இந்திய திருநாட்டின் கலாச்சாரத்தை மற்ற நாடுகள் கண்டு ஆச்சரியப்படும் அளவிற்கும், மற்ற நாட்டு மக்கள் நம் நாட்டில் வாழ விருப்பபடுவதற்கும் நமது வாழ்க்கை நிலையே காரணம்.
   நம் நாட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள். பலதரப்பட்டமக்கள் வாழும் இந்நாட்டில்
ஸ்ரீ ராமனைபோல வாழும்ஆண்மகனுக்கு மற்றவர்கள் மத்தியில் மதிப்பும்,
மரியாதையும் உண்டு.ராமனைபோல வாழ்க்கை நடத்த நமதுவிதி ஒத்து
வந்தால் தான் நாம் வாழமுடியும்.நவகோள்களின் அருளால் மண்ணுலகம்
ஜீவிக்கும்.நமக்கு கிரகங்கள் சாதகமற்று இருந்தால் பல தீயபழக்கங்களிலும்,ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் செய்ய
நேரிடுகிறது .
   ஜோதிடரீதியாக,ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் அமைப்பு யாருக்கு உண்டாகிறது என பார்ப்போம்.
          ஜென்ம லக்னத்திற்கு 2 ஆம் வீட்டை வைத்து குடும்ப வாழ்க்கை பற்றியும் 7 ஆம் வீட்டை வைத்து மனைவி அல்லது கணவனை  பற்றி மிக தெளிவாக கூற முடியும்.
     ஜென்ம லக்னத்திற்கு 2 ,7 ஆம் வீடுகள் பலம் பெற்று அசுபர் சேர்க்கை இல்லாமல் இருந்தால் அமைதியான திருமணவாழ்க்கை உண்டாகிறது.
ஜென்ம லக்னத்திற்கு 2 ,7 க்கு அதிபதிகள் ஆட்சி,உச்சம்,திக் பலம் பெற்ற கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருந்துஅசுபர்  சேர்க்கை இல்லாமல் இருந்தால் ஒரு தாரம் உண்டாகிறது.அதுபோல் 2 ,7 க்கு அதிபதிகள் கேந்திர,திரிகோண ஸ்தானத்தில் இருந்தாலும் ஒரு தாரம் உண்டாகிறது.
    7 ஆம் அதிபதி சுபகிரகமாக இருந்து குரு சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருந்தால் ஒரு மனைவி ஏற்படுகிறது.குரு புதன் இணைந்து நவாம்சத்தில் சூரியன் வீடான சிம்மதிலோ,செவ்வாய் வீடான மேஷம்,விருச்சிகத்திலோ இருந்தால் ஒரு மனைவி மட்டுமே உண்டாகிறது.7ஆம்வீடு குருவீடாக இருந்து குரு ஏழாம்வீட்டை
பார்வை செய்தால்  ஒரு தாரம் உண்டாகிறது.புதன் ஜென்ம லக்னத்திற்கு
 7 ஆம் வீட்டில் இருந்து நவாம்சத்தில் குரு வீட்டில் அமைந்தாலும் ஒரு தாரம் உண்டாகிறது
         நவகிரகங்களில் முக்கிய கிரகமான சூரியன்,சந்திரன் இணைந்து ஜென்ம லக்னத்தில் இருந்தாலும் 6 ,12 ல் அமைந்து இருந்தாலும்  ஒரு தாரம் உண்டாகிறது.
அதுபோல சூரியன் 6 ,12 ம் வீட்டில் இருந்தால் ஒரு தாரம் உண்டாகிறது.
       களத்திரஸ்தானமான7ஆம்அதிபதிஅசுபகிரகசேர்க்கைஇன்றி நவாம்சத்தில்
சூரியன்வீடானசிம்மதிலோ,அல்லதுசெவ்வாய் வீடான  மேஷம்,
விருச்சிகத்திலோஅமைந்தால்  ஒருதாரம்உண்டாகிறது.அதுபோல
7ஆம்வீடுசிம்மம்,விருச்சிகம்,மீனமாக அமையும் ஜாதகருக்கு ஒரு தாரம் மட்டும் உண்டாகிறது.
        மேலும்  7 ஆம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பாவகிரகங்கள் இணைந்து அமைந்து இருப்பதும்,7 ஆம் அதிபதி ஒன்றுக்கு மேற்பட்ட பாவிகள் சேர்க்கை பெற்று இருப்பதும்,களத்திரகாரகன் சுக்கிரன் ஒன்றுக்கு மேற்பட்ட பாவிகள் சேர்க்கை பெற்று இருப்பதும் நல்லது அல்ல.கிரக சேர்க்கை எவ்வகையாக இருந்தாலும் பொன்னவன் என்று போற்றப்படும் குருபகவானின் பார்வை 7 ஆம் வீட்டிற்கோ,7 ஆம் அதிபதிக்கோ கிடைக்க பெற்றால் நல்லது உண்டாகிறது.
      வாசகர்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்தும்!
                                           அன்புடன் ஜோதிடர் மதி

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget