undefined
undefined

                                                                       மதுரை ‌சி‌த்‌திரை ‌‌திரு‌‌விழா‌‌
மதுரை ‌சி‌த்‌திரை ‌‌திரு‌‌விழா‌‌வி‌ல் ப‌ச்சை‌ப் ப‌ட்டு உடு‌த்‌தி க‌ள்ளழக‌ர் ஆ‌ற்‌றி‌ல் இற‌ங்‌கிய ‌நிக‌ழ்‌ச்‌சியை காண ல‌ட்ச‌க்கண‌க்கான ப‌க்த‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.
அழக‌ர் கோ‌யி‌ல் உ‌ள்ள சு‌ந்தரராஜ‌ர் பெருமா‌ள் கோ‌யி‌லி‌ல் இரு‌ந்து புற‌ப்ப‌ட்ட க‌ள்ளழக‌ர், பள்ள‌கி‌ரி, ‌திரு‌ப்ப‌தி, சு‌ந்தராஜப‌ட்டி, போ‌ந்தபாளைய‌ம்‌, புதூ‌ர் ஆ‌கிய ம‌ண்டப படிக‌ளி‌‌ல் நே‌ற்று இரவு முழுவது‌ம் எழு‌‌ந்தரு‌ளினா‌ர்.
அதனை‌த் தொட‌ர்‌ந்து இ‌ன்று காலை மதுரை வ‌ந்தடை‌ந்த அழக‌ர், த‌ங்க கு‌‌திரை வாகன‌த்‌தி‌ல் எழு‌ந்து ப‌ச்சை‌ப் ப‌ட்டு அ‌ணி‌ந்து காலை 7.03 ம‌ணி‌க்கு வைகை ஆ‌ற்‌றி‌ல் இற‌ங்‌கினா‌ர்.
அ‌ப்போது கூடி‌யிரு‌ந்த ப‌க்த‌ர்க‌ள் எழு‌ப்‌பிய நமோ நாராயணா.... கோ‌வி‌ந்தா.... கோ‌வி‌ந்தா எ‌ன்று சரண முழ‌‌க்க‌ங்க‌ள் ‌வி‌ண்ணை எ‌ட்டின. ‌பி‌ன்ன‌ர் ப‌க்‌தி பரவச‌த்துட‌ன் அழகரை த‌ரிச‌ம் செ‌ய்தன‌ர்.
அழக‌ர் ஆ‌ற்‌றி‌ல் இற‌ங்கு‌ம் ‌‌நிக‌ழ்‌ச்‌சியை காண ‌விருதுநக‌ர், தே‌னி, ‌தி‌ண்டு‌க்க‌ல், நெ‌ல்லை, தூ‌த்து‌க்குடி ஆ‌கிய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌‌ல் ல‌ட்ச‌க்கண‌க்கான ப‌க்த‌ர்க‌ள் கு‌வி‌ந்‌திரு‌ந்தன‌ர்.
அழக‌ர் ப‌ச்சை ப‌ட்டு அ‌ணி‌ந்‌திரு‌ந்ததா‌ல் வரு‌ம் நா‌ட்க‌ளி‌ல் செ‌ல்வ‌ம் ம‌ற்று‌ம் வள‌ம் பெரு‌ம் எ‌ன்பது மதுரை சு‌ற்றுவ‌ட்டார ம‌க்க‌ளி‌ன் ந‌ம்‌பி‌க்‌கை. ‌திரு‌விழா‌வி‌ன் தொட‌ர்‌ச்‌சியாக ந‌ண்பக‌ல் 11 ம‌ணி‌க்கு ராமராய‌ர் ம‌ண்டப‌த்‌தி‌ல் அழகரு‌க்கு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்று‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி நடைபெற உ‌ள்ளது.




                                  HEART

இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் ஆபத்தை கைக்குத்தல் அரிசி எனப்படும் பாலீஷ் செய்யப்படாத அரிசி உணவுகள் தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் பிலெடல்பியாவில் உள்ளது டெம்பிள் பல்கலைக்கழகம். அதன் மருத்துவ பிரிவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, பாலீஷ் செய்யப்படாத அரிசியால் உடல்நலனுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டது. ஆன்டியோடென்சின் என்ற புரோட்டீன்தான் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. அதன் காரணமாக இதய நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
பாலீஷ் செய்யப்படாத அரிசியின் மேல் உள்ள மெல்லிய சிகப்புத் தோல் அதைக் கட்டுப்படுத்துவது ஆய்வில் தெரிய வந்தது. அரிசியின் மேலே படிந்திருக்கும் மெல்லிய தோல் சுபாலெரோன் எனப்படுகிறது. இது உமி எனப்படும் மேல் பகுதிக்கும் வெள்ளை நிற அரிசிக்கும் இடையே உள்ளது. அதில் விரைவான ஜீரண சக்திக்குத் தேவையான நாரிழை, உடல் நலனுக்கு முக்கியமான ஆலிகோசாச்ரைட் என்ற பொருள் உள்ளது. அந்த தோல் பகுதிதான் அரிசி உணவில் சத்தை அதிகரிக்கிறது.
அரிசியை பாலீஷ் செய்வதால் இந்த மெல்லிய தோல் நீக்கப்படுகிறது. அதில் செறிந்துள்ள சுபாலெரோன் இல்லாமல் போய் விடுவதால் அரிசி உணவின் முக்கிய சத்துக்கள் கிடைக்காமல் போகின்றன. எனவே, நெல்லில் இருந்து அரிசியைப் பிரிக்கும்போது பாதி பாலீஷ் போடுவது நல்லது. அது உடலுக்கு நன்மை தரும்.
இதுபற்றி ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த எகுசி கூறுகையில், ‘‘அரிசியின் மேல் உள்ள ஆன்டியோடென்சினை தனியாகப் பிரித்தெடுத்தோம். அதனுடன் எத்தனால், மெத்தனால், எதில் அசேடட் ஆகிய ரசாயனங்களைச் சேர்த்து அதன் விளைவுகளை ஆராய்ந்தோம். அது இதயப் பகுதியின் செல்களை மென்மையாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குவதை கண்டுபிடித்தோம். எனவே, பாலீஷ் செய்யப்படாத அல்லது பாதி பாலீஷ் செய்த அரிசி உணவுகளைச் சாப்பிடுவதால் இதய நோய், ரத்த அழுத்தத்தை தடுக்க முடியும்’’ என்றார்.







0 comments:

Powered by Blogger.
free counters

முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget