உலக கோப்பை டி20 இரண்டாவது அரைஇறுதிப் போட்டிநேற்று இரவு செயிட் லூசியாவில் நடந்தது. மழை காரணமாக போட்டி சற்று தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கை தேர்வு செய்தது. கம்ரன் அக்மல், சல்மான்பட் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இவர் கள் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சுகளை அடித்து நொறுக்கி ரன்களை சேர்த்தனர்.

இந்த ஜோடி 82 ரன்களை சேர்த்து வலு வான அடித்தளம் அமைத் தது. அணியின் ஸ்கோர் 82 ஆக இருந்தபோது ஜான்சன் பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து கம்ரன் அக்மல் (50) அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து உமர் அக்மல் களமிறங்கினார். இவரும் அண்ணன் கம்ரன் அக்மலைப்போல நிலைத்து நின்று விளாசினார். இவர் கடைசி வரை அவுட் ஆகாமல் 56 ரன் எடுத்தார்.
20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது.இந்த உலககோப்பை போட்டியில் இதுவரை அதிகபட்ச ஸ்கோர் 195, அதை நெருங்கும் அளவுக்கு நேற்று பாகிஸ்தான் அடித்து விளையாடியது.
அதன்பிறகு ஆஸ்திரேலியா களமிறங்கியது.வெற்றிக்கு 192 ரன் தேவை என்ற அதிக பட்ச ஸ்கோரை எட்டவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. 2 வது பந்தில் வார்னர் டக் அவுட் ஆனார். 16 ரன்னில் வாட்சன் அவுட் ஆனார். அணியின் ஸ்கோர் 26 ஆக இருந்தபோது தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வெளியேறினர்.
இதனால் மதில்மேல் இருந்த வெற்றிப்பூனை பாகிஸ்தானை நோக்கி திரும்பியது. இந்த நிலையில் கேமருன் ஒயிட், மைக் ஹஸ்சிஇருவரும் ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ஒயிட் 43 ரன்னில்ஆட்டமிழந்தார்.
7 விக்கெட்டுகளை இழந்திருந்தஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பதோ கடைசி ஓவர் மட்டும்தான். 6 பந்தில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி இல்லாவிட்டால் தோல்வி என்ற நிலையில் மைக்கேல் ஹஸ்சியும், ஜான்சனும் களத்தில் இருந்தனர். சுழல்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் கடைசி ஓவரை வீச வந்தார்.
முதல் பந்தை சந்தி த்த ஜான்சன் ஒரு ரன் எடுத் தார். இன்னும் 5 பந்தில் 17 ரன் தேவை என்ற நிலையில் 2வது பந்தை சந்தித்த ஹஸ்சி அட்டகாசமாக ஒரு சிக்சர் அடித் தார். 3வது பந்தையும் அவர் சிக்சருக்கு விரட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கு கிலி பிடித்துக்கொண்டது.
4வது பந்தை பவுண்டரிக்கு அடித்து ஸ்கோரை சமநிலைக்கு கொண்டு வந்தார். இப்போது இரு அணிகளின் ஸ்கோரும் 191 என்ற நிலையில் இருந்தது. 2 பந்தில் ஒரே ஒரு ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில் அஜ்ம லின் 5&வது பந்தில் ஹஸ்சி மீண்டும் இந்த ஓவரின் மூன்றாவது சிக்சரை அடிக்க ஆஸ்திரேலியாத்ரில் வெற்றி பெற்றது.19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா 197 ரன்களை எடுத்தது.
இந்த போட்டித்தொடரில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஹஸ்சி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் 3 விக்கெட்டுகளையும், அப்துர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும்,சயீத் அஜ்மல், அப்ரிடி தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கடந்த உலக கோப்பை சாம்பியனான பாகிஸ் தான் அரை இறுதியில் அபாரமாக ஆடியும் தோல்வியை சந்தித்து இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. முன்னதாக முதல் அரை இறுதியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது
இறுதிபோட்டி: அரைஇறுதி போட்டிகள் நிறைவு பெற்று உள்ள நிலையில் இன்று போட்டிகள் கிடையாது. நாளை இரவு பார்படாசில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதுகிறது.


 குழந்தைச் செல்வம், காசு பணம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. தனம், புத்திரம் இந்த இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும். கிரகங்களிலேயே சுப கிரகம் குரு. இவர் இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர, இவரது பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரது பார்வை பல தோஷங்களை அகற்றிவிடும் வல்லமை கொண்டது. குரு 5, 7, 9 பார்வையில் பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும். ‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற ஜோதிட வாக்கு இவரை குறிப்பதுதான். சமூக அந்தஸ்து, ஆன்மீக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரிகள் கட்டுதல், வங்கி, அரசு கஜானா போன்ற இடங்களில் வேலை கிடைத்தல் நிதி, நீதித்துறையில் பணிபுரிவது, நீதிபதி, அரசு உயர்பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குரு பகவான்.
குருவின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: வியாழன்
தேதிகள்: 3, 12, 21, 30
நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
ராசி: தனுசு, மீனம். கடகத்தில் உச்சம்
நிறம்: மஞ்சள்
ரத்தினம்: புஷ்பராகம்
தானியம்: கொண்டைக்கடலை
ஆடை: தூய மஞ்சள்
குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். மேலும் ஜாதகத்தில் கேந்திர, கோணங்களில் இருப்பதும் சிறப்பானதாகும்.
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் எந்த வகையான யோகங்களை தருவார்?
மேஷ லக்னம்/ராசி & பாக்ய ஸ்தான பலன்கள், கல்வியில் உயர் நிலை, நிதி, நீதித்துறையில் பணிபுரியும் யோகம்.
மிதுன லக்னம்/ராசி & வெளிநாடு செல்லும் வாய்ப்பு, மனைவி வகையில் யோகம், தொழில் மூலம் உயர்வு.
கடக லக்னம்/ராசி & வெளிநாட்டு தொழில் யோகம். பள்ளி, கல்லூரிகள் அமைக்கும் யோகம்.
சிம்ம லக்னம்/ராசி & திடீர் அதிர்ஷ்டங்கள். பிள்ளைகளால் யோகம்.
கன்னி லக்னம்/ராசி & கல்வி, கலை ஆகியவற்றில் யோகம். வெளிநாட்டு தொடர்புகள் உண்டாகும்.
விருச்சிக லக்னம்/ராசி & வங்கி, நீதித்துறையில் உயர் பதவிகள். சொந்த நிறுவனம், பைனான்ஸ் கம்பெனி தொடங்கும் யோகம்.
தனுசு லக்னம்/ராசி & கல்வியில் மேன்மை, நிலபுலன்களால் யோகம்.
கும்ப லக்னம்/ராசி & சொல்லாற்றல், நிதி, நீதி போன்ற துறைகளில் யோகம்.
மீன லக்னம்/ராசி & கவுரவ பதவிகள். தொழில், வியாபாரத்தால் செல்வச் செழிப்பு, அந்தஸ்து, புகழ் உண்டாகும் யோகம்.
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் குரு நீச்சம் பெறாமலும் 6, 8, 12&ம் இடத்திலும் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமல் இருக்க வேண்டும்.
வழிபாடு, பரிகாரம்
கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாகும். அங்கு பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம். நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். அங்கும் வழிபாடு செய்யலாம். திருச்செந்தூரில் முருகப் பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார். எல்லா சிவன் கோயில்களிலும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தி வழிபடலாம்.
‘ஓம் விருஷப த்வஜாய வித்மஹே
க்ரூணி ஹஸ்தாய தீமஹி
தந்தோ குரு பிரசோதயாத்’
அல்லது
‘ஓம் குரு தேவாய வித்மஹே
பிரம்மானந்தாய தீமஹி
தந்நோ குரு பிரசோதயாத்’ என்ற குரு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம்பிம் சிவய வசி குரு தேவாய நம’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
வியாழக்கிழமை விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.


இந்திய திருநாட்டின் கலாச்சாரத்தை மற்ற நாடுகள் கண்டு ஆச்சரியப்படும் அளவிற்கும், மற்ற நாட்டு மக்கள் நம் நாட்டில் வாழ விருப்பபடுவதற்கும் நமது வாழ்க்கை நிலையே காரணம்.
   நம் நாட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள். பலதரப்பட்டமக்கள் வாழும் இந்நாட்டில்
ஸ்ரீ ராமனைபோல வாழும்ஆண்மகனுக்கு மற்றவர்கள் மத்தியில் மதிப்பும்,
மரியாதையும் உண்டு.ராமனைபோல வாழ்க்கை நடத்த நமதுவிதி ஒத்து
வந்தால் தான் நாம் வாழமுடியும்.நவகோள்களின் அருளால் மண்ணுலகம்
ஜீவிக்கும்.நமக்கு கிரகங்கள் சாதகமற்று இருந்தால் பல தீயபழக்கங்களிலும்,ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் செய்ய
நேரிடுகிறது .
   ஜோதிடரீதியாக,ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் அமைப்பு யாருக்கு உண்டாகிறது என பார்ப்போம்.
          ஜென்ம லக்னத்திற்கு 2 ஆம் வீட்டை வைத்து குடும்ப வாழ்க்கை பற்றியும் 7 ஆம் வீட்டை வைத்து மனைவி அல்லது கணவனை  பற்றி மிக தெளிவாக கூற முடியும்.
     ஜென்ம லக்னத்திற்கு 2 ,7 ஆம் வீடுகள் பலம் பெற்று அசுபர் சேர்க்கை இல்லாமல் இருந்தால் அமைதியான திருமணவாழ்க்கை உண்டாகிறது.
ஜென்ம லக்னத்திற்கு 2 ,7 க்கு அதிபதிகள் ஆட்சி,உச்சம்,திக் பலம் பெற்ற கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருந்துஅசுபர்  சேர்க்கை இல்லாமல் இருந்தால் ஒரு தாரம் உண்டாகிறது.அதுபோல் 2 ,7 க்கு அதிபதிகள் கேந்திர,திரிகோண ஸ்தானத்தில் இருந்தாலும் ஒரு தாரம் உண்டாகிறது.
    7 ஆம் அதிபதி சுபகிரகமாக இருந்து குரு சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருந்தால் ஒரு மனைவி ஏற்படுகிறது.குரு புதன் இணைந்து நவாம்சத்தில் சூரியன் வீடான சிம்மதிலோ,செவ்வாய் வீடான மேஷம்,விருச்சிகத்திலோ இருந்தால் ஒரு மனைவி மட்டுமே உண்டாகிறது.7ஆம்வீடு குருவீடாக இருந்து குரு ஏழாம்வீட்டை
பார்வை செய்தால்  ஒரு தாரம் உண்டாகிறது.புதன் ஜென்ம லக்னத்திற்கு
 7 ஆம் வீட்டில் இருந்து நவாம்சத்தில் குரு வீட்டில் அமைந்தாலும் ஒரு தாரம் உண்டாகிறது
         நவகிரகங்களில் முக்கிய கிரகமான சூரியன்,சந்திரன் இணைந்து ஜென்ம லக்னத்தில் இருந்தாலும் 6 ,12 ல் அமைந்து இருந்தாலும்  ஒரு தாரம் உண்டாகிறது.
அதுபோல சூரியன் 6 ,12 ம் வீட்டில் இருந்தால் ஒரு தாரம் உண்டாகிறது.
       களத்திரஸ்தானமான7ஆம்அதிபதிஅசுபகிரகசேர்க்கைஇன்றி நவாம்சத்தில்
சூரியன்வீடானசிம்மதிலோ,அல்லதுசெவ்வாய் வீடான  மேஷம்,
விருச்சிகத்திலோஅமைந்தால்  ஒருதாரம்உண்டாகிறது.அதுபோல
7ஆம்வீடுசிம்மம்,விருச்சிகம்,மீனமாக அமையும் ஜாதகருக்கு ஒரு தாரம் மட்டும் உண்டாகிறது.
        மேலும்  7 ஆம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பாவகிரகங்கள் இணைந்து அமைந்து இருப்பதும்,7 ஆம் அதிபதி ஒன்றுக்கு மேற்பட்ட பாவிகள் சேர்க்கை பெற்று இருப்பதும்,களத்திரகாரகன் சுக்கிரன் ஒன்றுக்கு மேற்பட்ட பாவிகள் சேர்க்கை பெற்று இருப்பதும் நல்லது அல்ல.கிரக சேர்க்கை எவ்வகையாக இருந்தாலும் பொன்னவன் என்று போற்றப்படும் குருபகவானின் பார்வை 7 ஆம் வீட்டிற்கோ,7 ஆம் அதிபதிக்கோ கிடைக்க பெற்றால் நல்லது உண்டாகிறது.
      வாசகர்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்தும்!
                                           அன்புடன் ஜோதிடர் மதி


அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை எதிர்த்து தனியார் பள்ளி நிர்வாகங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பள்ளிகளில் அநியாய கட்டணம் வசூலிப்பது நாடறிந்த விஷயம். தமிழகத்தில் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் நியாயமான கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளும் இருக்கக்கூடும். நிர்வாகத்துக்கு நியாயமாக தோன்றுவதெல்லாம் பெற்றோருக்கும் அப்படி தெரிவதில்லையே?
            கல்வி வியாபாரமாக மாறி ஆண்டுகள் ஓடிவிட்டன. எந்த வியாபாரத்திலும் குறிக்கோள் ஒன்றுதான். லாபம் ஈட்டுவது. மக்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், அநேக நிர்வாகங்கள் அதிகபட்ச லாபத்தை குறிக்கோளாக்கிக் கொண்டன. நன்கொடை வசூலிக்க விதித்த தடையை தாண்ட புதுப்புது வழிகளை கண்டுபிடித்தனர். சென்னையில் ரயிலேறி கன்னியாகுமரி சென்று, அங்கிருந்து பஸ் பிடித்து திருவனந்தபுரம் போய் ஜூ, கோயில், பீச் பார்த்துவிட்டு மறுநாள் திரும்பும் சுற்றுலாவுக்கு தலா ஆறாயிரம் கட்டணம் வசூலித்தால் பெற்றோர் மனம் குமுறாதா? அடிப்படை வசதிகள் செய்துதர தனித்தனியாக கட்டணம் வசூல் செய்த பள்ளிகள் பல உண்டு. அரசுக்கு வந்து குவியும் புகார்களை பட்டியலிட்டால் பள்ளி நிர்வாகிகளை மக்கள் வேறு மாதிரி பார்ப்பார்கள்.
இந்த நிலைக்கு வந்த பிறகே அரசு நடவடிக்கையில் இறங்கியது. தடாலடி உத்தரவு பிறப்பிக்கவில்லை. நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கட்டண நிர்ணயம் செய்துள்ளது. இந்த கட்டணம் வசூலித்தால் ஆசிரியர்களுக்கு 30 முதல் 40 ஆயிரம் சம்பளம் நாங்கள் எப்படி கொடுக்க முடியும் என்று சில நிர்வாகிகள் கவலைப்படுவதை பார்த்து ஆசிரிய சமுதாயம் வாயடைத்து நிற்கிறது. பெரும்பாலான தனியார் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் 15, 20 ஆயிரம் வாங்கிக் கொண்டு காலத்தை ஓட்டும் நிலையில், அதைவிட இரு மடங்கு தரும் பள்ளிகளை அடையாளம் காட்டினால் பாராட்டு விழா நடத்தலாம்.
      மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருக்கும் சூழலில், பள்ளிகளை திறக்க மாட்டோம் என நிர்வாகிகள் மிரட்டுவதில் நியாயம் இல்லை. குறைகளை சரி செய்துகொள்ள இது வாய்ப்பு. அதை விடுத்து, கட்டாய இலவச கல்வி சட்டம் அமுலுக்கு வந்துள்ள நேரத்தில் அரசுடன் மோதலுக்கு ஆயத்தமாவது நிர்வாகங்களுக்கு இழப்பாக முடியும். மாணவர்களின் படிப்பு பாழாவதை எந்த அரசும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.


(14.05.2010 முதல் 20 .05 .2010  வரை)
1, 10, 19, 28   தேதிகளில் பிறந்தவர்களுக்கு
சூரியன் சுயசாரத்தில் இருப்பதால் அரசு உதவிகள் அனுகூலமாக முடியும். சிகிச்சை பெற்று வந்தவர்கள் பூரண குணமடைவார்கள். சுக்கிர அம்சம் காரணமாக பொன், பொருள் சேர்க்கை உண்டு. மகன், மகள் வேலை சம்பந்தமாக ஆர்டர் கிடைக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள். உத்யோகம், வியாபாரம் சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட தேதி: 15, 19.
பணவரவு: திங்கள் கிழமை
பரிகாரம்: பைரவரை வழிபடலாம். நாய்க்கு உணவளிக்கலாம்.

2, 11, 20, 29   தேதிகளில் பிறந்தவர்களுக்கு
சந்திரன் உச்ச அம்சத்தில் இருப்பதால் சோர்வு நீங்கி உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். பிள்ளைகளிடம் பாசம் அதிகமாகும். மகள் கர்ப்ப சம்பந்தமாக நல்ல செய்தி வரும். தாய் உடல்நலம் சீராகும். உத்யோகத்தில் சில நெருடல்கள் வந்துபோகும். வியாபாரம் சீராக நடக்கும்.
அதிர்ஷ்ட தேதி: 18, 20.
பணவரவு: ஞாயிறுகிழமை
பரிகாரம்: அம்மன் கோயிலில் வழிபடலாம். ஏழை பெண் திருமணத்துக்கு உதவலாம்.

3, 12, 21, 30   தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எண் நாயகன் குரு ஆட்சி பலம் பெற்று இருப்பதால் தேக்க நிலை மாறும். மன பாரம் குறையும். மனைவியுடன் நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் உறவினர் வருகையால் வீடு களை கட்டும். கல்வி சம்பந்தமாக அலைச்சல், செலவு இருக்கும். மூட்டு, முதுகு வலி வந்து விலகும். அலுவலகத்தில் நல்ல மாற்றம் உண்டு. தொழில் லாபகரமாக நடக்கும்.
அதிர்ஷ்டதேதி: 16, 18.
பணவரவு: வியாழகிழமை
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். ஏழை கர்ப்பிணிகளுக்கு உதவலாம்.

4, 13, 22, 31   தேதிகளில் பிறந்தவர்களுக்கு
தடை, தடுமாற்றம் விலகும். பிள்ளைகள் புரிந்து நடப்பார்கள். குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். நிலம் சம்பந்தமான விஷயங்களை சற்று தள்ளிப்போடலாம். பெண்கள் எதிர்பார்த்த தகவல் வாரக் கடைசியில் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். சலுகைகள் எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.
அதிர்ஷ்ட தேதி: 18, 19.
பணவரவு: செவ்வாய்கிழமை
பரிகாரம்: சரபேஸ்வரரை வணங்கலாம். ஏழைகளுக்கு உதவலாம்.

5, 14, 23   தேதிகளில் பிறந்தவர்களுக்கு
ஏற்ற, இறக்கங்களுடன் கூடிய வாரம். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. அகலக்கால் வேண்டாம். மகனால் மகிழ்ச்சி, ஆதாயம் உண்டு. வேலை சம்பந்தமாக முக்கிய செய்தி வரும். பேரக் குழந்தைகள் வருகையால் வீடு களை கட்டும். உத்யோகத்தில் இடம் பொருள் அறிந்து பேசவும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் அகலும்.
அதிர்ஷ்ட தேதி: 15, 17.
பணவரவு: புதன் கிழமை
பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வழிபடலாம். தயிர்சாதம் தானம் தரலாம்.

6, 15, 24    தேதிகளில் பிறந்தவர்களுக்கு
ஆதாயம் நிறைந்த வாரம். பண சிக்கல்கள் தீரும். உயர்பதவியில் இருக்கும் நண்பர் உதவியுடன், நினைத்த காரியம் நடக்கும். வெளிநாட்டில் இருந்து சாதகமான தகவல் வரும். கோர்ட், வழக்கு சம்பந்தமாக பயணங்கள் வரும். தொண்டை, காது உபாதைகள் வந்து சரியாகும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். தொழிலில் தடைகள் விலகும்.
அதிர்ஷ்ட தேதி: 15, 19.
பணவரவு: சனிகிழமை
பரிகாரம்: ஸ்ரீராமானுஜரை வழிபடலாம். முதியோர் இல்லங்களுக்கு உதவலாம்.

7, 16, 25   தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எதிலும் அதிக முயற்சி, நிதானம் தேவை. கர்ப்பிணிகள் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். தாய் உடல்நலம் சீராகும். அவரால் முக்கிய உதவிகள் கிடைக்கும். மனைவியால் மகிழ்ச்சி, ஆதாயம் உண்டு. வேலை சம்பந்தமாக பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். தொழிலில் போட்டி, பொறாமைகள் குறையும்.
அதிர்ஷ்ட தேதி: 16, 20.
பணவரவு: வியாழகிழமை
பரிகாரம்: விநாயகர் வழிபாடு நலம் தரும். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவலாம்.

8, 17, 26    தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எண் நாயகன் சுப பலம் பெறுவதால் ஏற்றங்கள் உண்டு. கொடுக்கல் வாங்கலில் தடைகள் நீங்கும். பிள்ளைகள் அனுசரித்து நடப்பார்கள். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்யம் எதிர்பார்க்கலாம். உறவினர் வருகையால் விருந்து, சுற்றுலா என்று களை கட்டும். உத்யோகம், தொழிலில் மனக்கசப்புகள் மறைந்து சாதக சூழ்நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட தேதி: 17, 18.
பணவரவு: திங்கள்கிழமை
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நலம் தரும். காகத்துக்கு உணவிடலாம்.

9, 18, 27  தேதிகளில் பிறந்தவர்களுக்கு
செல்வாக்கு, சொல்வாக்கு கூடும். குடும்பத்தில் குதூகலம் அதிகமாகும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயம் முடிவுக்கு வரும். கல்வியால் செலவு ஏற்படும். சுப காரியத்துக்கு பிள்ளையார்சுழி போடுவீர்கள். வங்கி தகவல் சற்று தாமதமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த அம்சங்கள் கூடிவரும். வியாபாரம் செழிப்படையும்.
அதிர்ஷ்ட தேதி: 15, 18.
பணவரவு: புதன்கிழமை
பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கலாம். நோயாளிகளுக்கு உதவலாம்.


ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி சிறப்பு வாய்ந்தது. சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியைதான் அட்சய திருதியை எனப்படுகிறது. இந்த ஆண்டில் அட்சய திருதியை வரும் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அட்சயம் என்றால் வளருதல், அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்துகொண்டே இருத்தல். அட்சய பாத்திரம் என்பதுபோல. அன்றைய தினம் செய்கிற எந்த காரியமும் வளர்ந்துகொண்டே இருக்கும், வெற்றிகரமாக நடந்து முடியும் என்பது வேத வாக்கு.
         நாம் எது செய்தாலும் அதை ஒன்று பல மடங்காக பெருக்கி நமக்கு வளமும் நலமும் சேர்க்கும் திருநாள்தான் அட்சய திருதியை. இந்த நன்னாளில் தங்க நகை, ஆடை, அணிகலன்கள், ஆடம்பர பொருட்கள்தான் வாங்க வேண்டும் என்று இல்லை. அது சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட வழக்கம்தான். வீட்டுக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், மங்கள காரியங்களுக்கு தேவையான பொருட்கள், புதிய தொழில், வியாபாரத்துக்கு தேவையான கருவிகள், சாதனங்கள் என எது வேண்டுமானாலும் வாங்கலாம். அனைத்து சுப காரியங்களுக்கும் இந்த நன்னாளில் பிள்ளையார்சுழி போடலாம். புதுக்கணக்கு ஆரம்பித்தல், வங்கியில் பணம் செலுத்துதல், கல்வி துவக்கம், விரதம் ஆரம்பித்தல், புகழ்பெற்ற கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வருதல். சொந்த பந்தங்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினருக்கு விருந்து, பரிசு அளித்து உறவு பாராட்டுதல், கஷ்டப்படுவோருக்கு உதவிகள் செய்தல், அன்னதானம், தானதர்மங்கள் செய்தல் இன்னும் விசேஷம். இதில் முக்கியமாக நோயாளிகளுக்கு உதவுவது மிகச் சிறந்த தர்மமாக சொல்லப்பட்டுள்ளது. இல்லாதோர், இயலாதோருக்கு அவர்கள் தேவையறிந்து செய்யும் உதவிகள் உத்தமமான பலன்களை தரும். ‘பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்’ என்று சிறப்பித்து கூறுகிறது ரமண வாக்கியம்.
             அட்சய திருதியை பற்றிய புராணக் கதைகளும் உண்டு. பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பால்ய நண்பர் குலேசன் வறுமையில் வாடுகிறார். உதவிகள் கேட்டு வரலாம் என்று அவரை சந்திக்க ஒரு பிடி அவலை மேலாடையில் முடிந்துகொண்டு புறப்படுகிறார். அவரை நன்கு உபசரித்த கிருஷ்ண பரமாத்மா அவர் அன்போடு கொண்டுவந்த அவலை ஆசையோடு வாயில் எடுத்துப் போடுகிறார். நட்பு, அன்பு கலந்த அவலின் ருசியில் மகிழ்ந்துபோன கிருஷ்ணன், “அட்சயம் உண்டாகட்டும்” என்று வாழ்த்தி அனுப்புகிறார். இன்னொரு கவளம் அவல் தின்னவிடாமல் கிருஷ்ணனை தடுக்கிறாள் லட்சுமியின் அம்சமான ருக்மணி. காரணம் கேட்கிறார் கிருஷ்ணன். “அன்புடன் கொடுத்த அவலை ஒரு பிடி தின்றதற்கே குசேலனின் குடிசை வீட்டை மாட மாளிகையாக மாற்றி சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கிவிட்டீர்கள். இனியும் ஒரு பிடி தின்றால் லட்சுமி தேவியான நானே குலேசன் வீட்டுக்கு போய்விட வேண்டியதுதான்” என்கிறாள். குலேசன் கேட்காமலேயே அவருக்கு அனைத்து ஐஸ்வர்யங்களையும் செல்வச் செழிப்பையும் கொடுத்து அருளியவன் கண்ணன். வீடு திரும்பிய பிறகுதான் இவை அனைத்தும் குசேலனுக்கு தெரியவருகிறது. கண்ணனின் அன்பை நினைத்து வியக்கிறார். அவருக்கு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைத்த தினமே அட்சய திருதியை.
       கவுரவர்கள் சபையில் திரவுபதியின் துகிலுரியப்பட்டபோது ஆடைகளாக அள்ளி வழங்கி கண்ணன் அருள்பாலித்ததும் இந்த நாளே என்கிறது வியாச புராணம். அப்போதும் “அட்சய” என்று சொல்லியே ஆடைகளை பெருக்கெடுக்கச் செய்துள்ளார் கண்ணன். மதுரை மீனாட்சி  சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்த நாள், தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்தது, திரவுபதிக்கு சூரியன் அட்சய பாத்திரம் அளித்த நாள், சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள், ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள், சங்க நிதி, பத்ம நிதி ஆகிய நிதிகளை குபேரன் பெற்ற நாள், மகாவிஷ்ணுவின் வல மார்பினில் மகாலட்சுமி இடம்பிடித்த நாள் என அட்சய திருதியைக்கு பல்வேறு பெருமைகள் கூறப்படுகின்றன.
            ஸ்ரீ என்பது லட்சுமியை குறிக்கும், வைகுண்டத்தில் மகாலட்சுமியாக, பாற்கடலில் ஸ்ரீதேவியாக, இந்திரனுடைய இடத்தில் சுவர்க்க லட்சுமியாக, அரசர்களிடத்தில் ராஜலட்சுமியாக, குடும்பத்தில் கிரக லட்சுமியாக, வீரர்களிடத்தில் தைரிய லட்சுமியாக, பசுக்களிடத்தில் காமதேனுவாக சகல யோகங்களை வாரி வழங்கும் ஆதார சக்தியான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாக அட்சய திருதியை கருதப்படுகிறது. இந்நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது மிகவும் சிறப்பானது.

வேறு என்ன செய்யலாம்?
தீராத வியாதியுள்ளவர்கள் ஆல இலையை தலையணைக்கு அடியில் வைத்து தங்களுக்கு தெரிந்த மந்திரம் அல்லது நாம ஜெபம் செய்து படுப்பதால் வியாதிகள் தீரும். கைக்குழந்தை முதல் 6 வயது குழந்தைகள் படுக்கும் தலையணையின் அடியில் ஆல இலையை வைப்பதால் திருஷ்டி, பாலாரிஷ்ட தோஷங்கள் கழியும். சகல தடங்கல், தடைகள், இடர்ப்பாடுகள், எதிர்ப்புகளையும் அழித்து வளமும் நலமும் தரும் மிருத்யுஞ்ஜய மந்திர ஹோமத்தை வீட்டில் செய்யலாம். வாழ்வு வளம் பெற தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். ஆடை தானம் தருவதால் சுகபோக வாழ்வு கிட்டும், தயிர் சாதம் தானம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். இனிப்பு வழங்குவதால் திருமணத் தடை நீங்கும். அரிசி, பருப்பு, தானியங்கள் தருவதால் விபத்துக்கள் நேராமல் இறைவன் காத்தருளுவார். பசுக்கள், பட்சிகள், நாய்களுக்கு உணவளிப்பதால் மன அமைதி, செல்வ வளம் ஏற்படும். தர்ம குணம் மேலோங்கும்.


 பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, இந்த இடத்தில் ‘பொன்’ என்பது செல்வத்துக்கான அதிபதி குருவை குறிக்கும். ஜாதகத்தில் குருவின் பலம் இருப்பதைவிட புதன் பலமாக இருக்க வேண்டும் என்பதையே சூசகமாக குறிப்பிட்டுள்ளனர்.
கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதி புதன் கிரகம். எந்த ஒரு விஷயத்தையும் கண்ணால் பார்த்தவுடன் அதை கையால் செய்வதற்கு புதன் அனுக்ரகம் வேண்டும். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நன்கு படித்தவர்கள் கைநிறைய சம்பளம் வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம். நம் வாழ்க்கைக்கு அடிப்படையான கல்விச் செல்வத்தை வழங்குபவர் புதன். சொல்லாற்றல், மதிநுட்பம், சமயோஜித பேச்சு, வழக்குரைத்தல், கணக்கு, ஆடிட்டிங், பத்திரிகை, ஜோதிடம், வான சாஸ்திரம் ஆகிய துறைகளுக்கும் மூளை, நரம்பு மண்டலம் போன்ற மிக முக்கிய உறுப்புகளையும் கட்டுப்படுத்துபவர் புத பகவான்தான். அவர் அருள் இருந்தால் இத்துறைகளில் சிறந்து விளங்கலாம்.

புதனின் அம்சங்கள் (ஆதிக்கம்)

கிழமை: புதன்

தேதிகள்: 5, 14, 23.

நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி

ராசி: மிதுனத்தில் ஆட்சி & கன்னியில் உச்சம்

நிறம்: பச்சை

ரத்தினம்: பச்சை மரகதம்

தானியம்: பச்சைப்பயறு

ஆடை: பச்சை
புதனுக்கு உண்டான எண்கள் கொண்ட தேதிகள், நட்சத்திரம், ராசி ஆகியவற்றில் பிறந்தவர்கள் கல்வி, கலை, எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். மேலும் லக்னம், 2, 4, 5, 7, 9 போன்ற ஸ்தானங்களில் புதன் சுப பலம் பெற்றிருந்தால் புதன் அனுக்ரகம் நிச்சயம் உண்டு.
புதனுக்கு உண்டான எண்கள் கொண்ட தேதிகள், நட்சத்திரம், ராசி ஆகியவற்றில் பிறந்தவர்கள் கல்வி, கலை, எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். மேலும் லக்னம், 2, 4, 5, 7, 9 போன்ற ஸ்தானங்களில் புதன் சுப பலம் பெற்றிருந்தால் புதன் அனுக்ரகம் நிச்சயம் உண்டு.


பிறந்த லக்னமும் புதன் தரும் யோகமும்:
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் எந்த வகையான யோகங்களை தருவார்?
மேஷ லக்னம்/ராசி & புதன் முழு பலத்துடன் இருந்தால்தான் நல்ல யோகங்கள் கிடைக்கும். சகோதரர்களால் சாதகங்கள் உண்டு.
ரிஷப லக்னம்/ராசி & சொல்லாற்றல், எழுத்துத்துறை, கலை, இலக்கிய துறைகளில் வெற்றி, குழந்தைகளால் யோகம்.
மிதுன லக்னம்/ராசி & கல்வியில் உயர்வு. எல்லா கலைகளிலும் தேர்ச்சி அடையும் யோகம். நிலபுலன்கள், பூர்வீக சொத்துகளால் யோகம். கம்ப்யூட்டர் துறையில் சாதனை படைக்கும் வாய்ப்பு.
.
சிம்ம லக்னம்/ராசி & கலை, இலக்கியம், சொல்லாற்றல் போன்றவற்றில் யோகம்.


கன்னி லக்னம்/ராசி & கல்வி, கலை, வித்தைகள், கம்ப்யூட்டர், கணக்கு, பெரிய அளவிலான வணிக நிறுவனங்கள் மூலமாக அதிர்ஷ்டம்.

துலா லக்னம்/ராசி & கல்வி, ஆராய்ச்சி, பெரிய நிறுவனங்களை நிர்வகித்தல், பெரிய பதவிகள்.

தனுசு லக்னம்/ராசி & வெளிநாடு செல்லும் யோகம். ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் முதன்மை பெறும் வாய்ப்பு.

மகர லக்னம்/ராசி & சகல பாக்யங்களும் உண்டாகும். ஆராய்ச்சி துறைகளில் சாதனை படைப்பீர்கள்.

கும்ப லக்னம்/ராசி & எல்லா துறைகளிலும் ஏற்றம்.

மீன லக்னம்/ராசி & கல்வி, கேள்வி ஞானம் உள்பட சகல விஷயங்களிலும் சிறந்து விளங்குவீர்.

எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் புதன் நீச்சம் பெறாமலும், 6, 8, 12&ம் இடத்திலும் 6, 8, 12&ம் அதிபதிகளுடன் சேராமல் இருக்க வேண்டும்.

வழிபாடு, பரிகாரம்:
மதுரையில் மீனாட்சி அம்மன் புதனாகவே அருள்பாலிக்கிறார்.
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் இருக்கும் திருவெண்காடு புதன் தலமாகும். பிரம்ம வித்யாம்பாள் சமேத ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் அருள்பாலிக்கும் இத்திருத்தலத்தில் தனி சன்னதியில் புத பகவான் காட்சி தருகிறார்.
நவதிருப்பதிகளுள் திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும்.
‘ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்தோ புத பிரசோதயாத்’
 என்ற புத காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். ‘ஓம் மம் ஹ்ரி உம் சிவ புத தேவாய நம’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
பச்சைப் பயறு வேகவைத்து பசுமாட்டுக்கு வழங்கலாம். புத பகவானின் திருவருள் கிடைத்தால் கல்வியில் மாணவர்களுக்கு நாட்டம் ஏற்பட்டு அதிக மதிப்பெண்களை குவிப்பார்கள்.
                                                                                               அன்புடன் ஜோதிடர் மதி


மேஷம்: 

ராசிக்குசுகாதிபதிசந்திரன் இரண்டாம் இடத்தில் இருப்பதால்,கடந்த இரண்டுநாட்களாக
கணவன்,மனைவிக்குள்இருந்த கோபங்கள்  நீங்கும்.பணவரவு நன்றாக
 இருக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். தடைகள் உடைபடும் நாள். குடும்பத்தில் இனிமை தவழும்.

ரிஷபம்:
ராசிக்கு மூன்றாம் அதிபதி சந்திரன் ராசிக்குள்  செல்வதால் பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் எதிலும் நிதானித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வரும். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

மிதுனம்:
ராசிக்கு இரண்டாம் அதிபதி சந்திரன்,பனிரெண்டாம்  இடத்தில இருப்பதால்,கணவன்,
மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத பயணங்களும், செலவுகளும் வந்துபோகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும்.   போராடி வெல்லும் நாள்.

கடகம்:
ராசியாதிபதி சந்திரன் லாபத்தில் உச்சம் பெறுவதால்,சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். சிறப்பான நாள்.

சிம்மம்:
ராசிக்கு விரயாதிபதி ,பத்தாம்  இடத்தில இருப்பதால்கணவன்,மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் சில விரையங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.. உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

கன்னி:
ராசிக்கு லாபாதிபதி,ஒன்பதில்  கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

துலாம்:
ராசிக்கு பத்தாம் அதிபதி,எட்டில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.

விருச்சிகம்:
ராசிக்கு பாக்கியாதிபதி, ஏழாம் இடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். பிரார்த்தனைகள் நிறைவேறும் நாள்.

தனுசு:
ராசிக்கு எட்டுக்குடையோன்,ஆறில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மகரம்:
ராசிக்கு ஏழுகுடையோன்,ஐந்தில்  வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்,பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

கும்பம்:
ராசிக்கு ஆறுகுடையோன்,நான்காம் இடத்தில் சகோதர வகையில் நன்மை உண்டு. பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. உங்கள் உடல் நலத்தையும் கவனித்து கொள்ளவும்.வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்:
ராசிக்கு ஐந்தாம் அதிபதி,மூன்றில் பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.
                                                                                      -- அன்புடன் ஜோதிடர் மதி


ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார்.அவரை நாடி பலரும்,அவரது உபதேச
மொழிகளை பெற்று இன்புற்று வாழ்ந்தனர்.
   அதே ஊரில் ஒரு கருமியான செல்வந்தன் இருந்தான்.அவனுக்கும்
மோட்சம்,முக்தி போன்ற சில வார்த்தைகள் தெரியும்.மோட்சம் கிடைக்க
செலவில்லாத வழியை காண எண்ணியிருந்த அவனுக்கு,உள்ளூர் துறவியின் ஞாபகம் வந்தது.ஒரு நல்லநாள் பார்த்து அந்த கஞ்சமகாபிரபு
அத்துறவியை சென்று பார்த்து வணங்கினான்.
   துறவியிடம் "அய்யா எனக்கு மோட்சம் கிடைக்க வழி சொல்ல வேண்டும்" என்றான்.
    துறவியும், "சாஸ்திரங்கள் தெரிவிக்கிறபடி தர்ம மார்க்கத்தை கடைபிடிக்க
வேண்டும்.யாராவது ஏழை பசியோடு வந்தால் அன்னமிடவேண்டும்.
மேலும் தான தர்மங்கள் செய்து வந்தால் மோட்சம் கிட்டும் என்றார் .
    துறவியை நமஸ்கரித்து விட்டு அக்கஞ்சன் வீடு திரும்பினான்.துறவியின் 
வார்த்தைகளை நினைவுபடுத்தி பார்த்தான்.தினம் தினம் தரித்திரர்களுக்கு
அள்ளி கொடுத்தால் தமக்கு ஒன்றுமில்லாமல் என்று நினைத்து ஒரு முடிவிற்கு வந்தான்.
    தினம் தினம் யாராவது ஒரு பிச்சைகாரனுக்கு ஒரு கைப்பிடி அரிசி தானம் செய்தான்.ஒருநாள் அந்த துறவியை மீண்டும் காண சென்றான் கஞ்சன்.
   துறவியும் "ஏனப்பா நீ தினமும் நல்ல முறையில் தானதர்மம் செய்கிறாயா"? என்று கேட்டார் அவனிடம், "ஆமாம் தினமும் யாராவது
ஒருவருக்கு ஒருகைப்பிடி அரிசி தருகிறேன்" என்று பெருமையாக சொன்னான்.
  துறவி பதில் எதுவும் பேசாமல்,அவர் பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின் 
அடிபாகத்தை தன் கைவிரல் நகத்தால் கீரலானார்.
 இது தொடரவே... கஞ்சன் பொறுக்க முடியாமல் துறவியிடம் "அய்யா தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறிர்கள்?" என்றான்.
    அவரும் "என் கை நகத்தால் இம்மரத்தை வெட்டி சாய்க்க போகிறேன்"
என்றார்.அக்கஞ்சனும் "அய்யா அது எப்படி சாத்தியம்? ஒரு பிரமாண்ட
மரத்தை நகத்தால் கீறி சாய்க்க எப்படி முடியும்?கோடாளியினால் தான்
வெட்டி சாய்க்க முடியும்" என்று பெருமையாக பேசினான்.
    உடனே துறவி "ஒரு நாளைக்கு வெறும் ஒரு கைப்பிடி அரிசியை தானம்
செய்து விட்டு நீ மோட்சம் பெற முடியும் என்று எண்ணும் போது,இதுவும்
சாத்தியம் தான்" என்றார்.
 வந்த கஞ்சனுக்கு புத்தி தெளிந்தது.அன்று முதல் தனக்கென்று எதையும்
வைத்து கொள்ளாமல் தானதர்மங்கள் செய்ததோடு.. ஆன்மிக சாதனைகளை சிரத்தையுடன் செய்து வரலானான்.
                                                                                                               --அன்புடன் மீனா


மனைவி அமைவதெல்லாம்... என்ற பாடலுக்கேற்ப, அன்பான மனைவி அமைந்தால், பக்காவாத நோய் ஆபத்து குறையும் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஷீபா மெடிகல் சென்டர் பேராசிரியர் யூரி கோல்ட்போர்ட் தலைமையில், இல்லற வாழ்வுக்கும் பக்கவாத நோய் பாதிப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடந்தது. நடுத்தர வயதுள்ள 10,059 இஸ்ரேல் அரசு ஊழியர்கள் ஆய்வில் பங்கேற்றனர். 34 ஆண்டுகள் (1963 முதல் 1997) கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
நாட்டின் இறப்பு பதிவேடு மற்றும் பல்வேறு மருத்துவ ஆய்வக அறிக்கைகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில், பக்கவாத நோயால் இறந்தவர்களில் 64 சதவீதம் பேர் திருமணமாகாத ஆண் மற்றும் அன்பான மனைவி அமையாத ஆண்கள் என்பது தெரிய வந்தது.
இல்லற வாழ்க்கையை இன்பமுடன் எதிர்கொண்டவர்களுக்கு இந்த நோய் தாக்குவதற்கான ஆபத்து குறைந்திருந்தது.
‘‘பக்கவாத நோய்க்கான காரணம் குறித்து ஏற்கனவே அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவும் இதே கருத்தைத்தான் பிரதிபலித்தது.
“வாழ்க்கைத் துணையின் அரவணைப்பால் நோய் ஆபத்து குறைகிறது. மேலும் சத்தான உணவுப் பொருட்களை வழங்குவது, உடல் நலம் பாதிக்கப்படும்போது உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள உதவுவது, பரிவுடன் கவனிப்பது ஆகியவற்றில் வாழ்க்கைத் துணைவர் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதும் இதற்கு முக்கிய காரணம்’’ என அமெரிக்காவின் சவுத் கரோலினா மருத்துவ பல்கலைக்கழக டாக்டர் டேனியல் லேக்லேண்ட் தெரிவித்தார்.


மெக்சிகோ கடல் பகுதியில் எண்ணெய் கிணறு இடிந்து மூழ்கியதால் நீரில் பரவிய எண்ணெயை உறிஞ்சி அகற்ற அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் முடி தானம் செய்கின்றனர் மக்கள்.

கல்ப் ஆப் மெக்சிகோ பகுதியில் உள்ள எண்ணெய் கிணறு இடிந்து கடலில் மூழ்கியது. அதனால், அமெரிக்கா, மெக்சிகோ கடல் பகுதிகளில் எண்ணெய் பரவி வருகிறது. கடல் நீர் மாசுபட்டு அரிய உயிரினங்கள் இறக்கின்றன. கடலில் கலந்த எண்ணெயை அகற்ற அமெரிக்க, மெக்சிகோ படையினர் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே, கடலில் பரவிய எண்ணெய் இப்போது அமெரிக்காவின் லூசியானா கடற்கரையை நெருங்கியுள்ளது. அவற்றை அகற்ற ஏராளமான பிரஷ்கள், உறிஞ்சும் பொருட்கள் தேவைப்படுகின்றன. அவற்றை சேகரித்து அரசுக்கு உதவுவதில் மேட்டர் ஆப் டிரஸ்ட் என்ற அறக்கட்டளை தீவிரம் காட்டி வருகிறது.
எண்ணெயை அதிகளவில் உறிஞ்சுவதற்கு பிரமாண்ட குஷன்கள் தயாரிக்க சலூன்களில் சேரும் தலைமுடியை அந்த அறக்கட்டளை சேகரிக்கிறது. இதுபற்றி அறக்கட்டளையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பிரான்ஸ், இங்கிலாந்து, பிரேசில், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் இருந்து தங்கள் தலைமுடியை அளிக்க ஏராளமான மக்களும், சலூன்களும் விருப்பம் தெரிவித்துள்ளன. செல்லப் பிராணிகளின் ரோமமும் சேகரிக்கிறோம். இதுவரை 3.7 லட்சம் சலூன்கள், 1 லட்சம் செல்லப் பிராணி நிலையங்களிடம் இருந்து ரோமங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றார்.
அமெரிக்காவின் செல்லப் பிராணிகள் நிறுவனமான பெட்கோவும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது.
அதன் செய்தித் தொடர்பாளர் ப்ரூக் சைமன் கூறுகையில், “எங்களது 1,000 கடைகளில் உள்ள பிராணிகளிடம் இருந்து தினமும் 1 டன் ரோமங்களை அனுப்ப முடியும். இதுவரை மேட்டர் ஆப் டிரஸ்ட் அமைப்பும் 2.04 லட்சம் கிலோ தலைமுடி சேர்ந்துள்ளது. எண்ணெயை பத்திரமாக அகற்றி, சுற்றுச்சூழலை பாதுகாக்க தலைமுடியைத் தர நிமிடத்துக்கு 50 பேர் முன்வருகின்றனர்” என்றார்.
மக்களின் பொதுநலன் எண்ணத்தை என்னவென்று சொல்வது?


 தோல்வி யாருக்கும் பிடிக்காது. தோற்றவனையும் பிடிக்காது. டோனிக்கு இன்று அந்த நிலை. வெற்றிகளை குவித்தபோது அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய அதே கூட்டம் இப்போது ரத்தம் குடிக்க கூச்சலிடுகிறது.
எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்க முடியாது. இருந்தால் ஆட்டத்தில் ஏதோ கோளாறு என்று அர்த்தம். சறுக்கல், வீழ்ச்சி, அடிகள் அடுத்து வரக்கூடிய வெற்றிக்கு சுவை கூட்டும். முழு திறமை காட்டி போராடியும் வெற்றி கைநழுவினால், எதிராளியை கைகுலுக்கி பாராட்டி களத்தை விட்டு வெளியேறுவதே நாகரிகம். ஆனால், இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடவில்லை. மந்திரித்துவிட்ட ஆடுகள் போல செயலிழந்து தடுமாறினார்கள்.
ஐ.பி.எல் போட்டிகளில் அபாரமாக ஆடியவர்கள் பூனையை கண்ட எலியாக பவுன்சர் பந்துவீச்சுக்கு சரண் அடைந்தனர். பவுலர்கள் ரன் வழங்கும் வள்ளல்களாக அவதாரம் எடுத்தனர். ஓவருக்கு 6 ரன்னுக்கு மேல் கொடுத்து அதில் முதலிடம் பிடித்தார் ஹர்பஜன். களத்தில் நின்ற சகாக்கள் துணையின்றி அவர் சாதிக்கவில்லை என்பது வேறு விஷயம். எவரிடமும் வேகம் இல்லை. தலைமைப் பண்புக்கு உதாரணமாக பேசப்பட்ட கேப்டன் டோனி அடுத்தடுத்து தப்பான முடிவுகள் எடுத்தார். விளைவு, சர்வதேச போட்டிகளில் டோனி இதுவரை எதிர்கொள்ளாத பெரும் தோல்வி.
விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்று கூறி தப்பவில்லை அவர். ஐ.பி.எல் போட்டிகள் முடிந்த பிறகு நடக்கும் இரவு விருந்துகளால் வீரர்கள் சோர்ந்து விட்டார்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். உண்மை பேசினால் ஊர் சும்மா விடுமா? டோனியை முட்டாள் என்றும் அவர் சொன்ன காரணம் அபத்தம் என்றும் முன்னாள் வீரர்கள் பாய்ந்திருக்கிறார்கள். பேரழகிகளோடு கேளிக்கை விருந்தில் பங்கேற்றால் எத்தனை மணிக்கு எந்த நிலையில் தூக்கம் பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். மட்டை பிடித்தும் பந்து போட்டும் 20 ஓவரில் இழந்ததை காட்டிலும் அதிகமான சக்தி அதில் வீணாகும். பார்ட்டி பக்கமே தலைகாட்டாத ஆஸ்திரேலிய வீரர்களை கேட்டால் புள்ளி விவரத்தோடு விளக்குவார்கள். மனைவியுடன் தங்கவே அவர்களுக்கு அனுமதியில்லை. கிரிக்கெட் போர்டு கவனிக்க வேண்டும். இந்த விளையாட்டுடன் உறவை துண்டித்தால் கிரிக்கெட் பிழைக்க வழியிருக்கிறது.


ஐ.பி.எல். போட்டியின் போது நடந்த இரவு விருந்துகளில் வீரர்கள் கலந்து கொண்டதும், பயண களைப்புமே தோல்விக்கு காரணம் என இந்திய அணியின் கேப்டன் டோனி கூறிய கருத்துக்கு கிரிக்கெட் வாரியமும், முன்னாள் வீரர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

உலக கோப்பை டி20ல் இந்திய அணி அரை இறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியதால், ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சூப்பர் 8 சுற்றில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களிலும் தோற்ற இந்திய அணிக்கு முன் னாள் வீரர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அணியுடனான கடைசி சூப்பர் 8 லீக் ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியாவது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி கடைசி பந்தில் சிக்சர் விட்டுக் கொடுத்து மோசமாக தோற்றது.
இந்த தோல்வி குறித்து கேப்டன் டோனி கூறியதாவது:
ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதால்தான் இந்திய அணி தோற்றது என்பதை ஏற்க முடியாது. ஐபிஎல் போட்டி எங்களுக்கு நல்ல பயிற்சியாக இருந்தது என்பதே உண்மை. ஆனால், ஐபிஎல் இரவு விருந்து மற்றும் தொடர்ச்சியான பயணங்களால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர். முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாட முயற்சித்தோம். எங்களது சில வியூகங்கள் பலனளிக்கவில்லை. இன்னும் 20 ரன் கூடுதலாக அடித்திருந்தால் இலங்கையை வென்றிருக்கலாம். கடைசிகட்ட ஓவர்களில் அதிக ரன் குவிக்க முடியாமல் போய்விட்டது. சிறந்த அணியையே தேர்வு செய்திருந்தோம். வீரர்கள் தங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்தாததே தோல்விக்கு காரணம். பவுன்சர் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறுவதும் பின்னடைவாக அமைந்துவிட்டது. இலங்கை அணி எல்லா வகையிலும் சிறப்பாக விளையாடியது.

கிரிக்கெட் வாரிய அதிகாரி கண்டனம்:
டோனி யின் கருத்துக்கு கிரிக்கெட் வாரிய நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்ளும்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. டோனியின் கருத்து அபத்தமானது.

கபில்தேவ்:
டோனியின் கருத்து ஆச்சரியம் அளிக்கிறது. ஒரு வீரராகவும், ஒரு கேப்டனாகவும் டோனி தோற்று விட்டார்.

முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி:
தோல்விக்கு இதுதான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது என்றாலும், டோனி தலைமையில் இந்திய அணி விளையாடிய சர்வதேச போட்டித் தொடர்களிலேயே இதுதான் மோசமான தோல்வி. மிகவும் ஏமாற்றமாக உள்ளது. சில முடிவுகளில் டோனி பிடிவாதமாக இருந்தார். இனி அவர் தனது போக்கை மாற்றிக் கொள்வார் என நினைக்கிறேன். கைவசம் 9 விக்கெட் இருந்த நிலையில், கடைசி 10 ஓவரில் 73 ரன் மட்டுமே சேர்த்தது வேதனையாக உள்ளது. யூசுப் பதானை இன்னும் முன்னதாகக் களமிறக்கி இருக்கலாம்.

முன்னாள் கேப்டன் அசாருதீன்:
ஐபிஎல் பார்ட்டி, பயணங்க ளால் தோ ல்வி என்று காரணம் சொல்வதை ஏற்க முடியாது. இரவு விருந்து முக்கியமா? சிறப்பாக விளையாடுவது முக்கியமா? என்பதை வீரர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எல்லா வகை ஆடுகளங்களிலும் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்களைத் தேர்வு செய்வது அவசியம்.

முன்னாள் வீரர் மதன்லால்:
ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தோல் விக்கு சப்பைக்கட்டு கட்டுவது சரியல்ல. ஐபிஎல் பார்ட்டியால் தோல்வி என்று டோனி சொல்வது முட்டாள்தனமானது. உலக கோப்பையை வெல்வதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி, அதில் சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை.

முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மானி:
பயணக் களைப்பை காரணமாகச் சொல்லி தப்பிக்க முடியாது. வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகமோ, அதற்கான உழைப்போ இந்திய வீரர்களிடம் சுத்தமாக இல்லை.


நவக்கிரகங்களில் பராக்கிரமம் அருளும் செவ்வாய்

சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம், பராக்கிரமம். வீரதீர செயல்கள், அதிகாரம் செலுத்துதல், ஆளுமை திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம் போன்ற எண்ணிலடங்கா தன்மைகள் கொண்ட கிரகம். போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, உயர் பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் போன்றவற்றுக்கான அதிபதி செவ்வாய். நம் உடலில் முக்கியமாக ரத்த சம்பந்தமான சில விஷயங்கள் சீராக இருக்க செவ்வாய் முக்கிய காரணம். போட்டி, பந்தயங்கள் உடல்திறன், சாகச நிகழ்ச்சிகள் போன்றவற்றில் புகழ் பெறவும் ரியல் எஸ்டேட், பில்டிங் கான்ட்ராக்ட், சிவில் இன்ஜினியரிங், அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள், நெருப்பு சம்பந்தமான தொழில்கள் சிறக்கவும் செவ்வாயின் அருள்கடாட்சம் அவசியம் தேவை.

செவ்வாயின் அம்சங்கள்

(ஆதிக்கம்)

கிழமை: செவ்வாய்

தேதிகள்: 9, 18, 27.

நட்சத்திரம்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

ராசி: மேஷம், விருச்சிகத்தில் ஆட்சி, மகரத்தில் உச்சம்

நிறம்: சிவப்பு

ரத்தினம்: பவளம்

தானியம்: துவரை

ஆடை: சிவப்பு

செவ்வாய்க்கு உண்டான எண்கள், கிழமை, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவரது ஆதிக்கம் பெற்று விளங்குவார்கள். லக்னம் அல்லது ராசியில் செவ்வாய் இருப்பது யோகம் தரும்.

பிறந்த லக்னமும்,செவ்வாய் தரும் யோகமும்

எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த வகையான யோகங்களை தருவார்?

மேஷ லக்னம்/ராசி & தலைமை பதவி, அதிகாரம், ஆட்சிபீடம்

ரிஷப லக்னம்/ராசி & மனைவி வழியில், கூட்டுத் தொழில் மூலம் யோகம்

கடக லக்னம்/ராசி & தொழில், பூர்வ புண்ணிய அமைப்பு, குழந்தைகளால் செல்வாக்கு

சிம்ம லக்னம்/ராசி & நிலபுலன்கள், தந்தை வழியில், பூர்வீக சொத்து மூலம், கல்வி செல்வம் மற்றும் வெளிநாட்டு தொடர்புகளால் யோகம்

துலா லக்னம்/ராசி & சொல்லாற்றல், மனைவி வகையில் யோகம்

விருச்சிக லக்னம்/ராசி & உயர்பதவி, ஆட்சி, அதிகாரத்தால் யோகம்

தனுசு லக்னம்/ராசி & பூர்வ புண்ணிய பலத்தின்படி யோகம். திடீர் அதிர்ஷ்டங்கள், பிள்ளைகளால் யோகம்

மகர லக்னம்/ராசி & தாய், தாய்வழி உறவுகளால் யோகம், நிலபுலன்கள், கல்வி செல்வத்தால் யோகம்

மீன லக்னம்/ராசி & பூர்வீக சொத்துகள், தந்தை வழியில், சொல்லாற்றல் மூலம் அதிர்ஷ்டம்

மற்ற லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் பலத்தை வைத்து யோகங்கள் கிடைக்கும். எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் செவ்வாய் நீச்சம், 6, 8, 12 ஆகிய இடங்களில் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேராமல் இருக்க வேண்டும்.

வழிபாடு, பரிகாரம்
எல்லா முருகன் கோயில்களும் செவ்வாய்க்கு உரிய தலங்கள்தான். பழநியில் செவ்வாயாகவே தண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவில் முக்கிய பரிகார ஸ்தலமாகும். நவதிருப்பதிகளுள் திருக்கோளூர் செவ்வாய் ஸ்தலம். சென்னை அடுத்த பூந்தமல்லியில் வைத்தீஸ்வரன் சமேத தையல்நாயகி கோயில் உள்ளது. இது செவ்வாய் பரிகார ஸ்தலமாகும்.

‘ஓம் அங்காரகாய வித்மஹே
பூமிபாலாய தீமஹி
தந்நோ குஜப் பிரசோதயாத்’
 என்ற செவ்வாய் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம் சம் சிவய அங்காரக தேவாய நம’ என 108 முறை சொல்லலாம். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் மற்றும் முருகன் துதிப்பாடல்கள் படிக்கலாம். அங்காரகன் எனப்படும் செவ்வாயை வணங்கி வழிபட்டால் கடன் தொல்லை, வறுமை, தோல் சம்பந்தமான நோய்கள் போன்றவை நீங்கி சகல யோகங்களும் வளங்களும் பெருகும்.

                                                                                                            அன்புடன் ஜோதிடர் மதி


இன்றைய சமுதாயத்தில் நல்ல பழக்கவழக்கங்கள்,மற்றவர்களுடன் பண்புடன் பழகும்
அமைப்பு,மதிப்பு மரியாதையுடன் வாழ்க்கை நடத்தும் சூழ்நிலை, சிலருக்கு தான்
உண்டாகிறது.நவகிரகத்தின் அருளால் இமண்ணுலகில் வாழும் நமக்கு நவகிரகங்களில் குருபகவானின் அருள் இருந்தால் நல்லதொரு வாழ்க்கை நடத்தி
விடலாம்.பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் கேஜகேசரி யோகம்,குரு மங்கள யோகம்,சகட யோகம்,கோடீஸ்வர யோகம்,தனயோகம் போன்றவற்றை
அளிக்கிறார்.
   இன்றைய உலகில் நல்ல பழக்கவழக்கங்களுடன் வாழும் அமைப்பு,பிறர் போற்றும்
பதவி,பெயர்,புகழ் போன்றவைகள் குருபகவான் ஜனனஜாதகத்தில் நன்றாக இருந்தால்
ஏற்படுகிறது .
    நவகிரகங்களில் கெடுபலனை முற்றிலும் விலக்கி நற்பலனை தருவதில் சிறந்து
விளங்குபவர் குருபகவான் மட்டுமே,ஒருவர் ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்கனதையோ,சந்திர லக்கனதையோ குரு பார்வை செய்தால் நல்ல உடல்நிலை,நல்லபழக்கவழக்கங்களை அடைய முடிகிறது.அது போல குரு எந்த
பாவத்தை பார்வை செய்தாலும் அந்த பாவம் மேன்மை அடைகிறது.
                                                                                                                    அன்புடன்
                                                                                                                ஜோதிடர் மதி


பொதுவாக மு‌த்த‌ம் கொடு‌ப்பது எ‌ன்பது ஏதோ பேச‌க் கூடாத வா‌ர்‌த்தை எ‌ன்று இரு‌ந்த கால‌ம் போ‌ய் ‌வி‌ட்டது. த‌‌ற்போது தா‌ம்ப‌த்ய‌த்தை‌ப் ப‌ற்‌றி‌‌க் கூட வெ‌ளி‌ப்படையாக‌ப் பேசு‌ம் அள‌வி‌ற்கு வா‌ய்‌ப்புக‌ள் அ‌திக‌ரி‌த்து ‌வி‌ட்டன.

மு‌த்த‌ம் எ‌ன்பது பொதுவாக அ‌ன்‌பி‌ன் அடையாளமாக‌க் கருத‌ப்படு‌கிறது. மு‌த்த‌ம் எ‌ன்பதை பொதுவாக அ‌திகமாக‌ப் பெறுவது குழ‌ந்தைக‌ள்தா‌ன். குழ‌ந்தைகளு‌க்கு பெ‌ற்றவ‌ர்க‌ள் முத‌ல், உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர்க‌ள் என பலரு‌ம் மு‌த்த‌த்தை வழ‌ங்குவா‌ர்க‌ள்.
இவை அ‌ன்‌பி‌ன் அடையாள‌ம். அடு‌த்தபடியான காதல‌ர்க‌ள் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் மு‌த்த‌ம் ம‌ற்று‌ம் த‌ம்ப‌திக‌ள் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் மு‌த்த‌ம்.
மு‌த்த‌த்‌தி‌ல் எ‌த்தனையோ வகை உ‌ள்ளது. கை, நெ‌ற்ற, க‌ண்ண‌ம், தலை, உதடு என உட‌லி‌‌ன் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் மு‌த்த‌மிட‌ப்படு‌கிறது. ஒ‌வ்வொருவரு‌ம் த‌ங்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் அ‌ன்யோ‌ன்ய‌த்‌தி‌‌ன் அடி‌ப்படை‌யிலு‌ம், மு‌த்த‌மிடு‌ம் சூ‌ழ்‌நிலை‌‌யி‌ன் அடி‌ப்படை‌யிலு‌ம் மு‌த்த‌மிடு‌கி‌ன்றன‌ர்.
அதே‌ப் போல, ஒரு ஆ‌ண் அ‌ளி‌க்கு‌ம் மு‌த்த‌த்‌தி‌ற்கு‌ம், பெ‌ண் அ‌ளி‌க்கு‌ம் மு‌த்த‌த்‌தி‌ற்கு‌‌ம் ‌நிறைய வேறுபாடுக‌ள் இரு‌ப்பதாக‌க் கூற‌ப்படு‌கிறது.
அதாவது, ஒரு ஆ‌ண் அ‌ளி‌க்கு‌ம் மு‌த்த‌த்‌தி‌ற்கு அடு‌த்த ‌நிலை காமமாக இரு‌க்கு‌ம். ஒரு பெ‌ண் அ‌ளி‌க்கு‌ம் மு‌த்த‌த்‌தி‌ற்கு அ‌ர்‌த்த‌ம் காதலாக இரு‌க்‌கு‌‌ம் எ‌ன்பதுதா‌ன். இதனை ஒரு ஆ‌ய்வு ‌நிரூ‌பி‌த்து‌ள்ளது.
பல சுவார‌ஸ்ய‌ங்க‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ளன.
இ‌ந்த ஆ‌ய்வு முடிவுக‌ளி‌ல் வெ‌‌ளியான பல உ‌ண்மைக‌ள், பல த‌ம்ப‌திய‌ர் உண‌ர்வு‌ப் பூ‌ர்வமாக உண‌ர்‌ந்து இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்பது அடு‌த்த ‌விஷய‌ம்.
ச‌ரி ஆ‌ய்‌‌வி‌ன் முடி‌வி‌ல் த‌ெ‌ரிய வ‌ந்தது எ‌ன்ன, மு‌த்த‌த்‌தி‌ற்கு‌ப் பெ‌ண்க‌ள் கொடு‌க்கு‌ம் மு‌க்‌கிய‌த்துவ‌த்தை ஆ‌ண்க‌ள் கொடு‌ப்ப‌தி‌ல்லை எ‌ன்பதுதா‌ன் அ‌தி‌ல் ‌பிரதான ‌விஷயமாகு‌ம்.
மேலு‌ம், பெ‌ண்க‌ள், த‌ங்களது இணையுடனான இ‌ன்ப வா‌ழ்‌க்கை‌யி‌ல் மு‌த்த‌த்தையு‌ம் ஒரு அ‌ங்கமாக எ‌ண்ணு‌கி‌ன்றன‌ர். அதே‌ப்போல, த‌ங்களது அ‌ன்பையு‌ம், ம‌கி‌ழ்‌ச்‌சியையு‌ம், த‌ங்களது ‌நீ‌ண்ட கால உற‌வி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டையு‌ம், த‌ம்ப‌திகளு‌க்கு‌ள்ளான உற‌வி‌னை புது‌ப்‌பி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம் பெ‌ண்க‌ள் மு‌த்த‌த்தையே அடி‌ப்படையாக வை‌த்து‌க் கொ‌ள்‌கி‌ன்றனரா‌ம்.
ஆனா‌ல், ஆ‌ண்களை‌ப் பொறு‌த்தவரை மு‌த்த‌ம் எ‌ன்பது தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் இணைய‌ப் போவத‌ற்கான ஒரு சா‌வி ம‌ட்டுமே. காம‌த்‌தி‌ன் துவ‌க்கமாக ம‌ட்டுமே மு‌த்த‌த்தை‌ ஆ‌ண்க‌ள் ‌நினை‌க்‌கி‌ன்றன‌ர்.
ஆ‌ண்களு‌ம் ச‌ரி, பெ‌ண்களு‌ம் ச‌ரி மு‌த்த‌த்தை அ‌திகமாக ர‌சி‌க்‌கி‌ன்றன‌ர் எ‌ன்ற போது‌ம், பெ‌ண்களே அத‌ற்கு அ‌திக மு‌க்‌‌கிய‌த்துவ‌ம் அ‌ளி‌க்‌கி‌ன்றன‌‌ர்.
நாளாக ஆக, மு‌த்த‌ம் எ‌ன்பது ஒரு ச‌லி‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தி ‌விடு‌கிறது ஆ‌ண்களு‌க்கு. ஆனா‌ல் பெ‌ண்களு‌க்கு அ‌ப்படி அ‌ல்ல. எ‌ப்போதாக இரு‌ந்தாலு‌ம் மு‌த்த‌ம் ஒரு பு‌த்துண‌ர்வை அ‌ளி‌க்கு‌ம் ‌விஷயமாகவே உ‌ள்ளது. தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ன் போது மு‌த்தமே இ‌ல்லாம‌ல் முழுமை பெற ஆ‌ண்களா‌ல் முடியு‌ம். ஆனா‌ல் ஒரு பெ‌ண்ணா‌ல் மு‌த்த‌மி‌ல்லாத தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் ‌நிறைவு பெற முடியாது.
இ‌ப்படி மு‌த்த‌‌ம் ப‌ற்‌றிய ‌ஆ‌ய்‌வி‌ல், ஆணு‌க்கு‌ம், பெ‌ண்ணு‌க்கு‌ம் இரு‌க்கு‌ம் ‌வி‌த்‌தியாச‌ம் வெ‌ளி‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதனை பல த‌ம்ப‌திகளு‌ம் ‌நி‌ச்சயமாக ஒ‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌‌ன்று தெ‌ரி‌கிறது.


டயபடீஸ் நோய்க்கு அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டு துன்பப்படுபவரா நீங்க? விரைவில் உங்களுக்கென அற்புத மாத்திரை வருகிறது. 6 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும், ஆண்டுக்கணக்கில் டயபடீசை மறக்கலாம்.

இதுபற்றி டெல்லியைச் சேர்ந்த போர்ட்டிஸ் மருத்துவமனையின் டயபடீஸ் பிரிவின் தலைவர் அனுப் மிஸ்ரா கூறுகையில், “உடலின் சில எதிர்ப்பு சக்தி கோளாறால் டைப் 1 டயபடீஸ் ஏற்படுகிறது. அதைத் தடுக்கும் மருந்து கண்டுபிடிக்க கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஆரா ய்ச்சி நடந்தது. ஒடெலிக்ஸ்ஜமாப் என்ற மருந்து தயாரிப்பின் இறுதிக் கட்டத்தை ஆராய்ச்சியாளர்கள் எட்டியுள்ளனர்” என்றார்.
இந்த மாத்திரையை தொடர்ந்து 6 நாட்கள் சாப்பிட வேண்டும். அதன் பிறகு ஆண்டுக்கணக்கில் நோயாளியின் உடலில் தேவையான இன்சுலின் சுரப்பு ஏற்படும். அதனால், டைப் 1 டயபடீஸ் தடுக்கப்படும். அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் தேவை ஏற்படாது. இரைப்பைக்கு அருகே உள்ள ஜீரண சுரப்பியில் இருந்துதான் இன்சுலின் சுரக்கிறது. அது குறையும்போது டயபடீஸ் ஏற்படுகிறது.
டைப் 1 டயபடீஸ் இப்போது இளைஞர்களை அதிகளவில் பாதித்து வருகிறது. ஓடெலிக்ஸ்ஜமாப் மாத்திரை, ஜீரணச் சுரப்பியை பாதிக்காமல் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். இதனால், வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியுடன் காலம் தள்ள வேண்டிய நிலையைத் தவிர்க்கலாம்.


கையில் லட்ச ரூபாய் வைத்திருந்தால் பஸ்ஸில் போவீர்களா? பாக்கெட்டில் சம்பள பணம் இருந்தாலே ஆட்டோ பிடித்து பத்திரமாக வீட்டுக்கு போவோம்.
பாங்க் ஊழியர்கள் இரண்டு பேர் ஒரு கோடி ரூபாய் பணத்தை டிரங்க் பெட்டியில் அடுக்கி டாக்சியில் ஏறியிருக்கிறார்கள். புதுச்சேரி கிளையில் இருந்து சென்னையில் உள்ள மண்டல தலைமை அலுவலகத்துக்கு வழக்கமாக இப்படித்தான் பணம் கொண்டு வருவார்களாம். வழியில் கார் ரிப்பேரான மாதிரி நின்றிருக்கிறது. ஒருவர் இறங்கி தள்ளச் சொல்லியிருக்கிறார் டிரைவர். ஸ்டார்ட் ஆகி திரும்பவும் ஆஃப் ஆனது. இன்னொருத்தர் சேர்ந்து தள்ளினால் ஸ்டார்ட் ஆகிவிடும் என்று டிரைவர் சொன்னதும் அடுத்தவரும் இறங்கியிருக்கிறார். உடனே கார் பறந்துவிட்டது.
விவரமான டிரைவர். சற்று தொலைவில் நிறுத்தி, டிக்கியை திறந்து, பெட்டியின் பூட்டை உடைத்து, 20 லட்சம் மட்டும் எடுத்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிவிட்டார். இந்த அளவுக்கு பணம் எடுத்து செல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை என்று பாங்க் நிச்சயமாக சில விதிகளை வகுத்திருக்கும். அதற்கு மாறாக இப்படி நடக்க அனுமதித்த அதிகாரியிடம் 20 லட்சத்தை வசூலிப்பது தவறாக இருக்காது.
தஞ்சை பாபனாசத்தில் துப்பாக்கி ஏந்திய காவலாளியுடன் ஏடிஎம்முக்கு பணம் எடுத்து சென்றிருக்கிறது பிரிங்க்ஸ் ஆர்யா நிறுவன வேன். உலக அளவில் பல விதிகளுக்கு உட்பட்டு அது இந்த வேலையை செய்கிறது. ஆனால், சண்டைக்கு வந்த கடைக்காரர்களை காவலாளி சுட்டது அத்து மீறல். அவரிடம் இருந்து துப்பாக்கியை கைப்பற்றிய போலீஸ் அதிகாரி, உடனே மீதி தோட்டாக்களை அல்லது மேகசினை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். இந்த விதியை சம்பந்தப்பட்ட அதிகாரி பின்பற்றியிருந்தால் சப் இன்ஸ்பெக்டர் இன்று உயிருடன் இருந்திருப்பார்.
சட்டீஸ்கரில் 76 சி.ஆர்.பி.எஃப் ஜவான்கள் அநியாயத்துக்கு நக்சலைட்களின் தாக்குதலில் செத்து விழுந்ததற்கும் விதிகளை மதிக்காததே காரணம். இந்த நாட்டில் மிகச் சிறப்பான முறையில் சட்டங்கள் இயற்றப்பட்டு, விதிகள் வகுக்கப்படுகின்றன. பின்பற்றுவதற்கு எவருமில்லை. அடுத்தடுத்து சம்பவங்கள் இந்த பரிதாப நிலையை படம்பிடித்து காட்டினாலும் யாரும் திருந்துவதாக தெரியவில்லை. இந்தியாவை பொறுத்தவரை விதிகளை பின்பற்றினால் தான் ஆச்சர்யம்.நாம் தினந்தோறும் சாலையில் வாகனங்களை ஓட்டும் போது தோடங்கி,நமது ஒவ்வொரு
செயலிலும் சுயஒழுக்கம் இல்லாமல் தான் செயல்படுகிறோம்.ஒருநாட்டின் வளர்ச்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் மட்டும் இல்லை.அந்த நாட்டின் குடிமக்களிடமும்தான்இருக்கிறது.நம்மிடம்என்றைக்குசுயஒழுக்கமும்,
சுயகட்டுப்பாடும் ஏற்படுகிறதோ அன்றைக்கு தான் நமக்கு வல்லரசு ஆகும் தகுதி உண்டாகும்.அதுவரை இதுமாதிரி நிகழ்வுகள் இந்தியாவில் சாதாரணம்.


இங்கிலாந்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததை தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சியும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. கன்சர்வேடிவ் கட்சியின் டேவின் கேமரூன் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார். லிபரல் கட்சியை சேர்ந்த நிக் கிளெக்குக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்படுகிறது.

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் கடந்த மே 6&ம் தேதி நடந்தது. ஆட்சியில் இருக்கும் லேபர் கட்சி, முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, வளர்ந்து வரும் லிபரல் டெமாக்ரடிக் ஆகிய 3 கட்சிகள் போட்டியிட்டன. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியில் இருந்த லேபர் கட்சியின் பிரதமர் கார்டன் பிரவுன் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக லிபரல் டெமாக்ரடிக்குடன் கூட்டணி அமைக்க பெரும் முயற்சி எடுத்தார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என அறிவித்தார். ஆனாலும், அவரது முயற்சி பலன் தரவில்லை. இதையடுத்து, பிரதமர் பதவியை கார்டன் பிரவுன் நேற்று ராஜினாமா செய்தார்.
இதற்கிடையில் புதிய ஆட்சி அமைப்பதற்காக கன்சர்வேடிவ் கட்சி தலைவர் டேவிட் கேமரூன் & லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவர் நிக் கிளெக் இடையே நடந்த கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து டேவிட் கேமரூனை பிரதமர் பதவியேற்க வருமாறு இங்கிலாந்து ராணி எலிசபெத் அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட டேவிட் கேமரூன் நேற்று இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவர் நிக் கிளெக்குக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
13 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமர் டேவிட் கேமரூனுக்கு 43 வயதாகிறது. 200 ஆண்டு கால வரலாற்றில் மிக இளம் வயதில் பிரதமர் பதவியை பிடித்தவர் என்ற பெருமை கேமரூனுக்கு கிடைத்துள்ளது. பிரதமர் பதவி ஏற்றுக்கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் கேமரூன், ‘வலுவான, நிலையான சிறப்பான ஆட்சியை அளிப்பேன்’ என்றார்.


ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும் தேய்ந்தும் நமக்கு காட்சி கொடுப்பவர். ‘சர்வம் சந்திர கலாபிதம்’ என்று சந்திரனை ஜோதிட நூல்களில் குறிப்பிடுகின்றன.
லக்னத்துக்கு அடுத்தபடியாக முக்கியம் வாய்ந்தது ராசி. ஜோதிடம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எடுத்தவுடன் கேட்கும் கேள்வி ‘நீங்கள் என்ன நட்சத்திரம், என்ன ராசி?’ என்பது. எந்த நட்சத்திர தினத்தன்று நாம் பிறந்தோமோ, அது நமது ஜென்ம நட்சத்திரம். அந்த நட்சத்திரத்துக்கான ராசி ஜென்ம ராசி அல்லது ஜனன ராசி. இந்த ராசியின் அடிப்படையிலேயே யோகங்கள் உண்டாகின்றன. அதுபோல குருபலம், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டசனி ஆகிய கோசார பலன்கள் சந்திரனை பிரதானமாக வைத்து நடக்கின்றன. எல்லா திதிகளிலும் சந்திர, சூரியன் ஆளுமை இருக்கும். சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் காலம் அமாவாசை. சூரியனுக்கு 7&ம் இடத்தில் சந்திரன் இருக்கும்போது பவுர்ணமி.
சந்திரனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: திங்கள்
தேதிகள்: 2, 11, 20, 29
நட்சத்திரம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம்
ராசி: ரிஷபத்தில் உச்சம், கடகத்தில் ஆட்சி.
நிறம்: பால் வெண்மை
ரத்தினம்: முத்து
தானியம்: நெல்
ஆடை: தூய வெள்ளி
அமாவாசை யோகம், பவுர்ணமி யோகம், கஜகேசரி யோகம், சகடை யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், சந்திராதி யோகம் என்று பலவகையான யோகங்களை தருபவர் சந்திரன். நமது ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் நல்ல யோக பலன்கள் உண்டாகும்.
சந்திரன் மாதுர்காரகன். அதாவது, தாயின் பலம், நிலைமை குறித்து அறியமுடியும். சந்திரன் மனோகாரகனும்கூட. அதாவது மனதை ஆள்பவன். அமைதி, திருப்தி, கருணை, நிம்மதி, இரக்கம், காதல், கனிவு, சிந்தனைத் திறன், கற்பனை வளம் ஆகியவற்றை நிர்ணயிப்பது சந்திரனே. சந்திரன் ஆதிக்கம் உள்ளவர்கள் கதை, கவிதை, இசை, டான்ஸ், அனிமேஷன், கிராபிக்ஸ், வெளிநாட்டு வியாபாரம், தண்ணீர் சம்பந்தமான தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, கடல் சார்ந்த தொழில், கப்பல் துறைகள், கடற்படை, மனோதத்துவம், மனநலம், மனவசியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
சந்திரனுக்கு உண்டான தேதிகள், நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இத்துறைகளில் ஜொலிப்பார்கள். சந்திரன் உச்சம் பெறும் ரிஷப ராசியிலும் ஆட்சிபெறும் கடக ராசியிலும் பிறப்பது மிகவும் சிறப்பு. லக்னத்தில் சந்திரன் இருப்பதும் லக்னத்தை சந்திரன் பார்ப்பதும் நல்ல யோகம்.
பிறந்த லக்னமும் சந்திரனால் கிடைக்கும் யோகமும்
எந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் எந்த வகையான யோகங்களை கொடுப்பார்?
மேஷ லக்னம்/ராசி & நிலபுலன், கல்விச் செல்வம், வெளிநாடு செல்லும் யோகம்
ரிஷப லக்னம்/ராசி & எதிலும் முதன்மை ஸ்தானம்
மிதுன லக்னம்/ராசி & சொல்லாற்றல், கதை, கவிதை, இசை துறைகளில் ஏற்றம்
கடக லக்னம்/ராசி & கற்பனை சக்தி, புகழ், கீர்த்தி, பேச்சாற்றல்
துலா லக்னம்/ராசி & தொழில், வியாபாரத்தில் பெரிய யோகங்கள்
விருச்சிக லக்னம்/ராசி & சகல பாக்யங்களும் பெறும் யோகம்
மகர லக்னம்/ராசி & வெளிநாடு வாசம், தண்ணீர் தொடர்பான துறைகளில் ஏற்றம்
மீன லக்னம்/ராசி & பூர்வ புண்ணிய அமைப்புகளின்படி யோகம். குழந்தைகளால் செல்வாக்கு.
மற்ற லக்னம், ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரனின் பலத்தை வைத்து யோகங்கள் கிடைக்கும். எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் சந்திரன் நீச்சம், 6, 8, 12 ஆகிய இடங்களில் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேராமல் இருக்க வேண்டும்.
வழிபாடு, பரிகாரம்
பவுர்ணமி விரதம் சிறப்பான பலன் தரும். சத்யநாராயண பூஜை செய்வது நன்மை பயக்கும். அம்மன் கோயில்களில் மாலை நேர வழிபாடு உத்தமம். பக்தர்களுக்கு, ஏழைகளுக்கு நெய்சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம், பழங்கள் கலந்த சாதம் ஆகியவை வழங்கலாம்.
‘ஓம் ஷிர்புத்ராய வித்மஹே
அம்ரித் தத்வாய தீமஹி
தந்நோ சந்த்ர பிரசோதயாத்’ என்ற சந்திர காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். ‘ஓம் உம் சிவய நம சந்திர தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
திருவோண நட்சத்திரத்தன்று பெருமாள் கோயிலில் தாயாருக்கும், பெருமாளுக்கும் மஞ்சள், குங்குமம் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல் வழங்கலாம். பவுர்ணமி அன்று சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் வழிபாடுகள் செய்து சந்திர தரிசனம் செய்யலாம். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகில் உள்ள வரகுணமங்கை, கும்பகோணம் அருகே உள்ள திங்களூர் ஆகியவை சந்திர பரிகார ஸ்தலங்கள். சந்திரனுக்கு உண்டான முக்கிய திருத்தலம் திருப்பதி. இங்கு சந்திரனாகவே ஏழுமலையான் அருள்பாலிக்கிறார்.
                                                                                                               - ஜோதிடர் மதி


தீவிரவாதியாக வாழ்வது போரடித்து விட்டது என்று பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்கிறார் ஒரு இளைஞர்.

நமது காஷ்மீரில் இருந்து நிறைய இளைஞர்கள் எல்லை தாண்டி போகிறார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமித்து நிர்வகிக்கும் ‘ஆசாத் காஷ்மீர்’ பகுதியில் ஏராளமான முகாம்கள் இருக்கின்றன. அவற்றில் இந்த இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்யப்படுகிறது. இந்தியாவை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி, நமது நாடு இஸ்லாம் மார்க்கத்தின் எதிரி என்று பதிய வைப்பார்கள். மத பெரியவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பழமைவாதிகள் அந்த பணியை வெற்றிகரமாக முடித்ததும், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் உளவு அமைப்பின் அதிகாரிகள் வேவு பார்க்கவும், ஆயுதங்களை கையாளவும் தீவிர பயிற்சி கொடுப்பார்கள்.
நமது விரல்களாலேயே நம் கண்களை குத்த வேண்டும் என்பதில் பாகிஸ்தான் காட்டும் முனைப்பு அசாத்தியமானது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தில் தனக்கு பங்கில்லை என்று ஒதுங்கிக் கொள்ள இது வசதியான ஏற்பாடு. முற்றிலும் காஷ்மீரின் விடுதலைக்காக அங்குள்ள மக்கள் நடத்தும் போராட்டம் என்று உலகை நம்ப வைக்கவும் பயன்படுகிறது. முகமது அஷ்ரப் அப்படி எல்லை தாண்டி சென்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர். 1999ம் ஆண்டு அப்படி சென்று பயிற்சி முடித்து லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் உறுப்பினர் ஆனார்.
எத்தனை உயிர்களை பலி கொண்டாரோ தெரியவில்லை; மனித உயிர் குடிக்கும் தீவிரவாத வெறி அர்த்தமற்றது என்பதை சில ஆண்டுகளில் உணர்ந்து கொண்டார். தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடுவது என்று தீர்மானித்தார். அஸ்மா என்ற பெண்ணை திருமணம் செய்தார். அங்கேயே செட்டிலாக நினைத்தவருக்கு இந்தியாவில் கழித்த இளமைக்காலம் மனதில் வலம் வந்தது. மனைவியை அழைத்துக் கொண்டு நேற்று எல்லை வரை வந்துவிட்டார். இந்திய ராணுவ வீரர்கள் பிடித்து விசாரித்த போது கதையை சொன்னார். எத்தனையோ காரணங்களை கேட்டு பழக்கப்பட்ட ராணுவத்துக்கு, ‘தீவிரவாத வாழ்க்கை அலுத்துவிட்டது’ என்பது புதிதாக இருந்தது. நடுத்தர வர்க்கத்தினர் உச்சரிக்கும் வாசகமாயிற்றே.
தீவிரவாதம் ஒரு சுழல். அதில் விழுந்தவர்கள் கரை சேர்வதில்லை. அஷ்ரப் அர்த்தமுள்ள வழி காட்டியிருக்கிறார்.


திருமணம் ஒருவருடைய வாழ்வில் மிகபெரும்திருப்புமுனையாகும்,திருமணம்
அமைந்த பின்பு சிலர் பெரும் செல்வந்தர்களாக உயருகிரார்கள்.ஆனால் பெரிய பணக்காரர்களாக இருப்பவர்கள் வீட்டில் திருமணம் நடைபெறுகிறது,திருமனத்திற்கு
பிறகு அவர்களுடைய வாழ்விலே மாபெரும் சரிவு உண்டாகி சாதாரண ஏழை என்ற
அவல நிலைக்கு கொண்டு செல்லும் நிலையை நாம் கண்கூடாக காண்கிறோம்
     சுருங்க சொன்னால் ஒரு ஆண்மகனுக்கு அமையும் மனைவியால் யோகம் கூடுவதையும்,ஒரு பெண் வரும் அமைப்பால் அதிர்ஷ்டம் குறையும் நிலையும்
உண்டாவதை  காண்கிறோம்.
    ஒரு ஆண்மகன் ஜாதகத்தில் ஏழாம் வீட்டைதான் களத்திர ஸ்தானம் என்கிறோம்.
இந்த ஏழாம் வீட்டிற்க்கு அதிபதி லாபஸ்தானத்தில் அமைய பெற்றால் மனைவியால்
யோகமும் மனைவி வந்த பிறகு அதிர்ஷ்டமும் ஏற்படுகிறது.
      ஒருவர் ஜாதகத்தில் குருவோ அல்லது சுக்கிரபகவானோ ஜென்ம லக்னத்தில்
அமைய பெற்று ஏழாம் வீட்டிற்கு அதிபதி 11 ல் அமைய பெற்றால்,மனைவி வந்த பிறகு பெரும் அளவில் செல்வம் ஏற்படுகிறது.
   ஏழாம் வீட்டிற்க்கு அதிபதி நான்கில் அமைய பெற்று ஏழாம் வீட்டில் குரு பார்வை
உண்டானால் திருமணதிற்கு பிறகு பூமி,வீடு,வாகனம்,போன்ற யோகங்கள் ஏற்படுக்றது.
    ஏழாம் வீட்டிற்க்கு அதிபதி பத்தில் அமைய பெற்று சுபர் பார்வை ஏழாம் வீட்டிற்கோ அல்லது ஏழாம்  வீட்டு அதிபதிக்கோ கிடைக்கவும் பெற்றால், திருமணதிற்கு பிறகு நல்ல தொழில் யோகம் அமைவதுடன் தொழில் மேலும் மேலும் உயர்வு பெற்று பல லட்சங்கள் சேருகின்ற யோகமும் உண்டாகிறது.
    ஏழாம் வீட்டிற்க்கு அதிபதி உச்சம் பெற்று ஒன்பதில் வீற்றிருந்தாலும் சுபர் பார்வை ஒன்பதாம் வீட்டிற்க்கு ஏற்பட்டால் திருமணதிற்கு பிறகு வெளிநாடு செல்லும் யோகமும்,அபரிதமாக பொருள் சேர்க்கும் அமைப்பும் உண்டாகிறது.
      ஏழாம்  வீட்டில் சுபகிரகம் அமைய பெற்று ஏழாம் வீட்டிற்க்கு அதிபதி கேந்திரம்,திரிகோணம் போன்ற இடங்களில் அமைய பெற்றால் இளமையில் திருமணம் ஏற்படும் அமைப்புகளும்,திருமணத்திற்கு பிறகு செல்வம்,செல்வாக்கு,புகழ்,பெருமை யாவும் உண்டாகிறது.
    களத்திரகாரகன் என்று சொல்லப்படும் சுக்கிரன் எந்த ராசியில் வீற்றிரிக்கிராரோ அந்த வீட்டிற்க்கு  அதிபதி உச்சம் பெற்று காணபட்டால் மனைவி வந்த பிறகு செல்வம் சேரும்.மகிழ்ச்சியான வாழ்வும் ஏற்படுகிறது.
உங்கள் ஜாதகங்களை வைத்து உங்களுக்கு இந்த யோகம் இருக்கிறதா என்று
கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
                                                                                              அன்புடன்
                                                                                        ஜோதிடர் மதி


தினசரி உணவில் காய்கறி, பழங்களை குழந்தைகள் சேர்த்துக் கொள்ளத் தவறினால், பின்னாளில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக உலக கேன்சர் ஆராய்ச்சி அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் கேன்சர் ஏற்படுவதைத் தடுக்கும் வழிகளில் காய்கறி, பழங்களின் பங்கு பற்றி நிபுணர் குழு ஆராய்ச்சி நடத்தியது. அதன் பரிந்துரை வருமாறு:
புற்றுநோயை உருவாக்கும் செல்கள் வளர்ச்சியைத் தடுப்பதில் காய்கறி, பழங்கள் அதிக பங்கு வகிக்கின்றன. தினசரி உணவில் பரிந்துரைக்கப்படும் அளவுக்கு காய்கறி, பழங்களை குழந்தைகள் கட்டாயம் சாப்பிடச் செய்ய வேண்டும். ஆனால், 5ல் ஒரு குழந்தை மட்டுமே காய்கறி, பழங்களை சரியான அளவு சாப்பிடுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதனால், மீதமுள்ள 4 பேரில் பலருக்கு பின்னாளில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
அதேபோல, புற்றுநோயைத் தவிர்க்க, உடல் எடையை சரியாக பராமரிப்பது அவசியம். அதற்கும் காய்கறி, பழங்கள் மிகவும் உதவும்.
குழந்தைகளுக்கும் எடை பராமரிப்பு கட்டாயம். அதிக எடையுள்ள குழந்தைகள் பெரியவரானதும் பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும்.
தினசரி குறைந்தது 30 நிமிடம் கடுமையாக உடல் உழைப்பது, சர்க்கரை நிறைந்த பானங்களை தவிர்ப்பது, அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவது ஆகியவையும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி உணவியல் நிபுணர் நதாலி வின் கூறுகையில், “சிறிய வயதிலேயே குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவுப் பழக்கங்களை கடைபிடிக்க பெற்றோர் ஊக்கம் அளிக்க வேண்டும். பல்வேறு புற்றுநோய்களைத் தடுப்பதில் செடிகளில் இருந்து கிடைக்கும் தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறி, பழங்கள் சிறப்பாக செயல்படுவது தெரிய வந்துள்ளது” என்றார்.


கிரீஸ் கடன் நெருக்கடிக்கு அவசர நிதி உதவியாக ரூ.45 லட்சம் கோடி அளிக்க ஐரோப்பிய யூனியன், ஐஎம்எப் ஒப்புக் கொண்டதால், சென்செக்ஸ் நேற்று முன்னேற்றப் பாதைக்கு திரும்பியது. நேற்று ஒரே நாளில் 561 புள்ளிகள் உயர்ந்தது.

கடந்த வாரத்தின் 5 வர்த்தக நாட்களில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 788 புள்ளிகள் சரிந்தது. 17,000 புள்ளிகளுக்கு கீழே சென்றது. அதனால், முதலீட்டாளர்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. சென்செக்ஸ் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள கம்பெனிகளில் 9 நிறுவனங்கள் அதிக நஷ்டம் அடைந்தன. அவற்றின் மொத்த பங்கு மதிப்பு ரூ.40,000 கோடி சரிந்தது. கிரீஸ் நாட்டின் கடன் சுமை அதிகரித்து நிதி நெருக்கடி ஏற்பட்டதால், அது ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.
பொதுவாக, அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தை களைப் பின்தொடரும் ஆசிய சந்தைகளும் கடந்த ஒரு வாரமாக சரிவை சந்தித்தன. இந்நிலையில், கிரீஸ் நிதி நெருக்கடிக்கு ரூ.45 லட்சம் கோடியை அவசர நிதி உதவியாக அளிக்க ஐரோப்பிய யூனியனும், சர்வதேச நிதி அமைப்பும் (ஐஎம்எப்) நேற்று ஒப்புதல் அளித்தன.


சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில், நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 4&3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

மலேசியாவின் ஈபோ நகரில் 19வது சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் சீனாவுடன் டிரா (1&1) செய்தது. அடுத்து பரம எதிரியான பாகிஸ்தானை 4&2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
மூன்றாவது லீக் ஆட்டத்தில் தென் கொரியாவை 3&2 என்ற கோல் கணக்கில் வென்று புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெற்றது. இந்நிலையில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் நேற்று இந்தியா மோதியது. தொடக்கம் முதலே ஆஸி. கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர்.
துஷார் காண்டேகர் (19வது மற்றும் 33வது நிமிடம்), கேப்டன் ராஜ்பால் சிங் (22வது நிமிடம்) அபாரமாக கோல் அடிக்க, இடைவேளையின்போது இந்தியா 3&0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் சுதாரித்துக் கொண்ட ஆஸ்திரேலியா டிரென்ட் மில்டன் (38), கிறிஸ்டோபர் (40) கோல் அடிக்க பதிலடி கொடுத்தது. இந்திய வீரர் ஷிவேந்திரா 61வது நிமிடம் கோல் அடிக்க 4&2 என முன்னிலை ஏற்பட்டது. கடைசி நிமிடத்தில் மார்க் பேட்டர்சன் ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் கோல் அடித்தார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் இந்தியா 4&3 என்ற கோல் கணக்கில் வென்றது.


அன்னை தெரசாவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு :
அன்னை தெரசாவிற்கு ஒரு பழக்கம் இருந்ததது.அதிகாலையிலேயே எழுந்து விடுவார் .எழுந்து குளித்து விட்டு,தெருதெருவாக போய் பிச்சை எடுப்பார்.
தனக்காக இல்லை,தன் விடுதியில் இருக்கும் அகதிகள்,முன்னால் பாலியல் தொழிலாளிகள்,குஷ்ட ரோகிகள்,மனநிலை சரி இல்லாதவர்கள்,நோயுற்ற குழந்தைகள் ,எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்கள்,முதியவர்கள் இவர்களுக்காக.
          பொதுவாக காலை நேரத்தில் எல்லோரும் நல்ல மனநிலையோடு இருப்பார்கள்
உதவி கேட்டால் மறுக்க மாட்டார்கள் என்று நினைத்தார் தெரசா.அதனால் தான் உதவி கேட்டு போவதற்கு காலை பொழுதை தேர்ந்தெடுத்தார்.
    ஒருநாள் காலை வழக்கம் போல ,கொல்கத்தா நகரின் தெரு ஒன்றுக்குள் நுழைந்தார் தெரசா.கடைகடையாக உதவி கேட்க ஆரம்பித்தார்.ஒரு கடை முன்னால் நின்று பிச்சை கேட்டார்.கடைக்காரன் அவரை பார்த்தும்,பார்க்காதது போல் இருந்தான். அந்த கடைகாரனுக்கு கடுகடுத்த முகம்,பீடாவையும்,ஜர்தாவையும் போட்டு போட்டு சிவந்த வாய்.கடைக்காரன் சைகையால் அவரை போகச்சொல்லி
விரட்டினான்.தெரசா விடவில்லை ,கடை வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.
      போ!போ! ஒன்னும் கிடையாது! என்று விரட்டினான் கடைக்காரன்.
அவன் விரட்டியதற்காக தெரசா சோர்ந்து போய் விடவில்லை,மாறாக இப்படி விரட்டுகிற ஓர் ஆளிடமிருந்து எதையாவது வாங்கிவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
    'விடுதியில் இருக்கிற என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்க அய்யா! என்றபடி
கையை நீட்டிக்கொண்டே நின்றார்.
    கடைக்காரன் அவரை கோபமாக விழித்து பார்த்தான்.அன்னை தெரசாவின் கைகளில் சட்டென்று துப்பினான்.தெரசாவின் கைகளில் அவன் மென்று துப்பிய
பீடா சக்கையும் எச்சிலும் வந்து விழுந்து,வழிந்து கொண்டிருந்தது.
  அப்போதும் மனம் தளரவில்லை தெரசா.
ரொம்ப நன்றி அய்யா! இப்போ நீங்க கொடுத்தது எனக்கு,விடுதியில் இருக்கிற என்
குழந்தைகளுக்கு வேற எதாவது குடுங்க? என்று இன்னொரு கையை நீட்டினார்.
     இப்படி எதற்கும் மனம் தளராமால் நிற்கிற திகைத்து போனான் கடைக்காரன்,
கடை கல்லாவிலிருந்த மொத்த பணத்தையும் எடுத்து தெரசாவின் நீட்டிய கைகளில்
வைத்து விட்டான்.
      அன்னையின் கருணையை என்னவென்று சொல்வது.


இன்றைய இளம் பெண்கள் புரட்சிகரமாக சகல துறைகளிலும் ஆண்களுக்கு சரிநிகர்
சமானமாகவும், சிலவற்றில் ஆண்களையே மிஞ்சிடும் வகையிலும் ஈடுபட்டு பரவலாக வெற்றி பெற்று வருகின்றனர்.உயர் கல்வி கற்பதிலும்,உயர் பதவிகள் வகிப்பதிலும் அவர்களின் ஈடுபாடு மிகையாகவே உள்ளது.
சுயசம்பாத்தியம் காரணமாக பிறரை சார்ந்திருக்க விரும்பாமலும்,பெண்களில் பலர்
இருப்பதை நடைமுறையில் பார்க்கிறோம்.சமுகம்,குடும்பம் இவைகளில் பெண்களுக்கென கடைபிடிக்கப்பட்டு வந்த கட்டுபாடுகளும் பெருமளவில் இப்போது தளர்ந்து போய் விட்டன.அதே சமயம் இன்னொரு புறம்,அநேக பெண்கள் திருமணமாகும் முன் பிற ஆண்களால் ஏமாற்ற்றபட்டு விடக்கூடிய ஆளாகின்ற
அவலங்களையும் நிறையவே,செய்திதாள்கள், தொலைக்காட்சி முலமாக நாம் அறிய முடிகிறது.
                    ஜோதிடரீதியாக இத்தகைய நிலைமைக்கு ஆளாகக்கூடிய பெண்கள் ஜாதகத்தில் கீழ்காணும் கிரக அமைப்புகள் இருப்பதை காண முடிகிறது .
                   1 . ஜாதகத்தில் குரு அமர்ந்த ராசிக்கு 1 ,5 ,7 ,9 ல் சனி,சுக்கிரன் சேர்ந்தோ அல்லது தனித்தனியே இருந்தாலும்,
2 . ஜாதகத்தில் சனி அமர்ந்த ராசிக்கு 1 ,3 ,7 ,10 ல் குரு,சுக்கிரன் சேர்ந்தோ அல்லது
தனித்தனியே இருந்தாலும்
3 . ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசிக்கு 1 ,7 ல் குரு,சனி சேர்ந்தோ அல்லது தனித்தனியே இருந்தாலும்
                இம்மூன்றுவிதமான கிரக அமைப்புகளில் ஏதேனுமொன்று பொருந்தி வந்தால் ஜாதகி,திருமணமாகும் முன் பிற ஆண்களால் ஏமாற்றப்பட்டு விடக்கூடிய
நிலைக்கு ஆளாக நேரிடும்.
     ஆகவே பெண்கள் ஜாதகத்தில் இத்தகைய கிரக அமைப்பு காணபட்டால் பெற்றோர்கள்,பெரியவர்கள் அவர்களை மிகவும் எச்சரிக்கையுடன் கட்டுபடுத்தி வளர்க்க முயற்சிக்க வேண்டியது அவசியமாகும்.அளவிற்கு அதிகமான சுதந்திரம்
கட்டுபாடற்ற தனிமை,பயணங்கள்,பொழுதுபோக்கு இவற்றில் பெண்களை கவனமுடன் கண்காணிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.

பின் குறிப்பு: லக்னாதிபதி வலுவுடன் இருந்தால் பாதிப்பு பெரியதாக இருக்காது.


1. பொதுநலவாதிகள் சித்தர்கள்,சுயநலவாதிகள் மாந்திரிகர்கள்
2 .கடவுள் சிலைகள் திருட்டு போவதற்கு காரணம் சரியான பிரதிஷ்ட்டை இல்லாமையே
3 .பாவம் செய்து விட்டு பயந்து ஓடுவது மனிதர்கள் மட்டுமல்ல,ஆவிகளும் தான்.
4 .தெய்வத்தை பார்க்க தயார்படுத்தும் நிலை ஆன்மிகம்,தெய்வத்தை பார்த்த நிலை ஞானம்.
5 .பிரணவம் என்பது அண்ட முழு நெருப்பு .
6 .கஷ்டம் சுலபமாக வரும்.நல்லது கஷ்டப்பட்டு தான் வரும் .
7 .கணக்கில்லாதது புண்ணியம்,கணக்குடையது கடன்.
8 .இருப்பது சக்தி,நிருபிக்க கிடைப்பது சித்தி.
9 .அதிசயம் எங்கு அதிகமோ? அங்கு அழிவும் அதிகம் இது நிச்சயம்.
10 .மனித சாட்சி மனிதன் உள்ளவரை தான் இருக்கும்.கடவுள் சாட்சி என்றும் இருக்கும் .
11 .அறுபடை வீடுகளில் ஒன்று மண்ணுள் புதையுண்டு இருக்கின்றது.இந்து மகாசமுத்திரத்தின் ஒரு பகுதியில் இது இருக்கிறது.அக்கோயில் 2010 ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளியில் தோன்றும்.
12 .2010 ஆம் ஆண்டு இறுதிக்குள் பூமி முழுக்க 7 நிமிடங்களுக்கு நிலநடுக்கம் ஏற்படும் .அச்சமயம் ஆப்ரிக்கா இரண்டாக உடைந்து நடுவில் கடல் வரும்.அப்போது
ஒரு யோகியின் சரித்திரம் வெளியே வரும் .அதன் மூலம் உண்மையான யோகிகள்
யார் என்று தெரியவரும்.
இது பாம்பாட்டி சித்தரின் அருள் வாக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னது.ஆனால் அவர் சொன்ன 2010 ஆம் ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அவர் சொன்ன நிலநடுக்கம் ஏற்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம் .


நேற்று நடந்த இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் உலக கோப்பை சூப்பர்- 8  சுற்றில் இந்தியா தனது இரண்டாவது தோல்வியை சந்தித்தது.
முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ,இந்திய அணியின் மோசமான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கை பயன்படுத்தி 169 குவித்தது.
பின்பு ஆடிய இந்திய அணியால் 9 விக்கெட்டுக்கு 155 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு மங்கியது.
இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது.12 .05 .2010 அன்று நடைபெறும் முதல்
போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வெல்ல வேண்டும் .
இரண்டாவது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் இருபது ரன் வித்தியாசத்தில் இலங்கை அணியை வெல்ல வேண்டும் .
இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்தால் , கீழ்க்கண்ட ஓவர்களில் வென்றாக
வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்படும்.
200----> 17.5 Overs
190----> 17.4 Overs
180----> 17.4 Overs
170----> 17.4 Overs
160----> 17.4 Overs
150----> 17.3 Overs
140----> 17.3 Overs
130----> 17.2 Overs
120----> 17.2 Overs
இந்திய அணி கட்டாயம் அரை இறுதியில் நுழையும் என்ற எதிர்பார்ப்புடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.


பிஜிங் சென்றுள்ள இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சீனாவுக்கு ஆதரவாக உள்துறை அமைச்சகத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அன்னிய நாட்டில், அந்த நாட்டுக்கு ஆதரவாக, சொந்த நாட்டை ஒரு அமைச்சரே விமர்சனம் செய்திருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பரில் கோப்பன்ஹேகனில் அதிகரித்து வரும் பூமி வெப்பம் தொடர்பான உச்சி மாநாடு நடந்தது. அதையடுத்து தற்போது சீனாவில் நடக்கும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள பெய்ஜிங் சென்றுள்ள ஜெய்ராம் ரமேஷ், ‘‘சீனாவால் நமக்கு ஆபத்து இருப்பதாக தேவையில்லாமல் உள்துறை அமைச்சகம் பயமுறுத்தி வருகிறது. சீனாவின் ஹூவேய் நிறுவனத்திடமிருந்து டெலிகாம் உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு பாதுகாப்பு காரணங்களை காட்டி தடை விதித்துள்ளது உள்துறை அமைச்சகம். இது தேவையில்லாத பயம். நல்லவேளை, இதனால் இரு தரப்பு உறவு பாதிக்கவில்லை. சுற்றுச்சூழல் தொடர்பாக சீனாவுடன் ஏன் பேச்சு நடத்த வேண்டும் என்கிறார்கள். உலகிலேயே அதிகம் கார்பன் வெளியிடும் நாடு சீனா. 23 சதவீதம். நாம் 5 சதவீதம்தான். கார்பன் வெளியிடுவதை சீனா குறைத்தால் அது ஆசியாவுக்கே நல்லது. அதனால்தான் பேச்சு நடத்துகிறோம். இதையும் உள்துறை அமைச்சகம் குறை கூறுகிறது. எதற்கெடுத்தாலும் சீனா மேல் உள்துறை அமைச்சகம் குறைகூறி, விமர்சனம் செய்வதால் இரு தரப்பு உறவே பாதிக்கிறது’’ என கூறியிருக்கிறார்.
இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் பால்பவுடரில் தொடங்கி, ஷாம்பூ, செல்போன், வாட்ச், கால்குலேட்டர், கம்ப்யூட்டர் வரை அனைத்தையும் பெரிய நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரித்து, இந்தியாவுக்குள் அனுப்பி வருகிறது சீனா. நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை என இந்தியாவை சுற்றியிருக்கும் நாடுகள் அனைத்தையும் தன் வசப்படுத்தி, இந்தியாவுக்கு எதிராக திருப்பி வருகிறது சீனா. இந்தியாவின் திபெத் கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்யும் சீனா, அருணாசல பிரதேசத்தின் பல ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவை தன்னுடையது எனக் கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இது எல்லாம் எல்லோருக்கும் தெரியும். ரமேஷுக்கும் தெரியும். இவ்வளவு செய்யும் சீனாவுக்கு ஆதரவாக, அன்னிய மண்ணில் உள்துறை அமைச்சகத்தை விமர்சனம் செய்திருப்பது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது.

வால் பையன் கமெண்ட் : ஏற்கனவே நமக்கும் சீனாவுக்கும் வாய்க்க தகராறு. இதில் நமது அமைச்சரே நம் நாட்டை பற்றி விமர்சனம் செய்திருப்பது கேலிக்குரிய செயல்.
இதை பிரதமர் கவனிப்பாரா?

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget