உலக கோப்பை டி20 இரண்டாவது அரைஇறுதிப் போட்டிநேற்று இரவு செயிட் லூசியாவில் நடந்தது. மழை காரணமாக போட்டி சற்று தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கை தேர்வு செய்தது. கம்ரன் அக்மல், சல்மான்பட் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இவர் கள் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சுகளை அடித்து நொறுக்கி ரன்களை சேர்த்தனர்.

இந்த ஜோடி 82 ரன்களை சேர்த்து வலு வான அடித்தளம் அமைத் தது. அணியின் ஸ்கோர் 82 ஆக இருந்தபோது ஜான்சன் பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து கம்ரன் அக்மல் (50) அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து உமர் அக்மல் களமிறங்கினார். இவரும் அண்ணன் கம்ரன் அக்மலைப்போல நிலைத்து நின்று விளாசினார். இவர் கடைசி வரை அவுட் ஆகாமல் 56 ரன் எடுத்தார்.
20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது.இந்த உலககோப்பை போட்டியில் இதுவரை அதிகபட்ச ஸ்கோர் 195, அதை நெருங்கும் அளவுக்கு நேற்று பாகிஸ்தான் அடித்து விளையாடியது.
அதன்பிறகு ஆஸ்திரேலியா களமிறங்கியது.வெற்றிக்கு 192 ரன் தேவை என்ற அதிக பட்ச ஸ்கோரை எட்டவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. 2 வது பந்தில் வார்னர் டக் அவுட் ஆனார். 16 ரன்னில் வாட்சன் அவுட் ஆனார். அணியின் ஸ்கோர் 26 ஆக இருந்தபோது தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வெளியேறினர்.
இதனால் மதில்மேல் இருந்த வெற்றிப்பூனை பாகிஸ்தானை நோக்கி திரும்பியது. இந்த நிலையில் கேமருன் ஒயிட், மைக் ஹஸ்சிஇருவரும் ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ஒயிட் 43 ரன்னில்ஆட்டமிழந்தார்.
7 விக்கெட்டுகளை இழந்திருந்தஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பதோ கடைசி ஓவர் மட்டும்தான். 6 பந்தில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி இல்லாவிட்டால் தோல்வி என்ற நிலையில் மைக்கேல் ஹஸ்சியும், ஜான்சனும் களத்தில் இருந்தனர். சுழல்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் கடைசி ஓவரை வீச வந்தார்.
முதல் பந்தை சந்தி த்த ஜான்சன் ஒரு ரன் எடுத் தார். இன்னும் 5 பந்தில் 17 ரன் தேவை என்ற நிலையில் 2வது பந்தை சந்தித்த ஹஸ்சி அட்டகாசமாக ஒரு சிக்சர் அடித் தார். 3வது பந்தையும் அவர் சிக்சருக்கு விரட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கு கிலி பிடித்துக்கொண்டது.
4வது பந்தை பவுண்டரிக்கு அடித்து ஸ்கோரை சமநிலைக்கு கொண்டு வந்தார். இப்போது இரு அணிகளின் ஸ்கோரும் 191 என்ற நிலையில் இருந்தது. 2 பந்தில் ஒரே ஒரு ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில் அஜ்ம லின் 5&வது பந்தில் ஹஸ்சி மீண்டும் இந்த ஓவரின் மூன்றாவது சிக்சரை அடிக்க ஆஸ்திரேலியாத்ரில் வெற்றி பெற்றது.19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா 197 ரன்களை எடுத்தது.
இந்த போட்டித்தொடரில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஹஸ்சி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் 3 விக்கெட்டுகளையும், அப்துர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும்,சயீத் அஜ்மல், அப்ரிடி தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கடந்த உலக கோப்பை சாம்பியனான பாகிஸ் தான் அரை இறுதியில் அபாரமாக ஆடியும் தோல்வியை சந்தித்து இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. முன்னதாக முதல் அரை இறுதியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது
இறுதிபோட்டி: அரைஇறுதி போட்டிகள் நிறைவு பெற்று உள்ள நிலையில் இன்று போட்டிகள் கிடையாது. நாளை இரவு பார்படாசில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதுகிறது.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget