உலக கோப்பை கால்பந்து போட்டி தென் ஆப்ரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சாக்கர் சிட்டி ஸ்டேடியத்தில், வண்ணமயமான கலைநிகழ்ச்சியுடன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி, இந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. மொத்தம் 204 நாடுகளின் அணிகள் பங்கேற்ற தகுதிச் சுற்றின் முடிவில், உலக கோப்பையில் விளையாட 32 அணிகள் தகுதி பெற்றன. இந்த அணிகள் மோதும் பிரதான சுற்று, தென் ஆப்ரிக்காவில் நேற்று தொடங்கியது.
பரிசு மழை:
உலக கோப்பையைக் கைப்பற்றும் அணிக்கு முதல் பரிசாக ரூ.138 கோடி வழங்கப்பட உள்ளது. இந்த உலக கோப்பையில் வழங்கப்பட உள்ள மொத்தப் பரிசுத் தொகை ரூ.2,000 கோடி. இப்போட்டி ஜூலை 11ம் தேதி வரை நடக்க உள்ளது.
தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள சாக்கர் சிட்டி ஸ்டேடியத்தில் தொடக்க விழா நடைபெற்றது.
தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா, ஐ.நா. பொதுச் செயலர் பான்கி மூன், மெக்சிகோ அதிபர் பெலிப் கால்டரான், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் செப் பிளாட்டர் உட்பட அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், பிபா நிர்வாகிகள் பலர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
     சாம்பியன்கள் இதுவரை....
ஆண்டு  சாம்பியன்     2வது இடம்          நடத்திய நாடு
1930       உருகுவே        அர்ஜென்டினா     உருகுவே
1934       இத்தாலி  செக்கோஸ்லோவேகியா  இத்தாலி
1938      இத்தாலி       ஹங்கேரி                              பிரான்ஸ்
1950     உருகுவே         பிரேசில்                               பிரேசில்
1954     மேற்குஜெர்மனி ஹங்கேரி                      சுவிட்சர்லாந்து
1958      பிரேசில்               ஸ்வீடன்                           ஸ்வீடன்
1962      பிரேசில்          செக்கோஸ்லோவேகியா  சிலி
1966      இங்கிலாந்து         மேற்கு ஜெர்மனி             இங்கிலாந்து
1970       பிரேசில்                இத்தாலி                              மெக்சிகோ
1974      மேற்கு ஜெர்மனி  நெதர்லாந்து                    மேற்கு ஜெர்மனி
1978       அர்ஜென்டினா       நெதர்லாந்து                    அர்ஜென்டினா
1982        இத்தாலி                மேற்கு ஜெர்மனி              ஸ்பெயின் 
1986        அர்ஜென்டினா     மேற்கு ஜெர்மனி              மெக்சிகோ
1990       மேற்கு ஜெர்மனி  அர்ஜென்டினா                   இத்தாலி
1994         பிரேசில்                  இத்தாலி                             அமெரிக்கா
1998         பிரான்ஸ்                 பிரேசில்                             பிரான்ஸ்
2002         பிரேசில்                   ஜெர்மனி                      தென் கொரியா
2006        இத்தாலி                   பிரான்ஸ்                              ஜெர்மனி


 வாரன் ஆண்டர்சனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. ஆங்கில செய்தி சேனல்களை பார்க்கும்போது அப்படி தோன்றுகிறது.
போபாலில் வாயு கசிந்தபோது, யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனின் தலைவராக இருந்தவர். அது அமெரிக்க நிறுவனம். போபால் அதன் கிளை. தலைவர், கேசுப் மகேந்திரா என்ற இந்தியர். இதில் அமெரிக்க கம்பெனிக்கு 51 சதவீத பங்கு. மீதி இந்தியர்களிடம். வெளிநாட்டினர் மெஜாரிடி பங்குகள் வைத்திருக்க சட்டம் அனுமதிக்காத காலம் அது. விதிவிலக்கை கவனியுங்கள்.
தொழிற்சாலைகள் சட்டம் (1948), பூச்சிமருந்து சட்டம் (1968), தண்ணீர் சட்டம் (1974), காற்று சட்டம் (1982) ஆகியவற்றின் கீழ் இந்த ஆலை கண்காணிக்கப்பட்டது. இதற்கான துறைகளில் ஊழியர்கள் எத்தனை, வசதிகள் என்ன என்பதை சொல்ல தேவையில்லை. ஆலையால் சூழல் மாசுபடவில்லை என்று மாசு கட்டுப்பாடு வாரியம் சான்றிதழ் கொடுத்தது, சம்பவம் நடப்பதற்கு 2 நாள் முன்புதான். பல முறை காஸ் கசிந்து, ஒரு முறை ஊழியர் இறந்த போதும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம் வரவில்லை. ஆலை நஷ்டத்தில் இயங்கியதை சாக்கிட்டு, பராமரிப்பு கண்துடைப்பாகி அனைத்தும் துரு பிடிக்க விட்டார்கள். காஸ் டேங்க் வால்வு உட்பட.
ஒரு பத்திரிகையாளரும் சில தன்னார்வ அமைப்புகளும் ‘எந்த நேரமும் ஆபத்து வெடிக்கலாம்’ என சங்கு ஊதிக் கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் மத்தியில் ஆலையை சுற்றிய வெற்றிடத்தில் ஆயிரக்கணக்கான குடிசைகள் முளைத்தன. சுருக்கமாக சொல்வதானால், அரசு மேல்மட்டம் தொடங்கி வெட்டவெளியில் பாய் போட்டவர்கள் வரை அத்தனை பேரும் தப்பு செய்திருக்கிறார்கள். அலட்சியமாக நடந்திருக்கிறார்கள். மக்களை விஷம் செலுத்தி கொல்ல எவரும் சதி செய்யவில்லை. அதை சொல்லித்தான் குற்றச்சாட்டின் வீரியத்தை சுப்ரீம் கோர்ட் குறைத்தது.
மிகச் சிறந்த சட்டங்கள் இருந்தும் அவற்றை அமல்படுத்த தேவையான கட்டமைப்பும் மன உறுதியும் நம்மிடம் இல்லை. இந்த அடிப்படை விரிசலை சரி செய்தால் நாடு உருப்படும். அதை விடுத்து தனிநபர் வேட்டையில் நேரத்தை வீணடிப்பது பழி வாங்கும் உணர்ச்சியின் வெளிப்பாடு தவிர வேறில்லை. துரதிர்ஷ்டவசமாக, இந்திய கலாசாரத்தில் அது முக்கிய இடம் வகிக்கிறது.


 விக்ருதி வருடம் வைகாசி மாதம் 29ம் தேதி,
12-06-2010 சனிக்கிழமை,  இன்று மாலை 5.29 வரை
அமாவாசை திதி, அதன்பின் பிரதமை திதி. இன்று
காலை 10.28 வரை ரோகிணி நட்சத்திரம், அதன்பின்
மிருகசீரிடம் நட்சத்திரம். இன்று காலை 10.28 வரை
அமிர்தயோகம், அதன்பின் சித்தயோகம்.
நல்ல நேரம் : 7.30 to 8.30 , 3.00 to 3.45
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் செய்யலாம்.
ராகு காலம்: 9.00 to 10.30
எமகண்டம்: 1.30 to 3.00
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்:கேட்டை நட்சத்திரம்
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும்.
பொது: அமாவாஸ்யை தர்ப்பணம். ஏரல் அருணாச்சல சுவாமிகள் திருவிழா. திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.



மேஷம்:  
கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். வாகனப் பழுது நீங்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

ரிஷபம்:
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மிதுனம்:
குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. தலை மற்றும் கை, கால் வலி வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். போராடி வெல்லும் நாள்.

கடகம்:
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சிறப்பான நாள்.

சிம்மம்:
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

கன்னி:
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங் கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

துலாம்:
சந்திராஷ்டமம் தொடர் வதால் திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் யோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்:
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

தனுசு:
குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்ட காரியம் துலங்கும் நாள்.

மகரம்:
பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்:
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்:
சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பண பலம் உயரும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.


 மேஷம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். நட்பு வட்டம் விரியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.
 
ரிஷபம்:
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். கணவன்,மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மற்றவர்களைப்பற்றி வீண் விமர்சனங்களை தவிர்க்கப் பாருங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.
 
மிதுனம்:
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்களில் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். எதிர்பாராத பயணம் உண்டு. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
 
கடகம்:
உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.
 
சிம்மம்:
துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். சாதித்துக் காட்டும் நாள்.
 
கன்னி:
கடந்த இரண்டு நாட்களாக கணவன்,மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.,
 
துலாம்:
சந்திராஷ்டமம் நீடிப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். புது முதலீடுகளை தவிர்க்கவும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். விட்டுக் கொடுக்க வேண்டிய நாள்.
 
விருச்சிகம்:
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.
 
தனுசு:
எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.
 
மகரம்:
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். சொந்தபந்தங்களின் அன்புத் தொல்லைகள் நீங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். நினைத்தது நிறைவேறும் நாள்.
 
கும்பம்:
நட்பால் ஆதாயம் உண்டு. பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
 
மீனம்:
பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந் தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள்.


 
11.6.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 28ம் நாள், வெள்ளிக் கிழமை,
தேய்பிறை. சதுர்த்தசி திதி மாலை மணி 6.50 வரை; பிறகு அமாவாசை திதி. சித்த யோகமுடைய கீழ்நோக்குள்ள கிருத்திகை நட்சத்திரம் காலை மணி 10.57 வரை; பிறகு, மரணயோகமுடைய மேல்நோக்குள்ள ரோகிணி நட்சத்திரம். நேத்திரம், ஜீவனற்ற நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 6.00 to 9.00, மதியம் 1.00 to 3.00, மாலை 5.00 to 6.00, இரவு 8.00 to 10.00 மணி வரை. 
ராகுகாலம்:10.30 to 12.00
எமகண்டம்:3.00 to 4.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்:அனுஷம் நட்சத்திரம் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்குவாதங்களையும்,புதிய முயற்சிகளையும் 
தவிர்க்கவும்.
பொதுப் பலன்:
யாகங்கள் செய்ய, மந்திரம் ஜெபிக்க நன்று.


 
அரசு அதிகாரிகள் நடத்தை விதிகளுக்கு சட்ட வடிவம் கொடுக்க மத்திய அரசு முடிவு எடுத்திருக்கிறது. இத்தனை காலமாக இந்த யோசனை ஏன் உதிக்கவில்லை என்பது அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்குமே வெளிச்சம்.
அதிகாரிகள் என்ன செய்யக்கூடாது என்பது ஏற்கனவே விதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. எது சாதாரண தவறு, எது பெரிய குற்றம் என்பது விவரிக்கப்பட்டு தண்டனை என்ன என்பதும் விதிகளில் குறிக்கப்பட்டுள்ளது. அதை செயல்படுத்துவதில்தான் பிரச்னை. ஒரே குற்றத்துக்கு ஆளுக்கு ஆள் அல்லது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்ட தண்டனை வழங்கப்படுகிறது. பெரும்பாலும் எந்த தண்டனையுமே வழங்கப்படுவது இல்லை.
காரணம், அரசியல்வாதிகளுடன் உள்ள நெருக்கம். அரசியல் அதிகாரத்தில் இருப்பவர் சொல்வது சட்டத்துக்கும் நியாயத்துக்கும் மாறாக இருக்குமானால் செய்ய முடியாது என்று மறுக்கக்கூடிய துணிவு எத்தனை அதிகாரிகளுக்கு இருக்கிறது என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம். நேர்மையான அதிகாரிகளுக்கு உதாரணம் காட்ட இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஓய்வு பெற்றவர்களையே தேட வேண்டியிருக்கிறது.
இன்று அதிகார வர்க்கம் பெரிதும் மாறிவிட்டது. அறிவு, ஆற்றல், நேர்மைக்கு பதிலாக குவித்த சொத்துகளின் அடிப்படையில் திறமையை மதிப்பிடும் விபரீத அணுகுமுறை ஏனைய துறைகளை போலவே அதிகார வர்க்கத்தையும் விட்டுவைக்கவில்லை. அரசியல் எஜமானர் சொல்வதை சாக்கிட்டு சொந்த லாபத்துக்காக கூடுதலாக சில தவறுகளை அச்சமின்றி செய்யும் அதிகாரிகள் அதிகரித்து விட்டார்கள். நடத்தை விதிகளுக்கு சட்ட அங்கீகாரம் இல்லாததால் தவறுக்கு தண்டனை வழங்குவது மட்டுமல்ல, தவறு யார் செய்தது என்பதை கண்டறிய முயற்சி எடுப்பதே அபூர்வமாகி விட்டது. யூனியன் கார்பைடு ஆலை விவகாரத்தில் எந்த அரசு அதிகாரி மீதும் எந்த குற்றச்சாட்டும் எழவில்லை என்பதில் உள்ள ரகசியம் ஊரறியும்.
ஜனநாயக அமைப்புகள் மேலும் நிர்வாக அமைப்பின் மீதும் மக்களின் நம்பிக்கை கலகலத்து போயிருக்கும் நேரத்தில் மத்திய அரசின் மசோதா பாராட்டத் தக்கது. அதே சமயம், குற்றம் புரிந்த வீரர்களுக்கு தண்டனை கொடுப்பதில் ராணுவமே தயங்குவதை பார்க்கும்போது வெறும் சட்டங்கள் என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணமும் எழுகிறது.


 இங்கிலாந்து நாட்டின் மாப்பிள்ளையாக அல்லது மருமகளாக குடியேற வேண்டுமானால் ஆங்கில மொழியில் தேர்வு எழுதி பாஸ் ஆக வேண்டும் என்று அந்நாட்டு அரசு நிபந்தனை விதித்திருக்கிறது. இதன் மூலம், திருமண வழியில் இங்கிலாந்து குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர் எண்ணிக்கை கால் பங்காக குறையும் என அரசு எதிர்பார்க்கிறது.
இங்கிலாந்தில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் குடியுரிமை பெற்று வசிக்கிறார்கள். சென்ற ஆண்டில் மட்டும் ஏறத்தாழ இரண்டரை லட்சம் பேருக்கு பிரிட்டிஷ் குடியுரிமை வழங்கப்பட்டது. அதில் இந்தியர்கள் 50 ஆயிரத்துக்கு மேல். இப்படி குடியுரிமை பெறுபவர்கள் சொந்த நாட்டில் பெண்ணோ மாப்பிள்ளையோ பார்த்து மணமுடித்து அந்த துணைக்கும் குடியுரிமை வாங்கி இங்கிலாந்தில் செட்டிலாகின்றனர். இதில் அரசு தாராளமாக நடந்துகொள்வதால், மோசடி அதிகரித்துள்ளது. வாழ்க்கைத்துணை என்ற பெயரில் சம்பந்தமில்லாத யாரையாவது அழைத்து வந்து விடுகிறார்கள். அப்படி வருபவர்கள் ஆங்கிலம் தெரியாமலும், இங்கிலாந்து மக்களின் வாழ்க்கை முறை புரியாமலும் செயல்படுவதால் பிரச்னைகள் எழுகின்றன. அதற்கு முடிவு கட்ட புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.
வேலைக்காக அங்கு வருபவர்கள் ஆங்கிலத்தில் அடிப்படை தேர்வு எழுதி பாஸ் ஆக வேண்டும் என்ற விதிமுறை பலகாலமாக இருக்கிறது. ஆரம்ப பள்ளி மாணவன் எழுதுவது மாதிரியான அடிப்படை ஆங்கில அறிவை சோதிக்கும் தேர்வு அது. இப்போது, குடியுரிமை கோரும் அனைவருக்கும் அதை விரிவுபடுத்தியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், இன்னொரு தேர்வு எழுதி பாஸ் செய்ய வேண்டும். அதன்பிறகுதான் குடியுரிமை வழங்கப்படும். கலாசார ரீதியில் தேசிய நீரோட்டத்தில் கலக்கவும், அனைத்து பிரிவினர் இடையே ஒற்றுமையை வளர்க்கவும் ஆங்கில அறிவு உதவும் என்று அரசு கூறுகிறது.
வெளி மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக மும்பையில் குடியேறுபவர்கள் அந்த நகரை பற்றி அக்கறை இல்லாமலும் மராத்தி கற்றுக் கொள்ளாமலும் வாழ்வதால் நகரின் கலாசாரம் சீரழிகிறது, தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று சிவசேனா சொல்கிறது. குடியேற்றம் அதிகமுள்ள பெருநகரங்கள் மற்றும் நாடுகளில் இதே கருத்து ஓங்கி ஒலிக்கிறது. முறைகேட்டை தடுக்க என காரணம் சொன்னாலும், இங்கிலாந்தின் நிபந்தனை அதன் பிரதிபலிப்பாகவே தோன்றுகிறது.


 மேஷம்:
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சோர்வடைவீர்கள். கணவன்,மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். தாழ்வுமனப்பான்மை வந்து விலகும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வரக்கூடும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
 
ரிஷபம்:
பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழையகடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள்வந்து நீங்கும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
 
மிதுனம்:
தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். நவீன மின்னணு, மின்னலை சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சாதித்துக் காட்டும் நாள்.
 
கடகம்:
நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உற்சாகமான நாள்.
 
சிம்மம்:
கணவன்,மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய சிக்கல்கள் தீரும். வாகன பழுது நீங்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
 
கன்னி:
சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
 
துலாம்:
பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
 
விருச்சிகம்:
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கு சாதகமாக திரும்பும். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
 
தனுசு:
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். நினைத்தது நிறைவேறும் நாள்.
 
மகரம்:
சகோதரர்களால் பயனடைவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள்.
 
கும்பம்:
பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும். தைரியம் கூடும் நாள்.
 
மீனம்:
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். முகப்பொலிவுக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


 9.6.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 26ம் நாள், புதன் கிழமை,
தேய்பிறை. துவாதசி திதி இரவு மணி 7.49 வரை; பிறகு திரயோசதி திதி. மரணயோகமுடைய சமநோக்குள்ள அசுவனி நட்சத்திரம் காலை மணி 10.09 வரை; பிறகு, சித்தயோகமுடைய கீழ்நோக்குள்ள பரணி நட்சத்திரம். நேத்திரமற்ற, ஜீவனுள்ள நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 6.00 to 7.30, முற்பகல் 9.00 to 10.00, பிற்பகல் 11.30 to 3.00, மாலை 4.00 to 5.00, இரவு 7.00 to 10.00 மணி வரை.
ராகுகாலம்:12.00 to 1.30
எமகண்டம்:7.30 to 9.00
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் :சுவாதி நட்சத்திரம் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும் .
பொதுப் பலன்:
முட்செடிகள் நட, மூலிகைப் பயிரிட நன்று.


 FREE TRADING LIVE IDEAS :  visit my blog ,  www.tradersfirst.blogspot.com
மும்பை யின் 3 நாள் முன்னேற்றம் நின்று 337 புள்ளிகள் நேற்று சரிந்தது.
அமெரிக்காவின் வேலைவாய்ப்பு புள்ளிவிவரம் நேற்று வெளியானது. அதில் எதிர்பார்ப்பை விடக் குறைவான அம்சங்களே இருந்தன. அத்துடன், ஹங்கேரியில் கடன் நெருக்கடி ஏற்படக்கூடும் என்று அரசு எச்சரித்தது. இதனால், யூரோ மதிப்பு சரிந்தது. இந்த அம்சங்கள் நேற்று சர்வதேச பங்குச் சந்தைகளை பாதித்தன.
அதைப் பின்தொடர்ந்து மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. சர்வதேச காரணங்களுடன், பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற செய்தியும் சேர்ந்து கொண்டது. பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டதால் புள்ளிகள் மளமளவென வீழ்ச்சி கண்டன. முடிவில் சென்செக்ஸ் 337 புள்ளி சரிந்து 16,781ல் முடிந்தது.
நேற்று முன்தினம் வரை 3 நாட்களில் சென்செக்ஸ் 545 புள்ளிகள் உயர்ந்தது. அதன் பெரும்பகுதியை நேற்று ஒரே நாளில் இழந்தது. மே 25ம் தேதிக்குப் பிறகு மிகப் பெரிய வீழ்ச்சி இது. சென்செக்சின் 30 நிறுவனங்களில் 27 சரிவை சந்தித்தன. தேசிய பங்குச் சந்தை நிப்டி 101 புள்ளி சரிந்து 5,034ல் முடிந்தது. 
    இன்றும் பங்கு சந்தைகள் சரிவுடனேயே முடிந்துள்ளன.நிபிட்டி 4987 என்ற நிலையில் 
முடிந்துள்ளன.ஒவ்வொரு நாளும் ஒரு விஷயம் சந்தையை தாக்க தொடங்கியுள்ளது .
க்ரீஸ் பிரச்சினைக்கு பிறகு இப்பொழுது புதிதாக ஹங்கேரியும் சேர்ந்துள்ளது.
இதுமாதிரி இன்னும் எத்தனை நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்திதுள்ளனவோ?
வரும் வாரங்களில் தெரியும். என்னை பொறுத்தவரை ஜூலை மாதத்தில் பங்கு 
சந்தைகள் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என தெரிகிறது.
எனவே முதலீட்டார்கள் கவனமுடன் இருக்கவும்.





 போபால் சம்பவம் நடந்து 26 வருடம் ஆகிறது. தீர்ப்பு வர தாமதம் ஆவது நீதி மறுக்கப்படுவதற்கு சமம். இதற்கு ஒரு பழமொழி சொல்வார்கள். சொல்லிச் சொல்லி கந்தலாகிப் போனது அது. ‘டூ லிட்டில் டூ லேட்’ என்பது லேட்டஸ்ட் மொழி. குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுத்திருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும் என்பது அர்த்தம்.
யூனியன் கார்பைடு அமெரிக்க கம்பெனி. எவரெடி பேட்டரி தயாரிப்பில் பிரசித்தம். போபால் நகரில் பூச்சி மருந்து ஆலை அமைத்தது. அதன் பாதாள கிடங்கில் மெதில் ஐசோசயனேட் என்ற வாயு இருந்தது. இரவில் வால்வ் வெடித்து வாயு கசிந்தது. சுற்று வட்டாரத்தில் காற்றில் கலந்து பரவியது. சுவாசித்தவர்களின் நுரையீரலை தாக்கியதில் 3,500 பேருக்கு மூச்சு நின்றது. அடுத்த நாட்களில் எண்ணிக்கை இருபதாயிரம் ஆனது.
பொற்கோயிலில் ராணுவ நடவடிக்கை, இந்திரா காந்தி கொலை, சீக்கியர்கள் மீது தாக்குதல் என அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்த ஆண்டு அது. அதற்கு இரு ஆண்டுகள் முன்பு இதே ஆலையில் கசிவு ஏற்பட்டு சிலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதே குடிசைவாசிகள் வேறு இடங்களுக்கு தப்பியோடி, பிற்பாடு திரும்பி வந்தனர். அன்றும் சரி, ஆலையில் பயங்கர விபத்து நடந்து போபால் நகரமே மயானமாக மாறப்போகிறது என்று உள்ளூர் பத்திரிகையாளர் ராஜ்குமார் கேஸ்வானி என்பவர் தொடர் கட்டுரை எழுதி சங்கு ஊதிய போதும் சரி, ஆலையும் அரசும் விழித்துக் கொள்ளவில்லை.
அமைச்சர்கள் ஓய்வு எடுப்பது அந்த ஆலையின் விடுதியில்; ஐ.ஜி ரிடையர் ஆனதும் ஆலோசகர் வேலை; அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு அமோக சம்பளத்தில் பதவி. யார் கேட்பது? ஆலையின் மேல்மட்டத்தில் 12 பேர் மீது சி.பி.ஐ ‘உயிர்ப்பலி நேர காரணமாக இருந்தனர்’ என்று குற்றம் சுமத்தி 10 ஆண்டு தண்டனை கேட்டபோது, ‘கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்திய’ குற்றமாக அதை மாற்றியது சுப்ரீம் கோர்ட்.
1989ல் 47 கோடி டாலர் கொடுத்து இழப்பீடு பிரச்னையை வழக்கின்றி முடித்தது கார்பைடு நிர்வாகம். உடனே நிர்வாகம் கை மாறியது. தனி மனித வழக்குகளே செல்வாக்குக்கு தகுந்த மாதிரி முடியும் சூழ்நிலையில் பன்னாட்டு நிறுவன விவகாரம் இத்தனை காலம் பிழைத்திருப்பதே பெரிது. இதில் வியப்பதற்கு எதுவுமில்லை.


 வட கிழக்கு மாநிலமான மணிப்பூர், இந்தியாவின் மற்ற பகுதியில் இருந்து கடந்த இரண்டு மாதங்களாக துண்டிக்கப்பட்டுள்ளது. பக்கத்து மாநிலங்களில் இருந்து எந்தப்பொருளும் மணிப்பூருக்கு வரக்கூடாது என்று நேஷனல் சோஷலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகலாந்து (என்எஸ்சிஎன்) அமைப்பை சேர்ந்த இரண்டு பிரிவுகளும், சட்ட விரோதமாக பொருளாதார தடை விதித்துள்ளன. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர் மணிப்பூர் மக்கள்.
மணிப்பூர் மற்றும் அசாமின் ஒரு பகுதியை நாகலாந்துடன் இணைத்து கிரேட்டர் நாகலாந்து அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு உருவானதுதான் என்எஸ்சிஎன். இது 88ல் முய்வா தலைமையில் ஒன்றும் காப்லாங் தலைமையில் இன்னொன்றுமாக இரண்டாகப் பிரிந்தது. கிரேட்டர் நாகலாந்து கோரிக்கை மட்டுமல்லாமல், ஆள் கடத்தல், மிரட்டி பணம் வசூலித்தல், குரூப் மோதல், கள்ளச் சாராய விற்பனை போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளும் இரண்டுக்குமே பொது. இப்போது மாவட்ட கவுன்சில்களுக்கு அதிக அதிகாரம் கேட்டு, அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையால் நொநதுபோயுள்ளனர் மணிப்பூர் மக்கள்.
மணிப்பூரில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு. சமையல் காஸ் சப்ளை இல்லை. அத்தியாவசியப் பொருட்களுக்கும் பற்றாக்குறை தொடங்கிவிட்டது. ஒரு லிட்டர் டீசல் ரூ.90க்கும் பெட்ரோல் ரூ.150க்கும் கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறது. விவசாயம் அடியோடு படுத்துவிட்டது. கடந்த ஆண்டு தாமதமாக பருவ மழை பெய்ததால் பயிர்கள் அழிந்தன. இந்த முறை டீசல் தட்டுப்பாட்டால் நிலத்தை உழ முடியாமல் தவிக்கின்றனர் விவசாயிகள். முக்கிய சாலைகளை மறித்து போராட்டம் நடப்பதால், உரமும் வரவில்லை. சாலை மறியலை அரசால் முறியடிக்க முடியவில்லை. ஒரு முறை விமானம் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் மணிப்பூருக்குள் கொண்டு செல்லப்பட்டன. அதோடு அவ்வளவுதான். மறியலை முறியடிக்க ஒரு முறை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். அது கூட நெரிசலில் சிக்கி அவர் பலியானதாக செய்தி வந்தது.
தீவிரவாத அமைப்புகளால் ஒரு மாநிலமே தனித்து, தவித்துப் போயிருக்கிறது. அதுவும் இரண்டு மாதங்களாக. ஆனால் இன்னும் முடிவு வரவில்லை. இது போன்ற நிலை நீடித்தால், தீவிரவாதத்துக்கு மக்கள் பயப்படுவது இன்னமும் அதிகரிக்கத்தான் செய்யும்.


 மேஷம்: 
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சாலையைக் கடக்கும்போது கவனம் தேவை. உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
 
ரிஷபம்:
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.
 
மிதுனம்:
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
 
கடகம்:
கணவன்,மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புண்ணிய தலங்கள் சென்று வரு வீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
 
சிம்மம்:
சந்திராஷ்டமம் நீடிப்பதால் திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
 
கன்னி:
பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
 
துலாம்:
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்ட காரியம் துலங்கும் நாள்.
 
விருச்சிகம்:
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. கடையை விரிவு படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதுப் பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.
 
தனுசு:
நட்பு வட்டம் விரியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
 
மகரம்:
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
 
கும்பம்:
சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். புதுப்பொருள் சேரும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய பாதை தெரியும் நாள்.
 
மீனம்:
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. வயிற்றுக் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். போராட்டமான நாள்.


7.6.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 24ம் நாள், திங்கட் கிழமை,
தேய்பிறை. தசமி திதி மாலை மணி 6.47 வரை; பிறகு ஏகாதசி திதி. மேல்நோக்குள்ள உத்திரட்டாதி நட்சத்திரம் காலை மணி 7.22 வரை; பிறகு, சமநோக்குள்ள ரேவதி நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோக நாள்.
நல்ல நேரம்: காலை மணி 6.00 to 7.00, முற்பகல் 9.00 to 10.30, மதியம் 1.00 to 2.00, மாலை 3.00 to 4.00, இரவு 6.00 to 9.00 மணி வரை. 
ராகு காலம் :7.30 to 9.00
எமகண்டம்:10.30 to 12.00
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: ஹஸ்தம் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும் .
பொதுப் பலன்:
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க, வியாபாரம் தொடங்க, புது வேலையில் சேர, தாலிக்கு பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று.

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget