நேற்று நடந்த இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் உலக கோப்பை சூப்பர்- 8  சுற்றில் இந்தியா தனது இரண்டாவது தோல்வியை சந்தித்தது.
முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ,இந்திய அணியின் மோசமான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கை பயன்படுத்தி 169 குவித்தது.
பின்பு ஆடிய இந்திய அணியால் 9 விக்கெட்டுக்கு 155 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு மங்கியது.
இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது.12 .05 .2010 அன்று நடைபெறும் முதல்
போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வெல்ல வேண்டும் .
இரண்டாவது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் இருபது ரன் வித்தியாசத்தில் இலங்கை அணியை வெல்ல வேண்டும் .
இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்தால் , கீழ்க்கண்ட ஓவர்களில் வென்றாக
வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்படும்.
200----> 17.5 Overs
190----> 17.4 Overs
180----> 17.4 Overs
170----> 17.4 Overs
160----> 17.4 Overs
150----> 17.3 Overs
140----> 17.3 Overs
130----> 17.2 Overs
120----> 17.2 Overs
இந்திய அணி கட்டாயம் அரை இறுதியில் நுழையும் என்ற எதிர்பார்ப்புடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.

1 comments:

  1. IPL உள்ளவரை இந்திய அணி விளங்காது

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget