்டவை.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெண்களை அதிகளவில் கொல்லும் நோயாக இதய நோய்கள் உள்ளன. வேலையில் மனஅழுத்தத்தை தவிர்த்தால் ஏராளமானோர் அந்த ஆபத்தில் இருந்து தப்ப முடியும் என்றனர்.


உலக கோப்பை டி20 தொடரில், விறுவிறுப்பான சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீசில் நடக்கும் இந்த தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. நான்கு பிரிவுகளில் நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. முதல் கட்ட லீக் சுற்றின்போது ஏற்கனவே வழங்கப்பட்ட தரவரிசையின் அடிப்படையில், இந்த அணிகள் இ மற்றும் எப் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதவுள்ளன. இந்த சுற்றின் முடிவில் இ, எப் பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். தென் ஆப்ரிக்கா & ஆப்கானிஸ்தான் அணிகளிடையே நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் வென்ற அணி, சி1 தரவரிசையுடன் இ பிரிவில் இடம் பெறும்.
சி பிரிவில் இந்திய அணி 2 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்தாலும், ஏற்கனவே சி2 என்ற ரேங்க் வழங்கப்பட்டிருந்ததால், சூப்பர் 8 சுற்றில் எப் பிரிவில் இடம் பெற்றது. இந்த பிரிவில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளுடன் இந்தியா மோத உள்ளது.
நாளை இரவு 7.00 மணிக்கு பார்படாசில் நடக்கும் சூப்பர் 8 லீக் ஆட்டத்தில் இந்தியா & ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்த சுற்றில் ஒவ்வொரு ஆட்டமுமே மிக முக்கியமானது. குறைந்தபட்சம் 2 வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும். பலமான ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளை வீழ்த்துவது இந்திய அணிக்கு சவாலாகவே இருக்கும்.
வயிற்றுக் கோளாறு காரணமாக தென் ஆப்ரிக்க அணியுடனான லீக் ஆட்டத்தில் விளையாடாத தொடக்க வீரர் கம்பீர் களமிறங்கத் தயாராக உள்ளதால், இந்திய அணி மேலும் உற்சாகம் அடைந்துள்ளது. தொடக்க லீக் சுற்றில் அதிரடியாக சதம் விளாசி அசத்திய ரெய்னா, சூப்பர் 8 சுற்றிலும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.

வால் பையன் கமெண்ட் : சூப்பர்-8  சுற்றிலும் இந்தியா அசத்துமா?


கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் அனுமதியின்றி அவர்களிடம் நடத்தப்படும் நார்கோ அனாலிசஸ், பிரைன் மேப்பிங், பாலிகிராப் போன்ற உண்மை கண்டறியும் சோதனைகள் சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

குற்ற வழக்குகளில் சிக்குபவர்கள், தன் மீதுள்ள குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளாமலும் விசாரணைக்கு ஒத்துழைக்காமலும் இருக்கும்போது, அவர்களிடம் இருந்து உண்மையை வரவழைப்பதற்காக நார்கோ அனாலிசஸ், பிரைன் மேப்பிங், பாலிகிராப் போன்ற மருத்துவ ரீதியிலான உண்மை கண்டறியும் சோதனைகளை போலீசார் நடத்தி வருகின்றனர்.
சில நேரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அனுமதியுடன் இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன. அவர்கள் மறுக்கும்போது, நீதிமன்ற அனுமதியுடன் இந்த சோதனைகள் நடக்கிறது. டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த ஆருஷி கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் நார்கோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எந்த விவரமும் கிடைக்கவில்லை. முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைதான அப்துல் கரீம் தெல்கியிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல விவரங்கள் கிடைத்தன.
அதேபோல, குஜராத்தில் தீவிரவாதி சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் நார்கோ பரிசோதனை செய்ய சிபிஐ முயன்றது. ஆனால், அவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றனர். தற்போது, பாலியல் மற்றும் மோசடி வழக்கில் கைதாகியுள்ள சாமியார் நித்யானந்தாவிடம் நார்கோ பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற உண்மை கண்டறியும் வசதிகள் இந்தியாவில் பெங்களூர், அகமதாபாத் போன்ற சில இடங் களில் மட்டுமே உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை இந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்துகின்றனர்.
வழக்கு தாக்கல்:
இதற்கிடையே, உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்துவது சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் வெங்கடேஸ்வர ராவ், குஜராத்தை சேர்ந்த சாந்தா பென், மகாராஷ்டிர சுயேச்சை எம்எல்ஏ அனில் கோட்டே உட்பட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், உண்மை கண்டறியும் சோதனைகள் சட்டப்படி அனுமதி வாங்கி நடத்தப்படுவதாகவும், குற்றத்துக்கான ஆதாரங்களை திரட்ட இந்த சோதனைஅவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் தீர்ப்பு:
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன் மற்றும் தல்வீர் பண்டாரி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி நீதிபதிகள் அறிவித்தனர். நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் நீதிபதிகள் கூறியதாவது:
குற்றம்சாட்டப்பட்டவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் அல்லது சாட்சி என யாராக இருந்தாலும் அவரது அனுமதியின்றி நடத்தப்படும் நார்கோ அனாலிசஸ், பிரைன் மேப்பிங், பாலிகிராப் போன்ற உண்மை கண்டறியும் சோதனைகள் சட்டவிரோதமானவை. இவை இந்திய அரசியல் சட்டம் பிரிவு 20(3)க்கு எதிரானது.
மேலும் இதுபோன்ற விசாரணை முறைகளுக்கு ஒருவரை உட்படுத்துவது அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு வழங்கியுள்ள தனி நபர் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாகும். இத்தகைய சோதனைகள் சம்பந்தப்பட்டவரின் அனுமதியுடன் நடத்தப்பட்டாலும் அதில் கிடைக்கும் தகவல்களை நீதிமன்றங்களில் சாட்சியாக பயன்படுத்த முடியாது. அடுத்த கட்ட விசாரணைக்கு வேண்டுமானால் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வால்பையன் கமெண்ட் : அருமையான தீர்ப்பு
அப்பாவிகள் பாதிக்கபடுவது குறையும்,அதே நேரத்தில் சில பலம் பெருச்சாளிகள் இந்த தீர்ப்பின் மூலம் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தப்பிவிட வாய்ப்புள்ளது

.


குறைந்த கலோரி கொண்ட உணவை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறைவான கலோரி உணவுக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வில், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள டப்ட்ஸ் யுனிவர்சிட்டியின் ஜீன் மேயர் யுஎஸ்டிஏ மனித ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் சிமின் நிக்பின் மெய்தனி தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர். அதன் விவரம்:
20 முதல் 40 வயதுக்குட்பட்ட 46 ஆண் மற்றும் பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களை இரண்டு பிரிவாக பிரித்து ஒரு பிரிவினருக்கு வழக்கத்தைவிட கலோரி குறைவான உணவும் மற்றொரு பிரிவினருக்கு கலோரி அதிகமான உணவும் 6 மாதம் வரை வழங்கப்பட்டது. முன்னதாக இவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை ஆகியவை மதிப்பிடப்பட்டன.
ஆய்வுக்கு பின்னர் இவர்களை பரிசோதனை செய்ததில், கலோரி அதிகமான உணவு சாப்பிட்டவர்களைவிட, கலோரி குறைவான உணவு சாப்பிட்டவர் களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பது தெரிய வந்தது. அத்துடன் குறைவான கலோரி உணவு சாப்பிட்டவர்களின் உடல் எடையும் சீராக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.

வால்பையன் கமெண்ட் : ஆமாம் அமைச்சரே! உடல் நலம் ரொம்ம்ப முக்கியம்


இந்து திருமண சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாத இரண்டாவது மனைவி, கணவனிடம் ஜீவனாம்சம் கோர முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மும்பையை சேர்ந்த டிவி நடிகை சீமா பாட்டீல் (64) 1983ம் ஆண்டு நாதுராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் ஏற்கனவே திருமணமானவர். 17 ஆண்டுகள் கழித்து 1999ல் இருவரும் பிரிந்தனர். பின்னர் நாதுராம், சீமாவுடனான திருமணத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி குடும்பநல நீதிமன்றத்தை அணுகினார்.
சீமா இதை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்தார். அதில், முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டதாகக் கூறி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக நாதுராம் மீது குற்றம் சாட்டினார். மேலும் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார். இதையடுத்து, நாதுராம் கோரிக்கையை ஏற்க மறுத்து அவரது மனுவை குடும்பநல நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும், நாதுராம் வீட்டுக்கோ அலுவலகத்துக்கோ செல்ல சீமாவுக்கும் தடைவிதித்தது. அத்துடன் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட முடியாது என்றும் கூறியது. இதையடுத்து, சீமா மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.பி.தேஷ் பாண்டே மற்றும் ஆர்.பி.சொந்தர்பால்தொடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகி உள்ளது.
‘‘இந்துக்களின் திருமணம், இந்து திருமண சட்டத்துக்கு உட்பட்டதாகும். இதன்படி செய்து கொள்ளப்படாத திருமணம் சட்டப்படி செல்லாது. இதன் அடிப்படையில் பார்த்தால், நாதுராம் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்டது செல்லாது. எனவே, இரண்டாவது மனைவியான சீமாவுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட முடியாது’’ என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

வால் பையன் கமெண்ட் : இரண்டாவது மனைவிகள் ஜாக்கிரதை
என்ன கொடுமை சார் இது


பிரபல  இணையதளமான டுவிட்டரில், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தகவல்களை பரிமாறத் தொடங்கியுள்ளார். தனது முதல் தகவலில், வெஸ்ட் இண்டீசில் டி20 உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சச்சின். அடுத்து, சமீபத்தில் ஆண் குழந்தைக்கு தந்தையான அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவக்குக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் இணையதள உறுப்பினராக இணைந்துள்ள சச்சினுக்கு இந்தி நடிகைகள் தீபிகா படுகோன், ஷில்பா ஷெட்டி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உட்பட ஏராளமானோர் வரவேற்பு/வாழ்த்து தகவல் அனுப்பியுள்ளனர். கிரிக்கெட்டில் சாதனை மன்னனாக விளங்கும் சச்சின், டுவிட்டரில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பிரபலமாகவும் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வால்பையன் கமெண்ட் : சச்சின்  டுவிட்டரில் இணைந்த செய்தி பரவிய பத்து நிமிடங்களில்  புதிதாக 3 .5 ௦லச்சம் வாடிகையாளர்களை பெற்றுள்ளது TWITTER .


தனது பிறந்த நாளையொட்டி 2 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார் த்ரிஷா  .

த்ரிஷாவுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள். இதையொட்டி சென்னையில் உள்ள உதவும் கரங்கள் இல்லத்துக்கு அவர் சென்றார். அங்குள்ள 2 குழந்தைகளை அவர் தத்தெடுத்துள்ளார்.
இது பற்றி த்ரிஷா கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாளை பிறர்க்கு உதவும் வகையில் கொண்டாட விரும்புவேன். இந்த முறை உதவும் கரங்கள் இல்லத்தில் இருந்த 400 குழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடினேன். அந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக இருந்தது. அப்போதே ஒரு முடிவை எடுத்தேன். அங்கிருந்த இரு குழந்தைகளை தத்தெடுப்பதுதான் அது. மனநலம் குன்றிய 6 வயது சிறுமி மற்றும் 4 மாத ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளேன். அவர்களுக்கான அத்தனை தேவைகளையும் பூர்த¢தி செய்வேன். இது என்னால் முடிந்த சிறு உதவியாக நினைக்கிறேன்.

வால்பையன் கமெண்ட் : ஒவ்வொரு நடிகையும்,நடிகரும் இதுமாதிரி செய்தால் அநாதை குழந்தைகளின் எண்ணிக்கை குறையுமே?
நல்ல மனம் வாழ்க?
நாடு போற்ற வாழ்க?


 இரண்டு நாளாக தவித்துப் போனது மும்பை. டிரைவர்கள் ஸ்டிரைக்கால் மின்சார ரயில்கள் ஓடவில்லை. நகரில் வெஸ்டர்ன் ரயில்வேயும் சென்ட்ரல் ரயில்வேயும் இந்த ரயில்களை இயக்குகின்றன. தினமும் 2,000 சர்வீஸ். ரயில் ஓட்டும் டிரைவர்கள் & ரயில்வே பாஷையில் மோட்டார்மேன் & ஆயிரத்து சொச்சம். தினந்தோறும் 70 லட்சம் பேர் ரயிலில் செல்கிறார்கள். ரயில்கள் நின்றதும் நகரம் ஸ்தம்பித்து விட்டது.
திங்கள் காலையில் வேலைக்கு சென்றவர்கள் மாலையில் வீடு திரும்ப முடியவில்லை. கையில் காசில்லாதவர்கள் பட்டினியாக ரயில் நிலையத்தில் படுத்து தூங்கினர். தொலைதூரம் நடக்க முடியாத பெண்களின் அனுபவத்தை விவரிக்க முடியாது. பல்கலைக்கழக தேர்வுகள் நடக்கும் நேரம். மாணவர்கள் படித்ததெல்லாம் பதற்றத்தில் மறந்துபோனது. ‘மிகவும் அவசியமானால் மட்டும் வெளியில் வாருங்கள், பயணம் செல்லுங்கள்’ என அரசு கேட்டுக் கொண்டதால் மறுநாள் மக்கள் நடமாட்டம் சரிந்தது. அலுவலகங்கள் வெறிச்சோடின. ரயில்வேக்கு 100 கோடி நஷ்டம் என கணக்கிட்டுள்ளனர். மக்களின் கஷ்டத்துக்கு விலை இல்லை.
இதற்கு யார் பொறுப்பு? பொதுமக்களின் ஆவேசத்தை பார்த்ததும் டிரைவர்களை ஆதரித்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜகா வாங்கின. ரயில்வே அமைச்சர் மம்தா உள்ளாட்சி தேர்தல் வேலையாக கொல்கத்தாவில் பிசியாக இருந்தார். ‘மும்பைக்கே நாலைந்து நாள் லீவு அறிவித்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை வராமல் சமாளிக்கலாம்’ என்று பிரதமரிடம் மகாராஷ்டிர முதல்வர் முறையிட்ட பிறகே, டிரைவர்களுடன் பேச டெல்லி பச்சைக்கொடி காட்டியது. எஸ்மா சட்டத்தில் கைது செய்த டிரைவர்களை விடுதலை செய்து, ‘ஜூன் 15ம் தேதிக்குள் உங்கள் கோரிக்கைகள் மீது முடிவு எடுக்க ரயில்வே துறையை வற்புறுத்துவோம்’ என மாநில உள்துறை அமைச்சர் உறுதிமொழி அளித்த பின் ஸ்டிரைக் வாபஸ் ஆகியிருக்கிறது.
சம்பள உயர்வுடன் ஒரு ரயிலின் இரு முனைகளிலும் டிரைவர் நியமிக்க வேண்டும்; உதவியாளர் வேண்டும்; வார விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கைகளை டிரைவர்கள் முன்வைத்துள்ளனர். இதற்காக ஜனவரி 15ம் தேதி ஸ்டிரைக் அறிவித்தனர். ஏப்ரலுக்குள் தீர்வு காண்போம் என நிர்வாகம் வாக்குறுதி அளித்ததால் அப்போது நிறுத்திவைத்த போராட்டம் இது.
வால் பையன் கமெண்ட்: மும்பையின் முக்கிய போக்குவரத்தே ரயில் தான்,அதுவும் ஓடவில்லை என்றால் மும்பைவாசிகள் என்ன துன்பம் அனுபவித்து இருப்பார்கள்,
இனிமேலாவது அதிகாரிகள் பிரச்சனையை பேசி தீர்ப்பர்களா.
பிரச்னையை முற்றவிட்டு தீர்ப்பதில் நமது அதிகாரிகளை மிஞ்ச முடியாது.


அன்புள்ளம் கொண்ட வலைபூ நண்பர்களுக்கு
இது எனது 100 வது பதிவு.எனவே இதில் எதாவது ஸ்பெஷல் ஆக சொல்லியாக வேண்டும்.அதற்க்கு முன்பாக என்னை 100 பதிவுகள் வரை எழுத தூண்டிய எனது அன்பு நண்பர்கள் திரு.சுந்தரராஜ்,திரு.விஜயராகவன்,திரு.ரவிக்குமார் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
                                        செயற்கை மரம்
இது பற்றி தான் இன்று எழுத போகிறேன்.இன்றைய சூழலில் உலகம் முழுதும் புவி வெப்பமடைதலை பற்றி தான் பேச்சு.புவி ஏன் வெப்பமடைய வேண்டும்,இவ்வளவு நாள்ஏன் புவி வெப்பமடையவில்லை.சரி புவி ஏன் வெப்பமடைகிறது அதன் காரணம் என்ன ? காரணங்களில்சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.உலகம்முழுவதும் ஏகப்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்களது
கழிவுகளை காற்றில் கலக்கின்றன .
அளவுக்கு அதிகமான வாகனங்கள்,அவை வெளியிடும் நச்சு புகை காற்றில் கலந்து காற்றை மாசுபடுத்துகின்றன.நாம் அனைவரும் தினந்தோறும் உபயோகிக்கும் குண்டு பல்ப்,குளிர்சாதன பெட்டி(split a/c ,window a /c ) விறகு அடுப்புகள்,நாம் கொண்டாடும் தீபாவளி,போகி இதுமாதிரி சொல்லிக்கொண்டே போகலாம்.
  இந்தியாவில் தீபாவளி கொண்டாடுவதால் மட்டும் 30 % காற்று மாசுபடுவதாக ஒரு அறிக்கை சொல்கிறது.நம்மால் மேற்கண்ட எதையும் அடியோடு விட முடியாது.
நாம் அனைவரும் அதற்க்கு பழக்கப்பட்டு விட்டோம்.
  சரி புவி வெப்பமடைவதால் என்ன பெரிதாக நடைபெற போகிறது,இதை பற்றி நாம் ஏன் கவலை படவேண்டும்.நாம் மட்டுமல்ல உலகமே இது பற்றி கவலை பட்டுத்தான் ஆக வேண்டும்.
       புவி வெப்பமடைவதால் ஏற்படும் விளைவுகள் என்ன ?
அதிகமான வெப்பம்,அதிகமான மழை,மழைகாலங்களில் வெயில்,வெயில் காலங்களில் மழை என்ற முரண்பட்ட வானிலை மாற்றம் மற்றும் காற்று அளவுக்கு அதிகமாக வெப்பமடைவதால்,அண்டார்டிக்கா பனிமலைகள் உருக தொடங்கிவிட்டன. இதனால் கடல் நீர் மட்டம் உயர ஆரம்பித்து விட்டது.கடலை ஒட்டியுள்ள நிலப்பகுதிகள் எல்லாம் சிறிதுசிறிதாக நீரில் மூழ்க துவங்கும்.
கடைசியில் மனிதன் வாழ பூமியில் இடம் இல்லாமல் போகும்.எனவே இது மாதிரி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க , நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேலைகளை செய்ய வேண்டும்.
    முதலில் ஆயிரகணக்கான மரங்களை நட வேண்டும்.மரங்கள் காற்றில் உள்ள கார்பனை உறிஞ்சிவிட்டு oxygen னை வெளியிடுகின்றன. இதனால் பூமி வெப்பமடைதல் பெருமளவு குறைகிறது. ஆனால் நாம் மரங்களை இன்று நட்டால் பயன் தர பத்து ஆண்டுகளாவது ஆகும்.
  இதற்க்கு ஒரு குறுக்கு வழி (நல்லவழி )இருக்கிறது ,அதுதான் செயற்கை மரங்களை வளர்ப்பது,செயற்கை மரம் என்றால் அது ஒரு ரோபோ,மரங்கள் செய்யும் அதே வேலையை (கார்பனை உறிஞ்சிவிட்டு oxygen னை வெளியிடுகின்றன) செய்கின்றன.
மேலும் உறிஞ்சிய கார்பனை எரிபொருளாக மாற்றி தருகின்றன.
செயற்கை மரம் வளர்ப்பது தனி மனித காரியமல்ல,அதற்க்கு அரசு தான் முயற்சி செய்ய வேண்டும். ஏற்கனவே சீனா போன்ற நாடுகளில் முன் எச்சரிகையாக செயற்கை மரம் வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதற்க்கான சுட்டி கிழே உள்ளது.
 http://www.shengjie-china.com/product_list.asp?stypeid=2



லோக்ஆயுக்தா போலீசார் நேற்று 7 அரசு அதிகாரிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துவைக்கப்பட்டிருந்த ரூ. 8கோடி மதிப்புள்ள நகை, பொருட்களை பறிமுதல் செய்தனர்.

நேற்று அதிகாலை பெல்காம், பெங்களூர், பெல்லாரி, மைசூர், ஹாசன் மற்றும் கார்வார் உட்பட் பல இடங்களில் உள்ள 7 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா எஸ்.பி. களான டிசோசா மற்றும் பிரபுதேவ் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ. 8 கோடி மதிப்புள்ள பொருட்கள், தங்க நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
எஸ்.டி தேவராஜ், தலைவர் பழங்குடியினர் மேம்பாட்டு கழகம், பெங்களூர்:
பெங்களூர், ஹாசன் மற்றும் மைசூரில் உள்ள இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் மேற்கொண்ட சோதனையில் ரூ. 2கோடி மதிப்புள்ள சொத்துகள்,பொருட்கள் மற்றும் தங்கநகைகள், ஆவணங்களை லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்.
நரேந்திரா கோவிந்தராயா நாயக், உதவி வன பாதுகாவலர், அங்கோலா:
அங்கோலா, கும்டா, கோகர்னா உட்பட பல இடங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள் இவர் மற்றும் இவரது மனைவி பெயரில் இருந்த தங்கநகைகள், வாகனங்கள் மற்றும் சொத்துகள் குறித்த பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ. 2கோடி ஆகும்.
லட்சுமிநாராயண செட்டி, துணை இயக்குனர், நிலப்பாதுகாப்பு ஆணையம், ஹொஸ்பேட்: பெல்லாரி, ஹொஸ்பேட்டில் உள்ள இவர் மற்றும் இவரது மனைவி பெயரில் உள்ள சொத்துகள், வைப்பு நிதிபத்திரங்கள், பங்குகள், ரொக்கம், வீட்டு பொருட்கள் மற்றும் தங்கம், வெள்ளி உட்பட ரூ. ஒருகோடி மதிப்புள்ள ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அயூப்கான் கோரி, போலீஸ் காவலர், ஹிரேபாகேவாடி, பெல்காம்: பெல்காம், ஹுக்கேரி ஆகிய பகுதிகளில் சோதனை நடத்திய அதிகாரிகள் இவரது பெயரில் மற்றும் இவரது மாமா பெயரில் இருந்த ரூ. 33லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள், வாகனங்கள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சாந்தகுமார், ஏஆர்டிஓ, ஆர்டிஓ செக்போஸ்ட் ஹும்னாபாத், பீதர்:
இவரது ரூ. 89லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் பங்குகள், வாகனங்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பெல்காம் நகரில் பல்வேறு பகுதிகளில் கைப்பற்றினர்.
தாசேகவுடா, உணவு துறை குமாஸ்தா, எலஹங்கா, பெங்களூர்:
பெங்களூர், ஆனேகல் பகுதியில் உள்ள சொத்து மற்றும் ஆவணங்கள், வாகனங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ. 90லட்சம் ஆகும்.
டி.என்.பேட்டேசுவாமையா, உதவி செயற் பொறியாளர், யஸ்வந்தபுரம், பெங்களூர்:
பெங்களூரில் பல இடங்களில் இவர் மற்றும் இவரது மனைவி பெயரில் உள்ள சொத்துகள், ஆவணங்கள் மற்றும் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டு சொத்துகளின் மதிப்பு ரூ. 60லட்சம் ஆகும்.
7 அரசு அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலங்களில் மேற்கொண்ட சோதனையில் கிடைத்த சொத்து ஆவணங்கள், தங்கநகைகள், வாகனங்கள், பங்குகள், ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை லோக் ஆயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் மொத்த மதிப்பு ரூ. 7கோடியே90லட்சத்து 6ஆயிரத்து 965 ஆகும்.

வால் பையன் கமெண்ட் : லஞ்சம் தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை


ஓ‌ட்ட‌ப் ப‌யி‌ற்‌சி செ‌ய்பவ‌ர்களு‌க்கு கால‌ணி மு‌க்‌கியமான ‌விஷயமாக இரு‌க்கு‌ம். வெறு‌ம் காலுட‌ன் ‌சிலரா‌ல் ஓடவே முடியாது. ஆனா‌ல் வெறு‌ம் காலுட‌ன் ஓடுவதே ந‌ல்லது எ‌ன்று ஆ‌ய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

தடகள ‌வீர‌ர்க‌ள் ஓ‌ட்ட‌ப் ப‌யி‌ற்‌சி‌யா‌ல் பெறு‌ம் சாதக, பாதக‌ங்க‌ள் ப‌ற்‌றி ஆரா‌ய்‌ச்‌சி செ‌ய்த ஹா‌ர்வ‌ர்டு ப‌ல்கலை‌க்கழக‌ம் இ‌ப்படி‌ப்ப‌ட்ட முடிவை அ‌றி‌வி‌த்து‌ள்ளது.
கு‌திகா‌ல் கொ‌ண்ட ஷூ அ‌ணி‌ந்து கொ‌ண்டு ஓடுபவ‌ர்களு‌க்கு தரையுட‌ன் ஏ‌ற்படு‌ம் உரா‌ய்வா‌ல் அ‌தி‌ர்வலைக‌ள் மூ‌ட்டு ம‌ற்று‌ம் உட‌ல் பகு‌திகளு‌க்கு கட‌த்த‌ப்ப‌ட்டு உட‌ல் வ‌லி ஏ‌ற்படு‌ம் சா‌த்‌திய‌க் கூறு‌க‌ள் இரு‌ப்பது க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டது.
கு‌திகா‌ல் இ‌ல்லாத ஷூ அ‌ணி‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் அடி‌ப்பாத‌த்‌தி‌ன் நடு‌ப்பகு‌தி வ‌ழியாக குறைவான அ‌தி‌ர்வுக‌ள் கட‌த்த‌ப்ப‌ட்டன. இதனா‌ல் உட‌ல் வ‌லி ஏ‌ற்படுவது த‌வி‌ர்‌க்க இயலாததா‌கிறது.
அதே சமய‌ம், வெறு‌ம் காலுட‌ன் ஓடியவ‌ர்களு‌க்கு எ‌ந்த‌வித பா‌தி‌ப்பு‌ம் இ‌ல்லை. இதனா‌ல் உட‌ல் வ‌லியு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
வெறும் காலுடன் ஓடுவதால் உள்ளங்கால்கள் பலமடைவதுடன்,மூளை நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது


கோடைகாலம் தொடங்கிவிட்டது குழந்தைகளுக்கு லீவ் விட்டாச்சு,அவர்களை கவனிப்பது பெற்றவர்களுக்கு பெரிய கவலையாகி விட்டது.
அவர்களை வீட்டில் கவனிப்பது முதல் சம்மர் vacation என்று சுற்றுலா தளங்களுக்கு
அழைத்து சென்று அந்த இடங்களில் கவனித்து கொள்வது வரை பெரும் சுமையாகி விட்டது.குழ‌ந்தைக‌ளு‌க்கு எ‌ந்த நோயு‌ம் தா‌க்குவத‌ற்கு அவ‌ர்களது பெ‌ற்றோ‌ரி‌ன் அஜா‌க்‌கிரதைதா‌ன் முத‌‌ல் காரணமாக இரு‌க்‌கிறது.சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவுகளை உட்கொள்ள வை‌ப்பது பெ‌ற்றோ‌ரி‌ன் முத‌ல் கடமை. இ‌தி‌ல் இரு‌ந்து ‌சி‌றிது தவறு‌ம் போதுதா‌ன் குழ‌ந்தைகளை நோ‌ய்‌த் தா‌க்கு‌‌கிறது.அதே‌ப்போல நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் உணவு உண்ணாமல் இரு‌ப்பதை ‌நினை‌த்து‌க் கவலை‌ப் படாம‌ல், உட‌ல் சோ‌ர்‌வி‌ல் இரு‌ந்து ‌விடுபடுவத‌ற்கான எ‌ளிய ஆகார‌த்தை அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம். மருத்துவர் ஆலோசனையின்படி நடந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
உட‌ல் ‌நிலை பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட குழ‌ந்தைகளு‌க்கு அதிக மசாலா பொருட்கள் சேராத உணவினையும் அதிக காரமில்லாத உணவையும் கொடுக்க வேண்டும்.
கோடைகாலம் ஆதலால் பழச்சாறுகள் அதிக அளவில் கொடுக்கலாம்
பா‌ல், எ‌ளிய க‌ஞ்‌சி போ‌ன்றவ‌ற்றை சமை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இவை எ‌ளி‌தி‌ல் ‌ஜீரணமாவது‌ம், உடலு‌க்கு உடனடியாக தெ‌ம்பை அ‌ளி‌க்கு‌ம் ‌விதமாகவு‌ம் இரு‌க்கு‌ம்.
சுற்றுலாதலங்களை தேர்ந்து எடுக்கும் பொழுது அதிக கூட்டம் இல்லாத மனதிற்கும்
குழந்தைகளுக்கு உற்சாகத்தை கொடுக்கும் இடமாக இருந்தால் நல்லது.


ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் கவுன் ஒன்று அமெரிக்காவில் ஏலத்துக்கு வருகிறது. இது ரூ.1.12 கோடிக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா ஏல மையத்தில் உள்ள விநியோகஸ்தர்கள், கோடைகால விற்பனையை முன்னிட்டு, ஹாலிவுட் பிரபலங்கள் பயன்படுத்திய ஆடைகளை அடுத்த மாதம் 10ம் தேதி ஏலம் விட திட்டமிட்டுள்ளனர். இதில் ஹாலிவுட் திரைப்படங்களில் நட்சத்திரங்கள் பயன்படுத்திய சுமார் 1500 ஆடைகள் இடம் பெற உள்ளன.
நடிகை மர்லின் மன்றோவின் பிங்க் கவுனும் ஏலத்தில் இடம் பெற உள்ளது. அவர் இந்த கவுனை ‘ஜென்டில்மென் பிரிபர் பிளாண்டஸ்’ என்ற திரைப்படத்தில் அணிந்து நடித்துள்ளார். மிகவும் புகழ்பெற்ற இந்த ஆடை ஏலத்துக்கு வருவது இதுவே முதல் முறை.
ஏலத்தை பிரபலப்படுத்த, கலிபோர்னியா மாகாணம் ஹாலிவுட் பகுதியில் உள்ள கிராமன்ஸ் சைனீஸ் தியேட்டரின் வெளிப்புறம் மன்றோவின் காலடி மற்றும் கையெழுத்து ஆகியவை சிமென்டில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த கவுன் ரூ.67.5 லட்சம் முதல் ரூ.1.12 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வால் பையன் கமெண்ட்: மன்றோ - அழகின் மறுபெயர்


மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தும் ஸ்டெம் செல் வளர்ச்சியை ‘ப்ரகோலி’ எனப்படும் காலிபிளவர் வகை உணவு தடுக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
பெண்களுக்கு ஏற்படக்கூடிய உயிர்க் கொல்லி நோய், மார்பக புற்றுநோய். அதற்கான கட்டியின் வளர்ச்சியை அதிகரிப்பதில் ஸ்டெம் செல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை வளர விடாமல் தடுக்க ‘ப்ரகோலி’ உணவுகள் உதவும் என்று அமெரிக்காவின் மிச்சிகன் புற்றுநோய் தடுப்பு மையப் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது.
காலிபிளவர் குடும்பத்தைச் சேர்ந்த பச்சை நிறத்தில் இருக்கும் ப்ரகோலியில் ‘சல்போராபைன்’ என்ற மூலப்பொருள் உள்ளது. ப்ரகோலியை அதிகளவில் உணவில் சேர்ப்பதன் மூலம் உடலில் ‘சல்போராபைன்’ அதிகரித்து, புற்றுநோய் கட்டிகளை உருவாக்கும் ஸ்டெம் செல்களை தடுக்கிறது.
இதன்மூலம், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை பெருமளவில் குறைக்கிறது. மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வரும் பெண்களும் உணவில் ப்ரகோலியை அதிகம் சேர்த்துக் கொண்டால், சிகிச்சைக்கு விரைவான பலன் கிடைக்கும். புற்றுநோயை ஏற்படுத்தும் ஸ்டெம் செல்களை ‘ப்ரகோலி’ தாக்கி அழித்து விடும் என்று ஆய்வின் ஆசிரியர் டுக்சின் சன் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “ப்ரகோலியில் உள்ள சல்போராபைனின் மருத்துவ நன்மைகள் பற்றி ஏற்கனவே பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக புற்றுநோயை தடுப்பதிலும், குணப்படுத்துவதிலும் அது சிறப்பாக செயல்படுகிறது. இது எலிகளிடம் நடந்த ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, பெண்கள் ப்ரகோலியை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
மார்பக புற்றுநோய்யை பொறுத்தவரை சிறுவயதில் இருந்தே மிகவும் ஒல்லியாக இருக்கும் பெண்களை தான் அதிகம் தாக்குகிறது.எனவே பெண்குழந்தைகளுக்கு சிறுவதில் இருந்தே நல்ல சத்தான உணவுகளை கொடுக்கவும்.அவர்களின் உணவு பழக்கவழக்கங்களை தொடர்ந்து கண்காணித்து வந்தால்,இந்த மார்பக புற்றுநோயை தடுக்க முடியும்.இது மரபுரீதியாகவும் ஏற்பட வாய்ப்புள்ளது


ரயிலில் மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் கேள்விப்பட்ட ஒன்று. துண்டு பிஸ்கட்டுக்கு ஆசைப்பட்டு நகை நட்டுகளை இழந்த அப்பாவி பயணிகளை பார்த்ததும் உண்டு. ஆனால், இங்கே மயக்க மருந்து கலந்த ஸ்வீட்ஸ் கொடுத்து, 23 வயது பெண்ணை கடத்திச் சென்று விலைக்கு விற்ற சம்பவம் கொடுமையானது.

மகாராஷ்ரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயா. ஏப்ரல் 26ம் தேதி, நாக்பூரில் இருந்து ஜான்சியில் உள்ள சகோதரி வீட்டுக்கு செல்ல தனியாக ரயில் ஏறினார். மகாமயா எக்ஸ்பிரஸ் ரயில், இரண்டாம் வகுப்பு பெட்டி, ஏகப்பட்ட பயணிகள் மத்தியில் இடம் பிடித்தார். அக்கம்பக்கத்தில இருந்தவர்கள் அக்கறையோடு விசாரிக்க, ஆறுதலாக பேச ரயில் சிநேகிதம் பிறந்தது. அரை மணி நேரத்தில் அவர்களுடன் ஒருவராக ஐக்கியமானார் ஜெயா. அப்பறம் என்ன? அவர்கள் கொண்டு வந்த இனிப்பு வகைகளை அள்ளித் தந்தனர். ஆசையோடு சாப்பிட்ட ஜெயாவுக்கு அடுத்த நொடியில் நினைவு மங்கியது.
எவ்வளவு ஸ்வீட் சாப்பிட்டாரோ தெரியவில்லை. மயக்கம் தெளிய இரண்டு நாட்கள் ஆனது. எழுந்து உட்கார்ந்ததும், ‘நான் எங்க இருக்கேன்...’ என்று வழக்கம்போல் விம்மத் தொடங்கினார். ஹார்டா மாவட்டம், தாஜ்புரா என்ற குக்கிராமம், ராம்தீன் என்பவரது வீட்டில் இருப்பது தெரிந்ததும் அதிர்ந்து போனாள். கடத்தப்பட்டிருப்பதை உணர்ந்து பயந்து போயிருந்தவருக்கு அடுத்த அதிர்ச்சியாக மூவர் வந்தனர். மாட்டை ஓட்டிச் செல்வதுபோல், அருகில் உள்ள போக்ரானி கிராமத்திற்கு இழுத்துச் சென்றனர். அங்கிருந்த சஞ்சய், பரஜாபதி என்ற இருவரிடம் விற்பனைக்கு நீண்ட நேரம் பேரம் பேசினர். ஒரு லட்சம் ரூபாயில் ஆரம்பித்த பேரம், கடைசியில் ரூ.50 ஆயிரத்திற்கு படிந்தது. பணத்தை வாங்கிக் கொண்டு பொருளை (ஜெயா) அங்கேயே விட்டு விட்டு அந்த மூவரும் கிளம்பி விட்டனர்.
இரண்டு நாள் பொழுது மயக்கத்தில் கழிய, அடுத்த நாள் முழுக்க விற்பனைக்கு போக, மூன்றாவது நாளில் ஜெயாவுக்கு அலங்கார வேலைகள் அதிகாலையிலேயே தொடங்கின. மூன்று பெண்களின் விடா முயற்சியால் மணக்கோலத்திற்கு மாறினாள் ஜெயா. மாப்பிள்ளை சஞ்சய்.
கட்டாய கல்யாண ஏற்பாடுகள் செய்வது தெரிந்ததும் அழுது புரண்டு, சத்தம் போட்டு ஊரைக் கூட்டினார் ஜெயா. விஷயம் தெரிந்ததும் ஊரார் உதவினர். நாக்பூரில் உள்ள ஜெயாவின் அண்ணனுக்கு தகவல் பறந்தது. அடித்துப் பிடித்து ஓடி வந்தவர், தங்கையை மீட்க தம்ரானி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
கிளைமாக்ஸில் போலீஸ் வந்தது. ஜெயாவை மீட்ட கையோடு ஆறு பேரை கைது செய்தது. ‘இனிமேல் ஸ்வீட்சை கண்ணால் கூட பார்க்கக் கூடாது’ என்ற முடிவோடு அண்ணனுடன் ஊருக்கு நடையை கட்டினார் அந்த பெண்.
ஆனால், போலீஸ் சும்மா இருக்குமா? மூன்று பெண்கள் உள்ளிட்ட மேலும் ஆறு பேரை பிடிக்க இரண்டு தனிப்படைகள், நாக்பூர் மற்றும் அகோலா நகரத் தெருக்களில் தேடிக் கொண்டிருக்கிறது

வால் பையன் கமெண்ட் : பெண்கள் தனியாக பயணம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.அவசரம் என்றால் கூடுமானவரை புதியவர்கள் யாரும் உங்களுடன் பேச முற்ப்பட்டால் தவிர்க்க வேண்டும்.
தைரியம் என்பது நல்லதது தான்.ஆனால் உங்கள் பாதுகாப்பு அதைவிட முக்கியம்.பெண்கள் எப்போதும்,எந்த சந்தர்பத்திலும் கவனமாக செயல்படவும்.


               எங்கள் மீது பாயும் அமெரிக்கா அணு ஆயுதங்களைக் குவித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேல் நாட்டைக் கண்டிக்காதது ஏன் என்று ஈரான் அதிபர் அகமதிநிஜாத் கேட்டுள்ளார்.

ஐ.நா. சார்பில் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் தொடர்பான மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு பேசிய ஈரான் அதிபருக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
அகமதிநிஜாத் பேசுகையில், முதன் முதலில் அணுகுண்டை உருவாக்கி அதை பயன்படுத்தியது அமெரிக்காதான். இன்றும் கூட அது பெருமளவில் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளது. அணு ஆயுதப் பரவலை உருவாக்கியதே அமெரிக்காதான். ஆனால் மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று மிரட்டி வருகிறது.
ஈரான் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறி வரும் அமெரிக்கா, இஸ்ரேல் மீது கவனம் செலுத்தாதது ஏன். இஸ்ரேல் அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை கண்டிக்காதது ஏன்.
பிற நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை வைத்து மிரட்டுவதோடு, பயன்படுத்தவும் தயங்காத அமெரிக்கா, தொடர்ந்து ஈரானை மட்டும் சாடி வருவது வருத்தத்திற்குரியது என்றார்.
பின்னர் பேசிய ஹில்லாரி கிளிண்டன், அகமதிநிஜாத்தின் பேச்சு எதிர்பார்த்த ஒன்றுதான், வியப்பளிப்பதாக இல்லை என்றார்.


இதயத்தின் அமைப்பு பற்றியும், அதன் இயக்கம் பற்றியும் பொதுவாக நமக்கு தெரிந்திருக்கும்.பெரும்பாலும் பிறக்கும் பொது எல்லா குழந்தைகளும் ஆரோகியமான இதயத்துடன் தான் பிறக்கிறார்கள்.அவர்களின் இதயத்தின் அமைப்பிலோ அல்லது செயல்பாட்டிலோ எந்தவித குறைபாடும் இருப்பதில்லை.
ஆனால் சில குழந்தைகள் மட்டும் பிறக்கும் போதே இதய கோளாறுடன் பிறக்கின்றன. பிறவியிலேயே குழந்தைகளுக்கு இத்தகைய இதய கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கபடவில்லை என்றாலும் சில அடிப்படை காரணங்களை மருத்துவ உலகம் சொல்கிறது.
       மரபு ரீதியாக நமது பண்புகளை நிர்ணயிக்கும் குரோமோசோம்களின் அமைப்பில்
இயற்கையாகவே குறைபாடுகள் இருந்தால் பிறக்கும்போதே குழந்தைகளுக்கு உருக்குலைந்த இதயம் உருவாகக்கூடும். தாய்மை பேரு அடைந்த சில பெண்கள்
கருவுற்ற தொடக்க நிலையில் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி பலவகையான நோய்களுக்கு இலக்காக நேரிடும்.இந்த வைரஸானது கருவில் வளரும் இதயத்தையும் பாதித்து அதன் அமைப்பையோ அல்லது செயல்பாட்டையோ சிதைத்து விடும்.
எனவே பெண்கள் கருவுற்றா தொடக்க நிலையில் வைரஸ்களால் ஏற்படும் பலவகையான தொற்று நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம்.கருவின் ஆரம்பத்தில் கர்ப்பிணி பெண்கள் ருபெல்லா என்ற german
தட்டம்மை நோய்க்கு ஆளானால் கருவானது பல வகைகளில் பாதிக்கப்படும்.அதோடு
இந்த நோய் இதயத்தையும் உருக்குலைத்து விடுகிறது.இந்நோயை தாய்மை பருவ
தட்டம்மை என்றும் சொல்வதுண்டு.
  பரம்பரை காரணமாகவும் பிறைவியிலேயே இதயக் குறைபாடு நோய்களோடு குழந்தைகள் பிறக்கலாம்.ஒரு குடும்பத்தில் பெற்றோரோ அல்லது அவர்களின் முன்னோர்களோ இதயகுறைபாடால் பாதிக்கப்பட்டுரிந்தால் அந்த குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள்,ஆரோக்கியமான குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளை விட
இதய குறைபாட்டு நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.
   கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் அறியாமல் செய்யும் சில தவறுகள் கூட இதற்க்கு காரணமாக அமைந்து விடுகின்றன.கருவுற்றா தொடக்க காலங்களில் தாய்மார்கள்
சாதாரண உடல் பிரச்சினைகளுக்காக மருத்துவர்களின் தக்க அறிவுரையும் பரிந்துரையும் இல்லாமல் தாங்களாகவே பல வகையான மருந்துகளை எடுத்து கொள்கிறார்கள்,இந்த மாத்திரைகளை கட்டுப்பாட்டின்ரீ பயன்படுத்தும் போது அது கருவில் உள்ள குழந்தையின் இதயத்தையும் கடுமையாக பாதிக்கும்.
    கர்ப்ப காலங்களில் பெண்கள் அளவுக்கு அதிகமாக xray கதிர்விச்சுக்கு ஆளானாலும்
கருவில் உள்ள குழந்தையின் இதயத்தில் உருக்குலைவு ஏற்படுகிறது இவ்வாறு இதய கோளாறுகளுடன் பிறக்கும் குழந்தைகள் மூன்றில் ஒரு பங்கினர் தங்களது முதலாண்டு முடிவதற்குள் இறந்து விடுகிறார்கள்.
    இதய கோளாறுகளில் பல வகைகள் உள்ளன.
எனவே கருவுற்றா தாய்மார்கள் கவனமாக தங்களையும் தங்கள் குழந்தைகளையும்
காத்து கொள்ளவும்.
           மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த வித மருந்துகளும் உட்கொள்ள கூடாது .


அன்புள்ளம் கொண்ட வலை பூவுலக நண்பாகள் அனைவருக்கும் வால் பையனின் நன்றி கலந்த வணக்கம்.வலை பூவுலகிற்கு புதியவனாகிய என்னை தங்களில் ஒருவன் ஆக்கியதற்கு நன்றி.
வால் பையன் என்ற பெயரில் ஏற்க்கனவே ஒருவர் இருக்கிறார் என்பது,நான் தொடங்கிய பின்பு தான் எனக்கு தெரியும்.அன்பர் தயவு  செய்து என்னை மன்னிக்கவும் .வால் பையன் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்த பெயர்
அதனால் தான் எனது ப்ளாக்கிற்கு அந்த பெயர் வைத்தேன்.
எனது ப்ளாக்கிற்கு பெருந்தன்மையோடு வந்து என்னை பாராட்டிய வால் பையன் (சீனியர்) அவர்களுக்கு எனது நன்றி.
எனது ப்ளாக்கிற்கு வந்து என்னை பாராட்டியவர்கள்:
திரு:ராகவன் நைஜிரியா  ,திரு: அகல்விளக்கு,திரு:சுந்தரராஜ்,திரு:வளாகம் திரு:விஜயராகவன்,திரு:கோழி பையன் ,திரு:,திரு:கார்க்கி ,திரு:ஜெகநாதன்
திரு: ஜெயராமன்,திரு:philosophy பிரபாகரன்
அன்பு சகோதரிகள்:ரோகினி சிவா,தேனம்மை லக்ஷ்மணன்
அனைவருக்கும் நன்றி!
எனது ப்ளாக்கில் நல்ல பல விசயங்களை பற்றி மட்டுமே எழுத உள்ளேன்.இவற்றில் சில நீங்கள் கேள்விப்பட்டதாக கூட இருக்கலாம்.ஆனால் பல பேருக்கு உபயோக படும் என்ற நோக்கில் தான் எழுதுகிறேன்.ஆதரவு தரவும். நன்றி!


 

அன்புடன் வால் பையன்(ஜூனியர்)


‘கிரீன் எக்ஸர்சைஸ்’ எனப்படும் பசுமையான பகுதியில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், உடல் நலம், மன நலம் மேம்பட்டு ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

இதுகுறித்து அமெரிக்க ரசாயன சங்கத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பத்திரிகையில் வெளியான ஆய்வு கட்டுரை வருமாறு:
வயது, பாலினம், மனநலம் ஆகிய வித்தியாசமின்றி 1,252 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை இயற்கையான சூழ்நிலையில் பல்வேறு உடல் பயிற்சிகள், பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்தினர்.
நடைப் பயிற்சி, தோட்ட வேலை, சைக்கிளிங், மீன்பிடித்தல், படகு சவாரி, குதிரை சவாரி ஆகியவற்றுடன் விவசாய வேலையிலும் 1,252 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்பிறகு அத்தனை பேரும் பரிசோதிக்கப்பட்டனர்.
அதில் இளைஞர்கள், மனநலம் பாதித்தவர்களில் பெரும்பாலோருக்கு அதிக நன்மை கிடைத்தது தெரிய வந்தது. மற்றவர்களின் ஆரோக்கியமும் மேம்பட்டிருந்தது.
விளைநிலம், பூங்கா உட்பட இயற்கைச் சூழலில் உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவோருக்கு உடல் மட்டுமின்றி மனநலமும் சிறப்பாக இருக்கும் என்று ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
நகரங்களில் உள்ள பூங்காக்களும் இதில் அடக்கம். தோட்டங்கள், பூங்காக்களில் நீர் தெளித்தோ, நீர்த் தொட்டிகள், குளங்கள் இருந்தால் ஆரோக்கியம் மேலும் அதிகரிக்கும் என்கிறது ஆய்வு.
இதுபற்றி இயற்கை நிபுணர் ஜூல்ஸ் பிரெட்டி கூறியதாவது:
வீட்டுத் தோட்டத்திலோ, பூங்காவிலோ 5 நிமிட உடற்பயிற்சி செய்வது அபார பலன் தரும். உடல் நலம், மனநிலையை சிறப்பாக்குவதுடன் தன்னம்பிக்கையும் உயரும். மனஅழுத்தம், விரக்தி ஆகியவை சிறிது நேரம் மறைந்தாலே, நீண்ட கால ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் கிடைக்கும் என்றார்.


த்தரி வெயில் இன்று தொடங்குகிறது. சென்னைக்கு வெளியே இருப்பவர்களுக்கு அக்னி நட்சத்திரம். 28ம் தேதி வரை தொடரும். அதுவரை அதிகபட்ச வெப்பமும் அனல் காற்றும் வாட்டியெடுக்கும். ஆண்டு தோறும் மே மாதம் கத்தரி வந்து போவது வழக்கம்தான். என்றாலும், ‘போன வருஷத்தைவிட இந்த முறை வெயில் தாங்க முடியவில்லை’ என்று மக்கள் புலம்புவது வேடிக்கையான வாடிக்கை.
ஃபேன், ஏர்கூலர், ஏர்கண்டிஷனர்கள் முழுவீச்சில் இயங்குவதால் இந்த மாதம் மின்சாரத்தின் தேவை உச்சத்தை எட்டுகிறது. இதையடுத்து மின்தடையும் வோல்டேஜ் ஊசலாட்டமும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன. உலகம் வெப்பமயம் ஆவதை தடுக்க ஒவ்வொருவரும் தம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என்று பிரசாரம் நடக்கும்போதே, இப்படி மின் உபயோகத்தை உச்சத்துக்கு தள்ளுவது பெரிய முரண்பாடு.
சின்னச் சின்ன வழிகளில் உடல் உஷ்ணத்தையும் உலக வெப்பத்தையும் குறைக்க முடியும் என்பது பலருக்கு தெரியாது. மும்பையில் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்கள் நூறு பேர் இது பற்றி பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள். ஒரு மாதத்துக்கு டை கட்டுவதில்லை என்ற முடிவு. ‘டை கட்டினால் சட்டைக்குள் வெப்பம் அதிகமாகிறது. டை இல்லை என்றால் அந்த அளவு சூடு தெரிவதில்லை. இதனால், அலுவலகத்திலும் வீட்டிலும் ஏர்கண்டிஷனரை அதிக குளிர் நிலைக்கு திருப்பாமல் மின்சாரத்தை சேமிக்க முடியும்; வெளியாகும் கார்பன் அளவையும் குறைக்கலாம்’ என அவர்கள் கூறுகின்றனர். இந்த கருத்துக்கு ஆதரவு பெருகுகிறது.
மும்பை நகரம் தினமும் பயன்படுத்தும் மின்சாரம் மூவாயிரம் மெகாவாட். அதில் மூன்றில் ஒரு பங்கை ஏசி மெஷின்கள் சாப்பிடுகின்றன. டை கட்டவில்லை என்றால் 18 டிகிரி செல்சியசுக்கு ஏசி ரெகுலேட்டரை திருப்ப அவசியம் வராது. இது மும்பைக்கு மட்டுமல்ல, நாடு முழுமைக்கும் பொருந்தக்கூடிய நல்ல ஏற்பாடு. சென்னையை எடுத்துக் கொண்டால், சராசரியாக குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரிக்கு கீழே இறங்குவதில்லை. எனவே ஏசியை அதற்கு மேல் வைத்தால் போதும். அதை மட்டும் செய்தாலே 20 சதவீத மின்சாரம் மிச்சமாகும். முழுக்கை சட்டை, ஷூ ஆகியவற்றுக்கும் ஓய்வு கொடுத்து வெள்ளை நிற காட்டன் சட்டை அணிந்தால் இன்னும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


உலகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் மும்பை தாக்குதல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. ‘இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது, மனித படுகொலையில் ஈடுபட்டது உட்பட 86 குற்றச்சாட்டுகளிலும் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் குற்றவாளி’ என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், உள்ளிட்ட பத்து இடங்களில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில், 195 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் 3 நாட்கள் இடைவிடாமல் நடந்த சண்டையில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். முகமது அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் சிக்கினான்.
பின்னர், பல கோடி ரூபாய் செலவில் சிறப்பு பாதுகாப்புகள் செய்யப்பட்ட மும்பை ஆர்தர் ரோடு மத்திய சிறையில் தனி அறையில் அவன் அடைக்கப்பட்டான். மேலும், தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவியதாக இந்தியாவைச் சேர்ந்த பாஹிம் அன்சாரி, சகாபுதீன் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு இதே சிறையில் அடைக்கப்பட்டனர்.
கசாபின் பாதுகாப்பு கருதி, ஆர்தர் ரோடு சிறை வளாகத்திலேயே சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதில், கடந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி விசாரணை தொடங்கியது. மொத்தம் 653 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கடந்த மார்ச் 31ம் தேதி விசாரணை முடிந்தது. அப்போது, மே 3ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி தகிலியானி அறிவித்தார். அதன்படி நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆர்தர் ரோடு சிறை முன்பாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்த தீர்ப்பை அறிய இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளிலும் அதிக ஆர்வம் காட்டப்பட்டது. குறிப்பாக, தீர்ப்பு எப்படி அமையும் என்பது பற்றி மும்பை மக்கள் காலை முதலே பரபரப்பாக விவாதிக்க தொடங்கி விட்டனர்.பகல் 11 மணிக்கு மேல் கசாப், அன்சாரி, சகாபுதீன் ஆகியோர் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். மதியம் 2 மணிக்கு மேல் நீதிபதி தகில்யானி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.
                                            தண்டனை இன்று அறிவிப்பு


வால் பையன் கமெண்ட் : இந்த சம்பவம் நடந்து ஒராண்டுக்கு மேல் ஆகி விட்டது.
கசாப் துப்பாக்கியால் அப்பாவி மக்களை சுட்டு தள்ளியதை உலகமே டிவியில் பார்த்தது. ஆனால் அவன் குற்றவாளி என்று சொல்லவே நமக்கு ஒரு வருடம் ஆகி விட்டது.இன்னும் தண்டனை அறிவித்து அதை நிறைவேற்ற எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? இது தான் ஜனநாயகமா?


கார்குண்டு மூலம் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தை தகர்க்க சதி செய்ததற்கு பாகிஸ்தான் தலிபான் காரணமா என அமெரிக்கா புலனாய்வுத்துறையினர் தீவிரவிசாரணை நடத்திவருகின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கம் அருகே நேற்று முன்தினம் மாலை ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த காரிலிருந்து திடீரென புகை எழுந்தது. இதனால் அந்த காரில் வெடிகுண்டு இருக்கலாம் என பீதி கிளம்பியது. அந்த இடத்தை தீயணைப்பு படையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் சுற்றிவளைத்தனர். அப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் அமெரிக்கா முழுவதும் பீதியை கிளப்பியது.
ரோபோ மூலம் மர்ம காரை சோதனையிட்ட போலீசார் அதில் வெடிகுண்டு இருப்பதை உறுதி செய்தனர். அதில் மூன்று புரோபேன் டேங்குகளும், இரண்டு கேஸ் கன்டெய்னர்களும், வெடி பொருட்கள் மற்றும் வயர்களுடன் கூடிய கடிகாரங்களும் இருந்தன. இது வீட்டில் தயார் செய்யப்பட்ட சக்தி வாய்ந்த குண்டாக இருக்கும் என கருதப்படுகிறது. பின் அந்த குண்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது. இதனால் அமெரிக்காவில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வெடிகுண்டு செயல் இழக்கச் செய்த குழுவினரை அதிபர் ஒபாமா பாராட்டினார். இந்த சதி செயலுக்கு யார் காரணம் என அமெரிக்க புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த தெக்ரிக்&இ&தலிபான் என்ற அமைப்பு, நியூயார்க் கார் குண்டு சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக இன்டர்நெட் வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. இந்த வீடியே ‘யு ட்யூப்’ இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அதில், ‘‘அமெரிக்காவில் இந்த துணிச்சலான செயலில் ஈடுபட்டதற்கு வாழ்த்துக்கள். இச் சம்பவத்துக்கு தெக்ரிக்&இ&தலிபான் பொறுப்பேற்கிறது’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பேசிய தெக்ரிக்&இ&தலிபான் அதிகாரி குவாரி உசேன் மெக்சூத் என்பவர், ‘‘ஈராக்கில் அல்&கய்தா அமைப்பின் இரண்டு முக்கிய தலைவர்களான அபு உமர் மற்றும் அயுப் அல் மஸ்ரி ஆகியோர் கடந்த மாதம் கொல்லப்பட்டதற்கும், பாகிஸ்தானின் பழங்குடியின பகுதிகளில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்துவதற்கும் பழிவாங்கும் விதத்தில் இந்த கார் குண்டு தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது’’ என தெரிவித்துள்ளார்.
நியூயார்க் கார் குண்டு சம்பவத்துக்கு தெக்ரிக்&இ&தலிபான் அமைப்பு பொறுப்பேற்பதற்கு வலுவான ஆதாரம் இல்லை. எனவே, இச்சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என அமெரிக்க புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவை கண்காணித்து எச்சரிக்கை விடுத்த அமெரிக்காவுக்கு, நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தை கார் குண்டு மூலம் தகர்க்க தீவிரவாதிகள் சதி செய்தது பற்றி முன்கூட்டியே தகவல் தெரியாமல் போய்விட்டது. வெடிகுண்டு இருந்த காரில் இருந்து புகை வெளியான பின்பு, உடனடியாக சுதாரித்து வெடிகுண்டை செயல் இழக்கச் செய்துள்ளனர்.


குமரி மாவட்டம் இரவிபுதூர்கடையை சேர்ந்தவர் மாஷா நசீம். 12ம் வகுப்பு மாணவியான இவர் ரயிலில் கழிவுகள் அகற்றும் கருவி, நெருப்பின்றி சீல் வைக்கும் கருவி ஆகியவற்றை கண்டுபிடித்ததின் மூலம் தேசிய அளவில் பிரபலம் அடைந்தார்.

பெங்களூர் இந்திய அறிவியல் கழகம், திருவனந்தபுரம் இந்திய விண்வெளி பல்கலைக்கழகம் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளை பாராட்டி கவுரவித்துள்ளது.
இந்தநிலையில் கல்வி, விளையாட்டு, அறிவியல், கலைகளில் சிறந்துவிளங்கும் பள்ளி மாணவர்களை தேர்வு செய்து தங்களது நாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை ஜப்பான் அரசு செயல்படுத்தி வருகிறது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு மையம் மூலம் செயல்படுத்தப்படும் இந்த 10 நாட்கள் கல்வி சுற்றுலாவுக்கு செல்ல மாஷா நசீம் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாதம் இறுதியில் துவங்க உள்ள இந்த சுற்றுலாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 3 மாண வர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பூமிக்கடியில் இருந்து சாம்பல், மண் துகள்களுடன் வெப்ப வாயு வெளியேறியது. பூகம்பம் ஏற்படும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் சித்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சித்தூர் கங்கணப்பள்ளி பகுதியில் நீவா நதிக்கரையோரம் மலையடிவாரம் உள்ளது. இங்கு பூமிக்கடியில் இருந்து நேற்று திடீரென சாம்பல், மண் துகள்கள் வெளியே வந்தது. இதனைக் கண்ட அப்பகுதியினர் அருகே சென்று பார்த்தனர். அது வெப்ப வாயு என தெரிந்தது. அந்த இடத்தில் புகை மண்டலமாக காட்சியளித்தது. அந்த இடத்தில் மூங்கில் குச்சியால் பொதுமக்கள் கிளறினர். அப்போது பயங்கர சத்தத்துடன் மீண்டும் புகை கிளம்பியது. இதைக்கண்ட பொதுமக்கள் பூகம்பம் ஏற்படுமோ என பீதியடைந்து அலறியடித்து தப்பி ஓடினர்.
இதுகுறித்து சித்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, அந்த இடத்தில் தண்ணீரை பீய்ச்சி அடைத்தனர். ஆனாலும் அந்த வெப்ப வாயு நிற்கவில்லை.
பின்னர் தீயணைப்பு படையினர் சித்தூர் முதலாவது போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பார்வையிட்டு, கலெக்டருக்கு தெரிவித்தனர். உடனே கலெக்டர் சேஷாத்ரி அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தும்படி கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். அதன்படி சித்தூர் கோட்டாட்சியர் சுப்பிரமணியேஸ்வர ரெட்டி, மாவட்ட விநியோக அலுவலர் சந்திரமவுளி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
பின்னர் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பேராசிரியரும், நில ஆராய்ச்சியாளருமான ஹனுமந்தா வரவழைக்கப்பட்டார். அவர் நேற்று மாலை சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு பரிசோதனை செய்தார். இந்த இடங்களில் சில ரசாயன தொழிற்சாலைகள் இருப்பதால் நிலத்திலிருந்து வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பூமிக்கடியிலிருந்து காற்று வெளிவருகிறது. இதனால் பீதி அடைய தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.


கர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா?. முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது.

கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும், பயமும் கர்ப்ப காலத்தின்போது செக்ஸ் உறவிலிருந்து பலரையும் விலக்கிக் கொண்டு சென்று விடுகிறது.
கர்ப்ப காலத்தின்போது பெண்கள் மனதளவிலான மாற்றங்களை சந்திக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டவர்களாக பெரும்பாலான பெண்கள் அச்சமயத்தில் இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் போனாலோ அல்லது திருப்திக் குறைவு ஏற்பட்டாலோ அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும்.
கணவரிடமிருந்து போதிய ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்காமல் போனால் அவர்களுக்குள் பெரும் ஏமாற்றம், எரிச்சல், பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். இந்த எதிர்பார்ப்புகள் செக்ஸ் உறவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல.
இந்த மாற்றங்களை, பாதிப்புகளை பெரும்பாலான ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. அல்லது நிவர்த்தி செய்ய முயலுவதில்லை. அதற்குப் பதிலாக சிம்பிளாக டாக்டரிடம் கூட்டிக் கொண்டு காட்டுவதையே விரும்புகிறார்கள்.
கர்ப்ப காலத்தின்போது தங்களது மனைவியரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும். செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் முறையான, இருவருக்கும் மனம் ஒத்த நேரத்தில் அதைச் செய்ய முயல வேண்டும். மாறாக மனைவியை அதற்காக வற்புறுத்துவது கூடாது.
கர்ப்ப காலத்தின்போது பெரும்பாலான பெண்களுக்கு கணவரின் அருகாமை மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. அது உடலுறவாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் முத்தம், அன்புப் பரிமாற்றங்கள், நெருக்கமாக இருப்பது ஆகியவற்றைத்தான் பெரும்பாலான பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதேசமயத்தில் கர்ப்ப காலத்தின்போது தாராளமாக உடலுறவு வைத்துக் கொள்ளலாம்.
அதுபோன்ற தருணங்களில் வழக்கமான முறையில் (மேலே ஆண், கீழே பெண்) செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக உல்டா முறையில் செக்ஸ் உறவை பேணலாம். அல்லது இருவரும் அமர்ந்த நிலையில் கூட செக்ஸ் உறவை மேற்கொள்ளலாம். இதன் மூலம் வயிற்றின் மீது அழுத்தம் ஏற்படாது. இது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு நல்லது. மேலும் இயக்கமும் கூட நிதானமாக, மெதுவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
கர்ப்பம் தரித்து 6 முதல் 12 வாரம் வரை செக்ஸ் உறவைத் தவிர்ப்பது நல்லது. அந்த சமயத்தில் உறவு வைத்துக் கொண்டால், கரு கலைந்து போய் விட வாய்ப்பாகி விடும். அதேபோல கர்ப்ப காலத்தின் கடைசி இரண்டு மாதங்களின்போதும் செக்ஸ் உறவு கூடாது. இதனால், பனிக்குடம் உடைந்து குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
அதேபோல கர்ப்ப காலத்தின் 4 முதல் 7வது மாதம் வரை தேவைப்பட்டால் மட்டுமே செக்ஸ் உறவைக் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தின்போது வாய் வழி செக்ஸ் உறவு மற்றும் ஏனல் செக்ஸ் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்த சமயத்தில் உடல் அழகும், பொலிவும் சற்று குறைவதும், குலைவதும் இயற்கை. இதனால் அந்த சமயத்தில் தங்களது பார்ட்னர்கள் மீதான ஈர்ப்பு ஆண்களுக்குக் குறைவதுண்டு. இந்த சமயத்தில்தான் பல ஆண்கள் வேறு பெண்களை நாடுவதும் நடக்கிறது. ஆனால் இது தவறு, இந்த சமயத்தில்தான் மனைவிக்குத் துணையாக, அவருக்கு ஆறுதலாக, பரிவை பொழிய வேண்டிய தருணம் என்பதை பல ஆண்கள் மறந்து விடுகிறார்கள்.
தாரத்தின் அழகை விட தாய்மையின் அழகைத்தான் அப்போது ஆண்கள் முக்கியத்துவம் தந்து பார்க்க வேண்டும், போஷிக்க வேண்டும். மனைவியின் மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கு நல்ல வடிகாலாக இருக்க வேண்டியது ஆண்களின் கடமை.
பாதுகாப்பான முறையில், பாதுகாப்பான தருணத்தில் உடல் உறவைக் கொள்ள முடியும் என்பதைப் புரிந்து கொண்டு அதுதொடர்பான அறிவை வளர்த்துக் கொண்டால் கர்ப்ப காலத்திலும் கூட தம்பதிகள் கலகலப்பாக இருக்க முடியும்.


மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளில் புதிதாக மொபைல் போன்களும் இணைந்துள்ளன. மொபைல் போன்களால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு நோமொபோபியா என பெயரிட்டுள்ளனர்.

இது 24/7 காலம். 24 மணி நேரமும் போதாது என்று பதை பதைப்போரும் உள்ளனர். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இன்றைய தலைமுறையினர் உள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகைகளில் மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானதுதான். இப்போது புதிதாக ஒரு காரணியும் இந்த மன அழுத்தப் பட்டியலில் இணைந்துள்ளது. அதுதான் நோமொபோபியா.
கை, கால்கள் இல்லாமல் கூட இன்றைய மனிதர்களால் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் மொபைல் போன்கள் இல்லாமல் உயிர் வாழவே முடியாது என்ற நிலையில் இருப்பவர்கள் பல்கிப் பெருகி விட்டனர். இப்படிப்பட்டவர்களுக்கு வருவதுதான் இந்த நோமொபோபியா.
நோ மொபைல் போபியா என்பதன் சுருக்கம்தான் நோமொபோபியா. மொபைல் போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் இது வரும். மொபைல் போன்களை பயன்படுத்துவோரில் 53 சதவீதம் பேருக்கு இந்த மன வியாதி இருக்கிறதாம்.
மொபைல் போன்களோடு ஒட்டி உறவாடி வருவோருக்கு மட்டுமே இது வருகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு, மொபைல் போனில் சார்ஜ் தீர்ந்து விட்டாலோ அல்லது பேசும் நேரம் ஸ்டாக் இல்லாவிட்டாலோ அல்லது சாதனம் செயலிழந்து விட்டாலோ பெரும் மன அழுத்தம் ஏற்படுமாம். அதைத்தான் நோமொபோபியா என்கிறார்கள்.
மொபைல் போன் இல்லாமல் இவர்களால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாதாம். ஏற்கனவே உள்ள பல்வேறு வகையான மன அழுத்தங்களை விட இந்த நோமொபோபியா பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த ஸ்டூவர்ட் பாக்ஸ் மில்ஸ் என்பவர் தலைமையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஆண், பெண்களிடம் (அனைவரும் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள்) கருத்தாய்வு நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட ஆண்களில் 58 சதவீதம் பேரும், பெண்களில் 48 சதவீதம் பேரும் போனில்சார்ஜ் தீர்ந்து விட்டாலோ, சாதனம் செயல்படாமல் இருந்தாலோ அல்லது பேசும் நேரம் (டாக் டைம்) குறைவாக இருந்தாலோ பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர். என்ன செய்வது என்று தெரியாமல் தாங்கள் தவித்துப் போய் விடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கருத்தாய்வில் கலந்து கொண்டவர்ளில் மூன்றில் இரண்டு மடங்கு பேர், எப்போதும் மொபைல் போனில் பேசியபடியே இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது காதும், போனுமாகவே இருப்பவர்கள் இவர்கள்.
இத்தகைய பதட்டத்தைக் குறைக்க, மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்க, மன உளைச்சலைப் போக்க ஒரே வழி சாதனங்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும், எப்போதும் சார்ஜில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். டாக் டைம் அதிகம் இருக்கும்படி அதை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் மில்ஸ்.

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget