பாம்பாட்டி சித்தரின் அருள் வாக்கு


1. பொதுநலவாதிகள் சித்தர்கள்,சுயநலவாதிகள் மாந்திரிகர்கள்

2 .கடவுள் சிலைகள் திருட்டு போவதற்கு காரணம் சரியான பிரதிஷ்ட்டை இல்லாமையே
3 .பாவம் செய்து விட்டு பயந்து ஓடுவது மனிதர்கள் மட்டுமல்ல,ஆவிகளும் தான்.
4 .தெய்வத்தை பார்க்க தயார்படுத்தும் நிலை ஆன்மிகம்,தெய்வத்தை பார்த்த நிலை ஞானம்.
5 .பிரணவம் என்பது அண்ட முழு நெருப்பு .
6 .கஷ்டம் சுலபமாக வரும்.நல்லது கஷ்டப்பட்டு தான் வரும் .
7 .கணக்கில்லாதது புண்ணியம்,கணக்குடையது கடன்.
8 .இருப்பது சக்தி,நிருபிக்க கிடைப்பது சித்தி.
9 .அதிசயம் எங்கு அதிகமோ? அங்கு அழிவும் அதிகம் இது நிச்சயம்.
10 .மனித சாட்சி மனிதன் உள்ளவரை தான் இருக்கும்.கடவுள் சாட்சி என்றும் இருக்கும் .
11 .அறுபடை வீடுகளில் ஒன்று மண்ணுள் புதையுண்டு இருக்கின்றது.இந்து மகாசமுத்திரத்தின் ஒரு பகுதியில் இது இருக்கிறது.அக்கோயில் 2010 ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளியில் தோன்றும்.
12 .2010 ஆம் ஆண்டு இறுதிக்குள் பூமி முழுக்க 7 நிமிடங்களுக்கு நிலநடுக்கம் ஏற்படும் .அச்சமயம் ஆப்ரிக்கா இரண்டாக உடைந்து நடுவில் கடல் வரும்.அப்போது
ஒரு யோகியின் சரித்திரம் வெளியே வரும் .அதன் மூலம் உண்மையான யோகிகள் யார் என்று தெரியவரும்.
இது பாம்பாட்டி சித்தரின் அருள் வாக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னது.ஆனால் அவர் சொன்ன 2010 ஆம் ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அவர் சொன்ன நிலநடுக்கம் ஏற்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம் .



"நான் ஒரு புதுப்பிறவி எடுத்துள்ளது போலும், என்னுடைய முந்தைய முறைகளும் பழக்கங்களும் இனிப் பயன்படாது என்றும் தோன்றுகிறது. ஒரு காலத்தில் பயனாக இருந்தது இப்பொழுது ஒரு ஆயத்தமாகவே தோன்றுகிறது. இதுவரை நான் ஒன்றுமே செய்யவில்லை. நான் ஆன்மீக வாழ்வு வாழவில்லை, அவ்வாழ்விற்கு இட்டுச் செல்லும் பாதையில் நடக்க மட்டுமே தொடங்கியிருக்கிறேன் என்று உணர்கிறேன். எனக்கு ஒன்றுமே தெரியாது, எதையும் உருவாக்கும் திறன் எனக்கில்லை. எல்லா அனுபவங்களும் இனிமேல் தான் தொடங்க வேண்டியதிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
எனது பழைய வாழ்வெல்லாம் கழன்று போய்விட்டது, எனது பிழைகளுடன் எனது வெற்றிகளும் போய்விட்டன. அவையெல்லாம் போய் அந்த இடத்தில் இப்போதுதான் பிறந்த ஒரு குழந்தை, அதன் வாழ்வு முழுவதும் இனிமேல்தான் உருவாக்க வேண்டியதாகவுள்ள, கர்மம் ஒன்றும் ஒட்டாத, பயனடைந்து கொள்ளும்படியான அனுபவம் ஒன்றும் இல்லாத, ஆனால், அதே சமயம் சீர் செய்ய வேண்டிய பிழைகளும் இல்லாத ஒரு குழந்தை வந்துள்ளதுபோல் இருக்கிறது. எனது மூளை எல்லா அறிவும் எல்லா நிச்சயமும் நீங்கிப்போய் வெறுமையாய் சூன்யமாயிருக்கிறது.
அதேபோல் எல்லா வீணான சிந்தனைகளும் போய்விட்டன. எவ்வித எதிர்ப்பும் இன்றி இந்த நிலைக்கு என்னைச் சரணாகதி செய்துவிட்டால், அறியவோ புரிந்துகொள்ளவோ முயற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால், முற்றிலும் ஏதும் அறியாத வெள்ளையுள்ளம் கொண்ட குழந்தையாக இருக்க நான் சம்மதித்துவிட்டால், எனக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று உணர்கிறேன். நான் என்னை முற்றிலுமாக உமக்கும் கொடுத்துவிட்டு உமது சிந்தனை, உமது சித்தம் எவ்விதக் கோணலுக்கும் இடமின்றி சுதந்திரமாக எழுதப்படும்படியான, ஏதும் எழுதாத வெள்ளைத்தாளைப் போல் நான் ஆகிவிட வேண்டும் என்று எனக்குத் தெரிகிறது."
"பெரும் நன்றிப் பெருக்கு என் இதயத்தில் எழுகிறது. கடைசியாக இவ்வளவு காலமாகத் தேடிக்கொண்டிருந்த வாசலை அடைந்துவிட்டது போல் தோன்றுகிறது."
"ஏ பிரபு, வாசலை திட்டவட்டமாகக் கடக்கும் அளவிற்கு நான் தூய்மையும், நானற்ற தன்மையும் பெற்றும், உமது தெய்வீக அன்பால் உயிரூட்டப்பட்டும் இருக்குமாறு அருள்வீர்."
"இருளென்பதே இல்லாமல் எவ்வித வரையறையும் இல்லாமல் உமக்கே முற்றிலும் உரிமை ஆகிவிடுவதில் உள்ள ஆனந்தத்தை என்னவென்று கூறுவது!"


                               கடவுள்


ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று... ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.

துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது...
கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.
"கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?"
கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது...
"ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?"
"ஆமாம்" என்று நான் பதிலளித்தேன்.
"நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.
புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.
இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை" என்றார் கடவுள்.
"மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.
ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது. அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.
ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன" என்றார்.
"இத்தனை ஆண்டு கால‌த்‌தி‌ல் மூ‌ங்‌கி‌ல் விதை செத்துவிடவில்லை...




3 comments:

  1. Anonymous says:

    Good one.

  1. நன்றி அம்மு மேடம்

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget