1. பொதுநலவாதிகள் சித்தர்கள்,சுயநலவாதிகள் மாந்திரிகர்கள்
2 .கடவுள் சிலைகள் திருட்டு போவதற்கு காரணம் சரியான பிரதிஷ்ட்டை இல்லாமையே
3 .பாவம் செய்து விட்டு பயந்து ஓடுவது மனிதர்கள் மட்டுமல்ல,ஆவிகளும் தான்.
4 .தெய்வத்தை பார்க்க தயார்படுத்தும் நிலை ஆன்மிகம்,தெய்வத்தை பார்த்த நிலை ஞானம்.
5 .பிரணவம் என்பது அண்ட முழு நெருப்பு .
6 .கஷ்டம் சுலபமாக வரும்.நல்லது கஷ்டப்பட்டு தான் வரும் .
7 .கணக்கில்லாதது புண்ணியம்,கணக்குடையது கடன்.
8 .இருப்பது சக்தி,நிருபிக்க கிடைப்பது சித்தி.
9 .அதிசயம் எங்கு அதிகமோ? அங்கு அழிவும் அதிகம் இது நிச்சயம்.
10 .மனித சாட்சி மனிதன் உள்ளவரை தான் இருக்கும்.கடவுள் சாட்சி என்றும் இருக்கும் .
11 .அறுபடை வீடுகளில் ஒன்று மண்ணுள் புதையுண்டு இருக்கின்றது.இந்து மகாசமுத்திரத்தின் ஒரு பகுதியில் இது இருக்கிறது.அக்கோயில் 2010 ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளியில் தோன்றும்.
12 .2010 ஆம் ஆண்டு இறுதிக்குள் பூமி முழுக்க 7 நிமிடங்களுக்கு நிலநடுக்கம் ஏற்படும் .அச்சமயம் ஆப்ரிக்கா இரண்டாக உடைந்து நடுவில் கடல் வரும்.அப்போது
ஒரு யோகியின் சரித்திரம் வெளியே வரும் .அதன் மூலம் உண்மையான யோகிகள்
யார் என்று தெரியவரும்.
இது பாம்பாட்டி சித்தரின் அருள் வாக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னது.ஆனால் அவர் சொன்ன 2010 ஆம் ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அவர் சொன்ன நிலநடுக்கம் ஏற்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம் .

1 comments:

  1. Anon says:

    Sir, any idea whether an Arupadai temple surfaced in 2010? Thanks

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget