செவ்வாய் தோஷம் என்றாலே மக்கள் மத்தியில் சொல்ல முடியாத பயம் காணபடுகிறது
      செவ்வாய் கிழமையில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் உண்டு என்ற
ஆதாரமற்ற புரளி மக்கள் மத்தியில் காணபடுகிறது . இது தவறான கருத்தாகும் .
செவ்வாய் கிழமைக்கும் ,செவ்வாய் தோசத்திற்கும் சிறிது கூட சம்பந்தமில்லை .
     ஒரு ஜாதகத்தில் 2 , 4 , 7 , 8 , 12 போன்ற இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய்
தோஷம் என்று கூறபடுகிறது.
    செவ்வாய் ஜென்ம லக்னத்தில் இருந்தாலும் சிலர் செவ்வாய் தோஷம் என்று
வாதிடுவார்கள். இயற்கையிலேயே செவ்வாய் மிகவும் கொடியவர் . அவர் ஜென்ம
லக்னத்தில் அமைய பெற்று 7,8 போன்ற இடங்களை பார்வை செய்வதால் செவ்வாயின்
கொடிய பார்வை 7 , 8 போன்ற இடங்களுக்கு கிடைக்க பெறுவதால் செவ்வாய் லக்னத்தில் இருந்தாலும் " செவ்வாய் தோஷம்" தான்.
    ஜென்ம லக்னத்திலிருந்து செவ்வாய் தோஷம் பார்ப்பது போல் ,சந்திரன் நின்ற
ராசியிலுருந்தும் செவ்வாய் தோஷம் கணக்கிட வேண்டும் .
அது போல் சுக்கிரன் நின்ற ராசிக்கும் 1 , 2 , 4 , 7 , 8 ,12 ல் செவ்வாய் உள்ளாரா? என்றும்
பார்க்க வேண்டும் .
     செவ்வாய் தோசத்திற்கும் சில விதி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன ,செவ்வாய்
மேஷம் ,கடகம் ,விருச்சிகம் ,மகரம் போன்ற ராசிகளில் அமைய பெற்றால் செவ்வாய்
தோஷம் உண்டாவதில்லை .
      செவ்வாய் சூரியன் வீடாகிய சிம்மதிலே அமைய பெற்றாலும் ,கும்பத்திலே
அமைய பெற்றாலும் செவ்வாய் தோஷம் உண்டாகாது .
    செவ்வாய் பகாவான் குரு ,சூரியன் ,சனி போன்றவருடன் சேர்க்கை பெற்றாலும் ,
பார்வை பட்டாலும் செவ்வாய் தோஷம் ஏற்படுவதில்லை .
  சூரியனுடன் செவ்வாய் சேரும்போது செவ்வாய் தோஷம் அஷ்தங்கம் உண்டாகிறது .
   ஒரு பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் அவளை திருமணம் செய்து கொள்ளும் கணவனுக்கும் செவ்வாய் தோஷம் இருக்க வேண்டும் .
  இல்லா விட்டால் அந்த பெண்ணுக்கும் செவ்வாய் திசையோ அல்லது செவ்வாய்
புத்தியோ நடைபெற்றால் கண்டிப்பாக கணவனுக்கு கெடுதி உண்டாகிறது .
  செவ்வாயோடு புதன் சேர்ந்தாலும் ,புதன் பார்வை செவ்வாய்க்கு உண்டானாலும்
செவ்வாய் தோசத்திற்க்கு பரிகாரம் உண்டாகிறது .
    ஒரு பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் இருந்தால் எளிதில் திருமணம் ஆவதில்லை .
காலம் கடந்து திருமணம் நடைபெற்றாலும் ,தேவையில்லாத கருத்து வேறுபாடு
கணவன் , மனைவிக்குள் பிரிவு ,வாழ்வில் எப்போதும் சண்டை ,சச்சரவு போன்ற
அனுகூலமற்ற பலன்கள் உண்டாகின்றன .
     செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் பகவான் வழிபாடு செய்வதும் ,
செவ்வாய்க்கு அதிபதியாகிய முருக கடவுளை வணங்கி வழிபாடு செய்வது கெடுதிகளை
குறைக்கும் .



1.சலவையாளர் துணி துவைக்கும் துறையில் நீராடக்கூடாது .

2 .குளம் ஆறுகளில் துணியில்லாமல் குளிக்க கூடாது .

3 .தண்ணீரில் எச்சில் துப்ப கூடாது .

4 .தண்ணீரில் சிறுநீர் கழிப்பதோ ,மலம் கழிப்பதோ கூடாது .

5 .தண்ணீரில் கல் எரிய கூடாது .

6 .நதியில் புது வெள்ளம் வரும் போது முதல் பத்து நாட்கள் தலை முழுக்க கூடாது .

7 .ஆடிமாதம் பிறந்து முதல் மூன்று நாட்கள் புது தண்ணீர் வரும் சமயம் ஆற்றில் குளிக்க கூடாது . 


 எந்த ஒரு காரியத்தையும் செய்யும் போது நாள்,நட்சத்திரம் பார்த்து செய்தால் தான்
நன்மை உண்டாகும். இதற்க்கு ஒரு பழமொழி கூட உண்டு.இரவில் செய்தாலும் அரவில்
செய்யாதே என்பதாகும் அது . எந்த ஒரு காரியத்தையும் இரவில் கூட செய்யலாம்.
ஆனால் அரவில் (ராகு காலத்தில்) செய்யக்கூடாது.
      அரவு என்றால் பாம்பு ஆகும்.ராகுவையே இங்கு பாம்பு என்கிறோம்.தினமும்
நாம் நல்ல நேரம் பார்க்கும் போது ராகுகாலம்,எமகண்டம் இதை தான் முதலில்
பார்க்கிறோம் .அந்த ராகுகாலமே அரவு நேரம் என்பதாகும் .ஒவ்வொரு நாளும் 1.30
மணி நேரம் இந்த ராகு காலம் ஆட்டி படைக்கிறது.இந்த நேரத்தில் எந்த சுபகாரியதிலும்
ஈடுபடுதல் கூடாது என்பது விதி.அப்படி மீறி செய்யும் காரியங்கள் சுகமான முடிவை
தருவதில்லை. இருந்தாலும் சில விதி விலக்குகளும் உண்டு . அவை :
     ராகு நட்சத்திரமாகிய திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்க்கு
சாதரணமாக ராகுகாலம் கெடுதி செய்வதில்லை .அதே போல் ஒருவர் ஜாதகத்தில்
ராகு லக்னத்திற்கு 3,6,11 ல் அமைய பெற்று காணபட்டாலும்,மேலும் ராகு மேஷம் ,
ரிஷபம் ,கடகம் ,கன்னி ,மகரம் ஆகிய இடங்களில் இருந்தாலும் ராகு காலம் கெடுதி
செய்வதில்லை .


 FREE LIVE TRADING TIPS : www.tradersfirst.blogspot.com
 கம்பெனிகளில் மக்கள் பங்கு 25 சதவீதம் கட்டாயம்:
பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட கம்பெனிகளில் பொதுமக்களின் பங்குகளை 25 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்துள்ளது.
இதனால், அடுத்த சில ஆண்டுகளில் பங்கு வெளியீடுகள் அணிவகுத்து வரும். இந்த உச்சவரம்பால் பங்குச் சந்தையில் ரூ.2 லட்சம் கோடி திரளும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அரசு, தனியார் கம்பெனிகளின் மொத்த பங்குகளில் பொதுமக்களின் முதலீடு 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1957ம் ஆண்டின் செக்யூரிடிஸ் கான்ட்ராக்ட்ஸ் (ரெகுலேஷன்) சட்டத்தில் திருத்தம் செய்து அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
புதிய விதிமுறையின்படி பங்குச் சந்தையில் ஏற்கனவே பட்டியலிடப்பட்ட கம்பெனிகளில் பொதுமக்களின் குறைந்தபட்ச பங்கு 25 சதவீதமாக இருக்க வேண்டும். அதைவிட குறைவாக உள்ள கம்பெனிகள் ஆண்டுக்கு 5 சதவீதம் என்ற வகையில் அதை அமல்படுத்த வேண்டும்.
இனி, புதிய பங்கு வெளியிடும் கம்பெனிகள், பொது மக்களின் பங்காக 25 சதவீதத்தை பராமரிக்க வேண்டும். எந்த கம்பெனியிலாவது பொதுமக்களின் பங்கு 25 சதவீதத்துக்கு கீழே குறைந்தால், அதை ஓராண்டு காலக்கெடுவுக்குள் மீண்டும் உயர்த்த வேண்டும். தவறினால், அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசின் பெரிய நிறுவனங்களான என்எம்டிசி, என்எச்பிசி, தனியார் நிறுவனங்களான விப்ரோ, டிஎல்எப் உட்பட பலவற்றில் பொதுமக்கள் பங்கு 25 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது. 29 அரசு நிறுவனங்கள், 179 தனியார் நிறுவனங்களில் இந்நிலை காணப்படுகிறது.
புதிய விதியின்படி, அடுத்த சில ஆண்டுகளில் அந்நிறுவனங்கள் குறைந்தபட்சம் 5 சதவீத பங்குகளை பொதுமக்களிடம் விற்றால் ரூ.2 லட்சம் கோடி திரட்ட முடியும். அரசும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.
மேலும், பொதுமக்களின் பங்கு அதிகரிப்பதால் கம்பெனிகளின் பங்கு விலை நியாயமாக நீடிப்பதுடன், பங்குச் சந்தை வர்த்தகத்தில் அதிக முதலீட்டாளர்கள் பங்கேற்க வழி ஏற்படும். 
 கர்நாடகாவில் ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு:
கர்நாடகாவில் ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு செய்ய நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள் உறுதி அளித்துள்ளனர். இதன்மூலம் 2.25 லட்சம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கர்நாடக அரசு சார்பில், பெங்களூரில் கடந்த வியாழனன்று தொடங்கிய 2 நாட்கள் சர்வதேச முதலீட்டாளர் சந்திப்பு நேற்று நிறைவடைந்தது. 400 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3.5 லட்சம் கோடி முதலீட்டை ஈர்ப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். இதன்மூலம் 6.5 லட்சம் பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும் என்பது அரசின் கணிப்பு.
இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் உலகின் 5வது கோடீஸ்வரரும் ஸ்டீல் தொழிலதிபருமான லட்சுமி மிட்டல், விப்ரோ நிறுவனர் அசீம் பிரேம்ஜி, குமார் மங்கலம் பிர்லா, ஷஷி ரூயா, கிரிஸ் கோபாலகிருஷ்ணன், விஜய் மல்லையா, வேணு சீனுவாசன் உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். 
செல்போனில் விளம்பரம்:
மூன்றாம் தலைமுறை தொழில்நுட்ப செல்போன் சேவையை மேலும் 9 நிறுவனங்கள் விரைவில் தொடங்குவதால், செல்போனில் விளம்பர வர்த்தகம் பல மடங்கு உயரப் போகிறது.
3ஜி சேவையை அரசு போன் நிறுவனமான பிஎஸ்என்எல் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. இப்போது மேலும் 9 முன்னணி நிறுவனங்கள் 3ஜி சேவையை அளிக்க ஏலம் எடுத்து, மொத்த ஏலத் தொகை ரூ.67,700 கோடியை அரசுக்கு செலுத்தி விட்டன.
இதையடுத்து, அந்நிறுவனங்கள் 3ஜி தொழில்நுட்ப செல்போன் சேவையை அறிமுகம் செய்யத் தயாராகி வருகின்றன. அது செயல்படத் தொடங்கி விட்டால், வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும். 3ஜி சேவையில் வீடியோ ஒளிபரப்பு சாத்தியம் என்பதால், விளம்பர நிறுவனங்கள் குஷி அடைந்துள்ளன.
டிவியில் வரும் விளம்பரங்களை இனி செல்போனில் ஒளிபரப்பும் வசதி கிடைக்கும். எனவே, செல்போன் விளம்பர மார்க்கெட் பல மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிகிறது. ஏற்கனவே இது ரூ.115 கோடியாக உள்ளது. அது அடுத்த ஓராண்டில் ரூ.500 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படு கிறது.

பங்குசந்தை நிலவரம் :
வெள்ளிகிழமையுடன் முடிந்த பங்குசந்தைகள் நல்ல ஏற்றதுடன் முடிந்துள்ளன.
ஆனாலும் வெள்ளிகிழமை அன்று அமெரிக்க பங்குசந்தைகள் பெரும் வீழ்ச்சியை
சந்தித்துள்ளன. அதன் தாக்கம் நமது பங்குசந்தையில் திங்கள்கிழமை அன்று
எதிரொலிக்கும் என்பதால் முதலீட்டார்கள் கலக்கத்தில் உள்ளனர் .
நிபிட்டி 60 முதல் 70 புள்ளிகள் வரை இழக்கும் வாய்ப்புள்ளதால் முதலீட்டார்கள்
கவனத்துடன் செயல்படவும். தற்போது நடைபெற்று வரும் ஜி 20  நிதி அமைச்சர்கள்
மாநாட்டில் யுரோப் மற்றும் கிரீஸ் பற்றிய முக்கிய முடிவுகள்(திங்கள்கிழமை) எடுக்கப்படும் என்பதால்,
திங்கள் கிழமை நமது பங்குசந்தைகளில் ஒரு நிலையற்ற தன்மை காணப்படும் .


 மேஷம்:    
பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நினைத்ததை முடிக்கும் நாள்.
 
ரிஷபம்:
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.
 
மிதுனம்:
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
 
கடகம்:
சந்திராஷ்டமம் நீடிப்பதால் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். கால் வலி, உடல் சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து விலகும். பொறுமை தேவைப்படும் நாள்.
 
சிம்மம்:
பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலித மாகும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத் துழைப்பார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
கன்னி:
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.
 
துலாம்:
பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நன்மை கிட்டும் நாள்.
 
விருச்சிகம்:
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
 
தனுசு:
எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். உறவினர்கள் பாராட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.
 
மகரம்:
கணவன்,மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். சொந்த பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
 
கும்பம்:
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
 
மீனம்:
கணவன்,மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.


 அமெரிக்க அதிபர் ஒபாமா நவம்பரில் இந்தியா வருவதாக அறிவித்திருக்கிறார். நல்வரவு நடக்கட்டும். இரு நாடுகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. கல்வி, வேலை, தொழில், வர்த்தகம் காரணமாக தனிப்பட்ட முறையிலும் அமெரிக்காவுடன் இந்தியர்களுக்கு நீண்டகாலமாக தொடர்பு இருந்து வருகிறது. ஆனாலும் அரசுகள் அளவிலான உறவு எப்போதுமே மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் இருந்ததில்லை.
உண்மையில், இந்தியாவுக்கு எதிரான நிலை எடுத்து அமெரிக்க அரசு இந்திய மக்களின் எரிச்சலை சம்பாதித்துக் கொண்ட சந்தர்ப்பங்களே அதிகம். சோவியத் யூனியனுடன் இந்தியா நெருக்கமாவதற்கு அந்த அனுபவம் காரணமாய் அமைந்தது.
உலகளாவிய ராஜதந்திரம் என்ற பெயரில் சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் தேவைக்கு அதிகமாகவே அது பாசத்தை பொழிந்ததால், ரஷ்யாவுடன் நெருக்கத்தை குறைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமே நமக்கு அமையவில்லை. அணுகுண்டு சோதனை நடத்தியதை சாக்கிட்டு, நாம் எந்த நாட்டிடமும் அணுசக்தி தொழில்நுட்பத்தையும் உயர்நுட்ப எந்திரங்கள், தளவாடங்களையும் வாங்க முடியாதபடி சர்வதேச தடை விழுந்ததில் அமெரிக்காவின் பங்களிப்பு முதன்மையானது. வட கொரியா, பாகிஸ்தான், லிபியா வரிசையில் இந்தியாவை சேர்த்த பாவத்துக்கு பரிகாரமாக ஜார்ஜ் புஷ் தன் பதவிக்காலத்தின் கடைசியில் அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட்டார். அது அமுலுக்கு வர தடையாக உள்ள நிர்வாக சிக்கல்கள் இன்னும் தீரவில்லை. அதே சமயம், ஆப்கனிஸ்தானில் தலிபான்களை ஒழித்து மக்களாட்சி ஏற்படுத்தும் போரில் பாகிஸ்தான் துணை நிற்பதாக கூறி அதற்கு பணமும் ஆயுதங்களும் வழங்குவதை அமெரிக்கா நிறுத்தவில்லை.
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கார் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான், ‘காஷ்மீரிலும், ஆப்கனிலும், அமெரிக்காவிலும், ஏனைய நாடுகளிலும் செயல்படும் பயங்கரவாதிகள் அனைவரும் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு’ என்ற இந்தியாவின் வாதம் அமெரிக்க அரசுக்கு உறைத்திருக்கிறது. எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் பேசும்போது ஹில்லரி கிளின்டன் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இனியேனும் இந்தியாவுக்கு பாதகமில்லாத வகையில் தனது தெற்காசிய கொள்கையை அமெரிக்கா திருத்திக் கொள்ளுமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.


 5.6.2010,    
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 22ம் நாள், சனிக் கிழமை,
தேய்பிறை. அஷ்டமி திதி மாலை மணி 3.57 வரை; பிறகு நவமி திதி. மரணயோகமுடைய கீழ்நோக்குள்ள பூரட்டாதி நட்சத்திரம் மறுநாள் விடியற்காலை மணி 5.19 வரை; பிறகு, சித்தயோகமுடைய மேல்நோக்குள்ள உத்திரட்டாதி நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 7.00 to 8.00, 10.30 to1.00, மாலை 5.00 to 8.00, இரவு 9.00 to 10.00 மணி வரை. 
ராகுகாலம்:9.00 to 10.30
எமகண்டம்:1.30 to 3.00
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் விலக்கவும்.
சந்திராஷ்டமம்: பூரம் நட்சத்திரம் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
பொதுப் பலன்:
பழைய கடன் பைசல் செய்ய, பழைய வாகனங்கள் விற்க நன்று.



 அடுத்த ரயில்வே அமைச்சர் யார் என்ற விவாதம் தொடங்கிவிட்டது. மம்தா பேனர்ஜி அடுத்த ஆண்டு மேற்கு வங்க முதலமைச்சராக பதவி ஏற்பார் என்ற நம்பிக்கை அம்மாநில மக்களிடம் வலுவடைந்துள்ளது.
அங்கே 34 வருடமாக நகரங்களில் வேரூன்றி திளைத்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்காளர்கள் டாட்டா சொல்லிவிட்டார்கள். 81 நகராட்சிகளில் இடதுசாரி முன்னணி 17ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்ற முறை ஜெயித்த 37 இடங்களை இழந்துள்ளது. முக்கியமானது கொல்கத்தா மாநகராட்சி. அங்குள்ள 141 வார்டுகளில், ஆளும் கூட்டணி கைப்பற்ற முடிந்தது 33 மட்டும். 27 வார்டுகள் அதன் கைவிட்டு நழுவின. திருணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் வெற்றி கிடைத்திருக்கிறது.
படித்தவர்கள், தொழிலாளர்கள் நிறைந்த நகர்ப்புறங்களில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கட்சிகளையே மக்கள் என்றும் ஆதரிப்பார்கள் என்ற மெத்தனமான கோஷத்துக்கு பலத்த அடி விழுந்திருக்கிறது. 2008ல் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சரிவு தொடங்கிவிட்டது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வி தொடர்ந்தது.
‘மக்களை விட்டு மார்க்சிஸ்டுகள் விலகிப் போகிறார்கள்; அதன் விளைவை அனுபவிப்பார்கள்’ என்று முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி சொன்னது உண்மையாகிவிட்டது. இன்று கூட்டணி கட்சிகள் அதே கருத்தை சொல்ல தைரியம் பெற்றுள்ளன. ‘இடது முன்னணி தொண்டர்களின் ஆணவத்துக்கு மக்கள் தண்டனை கொடுத்துவிட்டனர்’ என்று ஒரு தலைவரும், ‘ஊழல் பெருகியதால் மக்கள் கோபம் அடைந்துள்ளனர்’ என்று இன்னொருவரும் பேட்டி கொடுக்கின்றனர். இதில் எந்த காரணமும் இல்லாமல், ‘போரடித்துவிட்டது, போதும் உங்கள் ஆட்சி’ என்ற எண்ணத்தில்கூட மேற்கு வங்க மக்கள் வாக்களித்திருக்கக் கூடும்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்திய அரசியலில் நீடிப்பது குறித்த கேள்விக்குறி விசுவரூபம் எடுத்து நிற்கிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப தங்களை புதுப்பித்துக் கொள்ளுமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். அதே சமயம், காங்கிரஸ் துணை இல்லாமல் மம்தா ஆட்சியை பிடிப்பது சிரமம். 25 நகராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காதது அதை உணர்த்துகிறது. நாடாளும் தேசிய கட்சி என்பதை காட்டி மம்தாவிடம் பேரம் பேசுவது கடினம் என்பதை காங்கிரசும் புரிந்து கொண்டிருக்கும்.


 மேஷம்:     
பெரியோரின் ஆசி கிட்டும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சிறப்பான நாள்.
 
ரிஷபம்:
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.
 
மிதுனம்:
கடந்த இரண்டு நாட்களாக கணவன்,மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மகிழ்ச்சி தங்கும் நாள்.
 
கடகம்:
சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.
 
சிம்மம்:
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர் கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
 
கன்னி:
பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை கண்டு மேலதிகாரி வியப்பார். புகழ், கௌரவம் கூடும் நாள்.
 
துலாம்:
புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். நட்பால் ஆதாயம் உண்டு. உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.
 
விருச்சிகம்:
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துபோகும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
 
தனுசு:
பேச்சில் முதிர்ச்சி தெரியும். சகோதர வகையில் நன்மை உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
 
மகரம்:
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
 
கும்பம்:
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் உங்களைப்பற்றி வதந்திகள் வரும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
 
மீனம்:
குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துபோகும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும்


 4.6.2010,    
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 21ம் நாள், வெள்ளிக் கிழமை,
தேய்பிறை. சப்தமி திதி மதியம் மணி 2.05 வரை; பிறகு அஷ்டமி திதி. மேல்நோக்குள்ள சதயம் நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு மணி 2.55 வரை; பிறகு, கீழ்நோக்குள்ள பூரட்டாதி நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோக நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 6.00 t0 9.00, மதியம் 1.00 to 3.00, மாலை 5.00 to 6.00, இரவு 8.00 to 10.00 மணி வரை.
ராகுகாலம்: 10.30 to 12.00
எமகண்டம்:3.00 to 4.30
 மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும் 
சந்திராஷ்டமம் :ஆயில்யம்,மகம் நட்சத்திரங்கள் 
மேற்கண்ட ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
பொதுப் பலன்:
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்க, வியாபாரம் தொடங்க, புது வேலையில் சேர, தாலிக்குப் பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று.


 லிபிய விமானம் விழுந்து நொறுங்கி 151 பேர் பலியான விபத்தில் ஒரு சிறுவன் மட்டும் உயிர் பிழைத்தான். ஆந்திராவில் வீடு இடிந்து குடும்பமே புதைந்தபோது ஒரு சிறுமி மட்டும் காயமின்றி தப்பினாள். தினந்தோறும் நடக்கும் சாலை விபத்துகளில் அம்மா, அப்பா இறந்து ‘அதிர்ஷ்டவசமாக’ உயிர் பிழைத்த குழந்தைகள் பற்றி செய்தி படிக்கிறோம். கலவரம், உள்நாட்டு போர், இயற்கை பேரழிவு போன்றவற்றிலும் இவ்வாறு நடக்கிறது. இந்த குழந்தைகள் எல்லாரும் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளா?
உயிர் பிழைத்த பிறகு இவர்களின் வாழ்க்கை எப்படி போகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆதரவற்ற இக்குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் அரசின் சமூக நல துறையும் தொண்டு நிறுவனங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. யுனிசெப் நிறுவனம் அதற்கு வழிகாட்டுகிறது. ஆனால், அரசு இதற்காக செலவிடும் தொகை குறைவு. ஒரு வேளை நன்றாக சாப்பிட மட்டுமே போதுமானது. ஏனைய செலவுகள்? வளரும் நாடுகளில் இது பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
அசுர வேகத்தில் பணக்கார நாடாக மாறிவரும் சீனா, அந்த வளர்ச்சியின் பலன்கள் எல்லா தரப்பு மக்களையும் எட்ட வேண்டும் என்பதில் இப்போது அக்கறை காட்ட தொடங்கியுள்ளது. மூன்று சதவீத மக்களிடம் செல்வம் குவிவதும், அதன் பலன்கள் 17 சதவீத மக்களுக்கு மட்டுமே கிடைப்பதும் ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி மேலிடம் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. அதன் பேரில் வளமையை பரவலாக்க திட்டங்கள் தயாரிக்க வல்லுனர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பின்னணியில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாத உதவி 50 யுவான், இந்திய மதிப்பில் 340 ரூபாய்  என்பதை 600 யுவானாக உயர்த்தியுள்ளது.
‘குழந்தை’ என்பது 18 வயது வரை. அப்படி அங்கே 32 கோடி இருக்கின்றன. அதில் ஒரு கோடி வறுமையில். பெண்ணாக பிறந்ததாலும், பெற்றோர் பிரிவதாலும், ஊனமாவதாலும் ஆண்டுக்கு லட்சம் குழந்தைகள் தெருவில் விடப்படுகின்றன. பிழைப்புக்காக நகரங்களுக்கு வந்த 3 கோடி குழந்தைகளும், நகருக்கு குடிபெயர்ந்த பெற்றோரால் கிராமங்களில் விடப்பட்ட 6 கோடி குழந்தைகளும் லிஸ்டில் சேர்கின்றன.
குழந்தைகள் நலனுக்கு செலவிடுவதை காட்டிலும் ஒரு அரசுக்கு சிறந்த முதலீடு வேறெதுவும் கிடையாது


 
 
 
 
 
மேஷம்:   
துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய் வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
 
ரிஷபம்:
நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். புதுத்தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.
 
மிதுனம்:
நண்பகல் வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.
 
கடகம்:
கணவன்,மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துபோகும். ஆடை, ஆபரணம் சேரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். நண்பகல் முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.
 
சிம்மம்:
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வழக்கு சாதகமாக திரும்பும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.
 
கன்னி:
குடும்பத்தில் உங்கள் கை ஒங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.
 
துலாம்:
மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.
 
விருச்சிகம்:
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தொட்டது துலங்கும் நாள்.
 
தனுசு:
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
 
மகரம்:
நண்பகல் வரை ராசிக்குள் சந்திரன் தொடர்ந்தாலும் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். லேசாக தலை வலிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். மாலைப் பொழுதிலிருந்து மனஉளைச்சல் நீங்கும் நாள்.
 
கும்பம்:
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். மருத்துவச் செலவுகள் ஏற்படும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். நண்பகல் முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
 
மீனம்:
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்பு கூடும் நாள்


 
3.6.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 20ம் நாள், வியாழக் கிழமை,
தேய்பிறை. சஷ்டி திதி மதியம் மணி 12.07 வரை; பிறகு சப்தமி திதி. சித்தயோகமுடைய அவிட்டம் நட்சத்திரம் நள்ளிரவு மணி 12.22 வரை; பிறகு, மரணயோகமுடைய சதயம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள மேல்நோக்கு நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 9.00 to 12.00, மாலை 4.00 to 7.00, இரவு 8.00 to 9.00 மணி வரை.
ராகுகாலம் :1.30 to 3.00
எமகண்டம் :6.00 to 7.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்:பூசம் ,ஆயில்யம் நட்சத்திரங்கள் 
மேற்கண்ட ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களையும்,புதிய முயற்சிகளையும் 
தவிர்க்கவும்.
பொதுப் பலன்:
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்க, வியாபாரம் தொடங்க, புது வேலையில் சேர, தாலிக்குப் பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று.



 3ஜி அலைவரிசை ஏலம்:
 சமீபத்தில் 3ஜி அலைவரிசை மொபைல் சேவைக்கான ஏலம் எடுத்த ஒன்பது நிறுவனங்களும், அதற்குரிய கட்டணத்தை செலுத்தி விட்டன. இதன் மூலம், அரசுக்கு 67 ஆயிரத்து 719 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது; இதனால், அரசின் நிதிப் பற்றாக்குறை 15 சதவீதம் குறைந்துள்ளது.
மொபைல் சேவையில், சமீபத்தில் மூன்றாம் தலைமுறை அலைவரிசை (3 ஜி) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மிக நவீன வசதிகளுடன் கூடிய மொபைல் போன் சேவைக்கு அனுமதி தர ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், ஏலம் விட்டபோது மதிப்பிட்டதை விட, இருமடங்கு தொகைக்கு முன்னணி நிறுவனங்கள் ஏலம் எடுத்தன. பாரதி, வோடபோன், ரிலையன்ஸ், ஏர்செல், டாடா, ஐடியா உட்பட ஏழு தனியார் நிறுவனங்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுத்தன.
3ஜி வசதிகள் என்னென்ன?
3ஜி ஏலம் எடுத்த நிறுவனங்களால் வாடிக்கையாளருக்கு கிடைக்கும் தொழில்நுட்ப வசதிகள் என்ன தெரியுமா?
மிக நவீன ஸ்மார்ட்போன் வசதிகள் கிடைக்கும். வீடியோ போன்கள் சகஜமாகி விடும்.
வினாடிக்கு 2 மெகாபைட் அளவில் மிக அதிவேக ஆடியோ, வீடியோ டவுன்லோடு கிடைக்கும்.
வீடியோ கான்பரன்சிங் வசதிகள் இன்னும் நவீனப்படுத்தப்படும்.
டேட்டா மூலமான சேவைகளும் நவீனப்படுத்தப் படும். 
 
தனிநபர் ஆண்டு வருமானம் 44,345.௦௦:
இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருமானம் 44 ஆயிரத்து 345 ரூபாயாக உயர்ந்துள்ளது; 2008 - 09 ஐ விட, கடந்த நிதியாண்டில் 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆண்டு தனி நபர் வருமானத்தை மாத வருமானமாக கணக்கிட்டால் 3,695 ரூபாயாக வரும். இந்த வருமானம் கூட இல்லாமல் பலர் இருக்கின்றனரே; அப்படியிருக்க இது எப்படி தனி நபர் வருமானமாகும் என்று நினைக்கலாம்.
தனி நபர் வருமானம், தேசிய அளவில் எல்லோரின் வருமானத்தை மொத்தமாக கணக்கிட்டு, அதை ஜனத்தொகையான 117 கோடியால் வகுத்து கணக்கிடப்படுகிறது. மத்திய அரசின் புள்ளியியல் துறை இதை ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடுகிறது. கடந்த 2008 & 09ல், தனிநபர் வருமானம் ரூ.40,141 ஆக இருந்தது. கடந்தாண்டு 43 ஆயிரத்து 749 ஆக உயரும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், அதையும் தாண்டி விட்டதற்கு காரணம், கிராமப்புற தொழிலாளர்களின் வருமானம் உயர்ந்ததுதான் . மத்திய அரசு அமல்படுத்தி வரும் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாள் கண்டிப்பாக வேலை உண்டு; ஒருநாள் வேலைக்கு 100 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இதுதான் தனிநபர் வருமானம் உயர காரணம் என்று தெரியவந்துள்ளது. 
 
மியூச்சுவல் பண்ட்:
செபி அங்கீகரித்த சான்றிதழை பெற்ற ஏஜென்ட்கள் மட்டுமே மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீட்டாளர்களை சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியமான ‘செபி’ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, செபியால் அமைக்கப்பட்டுள்ள தேசிய பங்கு மார்க்கெட் கல்வி நிறுவனத்தில் (என்ஐஎஸ்எம்) சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே இனி, மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீட்டாளர்களை சேர்க்க முடியும். பொய்யான லாபத்தைக் கூறி மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் மக்களை சேர்த்து நஷ்டம் அடையச் செய்வோரைத் தவிர்க்கவே இந்த விதிமுறை என்று செபி அறிவித்துள்ளது.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் தொடர்புடைய நபர், விநியோகஸ்தர், ஏஜென்ட் உட்பட யாரும் ஜூன் 1 முதல் என்ஐஎஸ்எம் சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே முதலீட்டாளர்களை திட்டங்களில் சேர்க்க முடியும். எனினும், இதற்கு முன் இந்திய மியூச்சுவல் பண்ட் கூட்டமைப்பால் ஆலோசகர்களாக தேர்வு பெற்றவர்கள் தொடர்ந்து முதலீட்டாளர்களை திட்டங்களில் சேர்க்கலாம் என்று செபி கூறியுள்ளது.
நிதி நிபுணர்கள் கூறுகையில், முதலீட்டாளர்களுக்கு தரமான சேவை அளிக்க இந்த விதிமுறை உதவும். மியூச்சுவல் பண்ட் ஏஜென்ட்களாக தகுதி பெறாமல் செயல்படுவோரை தடுக்க இது சரியான நடவடிக்கை என்று கூறினர். மியூச்சுவல் பண்ட்கள் பற்றி மக்களுக்கு ஆர்வம் ஏற்படுத்த செபி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
 
 பங்கு சந்தை நிலவரம்:
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் நேற்று 373 புள்ளிகள் சரிந்தது.
பொருளாதார மந்தநிலையில் இருந்து மீளும் வேகம் குறையும் என்ற அச்சத்தால் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் சரிவுடன் நேற்று தொடங்கின. அதைப் பின்தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளிலும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்றனர். சென்செக்ஸ் 373 புள்ளி சரிந்து 16,572ல் முடிந்தது. நிப்டி 116 புள்ளி சரிந்து 4,970 ஆனது. 
இன்றைய தினம் பங்கு சந்தைகள் ஊசலாட்டத்துடனே இருந்து வந்தன.
ஆனாலும் நல்ல GTP DATA ,இந்திய நிறுவனங்களின் Q4 RESULTS நன்றாக உள்ளது.
மற்றும் பருவமழை இந்த ஆண்டு நன்றாக இருக்கும் என்ற பல காரணங்களால் 
முதலீட்டார்கள் மத்தியில் நல்ல நம்பிக்கை ஏற்பட்டு பங்குசந்தைகள் உயர்வுடனே 
முடிந்தன. இன்றும் ஐரோப்பிய பங்குசந்தைகள் சரிவுடன் தொடங்கிய போதும் 
இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. இன்று இரவு அமெரிக்க பங்குசந்தைகள் 
 ஏற்றத்துடன் முடிந்தால்,நாளை நமது பங்கு சந்தைகள் நிபிட்டி 5100 வரை உயர 
வாய்ப்புள்ளது.அமெரிக்க பங்குசந்தைகள் பிளாட் ஆக முடிந்தால் நமது பங்குசந்தைகள் 
பிளாட் ஆக TRADE   ஆகும் .
 
 
ஏற்றுமதி வளர்ச்சி:
இந்தியாவில் இருந்து ரூ.79,336 கோடிக்கு ஏற்றுமதி செய்ததில் ஏற்றுமதி வளர்ச்சி வீதம் ஏப்ரலில் 36.2 சதவீதத்தை அடைந்தது.
கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதையொட்டி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் உயர்ந்து வருகிறது. 2008ல் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக ஏற்றுமதி பாதிப்படைந்தது. இந்தியாவில் 2009 நவம்பருக்கு பின் சீரான நிலை உருவாக ஆரம்பித்தது. கடந்த ஆண்டு ஏப்ரலில் ஏற்றுமதி ரூ.58,280 கோடிக்கு நடந்ததில் 30 சதவீத வளர்ச்சியை அடைந்தது.
 
 
 


 உகாண்டாவின் கம்பாலா நகரில் ஒரு மாநாடு தொடங்கியிருக்கிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எப்படி வலுப்படுத்துவது என்று அதில் ஆலோசனை நடக்கிறது. 10 நாள் நடக்கும் மாநாட்டில் 112 நாடுகள் சார்பில் அரசு பிரதிநிதிகளும், மனித உரிமை குழுக்களின் நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
நெதர்லாந்து நாட்டில் உள்ள தி ஹேக் நகரில் சர்வதேச நீதிமன்றம் அமைந்துள்ளது. போர் குற்றங்கள், ஒரு இனத்தை அழிக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் கொலைகள், மனித சமுதாயத்துக்கு தீங்கு ஏற்படுத்தும் செயல்கள் ஆகியவற்றை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. 140 நாடுகள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளன. இப்போது இத்தகைய குற்றங்கள் நடக்கும்போது உள்ளூர் அளவிலான தற்காலிக தீர்ப்பாயங்கள் அமைத்து விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், ஆக்கிரமிப்பு, அதிரடி முன்தாக்குதல் போன்ற நடவடிக்கைகளையும் குற்றங்களாக அறிவிப்பது குறித்து கம்பாலா மாநாடு விவாதிக்கும். ஒருவேளை அது ஏற்கப்படுமானால், பலம் வாய்ந்த பல நாட்டு அரசுகளும் தலைவர்களும் தளபதிகளும் ஹேக் கோர்ட்டில் ஆஜராகி கூண்டில் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆனால், எந்த நல்ல விஷயமும் சுலபத்தில் நடந்து விடுவதில்லை என்பதால் வல்லரசுகள் இப்போதைக்கு கவலை கொள்ளவில்லை.
இன அழிப்பு, போர் குற்றங்கள் உலகில் எங்காவது நடந்த வண்ணம் இருக்கின்றன. சென்ற நூற்றாண்டு ஆரம்பத்தில் ஒட்டமான் அரசு லட்சக்கணக்கான ஆர்மீனியர்களை கொன்றது. ஹிட்லரின் ஜெர்மன் அரசு வேட்டையாடி கொன்று குவித்த யூதர்களின் எண்ணிக்கை கோடிக்கு மேல். ஆப்ரிக்க நாடுகளை சுரண்ட ஆக்கிரமித்த வெள்ளையர் அரசுகள் சொந்த மண்ணின் மைந்தர்களான கறுப்பின மக்களை கொன்று குவித்தன. கம்போடியா, யூகோஸ்லாவியா, பாலஸ்தீன், ருவாண்டா என பரவலாக இக்குற்றங்கள் தொடர்ந்தன. நாஜி குற்றவாளிகள் தவிர ஏனையவற்றில் வல்லரசுகள் தலையிட்டு தடுக்கவும் இல்லை; பின்னர் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும் உதவவில்லை.
 முழு அளவில் செயல்படும் அமைப்பாக மாற இந்த மாநாடு உதவும் என ஐ.நா.செயலாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அது பலித்தால் மனித நாகரிகம் அடுத்த கட்டத்துக்கு செல்ல தகுதி பெறும்.


 
மேஷம்:
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
 
ரிஷபம்:
கணவன்,மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவு வார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
 
மிதுனம்:
சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப் படுவீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
 
கடகம்:
தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
 
சிம்மம்:
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சகோதரர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றி பெறும் நாள்.
 
கன்னி:
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். வருமானம் உயரும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.
 
துலாம்:
பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தி யாகும் நாள்.
 
விருச்சிகம்:
பேச்சில் கம்பீரம் பிறக்கும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக்கண்டு மேலதிகாரி வியப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.
 
தனுசு:
முகப்பொலிவு கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
 
மகரம்:
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.
 
கும்பம்:
உடன்பிறந்தவர்கள், உறவினர்களால் சங்கடங்கள் வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் வந்துபோகும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
 
மீனம்:
பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மனசாட்சிப் படி செயல்படும் நாள்.


 2.6.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 19ம் நாள், புதன் கிழமை,
தேய்பிறை. பஞ்சமி திதி காலை மணி 10.12 வரை; பிறகு சஷ்டி திதி. சித்தயோகமுடைய திருவோணம் நட்சத்திரம் இரவு மணி 9.49 வரை; பிறகு, மரணயோகமுடைய அவிட்டம் நட்சத்திரம். நேத்திரமுள்ள, ஜீவனற்ற மேல்நோக்கு நாள். சஷ்டி விரதம்.
நல்ல நேரம்:
காலை மணி 6.00 to 7.30, முற்பகல் 9.00 to 10.00, பிற்பகல் 11.30 to 3.00, மாலை 4.00 to 5.00, இரவு 7.00 to 10.00 மணி வரை. 
ராகுகாலம்:12.00 to 1.30
எமகண்டம்:7.30 to 9.00
மேற்கண்ட நேரங்களில் சுபக்காரியங்கள் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: புனர்பூசம்,பூசம் நட்சத்திரங்கள் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
பொதுப் பலன்:
திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, வங்கிகளில் சேமிப்பு கணக்குத் தொடங்க, வியாபாரம் தொடங்க, புது வேலையில் சேர, தாலிக்குப் பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று


 இனி, ஆண்களின் தாம்பத்யக் குறைபாடுக்கு வயாகராவைத் தேடிப் போக அவசியமிருக்காது. ஒருமுறை வாய் வழியாக இன்ஹேலரை உறிஞ்சினால் 10 நிமிடத்தில் ஆண்மைக்குறைவு பறந்து விடப் போகிறது.
இந்த அற்புத மருந்தை இங்கிலாந்தின் வில்ஷயர் நகரைச் சேர்ந்த வெக்சுரா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இன்ஹேலரில் அபோமோர்பைன் என்ற மருந்து, பவுடர் வடிவில் இருக்கும். தாம்பத்ய உறவுக்கு 10 நிமிடங்களுக்கு முன் அதை ஒரு ‘பப்’ எடுத்தால் போதும், ஜமாய்த்து விடலாம்.
இந்த இன்ஹேலரை 600 ஆண்களிடம் பயன்படுத்தச் செய்து பரிசோதிக்கப்பட்டது. வயாகரா உட்பட தாம்பத்ய குறைபாடுக்கான மற்ற மருந்துகளைவிட வேகமாகவும் சிறப்பாகவும் நிவாரணம் கிடைத்தது தெரிய வந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஆண்களின் தாம்பத்ய குறைபாட்டை நீக்க வயாகரா, சியாலிஸ், லிவிட்ரா ஆகிய மருந்துகள் வந்து பரபரப்பை ஏற்படுத்தின.
எனினும், அவை எதிர்பார்த்த அளவு ஆதரவைப் பெறவில்லை. பயன்படுத்தியவர்களில் 30 சதவீதத்தினருக்கு திருப்தி இல்லை. வயாகராவை 40 நிமிட நேரம் முன்னதாக பயன்படுத்த வேண்டியிருப்பது பலரை சலிப்படையச் செய்கிறது. மற்ற இரண்டு மருந்துகளில் நிவாரணம் போதவில்லை.
இந்நிலையில் அபோமோர்பின் இன்ஹேலரின் வருகை பலரை ஆவலுடன் எதிர்பார்க்கச் செய்கிறது. சுவாசக் கோளாறுக்கு பயன்படுத்தும் இன்ஹேலர் போலவே இதுவும் இருக்கும். அடுத்த கட்ட சோதனைகள் முடிந்து, சர்வதேச மருந்து கட்டுப்பாட்டு அனுமதி பெறப்பட்டதும் இந்த ‘சூப்பர்’ இன்ஹேலர் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது.


பங்குசந்தைகள் பற்றிய தகவல்களுக்கு:www.tradersfirst.blogspot.com
பங்குசந்தை நிலவரம்:
கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டெண் சராசரியாக 2.5 சதவீதம் உயர்ந்தது. இது 12 வாரங்களில் இல்லாத அளவாகும்.
கிரீஸ் நிதி நெருக்கடியால் கடந்த சில வாரங்களாக சர்வதேச பங்குச் சந்தைகள் சரிந்தன. இந்திய பங்குச் சந்தையிலும் இது எதிரொலித்தது.
கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 2.5 சதவீதம் உயர்ந்தது. வாரத்தின் துவக்கத்தில் சரிவு ஏற்பட்ட போதிலும், புதன்கிழமை முதல் மூன்று நாட்களாக தொடர்ந்து உயர்ந்தன. சராசரியாக 417 புள்ளிகள் (2.5%) உயர்ந்தது. இது கடந்த 12 வாரங்களில் இல்லாத உயர்வு. 
இன்று ஐரோபிய பங்குசந்தைகளின் திடீர் சரிவால் இந்திய பங்குசந்தைகள் 2.2% வரை 
சரிவை சந்தித்தன. இரவு அமெரிக்க பங்குசந்தைகளின் போக்கும், நாளை ஆசிய பங்கு
சந்தைகளின் போக்கையும் வைத்து தான் நாளை இந்திய பங்குசந்தைகளின் போக்கு 
அமையும். நிபிட்டி 4930 வலுவான தடை நிலையாக அமையும் .இந்தநிலை உடைபடும் 
போது இந்திய பங்குசந்தைகள் பெரும் சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது.
நிபிட்டி 4980 - 5130 - 5150 - 5180 RESISTANCE . 
பொருளாதார வளர்ச்சி:
கடந்த 2009 -2010 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்ட 7.2 சதவீதத்தைவிட அதிகம்.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) குறித்த புள்ளி விவரங்களை மத்திய புள்ளியியல் நிறுவனம் (சிஎஸ்ஓ) நேற்று வெளியிட்டது.
இதில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டில் பொருளாதாரம் 8.6 சதவீதம் வளர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் இது 5.8 சதவீதமாக இருந்தது. உற்பத்தித் துறை வளர்ச்சி 16.3 சதவீதம் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம்.
இதன்மூலம், கடந்த நிதியாண்டில் சராசரியாக 7.4 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் உயரும் என மத்திய அரசு ஏற்கனவே கணித்திருந்தது. அதை வளர்ச்சி தாண்டி விட்டது.
இதில் உற்பத்தித் துறை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இத்துறை சராசரியாக 10.8 சதவீதம் வளர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் பருவமழை போதுமான அளவுக்கு பெய்யாத போதிலும், வேளாண் துறை 0.2 சதவீதம் வளர்ந்துள்ளது. இது எதிர்பார்த்த அளவைவிட அதிகம். இத்துறையின் வளர்ச்சி 0.2 சதவீதம் சரியும் என கணிக்கப்பட்டிருந்தது.
மின்சாரம், எரிவாயு மற்றும் தண்ணீர் விநியோக வளர்ச்சி 6.5 சதவீதமாக உள்ளது. இது ஏற்கனவே மதிப்பிடப்பட்ட 8.2 சதவீதத்தைவிட குறைவு. நாட்டின் தனிநபர் சராசரி வருமானம் கடந்த நிதியாண்டில் ஆண்டுக்கு ரூ.44,345 ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் ரூ.40,141ஐ விட 10.5 சதவீதம் அதிகம்.
சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக, 2008&09 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக குறைந்தது. அதற்கு முந்தைய சில ஆண்டுகளில் 9 சதவீதத்தை ஒட்டி இருந்தது.
நிதி நெருக்கடியிலிருந்து உலக பொருளாதாரம் மீண்டு வருவதால், பொருளாதார வளர்ச்சி மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 8.5 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் மீண்டும் 9 சதவீதமாகவும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 
இந்த செய்தி பங்கு சந்தைகளை ஊக்குவிக்கும்.பங்குசந்தைகள் NIFTY 5200 தடை இல்லாமல் செல்ல உதவும்.


 உலகின் மிகப்பெரிய கம்பெனிகளில் ஒன்று வினோதமான தொழிலாளர் பிரச்னையை சந்தித்துள்ளது. அதற்கு என்ன தீர்வு காணப்படும் என்பதை அறிய பன்னாட்டு தொழிலகங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.
ஃபாக்ஸ் கான் என்பது நிறுவனத்தின் பெயர். தைவான் நாட்டின் ஹான் ஹய் என்ற தொழில் குழுமத்தின் எலக்ட்ரானிக் உற்பத்தி பிரிவு. ஐபாட், செல்போன், கம்ப்யூட்டர் போன்ற உயர் தொழில்நுட்ப மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் உலகின் நம்பர் ஒன் நிறுவனம். இந்தியா உட்பட ஏழெட்டு நாடுகளில் இயங்குகிறது. சீனாவில் இதன் ஆலைகளில் எட்டு லட்சம் பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். 90 சதவீதம் பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் பத்தாவது மாடி, 12வது மாடியில் இருந்து கீழே குதிப்பதுதான் கம்பெனி எதிர்நோக்கும் பிரச்னை. ஐந்து மாதத்தில் 14 பேர் இப்படி உயிரை விட்டிருக்கிறார்கள். விஷயம் மேலை நாடுகளிலும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
ஊருக்கு வெளியே ஆள் அரவம் இல்லாத பொட்டல் காட்டில் பல நூறு ஏக்கர் நிலத்தில் ஆலை அமைந்துள்ளது. சீருடை அணிந்து எட்டு மணி நேரம் இடைவிடாத வேலை. தொடர்ந்து நான்கு மணி நேரம் ஓவர்டைம். கட்டாயமில்லை, காசுக்காக. முடிந்ததும் பஸ்களில் ஏற்றி அடுக்கு மாடி ஹாஸ்டலுக்கு பயணம். படுக்கை, உணவு, சம்பளம், இருப்பிடம் எல்லாமே மற்ற நிறுவனங்களை காட்டிலும் சிறப்பானவை. இருந்தும் தற்கொலை ஏன் என்ற விவாதம் நாடெங்கும் நடக்கிறது. சமூக வாழ்க்கைக்கு இடமில்லாத ராணுவ பயிற்சி நிலையம் போன்ற சூழலே காரணம் என்று உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
‘நகரத்தில் ஆடம்பரமாக வாழலாம் என்ற எதிர்கால கனவோடு கிராமங்களை விட்டு கிளம்பி வரும் வாலிபர்கள், இந்த சூழ்நிலையில் தங்கள் கனவு ஒருநாளும் நனவாகாது என்பதை சீக்கிரமே புரிந்து கொள்கின்றனர். அருகருகே நின்று வேலை செய்தாலும், படுத்து உறங்கினாலும் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டு பேசி சிரித்து பழக முடியாத கெடுபிடி இவர்களை விரக்திக்கு தள்ளுகிறது’ என்கின்றனர் நிபுணர்கள்.
வாழ்க்கைச் செலவுக்காக உழைத்து சம்பாதித்த காலம் மாறி, ஓய்வில்லாத உழைப்பே வாழ்க்கையாகும்போது இந்த சோகம் தவிர்க்க முடியாதுதான்.


 மேஷம்:
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
 
ரிஷபம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
 
மிதுனம்:
சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும்.அலுவல கத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடு த்து போவது நல்லது. சிக்கனம் தேவைப்படும் நாள்.
 
கடகம்:
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
 
சிம்மம்:
பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.
 
கன்னி:
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து யோசி ப்பீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.
 
துலாம்:
நண்பர்கள் உதவுவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.
 
விருச்சிகம்:
சவால்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயமடைவீர். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.
தனுசு:
கடந்த இரண்டு நாட்களாக கணவன்& மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மகிழ்ச்சி தங்கும் நாள்.
 
மகரம்:
ராசிக்குள் சந்திரன் செல்வதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கணவன்,மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் புது முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உத்யோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வரக்கூடும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
கும்பம்:
எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும்.பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
 
மீனம்:
சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும். நன்மை கிட்டும் நாள்.


 
1.6.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 18ம் நாள், செவ்வாய்கிழமை,
தேய்பிறை. சதுர்த்தி திதி காலை மணி 8.27 வரை; பிறகு பஞ்சமி திதி. உத்திராடம் நட்சத்திரம் இரவு மணி 7.23 வரை; பிறகு திருவோணம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவன் நிறைந்த சித்தயோகமுடைய மேல்நோக்கு நாள்.
நல்ல நேரம்:  காலை மணி 8.00 to 9.00, மதியம் 12.00 to 1.00, இரவு 7.00 to 8.00 மணி வரை. 
ராகுகாலம்:3.00 to 4.30
எமகண்டம்:9.00 to 10.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்:திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரங்கள் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
பொதுப் பலன்:  குலதெய்வக் கோவிலுக்குச் செல்ல நன்று.


 இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். புகை பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் அபாயகரமானவை. புகை பிடிப்பவரைவிட அருகில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு அதிகம். புகை பிடிப்பதால் வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
பொது இடங்கள், அலுவலகங்கள், நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு புகையிலைப் பொருட்கள் விற்பதை தடுக்க வேண்டும். புகையிலை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.
“புகையிலைக்கு எதிரான சட்டங்களை மாவட்ட நிர்வாகம் உறுதியாக அமல்படுத்தினால், புகையிலை பொருட்களை பயன்படுத்துவது குறையும்”.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வாரணவாசி ஊராட்சியில் புகை மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து, கிராமசபை தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர், சுயவுதவிக் குழுவினர், இளைஞர்கள் ஒத்துழைப்புடன் புகையிலை பழக்கமே இல்லாத கிராமமாக மாற்றி, மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற்றுள்ளனர். அந்த வரிசையில் பல ஊராட்சிகள் அந்த தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளன. புகைபிடிப்பவர்கள் தாங்களாகவே மனம் மாறி புகையிலை பிடிப்பதை விட வேண்டும். அப்போதுதான் உடல் நலம் சீராகும். மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது.
புகை பிடிப்பதால் மற்றும் புகையை அடுத்தவர் சுவாசிப்பதால் ஏற்படும் நோய்கள்: மூளைக்கட்டி, நிணநீர் திசுக்கட்டி, சைனஸ், வாய் புற்றுநோய், நெஞ்சக நோய்கள், மார்பு புற்றுநோய், ஆஸ்துமா, மூச்சுக் குழல் நோய்கள், ரத்த புற்று நோய், இனப்பெருக்க பாதிப்புகள், தமணி தடிப்பு இறுக்கம்.
ஓட்டல், விடுதிகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், கூட்ட அரங்குகள், நூலகங்கள், விளையாட்டு அரங்குகள், வியாபார நிறுவனங்கள், கடைகள், மனமகிழ் மன்றங்கள், தேநீர் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், நீதிமன்ற வளாகங்கள், அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள் இங்கெல்லாம்
புகை பிடிக்க முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.புகை பழக்கத்தால் ஏற்படும் தீய
விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும்.



 மாதவிலக்கு நின்ற பெண்கள் எடை குறைந்து ஒல்லியாக சோயா பீன்ஸ் உதவும்.
மாதவிலக்கு நின்ற பெண்கள் பல்வேறு ஹார்மோன் கோளாறுகளால் குண்டாகி விடுகின்றனர். அவர்களது உடலில் கொலஸ்டிரால் அதிகரித்து மனஅழுத்தம், இதய நோய் பாதிப்புகளுக்கு வழி ஏற்படுத்துகிறது. 40ஐ கடந்த பெண்களின் உடலில் சோயா பீன்ஸ் செய்யும் மாற்றங்கள் குறித்து தீவிர ஆராய்ச்சி நடந்தது. மாதவிலக்கு நின்ற பெண்கள் உடல்நலனுக்கு சோயா பீன்ஸ் பல அற்புதங்களைச் செய்வது அதில் தெரிய வந்துள்ளது. 40ஐ தாண்டிய பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைந்து விடுவதே கொலஸ்டிரால் அதிகரிக்கக் காரணமாகிறது.
சோயா பீன்சில் ஈஸ்ட்ரோஜனுக்கு இணையான பொருட்கள் அதிகம் இருப்பதால், அது பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைவை ஈடுகட்டி விடும். அதனால், கொலஸ்டிரால் குறைந்து உடல் எடை சரியும். 
40ஐ கடந்த பெண்கள் சோயா உணவுகளை அதிகம் சேர்ப்பதால் எடை குறைவதுடன், அதிக கொலஸ்டிரால் காரணமாக ஏற்படக்கூடிய மனஅழுத்தம், இதய நோய்களையும் தவிர்க்க முடியும்.
“சோயா உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்த பெண்களிடம் எடுக்கப்பட்ட ஸ்கேன் சோதனையில், அவர்களது அடிவயிற்றுப் பகுதியில் சேர்ந்திருந்த கொழுப்பின் அளவு 7.5% குறைந்திருந்தது. சோயா உணவைச் சாப்பிடாத பெண்களிடம் இது 9% அதிகமாக இருந்தது”  
 
 


 
visit my blog for trading live tips:www.tradersfirst.blogspot.com
நாட்டின் பொருளாதார வளர்ச்சி:
கடந்த ஆண்டில் சர்வதேச நிதி நெருக்கடியின் தொடர்ச்சியாக நமது பொருளாதார வளர்ச்சி வேகம் சிறிது பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிதி ஆண்டில் அது முற்றிலுமாக மீண்டு விட்டது. சர்வதேச நெருக்கடியை நமது பொருளாதாரம் சிறப்பாக எதிர்கொண்டு வேகமாக வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. எனவே, அடுத்த நிதி ஆண்டில் 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விவரம் இன்று வெளியாகிறது. 2010&11ம் ஆண்டில் அது 8.5 சதவீதமாக இருக்கும் . 2011&12ம் ஆண்டில் அது 9 சதவீதமாக உயரும். 2009&10ம் ஆண்டில் வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என தெரிகிறது. எனினும், இறுதி முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை.
மருத்துவத் துறையில் கட்டமைப்பு வசதிகள், மனித வளம் இன்னும் பற்றாக்குறையாகவே நீடிக்கிறது. எனவே, மருத்துவத் துறையில் அரசு அதிக கவனம் செலுத்தும.


                                                1.35 லட்சம் கோடி நஷ்டம்:
பங்குச் சந்தையில் கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாக முன்னணி 10ல் 9 நிறுவன முதலீட்டாளர்களுக்கு ரூ.1.35 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஓஎன்ஜிசி பங்குகள் மட்டும் லாபத்தை வழங்கின.
கிரீஸ் நிதி நெருக்கடி, டாலர் மதிப்பு சர்வதேச சரிவு ஆகிய காரணங்களால் சர்வதேச பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. கடந்த ஒரு மாதத்தில் இந்திய பங்குச் சந்தைகளும் சராசரியாக 4 சதவீதம் வீழ்ச்சி கண்டன. சென்செக்ஸ் கடந்த ஏப்ரல் 28 முதல் மே 28 வரை ஒரு மாதத்தில் 640 புள்ளிகள் சரிந்தது. இதனால் சொத்து மதிப்பு அடிப்படையில் முன்னணி 10ல் 9 நிறுவன பங்குகளின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 880 கோடி சரிந்தது. இதில் அதிகபட்சமாக ஐடிசி நிறுவன சொத்து மதிப்பு ரூ.91,139 கோடி குறைந்தது.
எனினும், இரண்டாவது இடத்தில் உள்ள ஓஎன்ஜிசி பங்குகள் மட்டும் சராசரியாக ரூ.18,009 கோடி உயர்ந்தன. ஏப்ரல் 28ல் ரூ.2.23 லட்சம் கோடியாக இருந்த அதன் சொத்து மதிப்பு மே 28ல் ரூ.2.41 லட்சம் கோடியானது. அதாவது, கடந்த வெள்ளியன்று 9 சதவீத லாபத்துடன் ஒரு பங்கின் மதிப்பு ரூ.1,131 ஆக இருந்தது.
டாப் 10ல் முதல் இடத்தில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சொத்து மதிப்பு ரூ.269.71 கோடி சரிந்து ரூ.3.38 லட்சம் கோடியானது. என்டிபிசி சொத்து மதிப்பு ரூ.2,226 கோடி சரிந்து ரூ.1.65 லட்சம் கோடியாகவும், இன்போசிஸ் டெக்னாலஜிஸ் சொத்து மதிப்பு 1,799 கோடி சரிந்து ரூ.1.5 லட்சம் கோடியாகவும் இருந்தது.
ரூ.1.46 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் டிசிஎஸ் 5ம் இடத்திலும், எம்எம்டிசி ரூ.1.43 லட்சம் கோடி மதிப்புடன் 6ம் இடத்திலும் உள்ளன. 
                                     ஒரு நாளில் ரூ.1 லட்சம்:
ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டில் பணம் எடுக்கும் உச்சவரம்பை எச்டிஎப்சி வங்கி உயர்த்தியுள்ளது. ஒரு நாளில் ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்கலாம். இதுவரை அது ரூ.50,000 மட்டுமே. இதை மற்ற வங்கிகளும் விரைவில் அறிவிக்க உள்ளன.
முன்னணி தனியார் வங்கியான எச்டிஎப்சியின் இந்த புதிய வசதி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து, மற்ற தனியார் மற்றும் அரசு வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் உச்சவரம்பை ஓரிரு தினங்களில் உயர்த்தி அறிவிக்கும் என்று தெரிகிறது.
இதுபற்றி மற்றொரு தனியார் வங்கியின் உயரதிகாரி நேற்று கூறுகையில், “வங்கித் துறையில் நிலவும் கடும் போட்டி காரணமாக, மற்ற வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவது இயல்பு” என்றார்.
எச்டிஎப்சி வங்கி அறிவிப்பின்படி இம்பீரியா கோல்டு டெபிட் கார்டு வைத்துள்ளவர்கள் ஒரு நாளில் ரூ.1 லட்சம் வரை ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். இதுவரை அது ரூ.50,000 ஆக இருந்தது. அதேபோல, ஒரு நாளில் ஷாப்பிங் செய்வதற்கான உச்சவரம்பும் ரூ.1.25 லட்சமாக உயர்கிறது. ஈசி ஷாப் ரெகுலர் இன்டர்நேஷனல்/மேஸ்ட்ரோ/என்ஆர்ஓ டெபிட் கார்டு ஆகியவற்றின் உச்சவரம்பு ரூ.25,000ல் இருந்து ரூ.40,000 ஆகவும், ரூ.15,000ல் இருந்து ரூ.25,000 ஆகவும் உயர்கிறது. குழந்தைகள் வங்கிக் கணக்கின் ஏடிஎம் கார்டில் ஒரு நாளில் ரூ.1,500 ஆக இருந்த உச்சவரம்பு ரூ.2,500 ஆகிறது. பெண்களின் டெபிட் கார்டு உச்சவரம்பு ரூ.20,000ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படுகிறது. அவர்களது தினசரி ஷாப்பிங் உச்சவரம்பு ரூ.40,000 ஆகிறது. இது ரூ.10,000 அதிகம்.
இந்த மாற்றங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்டிஎப்சி வங்கி எஸ்எம்எஸ், போன், இமெயில் மூலம் தெரிவித்து வருகிறது. 
                                                                       தங்கம்:
இந்த மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்ததால் இறக்குமதி 39 சதவீதம் சரிந்துள்ளது. எனினும் பண்டிகை காலம் தொடங்க இருப்பதால் விற்பனை இனி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரீஸ் நிதி நெருக்கடியால் இந்த மாதம் உலக பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன. இதையடுத்து, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்ததால் சர்வதேச சந்தையில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது. சென்னையில் இதுவரை இல்லாத வகையில் ஒரு சவரன் ரூ.14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் விற்பனை குறைந்து, இறக்குமதியும் 39 சதவீதம் குறைந்துள்ளது.
 “இந்த மாதத்தில் 18 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இது 28.6 டன்னாக இருந்தது. கடுமையான விலை உயர்வே இதற்கு முக்கிய காரணம். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தாலோ அல்லது இப்போது உள்ள நிலையில் இருந்து பெரிய அளவில் இறங்காமல் போனாலோ இந்த ஆண்டில் இறக்குமதி 50 சதவீதம் வரை குறையும்”.
தங்கம் விலை கடுமையாக உயர்ந்ததால் இந்த ஆண்டில் அட்சய திருதியை நாளிலும் நகை விற்பனை சரிந்தது குறிப்பிடத்தக்கது.


 மங்களூர் விமான விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 72 லட்சம் ரூபாய்க்கு குறையாமல் நிவாரண நிதி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளின் நாசவேலையால் உயிர் இழந்த ரயில் பயணிகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் கொடுக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மனித உயிருக்கு விலை மதிப்பிட முடியாது. என்றாலும், அகாலம் மரணம் அடைந்தவர் யார், என்ன பணி, ஈட்டிக் கொண்டிருந்த வருமானம் எவ்வளவு, சம்பாதிக்கக்கூடிய காலத்தில் இன்னும் எவ்வளவு ஈட்டியிருப்பார் என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு அவரது இழப்பால் தவிக்கும் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு முடிவு செய்வது பெரும்பாலான நாடுகளில் நடைமுறையாக இருந்து வருகிறது. எனினும், இன்சூரன்ஸ் நிறுவனத்தை பொருத்தே இந்த ஏற்பாட்டின் உண்மையான பலன் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு கிடைக்கும்.
இந்தியாவில் இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சந்தா வசூலிப்பதில் காட்டும் ஆர்வத்தை பணம் பட்டுவாடா செய்வதில் காட்டுவதில்லை. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை கோர்ட் கோர்ட்டாக அலைக்கழித்து, நீதிபதியால் குட்டு வாங்கிய பிறகே காப்பீட்டு தொகையை வழங்குகின்றன. உயிரையோ பொருளையோ இன்சூர் செய்ய மக்கள் தயங்குவதற்கு இது முக்கிய காரணம்.
விமான பயணிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை சேர்ந்தது. அந்த நிறுவனம் விமானத்துக்கும் அதில் பயணம் செய்பவர்களுக்கும் கணிசமான அளவில் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்திவிடுவதால் அசம்பாவிதம் நேர்ந்த உடனே முதல் கட்டமாக ஒரு தொகையும் விசாரணை முடிவதற்குள் மீதி தொகையும் வாரிசுகளுக்கு கிடைத்துவிடுகிறது. ரயில், பஸ் பயணிகளுக்கு அந்த வாய்ப்பு இல்லை. போக்குவரத்து நிறுவனம், அரசு மனமிறங்கி கொடுப்பதுதான் கிடைக்கிறது.
உயிரிழப்பு ஈடு செய்ய முடியாதது என்றாலும், வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சி நின்றுவிடாது என தெரியும்போது, இழப்பால் வருந்தும் குடும்பம் நிலைகுலையாமல் தன்னை தேற்றிக் கொள்ள வழி பிறக்கும். இந்த அடிப்படையில் உயிர்களுக்கு இழப்பீடு தருவதில் பேதங்களை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 மேஷம்:
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பணவரவு திருப்தி தரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
 
ரிஷபம்:
சந்திராஷ்டமம் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடிய வில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர் கள். போராட்டமான நாள்.
 
மிதுனம்:
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
 
கடகம்:
பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
 
சிம்மம்:
குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்,பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கனவு நனவாகும் நாள்.
 
கன்னி:
எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர் கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச் சனை தீரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
 
துலாம்:
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.
 
விருச்சிகம்:
கணவன்,மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.
 
தனுசு:
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். கணுக்கால் வலிக்கும். சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் களை உதாசீனப்படுத்த வேண்டாம். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
 
மகரம்:
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.
 
கும்பம்:
நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவரை சந்திப்பீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். சொந்தபந்தங்கள் தேடி வரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். இனிமையான நாள்.
 
மீனம்:
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. வி.ஐ.பிகள் உதவுவார்கள். கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.


 31.5.2010,
விக்ருதி வருடம்,
வைகாசி மாதம் 17ம் நாள், திங்கட் கிழமை,
தேய்பிறை. திருதியை திதி காலை மணி 7.01 வரை; பிறகு சதுர்த்தி திதி. சித்தயோகமுடைய கீழ்நோக்குள்ள பூராடம் நட்சத்திரம் மாலை மணி 5.12 வரை; பிறகு, மரணயோகமுடைய மேல்நோக்குள்ள உத்திராடம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 6.00 TO 7.00, 9.00 to 10.30, மதியம் 1.00 to 2.00, மாலை 3.00 to 4.00, இரவு 6.00 to 9.00 மணி வரை.
ராகுகாலம் :7.30 to 9.00
எமகண்டம் :10.30 to 12.௦௦
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும் 
சந்திராஷ்டமம்: மிருகசிருஷம்,திருவாதிரை நட்சத்திரங்கள் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


 ரிசர்வ் வங்கி அட்வைஸ்:
வெளிநாட்டு, உள்நாட்டு பண மோசடி பேர்வழிகளிடம் முதலீட்டாளர்கள் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்கும்படி ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக, வங்கிகளையும் அது கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இ&மெயில் முகவரிகள், போன் எண்களைத் தெரிந்து கொள்ளும் பண மோசடி நிறுவனங்கள், மக்களை ஏமாற்றி வருவதாக புகார்கள் அதிகரித்துள்ளன. அதிர்ஷ்ட குலுக்கலில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தாங்களாக இ&மெயில் அனுப்புகின்றனர். எஸ்எம்எஸ், கடிதங்கள் வழியாகவும் இதுபோன்ற கவர்ச்சி வசனங்களை அனுப்புகின்றனர்.
கோடிக்கணக்கான ரூபாயைப் பெற பரிவர்த்தனைக் கட்டணம், பிராசசிங் கட்டணம், வரிகள், பணமாற்று கட்டணம் என்ற பல பெயர்களில் பரிசுப் பணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை கட்டுமாறு மோசடி நிறுவனங்கள், தனிநபர்கள் தெரிவிக்கின்றனர். அதை நம்பி லட்சக்கணக்கான பணத்தை பலர் இழந்துள்ளனர்.
மோசடி பேர்வழிகளில் பலர் ரிசர்வ் வங்கி கடிதப் பக்கங்களையும் (லெட்டர்ஹெட்), உயரதிகாரிகள் கையெழுத்தை போலியாகவும் இ&மெயிலில் அனுப்பி மக்களை நம்ப வைக்கின்றனர். ஏமாறுவோரிடம் குறிப்பிட்ட தொகையை வங்கிக் கிளையில் செலுத்தச் செய்கின்றனர். வெளிநாடுகளைச் சேர்ந்த மோசடி நிறுவனங்கள், தனிநபர் பெயரில் தொடங்கப்படும் இதுபோன்ற வங்கிக் கணக்குகளில் அப்பாவிகள் டெபாசிட் செய்யும் தொகையை உடனுக்குடன் எடுத்து, ஏமாற்றி விடுகின்றனர். இதுபோல ஏமாற்றும் நோக்கத்துடன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்படுவது தெரிய வந்துள்ளது. அந்த கணக்குகளில் நடைபெறும் பண பரிவர்த்தனை பற்றி கூடுதல் கவனம் செலுத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்குகளில் நம்நாட்டினர் யாரேனும் மக்களிடம் ஏமாற்றி வசூலித்த பணத்தை டெபாசிட் செய்வது அன்னியச் செலாவணி நிர்வாக சட்டம் 1999 மற்றும் பண மோசடி தடுப்பு சட்டத்தின்படி குற்றமாகும். இதுபோன்ற நபர்களிடம் வங்கிகள் எச்சரிக்கையாக இருப்பதுடன், உடனுக்குடன் புகார் அளித்து மக்கள் ஏமாறுவதைத் தடுக்க வேண்டும். 
 வங்கிகள் கணக்கில் 1   லட்சம் கோடி குறையும்:
மூன்றாம் தலைமுறை போன் சேவைக்கான ஏலத் தொகை, அட்வான்ஸ் வரி ஆகியவற்றுக்காக நிறுவனங்கள் அதிக பணம் எடுப்பதால் வங்கிகளின் இருப்பு திடீரென ரூ.1 லட்சம் கோடி குறைகிறது. அதை சமாளிக்க ரிசர்வ் வங்கி உதவ முன் வந்துள்ளது.
நாட்டின் முன்னணி போன் நிறுவனங்கள், 3ஜி தொழில்நுட்ப போன் சேவைக்கான ஏலம் எடுத்துள்ளன. அதன் மொத்த தொகை ரூ.67,000 கோடி. ஏலத் தொகையை நாளை மறுநாளுக்குள் (31ம் தேதி) செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தவிர, கம்பெனிகளின் அட்வான்ஸ் வரி செலுத்தவும் அதுவே கடைசி நாள்.
இதனால், இந்த வாரத்தில் பெரிய கம்பெனிகளின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.1 லட்சம் கோடி திரும்பப் பெறப்பட உள்ளது. இதை சமாளிக்க வங்கிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய ரிசர்வ் வங்கி உறுதி அளித்துள்ளது. 
போன் இணைப்பு எண்ணிக்கை 1.67 கோடியாக உயரும் :
ஏப்ரல் மாதத்தில் போன் இணைப்பு எண்ணிக்கை 1.67 கோடி உயர்ந்ததாக டிராய் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை மார்ச் இறுதியில் 62.13 கோடியாக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 1.67 கோடி உயர்ந்து, 63.8 கோடியானது. இதன் வளர்ச்சி வீதம் 2.7 சதவீதம். நாட்டின் மக்கள்தொகையில் 54.1 சதவீதத்தினரிடம் போன் உள்ளது. இதேபோல, ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ உட்பட செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை மார்ச்சில் 58 கோடியில் இருந்து, ஏப்ரலில் 60 கோடியாக உயர்ந்தது.


 எரிவதை உருவினால் கொதிப்பது அடங்கும் என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். எந்த பிரச்னைக்கும் பொருந்தக்கூடிய சூத்திரம் அது. சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய உயர்நிலை கல்வி வாரியத்துக்கு இது தெரிந்திருக்கிறது. வெள்ளியன்று வெளியான அதன் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்திய கல்வித்துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது.
மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் மாணவர்களிடம் பதற்றம் தணிந்துள்ளது. 91 முதல் 100 மார்க் வரை பெற்றிருந்தால் ஏ1 என்ற கிரேடு. 81 முதல் 90க்கு ஏ2. இதே பாணியில் பி1, பி2, சி1, சி2 என இறங்கி 33 முதல் 40 மார்க் வாங்கியவர்களுக்கு 1397904493 கிரேடு கிடைக்கிறது. ஏ1 ன் மதிப்பு 10 புள்ளிகள், 1397904493 க்கு 4. மொத்த பாடங்கள் 5. ஒவ்வொரு பாடத்துக்கும் கிடைத்த புள்ளிகளை கூட்டி ஐந்தால் வகுத்தால் சராசரி கிரேடு பாயின்ட் தெரியும். அதை ஒன்பதரையால் பெருக்கினால் வரும் சதவீதத்தின் அடிப்படையில், 11ம் வகுப்புக்கான அட்மிஷன் லிஸ்ட் தயாரிக்கப்படுகிறது.
ஒரு மார்க்கில் ரேங்க் இழப்பு என்ற டென்ஷன் இனி இல்லை. தன்னைவிட குறைவாக அல்லது அதிகமாக மார்க் வாங்கியவர்கள் யார் என்று பார்த்து அற்ப மகிழ்ச்சி அடையவோ பொறாமைப்படவோ யாருக்கும் வாய்ப்பில்லை. ‘100 வாங்கிய நானும் வெறும் 91 பெற்ற அவளும் ஒரே கிரேடு என்பது அநியாயம்’ என்று சிலர் குமுறலாம். ஏழு தொகுப்புகளில் எல்லோரும் அடங்கிவிடுவதால் பிரிவினை தோற்றம் மட்டுமல்ல, சிந்தனையும் காலப்போக்கில் காணாமல் போய்விடும். 33க்கு கீழே வாங்குபவர்களை இ1, இ2 என வகைப்படுத்துகின்றனர். ஃபெயிலானவர்கள் என சொல்லாமல், ‘அதிக மார்க் வாங்க திரும்பவும் தேர்வு எழுதும் தகுதி படைத்தவர்கள்’ என்று அவர்களை குறிப்பிடுவது கைதட்டி பாராட்ட தூண்டும் நாகரிகமான நடவடிக்கை. அப்படி 5 வாய்ப்பு தரப்படுமாம்.
போட்டி நிறைந்த உலகம் என்று சாக்கு சொல்லி குழந்தைகளை எந்திரங்களாக உருமாற்றி வருகிறோம். இந்த கொடுமைக்கு முடிவு வராதா என்று நல்லவர்கள் ஏங்கினர். அதை தீர்க்கும் முதல் நடவடிக்கையாக வந்திருக்கிறது மத்திய கல்வித் துறையின் சீர்திருத்தம். இனிமேல் 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை என்ற அறிவிப்பும் கவனத்துக்குரியது. மாநிலங்கள் பின்பற்ற முன்வந்தால் நாடு சிறக்கும்.

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget