விழிப்புணர்வுக்கும் சுத்தத்துக்கும் பெயர்பெற்றவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கேரள மக்கள். ஆனால் அங்குதான் கொடிய நோய்கள் அணிவகுக்கின்றன. இப்போது பன்றிக் காய்ச்சல் மிரட்டிக்கொண்டு இருக்கிறது. இதைத்தவிர டெங்கு, மலேரியா, நிமோனியா, எலிக்காய்ச்சல் என்று வகைவகையான நோய்கள் முளைத்துள்ளன. ஈரமும் குளிர்ச்சியும் பரவிக் கிடக்கும் பருவமழைக் காலத்தில் நோய் பெருக்கம் சாதாரணமானதுதான் என சொல்லி மாநில நிர்வாகம் இதன் தீவிரத்தை நீர்த்துப்போக செய்கிறது. சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீமதி டீச்சர் இன்னும் ஒருபடி மேலே போய், ‘20 பேருக்கு லேசாக காய்ச்சல், பத்திரிகைகள்தான் இதை பெரிதுபடுத்துகின்றன’ என்று கூறியிருந்தார். ஆனால் பன்றிக்காய்ச்சலுக்கு அங்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். இதில் 6 பேர் கர்ப்பிணிகள். அரசு, தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்த நேரத்தில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பணிமாற்றம் செய்யப்பட்ட பிரச்னையால், ஆஸ்பத்திரிகளில் போதுமான டாக்டர்கள் இல்லை. நோயாளிகள் படும் அவதிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
நிலைமை கட்டுமீறி போவதை அறிந்த கேரள அரசு பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசின் உதவியை நாடியது. மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கேரளா வந்து ஆய்வு நடத்தினர். பன்றிக் காய்ச்சல் வைரஸ் கேரளத்தில் இப்போதும் அதிகமாக உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மூலம் இது கட்டுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.
மிக நெருக்கத்தில் உள்ள மாநிலம் என்பதால் தமிழகத்துக்கும் பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவும் அபாயம் இருக்கிறது. ஆனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதகதியில் எடுத்து வருகிறது. கேரள&தமிழக எல்லை மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேற்கு கடற்கரையில் இப்போது மீன்பிடி தடை காலம். எனவே கேரள பகுதியில் முகாமிட்டிருந்த குமரி மாவட்ட மீனவர்கள் ஊருக்கு திரும்பி வருகின்றனர். இவர்கள் மூலம் நோய் தொற்று பரவாமல் இருக்க கிராமம் கிராமமாக சென்று அதிகாரிகள் அவர்களிடம் ரத்தப்பரிசோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு, பயணிகள் யாருக்காவது பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என மருத்துவ பரிசோதனை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த வேகமான நடவடிக்கை பாராட்டத்தக்கது. வருமுன் காப்பதுதான் அனைத்து விஷயங்களுக்கும் நல்ல தீர்வு.


 அமெரிக்காவில் ஒரு கைதியை சுட்டு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர். அந்த நாட்டில் வழக்கமாக இப்படி செய்வதில்லை. தூக்கில் தொங்கவிடுவது, ஊசி மூலம் ரத்தக் குழாயில் விஷம் செலுத்துவது, நாற்காலியில் கட்டி மின்சாரம் பாய்ச்சுவது, அறைக்குள் பூட்டி விஷ வாயு செலுத்துவது போன்ற முறைகளை கையாள்வார்கள்.
தீர்ப்பு சொன்ன பிறகு 30 வருடமாக அந்த ஆள் ஜெயிலில் இருந்திருக்கிறான். கொடூரமான கொலைகாரன். சிறு வயதில் பெற்றோரை இழந்தவன்; வளர்த்தவர்களின் சித்திரவதையால் அவன் மனம் கல்லாகிவிட்டது என்று ஒரு காரணம் சொல்லி தண்டனையை நிறுத்த கடைசி நிமிடத்திலும் முயற்சி நடந்தது. பலனில்லை.
மரண தண்டனைக்கு எதிராக போராடும் அமைப்புகளுக்கு இந்த நிகழ்ச்சி கைகொடுக்கும். ஏற்கனவே அங்கு 14 மாநிலங்களில் அதை ஒழித்துவிட்டனர். மீதி 36ல் சென்ற வருடம் 52 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கொலை குற்றத்துக்கு 58 நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 95 நாடுகள் அதை கைவிட்டுள்ளன. அரிதாக கொல்பவை ஏனைய நாடுகள். இந்தியாவை அதில் சேர்க்கலாம். சென்ற 15 ஆண்டுகளில் ஒருவர்தான் தூக்கில் போடப்பட்டார். சீனாவில் ஆண்டுக்கு ஆயிரம் பேருக்கு குறைவில்லை. பெரும்பாலும் சுட்டுத் தள்ளுவதுதான்.
ஒரு காலத்தில் தெரு கம்பத்தில் கட்டி வைத்து அரை மணிக்கு ஒரு துண்டு வீதம் கொஞ்சம் கொஞ்சமாக கத்தியால் சீவுவார்கள். கழுமரம் ஏற்றுவது, சக்கரத்தில் கட்டி உடலை கிழிப்பது, சிலுவையில் அறைவது, பானையில் போட்டு வேக வைப்பது, ஓடவிட்டு கல்லால் அடிப்பது, வெடி மருந்தை உடலில் பூசி கொளுத்துவது.. இன்னும் பல வகையான வழிகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி திருப்தி அடைந்திருக்கிறது மனித சமூகம். சமீப சரித்திரத்தில் ராணுவத்தை விட்டு ஓடிப்போன ஒன்றரை லட்சம் பேருக்கு மரண தண்டனையை துப்பாக்கிகளால் நிறைவேற்றியது சோவியத் யூனியன்.
கொடிய குற்றங்கள் குறைய இந்த தண்டனை இருந்தாக வேண்டும் என நம்புபவர்கள் அதிகம். சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளும் விதிவிலக்கல்ல. இன்றைய தேதியில் உலகெங்கும் 17,000+ கைதிகள் மரணத்தை எதிர்நோக்கி ஒவ்வொரு நிமிடத்தையும் உளைச்சலுடன் கடக்கின்றனர். அதைவிட பெரிய தண்டனை வேறில்லை.



 

 மேஷம்:

மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக் கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.


ரிஷபம்:

ரிஷபம்: பழைய நண்பர்கள் உதவுவார்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


மிதுனம்:

மிதுனம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீகச் சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.


கடகம்:

கடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  சிம்மம்:

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பூரம் நட்சத்திரக்காரர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். வியாபாரத்தில் புது முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உத்யோகத்தில் மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.


கன்னி:

கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். உடன்பிறந்தவர்களுடன் விவாதம் வந்துபோகும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


துலாம்:

துலாம்: அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


விருச்சிகம்:

விருச்சிகம்: நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். பழைய சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். சாதிக்கும் நாள்.


தனுசு:

தனுசு: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பழைய சிக்கல்கள் தீரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.


மகரம்:

மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். போராட்டமான நாள்.


கும்பம் :

கும்பம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.


மீனம்:

மீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.


                 
                                         ஜுன் - 2010 - June
சனி நல்ல நேரம் 7.00 - 8.00
19 எமகண்டம்: 1.30 - 3.00
* விக்ருதி வருடம் ஆனி மாதம் 5ம் தேதி, ரஜப் 6.
*  19-06-2010  சனிக்கிழமை, இன்று இரவு 12.04 வரை அஷ்டமி திதி, அதன்பின் நவமி திதி. இன்று இரவு 11.40 வரை உத்திரம் நட்சத்திரம், அதன்பின் அஸ்தம் நட்சத்திரம். இன்று  முழுவதும் மரணயோகம்.
* குளிகை: காலை 6.00 முதல் 7.30 வரை
* சூலம்: கிழக்கு * பரிகாரம்: தயிர்
* பொது:  ஆனி உத்திர தரிசனம். ஸ்ரீவி. பெரியாழ்வார் தண்டியலில் காட்சியருளல். திருக்கோளக்குடி சுவாமி பூத வாகனத்திலும் அம்பாள் கேடயத்திலும் பவனி. திருப்பரங்குன்றம் ஆண்டவர் ஊஞ்சலில் காட்சியருளல்.
சந்திராஷ்டமம் :சதயம் ,பூரட்டாதி இந்த நட்சத்திரகாரர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்

இராகு காலம்: 9.00 - 10.30  


 இந்தியாவில் பல பள்ளிகள் தண்டனைக் கூடங்களாகத்தான் உள்ளன. பள்ளிக்கு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து போக வேண்டும். ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது. மிரண்டு, அரண்டு, அழுது, ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். கடுமையான முகத்தோடும் பிரம்போடும் நிற்கும் சில ஆசிரியர்களே இதற்கு காரணம்.
பள்ளியில் குழந்தைகளை வதைக்கும் பல சம்பவங்கள் சென்னையிலும் நடந்திருக்கின்றன. பரீட்சை அட்டையால் ஒரு வாத்தியார் சிறுவனின் மண்டையை பிளந்திருக்கிறார். பிரம்படியில் ஒரு சிறுமியின் கண் பாதிக்கப்பட்டு இருக்கிறது. டீச்சர் திட்டியதால் மனம் உடைந்து ஐந்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து இறந்த பரிதாபமும் நடந்திருக்கிறது. குழந்தை மனோவியல் பற்றி அரிச்சுவடி அளவுக்குக்கூட அறிவில்லாத ஆசிரியர்களின் மூர்க¢கத்தனத்தால் நடக்கும் சம்பவங்கள் இவை. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர்களை உடல்ரீதியில் துன்புறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் இவர்களுக்கு தெரியாது.
கொல்கத்தாவில் பிரின்சிபால் அடித்ததால் 13 வயது பள்ளி மாணவன் ஒருவன் சமீபத்தில் தற்கொலை செய்திருக்கிறான். தேசிய அளவில் இப் பிரச்னை சர்ச்சையாகி இருக்கிறது. இதுதொடர்பாக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையத்தின் (என்சிபிசிஆர்) தலைவர் சாந்தா சின்காவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் சந்தித்து பேசியுள்ளார்.
‘சிறுவர்கள் விலைமதிக்க முடியாத சொத்து. தேசத்தின் எதிர்காலம் அவர்களிடம்தான் உள்ளது. பள்ளிகளில் குழந்தைகளை அடித்து துவம்சம் செய்வதன் மூலம் இந்த சொத்தை நாசப்படுத்தி விடக்கூடாது’ என கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் மாணவர்களை அடித்து துன்புறுத்துவதை தடுககும் வகையிலஎன்சிபிசிஆர் 2007ல் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டிருககிறது. ஆனால் மாணவர்கள் உதைபடுவதை தடுக¢கும் அளவுக¢கு இதன் விதிகள் போதுமானதாக இல்லை. இனி கடுமையான வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டுவரப்படும் என கபில்சிபல் கூறியிருக்கிறார்..
நவீன காலத்தின் இந்த காட்டுமிராண்டி செயலை தடுப்பதற்கு இது அத்தியாவசியம்



மேஷம் :
மேஷம்:புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் இழுபறி விஷயங்கள் முடிவுக்கு வரும். அலட்சியம், மன அழுத்தம் நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். குடும்பத்தில் இனி அமைதி நிலவும். மனைவி உடல்நலம் கூடும். வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும். மகனின் உயர்கல்விக்காக அலைய வேண்டியிருக்கும். மூத்த சகோதரர் தேவையறிந்து உதவுவார். வாங்கிய கடனை வட்டியோடு அடைப்பீர்கள். ராசிக்கு 3ல் கேது வலுவாக இருப்பதால் மனச்சோர்வு நீங்கும். எதிர்பார்க்கும் பணம் கைக்கு வந்து சேரும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயமுண்டு. கன்னிப் பெண்களே தாயாருடன் அடிக்கடி சண்டையிடாதீர்கள். நல்ல மணமகன் வந்தமைவார். 5ல் செவ்வாய் நிற்பதால் உறவினர்கள், நண்பர்களுடன் கருத்துமோதல் ஏற்படும். 6ல் சனி வலுவாக இருப்பதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் இல்ல சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அண்டை மாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ராகு 9ல் நிற்பதாலும், பிதுர்காரகன் சூரியன் கேதுவுடன் சேர்ந்திருப்பதாலும் தந்தையின் உடல்நலம் பாதிக்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றிக் கொள்ளுங்கள். அரசாங்க விஷயங்களில் அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகள் தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் தலைமையிடம் தெரிவித்து விடுங்கள். குருபகவான் 12ல் மறைந்திருந்தாலும் விரயம் இல்லாமல் வீடு கட்டுவது, திருமணம் செய்வது போன்ற சுபச் செலவுகள் வரக்கூடும்.  வியாபாரத்தில் சுறுசுறுப்பாவீர்கள். வேலையாட்களின் பிடிவாதம் தளரும். கூட்டுத் தொழிலில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். கணினி துறையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களே புதிய கோணத்தில் திறமைகளை வெளிப்படுத்துங்கள். அயல்நாட்டு நிறுவனங்கள் வாய்ப்பு தரும். விவசாயிகளே, நல்ல விளைச்சலால் வங்கிக் கடனை ஓரளவு அடைத்து விடுவீர்கள். தொட்ட காரியம் துலங்கும் மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 15, 20, 21, 28, 29, 30, ஜூலை 1, 2, 9, 11, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 23ந் தேதி மதியம் 2.30 மணி முதல் 24, 25ந் தேதி இரவு 7.36 மணி வரை யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள்.
பரிகாரம்:
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆவூர் பசுபதி கோயிலில் அருள்பாலிக்கும் பஞ்சபைரவர்களையும் தரிசியுங்கள். முதியோர் இல்லத்திற்கு சென்று உதவி செய்யுங்கள்.


ரிஷபம் :

ரிஷபம்:பூர்வபுண்யாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் அவர்கள் விரும்பிய உயர் கல்வி திட்டத்தில் சேர்வார்கள். பணவரவால் கடன் பிரச்னைகள் தீரும். தடைபட்டிருந்த தங்கையின் திருமணத்தை தடபுடலாக நடத்துவீர்கள். வீட்டிற்குத் தேவையான டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷின் வாங்குவீர்கள். 2ல் சூரியன் கேதுவுடன் நிற்பதால் பெற்றோர் உடல்நலம் பாதிக்கும். கண்வலி, பணத்தட்டுப்பாடு, வீண் விவாதம் வரக்கூடும்.
ராசிக்கு 11ம் வீட்டில் குரு தொடர்வதால் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ராசிநாதன் சுக்கிரன் பகை வீடுகளில் செல்வதால் சிலசமயம் எதிர்மறை சிந்தனை, வாகனப் பழுது, செலவு என வந்துபோகும். தாய்வழி உறவினரிடம் மனத்தாங்கல் வெடிக்கும். ஆனால், சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்லும்போது தைரியம் பிறக்கும். வீடு கட்டி முடிப்பீர்கள். கன்னிப் பெண்கள் முன் கோபத்தைக் குறைத்து பெற்றோரின் சொல் கேட்டு நடப்பது நல்லது. கனவுத்தொல்லை, வயிற்றுக் கோளாறு நீங்கும்.  அரசு காரியங்களில் இருந்து வந்த முடக்கம் விலகும். பூர்வீகச் சொத்தை மாற்றி புதுச் சொத்து வாங்குவீர்கள். வெளிநாடு, வெளிமாநிலத்தாரால் ஆதாயம் உண்டு. ராசிக்கு 11ல் கேது வலுவாக இருப்பதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தலைமையிடம் புகார் சொன்னவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்கள். மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.
வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். உத்யோகத்தில் மகிழ்ச்சி தங்கும். கலைஞர்கள் சிந்தித்து செயல்படுவார்கள். சம்பளபாக்கி வந்து சேரும். விவசாயிகளின் எண்ணங்கள் பூர்த்தியாகும். பழுதடைந்த மோட்டார் பம்புசெட்டை மாற்றுவீர்கள். நீர்வரத்து அதிகரிக்கும். எதிலும் புதுமையை புகுத்தி ஆச்சரியப்படுத்தும் மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 15, 16, 18, 20, 21, 22, 24, 30, ஜூலை 1, 2, 3, 4, 5, 11, 13, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 25ந் தேதி இரவு 7.36 மணி முதல் 26, 27 ஆகிய தேதிகளில் அவசர முடிவுகளை தவிர்க்கவும்
பரிகாரம்:
மதுரை மீனாட்சி அம்மனை வணங்குங்கள். கட்டடத் தொழிலாளர்களுக்கு உதவுங்கள்.

மிதுனம் :

மிதுனம்:உங்கள் ராசியின் 3ம் வீட்டில் செவ்வாய் செல்வதால் தடைகளை மீறி வெற்றியே  கிட்டும்.  கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். பேச்சில் மிடுக்கு தெரியும். அழகு, இளமை கூடும். பிள்ளைகளால் பெருமை உண்டு. மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை புதிதாக வாங்குவீர்கள். தாயாருடன் விவாதம் வேண்டாம். தவறாகப் பேசிய உறவினர்கள் இனி உங்களைப்பற்றி பெருமையாக பேசுவார்கள். ராசிநாதன் புதன் 12ல் மறைந்திருந்து அலைச்சல், வேலைச்சுமைகளை தந்தாரே, ஜூன் 16ந் தேதி முதல் ஆட்சி பெறுவதால் தெளிவாக முடிவெடுப்பீர்கள். கன்னிப் பெண்களுக்கு தடைபட்ட கல்யாணம் கூடி வரும். உடல் நலம் திருப்திகரமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து, சேமிக்கத் தொடங்குவீர்கள். ராசிக்கு 4ல் சனி நிற்பதால் தாயாரின் உடல்நலம் பாதிக்கும். தாய்வழி உறவினர்களிடையே வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். வீட்டில் கழிவுநீர், குடிநீர் பிரச்னைகள் வரலாம். ராசிக்கு 10ல் குரு நுழைவதால் டென்ஷன், வயிற்றுக்கோளாறு, வீண் பகை வந்து நீங்கும். அரசு காரியங்கள் தடைபட்டு முடியும். சிலருக்கு உதவப்போய் வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். மாணவர்கள் உயர்கல்வியில் போராடி இடம் பிடிப்பார்கள்.  வியாபாரத்தில் அதிரடி மாற்றங்களை நிகழ்த்துவீர்கள். புது சலுகைகளால் வாடிக்கையாளர் வருகை அதிகமாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களின் ஆலோனைகளை ஏற்பார். கண் எரிச்சல், தூக்கமின்மை வந்துபோகும். கலைஞர்களின் சம்பளப்பாக்கி கைக்கு வந்து சேரும். எதிர்பார்த்திருந்த புதிய வாய்ப்புகள் தேடி வரும். விவசாயிகளின் கனவுகள் நனவாகும். அடகிலிருந்த பொருட்களை மீட்பீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டி திட்டமிட்டபடி
காரியங்களை முடித்துக்காட்டும் மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 15, 16, 17, 18, 19, 20, 24, 25, 27, ஜூலை 4, 5, 6, 7, 14, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 28, 29, 30ந் தேதி மாலை 6.20 மணி வரை அவசர முடிவுகளை எடுக்காதீர்கள்.
பரிகாரம்:
சென்னை-மாடம்பாக்கம் தேனு புரீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் சரபேஸ்வரரை தரிசியுங்கள். நீர்மோர் விநியோகம் செய்யுங்கள்.

கடகம் :

கடகம்:சுக்கிரன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் எதிர்பாராத பணவரவு திக்குமுக்காட வைக்கும். இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்னைகள் சுமுகமாகத் தீரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் வெகுநாள் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த
படியே நல்ல வரன் வந்தமையும். 2ல் செவ்வாய் அமர்ந்திருப்பதால் சில நேரங்களில் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று பேசி
விடுவீர்கள்.   ராசிக்கு 6ம் வீட்டில் நிற்கும் ராகுவும், 3ல் நிற்கும் சனியும் பலமாக இருப்பதால் எந்தப் பிரச்னையையும் எளிதாக சமாளித்துவிடுவீர்கள். எதிரிகள்கூட நண்பராவார்கள். அ¬ரகுறையாக நின்ற கட்டட வேலைகள் இனி விரைவாக முடியும். கன்னிப் பெண்களே வெகுளித்தனமாக பேசுவதை குறையுங்கள். தாயாரின் ஆதரவு உண்டு. அரசு காரியங்களில் கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் வெற்றி காண்பீர்கள். புது வாகனத்தில் வலம் வருவீர்கள். பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தும் பயனில்லையே என வருந்தினீர்களே, இனி வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.
ராசிக்கு 9ம் வீட்டில் குரு சாதகமாக இருப்பதால் வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். தாயாரின் உடல்நிலை சீராகும். இழுபறி வழக்குகளில் சாதக மாற்றம் ஏற்படும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் நட்பு வட்டம் விரிவடையும். 12ம் வீட்டில் சூரியன் நிற்பதால் தூக்கமின்மை, அடுத்தடுத்து வேலை, விரயச் செலவு, அலைச்சல் வரக்கூடும். ஆன்மிக காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்வார்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மனப்போர் நீங்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும். விவசாயிகளுக்கு விளைச்சல் இரட்டிப்பாகும். சொன்ன சொல்லை நிறைவேற்றும் மாதமிது.
.
ராசியான எண்கள்:
ஜூன் 18, 19, 20, 21, 26, 27, 29, ஜூலை 6, 7, 9, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 30ந் தேதி மாலை 6.20 மணி முதல் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நிதானமாக செயல்படுங்கள்.
பரிகாரம்:
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் அருளும் துர்க்கையை வழிபடுங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

சிம்மம் :

சிம்மம்:சாதகமான வீடுகளில் செல்வதால் புத்திசாலித்தனம், வாக்குசாதுர்யம் கூடும். வி.ஐ.பிகள் நட்பால் புதிய திருப்பங்கள் ஏற்படும். வாழ்க்கையில் திடீர் நல்ல திருப்பங்கள் வந்து திகைக்கச் செய்யும். கணவன்-மனைவிக்குள் சிக்கலெல்லாம் நீங்கி மனம்விட்டுப் பேசுவீர்கள். உங்களிடம் பணம் வாங்கியவர்கள், வட்டியையும் அசலையும் சேர்த்துத் தருவார்கள். பாதச்சனி தொடர்வதால் கண் எரிச்சல், உடல் உஷ்ணம் வரக்கூடும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கல்யாணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் என வீடு களைகட்டும். பழைய டிவி, மிக்ஸியை மாற்றுவீர்கள். 5ல் ராகு நிற்பதால் பிடிவாதமாக நடந்து கொள்ளும் பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். மகனின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவப் பதவி கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும். தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். கசந்த காதல் இனிக்கும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வாருங்கள். ராசிக்கு 8ல் குரு நிற்பதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் அதிகரிக்கும். யாரையும் குறை சொல்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது.
உங்கள் ராசிநாதன் 11ல் வலுவாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டாகும். அரசால் நன்மை பிறக்கும். ஆனால் கேதுவுடன் சேர்ந்திருப்பதால் வேலைச்சுமை, முன்கோபம் அதிகரிக்கும். 11ல் நிற்கும் கேதுவால் ஆன்மிகவாதிகளின் ஆசியைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவார்கள். மாணவர்களுக்கு நல்ல கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.  வியாபாரத்தில் கடையை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்திற்கு மாற்றுவீர்கள். கெமிக்கல், மருந்து சம்பந்தமான தொழிலில் நல்ல லாபம் உண்டு. உத்யோகத்தில் கடினமான பணிகளை செய்து முடித்து மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல சம்பளத்தில் வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் உண்டு. வங்கிக் கடனை பைசல் செய்வீர்கள். அனுபவ அறிவால் தடைகளை உடைத்தெறியும் மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 20, 21, 22, 28, 29, 30, ஜூலை 9, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூலை 3, 4, 5ந் தேதி மாலை 4.30 மணி வரை அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.
பரிகாரம்:
மதுரைக்கு அருகிலுள்ள திருமோகூர் சக்கரத்தாழ்வாரை தரிசியுங்கள். அன்ன தானம் செய்யுங்கள்.

கன்னி :

கன்னி:குருபகவான் 7ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் சோர்வு, மன உளைச்சல் அகலும். அழகு, அறிவு கூடும். சாதுர்யமான பேச்சால் காரியங்களை எளிதாக முடிப்பீர்கள். வற்றிய பணப்பை நிரம்பும். கணவன்-மனைவி ஒருவரையொருவர் புரிந்து கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து, சேமிப்பை கூட்டுவீர்கள். ஜென்ம சனியால் மனக்கவலை, முதுகு, மூட்டுவலி வரக்கூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். 4ல் ராகு நிற்பதால் வீண் அலைச்சல், டென்ஷன், தாயாருடன் மனஸ்தாபம் வரக்கூடும்.
யோகாதிபதி சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வருங்காலம் பற்றிய முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கன்னிப் பெண்களுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். காதல் கைகூடும். தந்தைவழி உறவினர்களால் அதிரடி மாற்றங்கள் நிகழும். 12ல் செவ்வாய் நிற்பதால் சகோதர வகையில் பிரச்னை வரக்கூடும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். அரசு சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் சிக்கல்கள் நீங்கும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று நீண்டநாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். 10ல் இருக்கும் கேதுவால் மன உளைச்சல், முன்கோபம் வந்து நீங்கும். ஆனால் 10ல் சூரியனும் இருப்பதால் புது வேலை, கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவார்கள். மாணவர்கள்  சுறுசுறுப்பாவார்கள்.வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் திறமையை கண்டு வியப்பார். பதவி உயர்வு உண்டு. கலைத்துறையினர் பற்றிய கிசுகிசுக்கள் ஓயும். எதிர்பார்த்தபடி நல்ல நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் உண்டு. அடகிலிருந்த பொருட்களை மீட்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு இழுபறியான வேலைகளை முடிக்கும் மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 15, 16, 22, 23, 24, 25, ஜூலை 1, 2, 3, 4, 11, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூலை 5ந் தேதி மாலை 4.30 மணி முதல் 6, 7 ஆகிய தேதிகளில் பொறுமையுடன் செயல்படுங்கள்.
பரிகாரம்:
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள சூரியனார் கோயில் சூரிய பகவானை வணங்குங்கள். வீட்டு மாடியில் பறவைகளுக்காக குடிக்க தண்ணீர் வையுங்கள்.

துலாம் :

துலாம்:ராசிக்கு 8ல் மறைந்து கொண்டு யோசிக்க விடாமல், மழுங்கடித்துக் கொண்டிருக்கும் பாக்யாதிபதி புதன், ஜூன் 16ந் தேதி முதல் ராசிக்கு 9ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். பால்ய நண்பர்கள், உறவினர்களுடன் இருந்த பகையெல்லாம் விலகும்.  வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் எடுப்பீர்கள். குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை ஓரங்கட்டுவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். இழுபறி வழக்குகள் சாதகமாகும். ராசிக்கு 3ல் ராகு வலுவாக இருப்பதால் வேற்று மொழியினர் உதவுவார்கள். புதிய சிந்தனைகள் பிறக்கும்.
  ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். குழந்தை
இல்லாதோருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். கன்னிப் பெண்கள் பெற்றோரின் பேச்சைக் கேட்டு செயல்படுவார்கள். உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். புதிய வாகன யோகம் உண்டு. ராசிக்கு 6ல் குரு தொடர்வதால் வீண் டென்ஷன், அலைச்சல், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல் என வரக்கூடும்.
 ராசிக்கு 11ம் வீட்டில் செவ்வாய் வலுவாக இருப்பதால் சகோதர, சகோதரியின் திருமணம் கைகூடும். பூர்வீகச் சொத்து பிரச்னையில் சுமுக தீர்வு கிடைக்கும். அடகு வைத்திருந்த ஆபரணங்களை மீட்பீர்கள். பேசும்போது கோபம் வேண்டாம். நல்ல வசதியுடன் கூடிய வீட்டிற்கு குடி புகுவீர்கள். அரசியல்வாதிகள் மற்றவர்களை விமர்சித்துப் பேச வேண்டாம். வாகனத்தை
கவனமாக செலுத்துங்கள். மாணவர்கள் போராடி உயர்கல்வியில் இடம் பிடிப்பார்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களை வெல்வீர்கள். புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே சகஜ நிலை ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார். சம்பளப் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். கலைத்துறையினரின் நீண்டநாள் கனவுகள் நனவாகும். வசதி வாய்ப்புகள் கூடும். விவசாயிகள் விளைச்சலை அதிகப்படுத்த நவீனரக உரங்களை கையாளுவார்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும் மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 15, 16, 17, 18, 24, 25, 27, 29, ஜூலை 4, 5, 13, 14, 15.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் முன்னெச்சரிக்கையுடன் செயல் படப் பாருங்கள்.
பரிகாரம்:
திருச்செந்தூர் செந்திலாண்டவரை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

விருச்சிகம் :

விருச்சிகம்:புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தடுமாற்றம், தாழ்வுமனப்பான்மை நீங்கும். வருங்காலத்திற்காக சேமிக்கும் அளவிற்கு பணம் வரும். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ளுவார்கள். ராசிக்கு 2ம் வீட்டில் ராகு நிற்பதால் கண்வலி, வீண் செலவு, வீண்பழி என வந்து நீங்கும். பேச்சில் கவனம் தேவை. ராசிக்கு 5ம் வீட்டில் குரு வலுவாக இருப்பதால் வீட்டில் நல்லது நடக்கும். சொத்து வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். 8ம் வீட்டில் கேது நிற்பதால் மனைவிக்கு உடல்நிலை பாதிக்கும். கர்ப்பப்பை பிரச்னை வரக்கூடும். சில நேரங்களில் முன்கோபம், மனஉளைச்சல்  வந்து நீங்கும். சூரியனும் 8ல் நிற்பதால் அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். சில காரியங்களை பெரும் அலைச்சலுக்குப் பின்னரே முடிக்க முடியும். கன்னிப் பெண்களுக்கு கனவுத்தொல்லை, மாதவிடாய்க்கோளாறு, தலைவலி நீங்கும். மாணவ-மாணவிகளின் திறமைகள் வெளிப்படும். ராசிநாதன் செவ்வாய் 10ம் வீட்டில் வலுவாக இருப்பதால் சகோதர-சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை அமையும். வி.ஐ.பிகள் பக்க பலமாக இருப்பார்கள். ராசிக்கு 11ல் சனி வலுவாக இருப்பதால் திடீர் பணவரவு, வேற்றுமதத்தினரால் ஆதாயம் கிட்டும். அக்கம்-பக்கத்தாரின் அன்புத்தொல்லைகள் விலகும்.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி கலந்தாலோசிப்பீர்கள். வேலையாட்களை திருப்திபடுத்தும் வகையில் அவர்களின் சம்பளத்தை உயர்த்துவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரித்துப் போவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் வாய்ப்பை நழுவ விடாமல் தக்கவைத்துக் கொள்ளுங்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர் மூலம் லாபம் பார்ப்பார்கள். காய்கறி, பழவகைகளால் ஆதாயமடைவீர்கள். எதையும் முடித்துக் காட்டும் மாதமிது.
.
ராசியான எண்கள்:
ஜூன் 17, 18, 19, 20, 21, 26, 27, 29, ஜூலை 2, 6, 7, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூலை 10, 11, 12ந் தேதி காலை 10 மணி வரை நிதானமாக யோசித்து செயல்படுவது நல்லது.
பரிகாரம்:
செங்கல்பட்டு-காஞ்சிபுரம் பாதையிலுள்ள திருமுக்கூடல் தலத்தில் அருளும் வெங்கடாஜலபதியை தரிசியுங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

தனுசு :

தனுசு:குரு 6ல் மறைந்து உறவினர்கள், நண்பர்களிடையே பகை, வீண் செலவு என்று கொடுத்து வந்த புதன், ஜூன் 16ந் தேதி முதல் சொந்த வீட்டிற்குள் நுழைவதால் எதிலும் வெற்றிதான். குடும்பத்தில் அமைதியும் உண்டாகும். ராசிக்குள் நிற்கும் ராகுவால் வீண் அலைச்சல், சந்தேகம், விரக்தி வரக்கூடும். பிள்ளைகளின் உயர்கல்வியை நினைத்து கொஞ்சம் வருந்துவீர்கள். பூர்வீகச் சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்யுங்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் வழக்குகளில் வெற்றி கிட்டும். வீடு, மனை வாங்குவதிலும், விற்பதிலும் இருந்த தடைகள்  விலகும். பாதியிலேயே நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். கன்னிப் பெண்களுக்கு திருமணப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தரும். 7ல் கேது நிற்பதால் வீண் டென்ஷன், அலைச்சல், சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமை என்று வந்துபோகும். மாணவர்கள் விரும்பிய கோர்ஸில் சேர கொஞ்சம் போராடுவார்கள். ஜூலை 6ந் தேதியிலிருந்து சுக்கிரன் 9ம் வீட்டிற்குள் நுழைவதால் தடுமாற்றம், தாழ்வுமனப்பான்மை நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குழந்தையில்லாதோருக்கு அழகான வாரிசு உருவாகும். சனி பலமாக இருப்பதால் வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வேற்றுமதத்தினரின் நட்பினால் பிள்ளையின் படிப்பிற்கு தகுந்த நல்ல உத்யோகம் கிடைக்கும். அரசு காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசியல்வாதிகள் புதுப் பொறுப்புகள் மேற்கொள்வார்கள்.
வியாபாரத்தில் மறைமுக போட்டியாளர்களை வெல்வீர்கள். பங்குதாரர்களுடன் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கலைத்துறையினருக்கு கற்பனைத்திறன் அதிகரிக்கும். விவசாயிகள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். வறட்சி நீங்கி வளம் பெருகும். தன்னம்பிக்கையுடன் செயல்படும் மாதமிது.
.
ராசியான எண்கள்:
ஜூன் 18, 19, 20, 21, 22, 29, 30, ஜூலை 2, 3, 8, 9, 10.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 15, 16 மற்றும் ஜூலை 12ந் தேதி காலை 10 மணி முதல் 13, 14ந் தேதி மதியம் 1 மணி வரை வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள்.
பரிகாரம்:
திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் பாதையில் தகட்டூர் காசி பைரவரை தரிசித்து வாருங்கள். வயதானவர்களுக்கு செருப்பும், குடையும் வாங்கிக் கொடுங்கள்.


 

 

மகரம் :

மகரம்:இதுவரை 5ல் அமர்ந்து மன உளைச்சலையும், ஏமாற்றங்களையும் தந்த புதன், ஜூன் 16ந் தேதி முதல் 6ல் நுழைவதால் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துங்கள். கணவன்-மனைவி ஒருவரையொருவர் புரிந்து செயல்படுவீர்கள். மகளுக்கு சிறப்பாக கல்யாணத்தை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.  குரு ராசிக்கு 3ல் மறைந்தாலும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் தைரிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வி.ஐ.பிகளைச் சந்தித்து முக்கிய உதவிகளை பெறுவீர்கள். 8ல் செவ்வாய் நிற்பதால் சகோதரருடன் கருத்து வேறுபாடு, சொத்துப் பிரச்னைகள் வரக்கூடும். கன்னிப்பெண்களே வீண் அலைச்சல், தூக்கமின்மை விலகும். பெற்றோரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். தந்தையின் உடல்நிலை சீராகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பணம் இல்லாததால் பாதியிலேயே நின்றுபோன கட்டிடப் பணி முழுமையாகும். அரசியல்வாதிகளுக்கு சகாக்களுக்கு மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்கள் விரும்பும் கல்விப் பிரிவில் சேர்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கறாராக இல்லாமல் நட்பாக இருந்தால், அவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் வஞ்சகம் புரிந்த சக ஊழியர்கள் இனி நட்புக்கரம் நீட்டுவார்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலை வாய்ப்பு தேடி வரும். மேலதிகாரியைப்பற்றி குறை கூறவேண்டாம். கலைத்துறையினர் திறமைகள் வெளிப்படும். மூத்த கலைஞர்களின் பாராட்டுதலைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். காய்கறி, பயிறு வகைகளால் ஆதாயம் அடைவார்கள். தளராத மனதால் தடைகளையும் தகர்த்தெரியும் மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 15, 16, 22, 23, 24, 25, ஜூலை 2, 3, 4, 5, 9, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 17, 18 மற்றும் ஜூலை 14ந் தேதி மதியம் 1 மணி முதல் 15, 16ந் தேதி மதியம் 3 மணி வரை காரியத்தடைகள், அலைச்சல் ஏற்படும்.
பரிகாரம்:
திருச்சிக்கு அருகேயுள்ள சமயபுரம் மாரியம்மனை வணங்குங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.

 

 

கும்பம் :

கும்பம்:புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மனதைரியம் பிறக்கும். செல்வாக்கு உயரும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகள் கல்யாணத்தை சீரும், சிறப்புமாக நடத்தி முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். 5ல் சூரியன், கேது நிற்பதால் மனைவிக்கு கர்ப்பச் சிதைவு, உடல்நலக்குறைவு வரக்கூடும். ராசிக்கு 2ல் குரு சாதகமாக இருப்பதால் சகோதரர்கள் ஒத்துழைப்பார்கள். சொத்துப் பிரச்னைகளில் சுமுக நிலை காணப்படும். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். கன்னிப் பெண்களே கல்யாணத்தடைகள் நீங்கும். காதல் விவகாரங்களில் உஷாராக இருங்கள். 7ல் செவ்வாய் நின்று ராசியை பார்ப்பதால் முன்கோபம், வீண் வாக்குவாதம் வரக்கூடும். ஆனால் நிலம், வீடு வாங்குவது&விற்பது லாபகரமாக அமையும். 6ல் மறைந்திருக்கும் சுக்கிரன் ஜூலை 6ந் தேதி முதல் 7ம் வீட்டிற்குள் நுழைவதால் பிரிந்திருக்கும் கணவன்&மனைவி ஒன்று சேருவீர்கள். 11ல் ராகு வலுவாக இருப்பதால் வேற்று மதத்தினர், மொழியினரால் உதவியுண்டு. அஷ்டமத்துச் சனி தொடர்வதால் மறதி, பணம் தொலைதல் ஏற்படும்.
அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுங்கள்.  மாணவர்கள் விரும்பிய பாடப் பிரிவில்
சேர்வார்கள்.  வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபத்தைக் கூட்டுவீர்கள். உத்யோகத்தில் தேங்கிக் கிடக்கும் பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள். மேலதிகாரி சொல்லும் தன் குடும்ப விஷயங்களை, சக ஊழியர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கலைஞர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். விவசாயிகளே, பக்கத்து நிலத்துக்காரருடன் இருந்த தகறாரெல்லாம் சுமுகமாக முடியும். நீர்பாசன வசதி அதிகரிக்கும். புதிய அணுகுமுறையால் நினைத்ததை முடிக்கும்
மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 15, 16, 22, 23, 24, 25, ஜூலை 4, 5, 6, 7, 12, 13, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 19, 20, 21ந் தேதி காலை 10 மணி வரை மற்றும் ஜூலை 16ந் தேதி மதியம் 3 மணி முதல் கவனமாக செயல்படப் பாருங்கள்.
பரிகாரம்:
பிள்ளையார்பட்டி விநாயகரை வணங்குங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு உதவுங்கள்.

 

மீனம் :

மீனம்:ராசிக்கு 6ம் வீட்டில் செவ்வாய் சாதகமாக இருப்பதால் புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். தைரியமாக முடிவெடுப்பீர்கள். வீட்டில் குதூகலத்துக்கு குறைவிருக்காது. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றி ஆழ்ந்து யோசிப்பீர்கள். ஜென்ம குருவால் மன உளைச்சல், காரியத்தடைகள் வரக்கூடும். ஜூலை 5ந் தேதி வரை 5ல் நிற்கும் சுக்கிரனால் எதிலும் வெற்றி கிட்டும். கையில் காசு, பணம் புரளும். ஆனால் ஜூலை 6ந் தேதி முதல் சுக்கிரன் 6ல் நுழைவதால் கணவன்-மனைவிக்குள் வீண் விவாதங்கள், விபத்து, வாகனச் செலவுகள் வந்துபோகும். முன்கோபம், டென்ஷன் அதிகரிக்கும்.
புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். தந்தைவழி உறவினர்களால் பயனடைவீர்கள். 4ல் கேது நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவு, அவருடன் வீண் விவாதங்கள் வரக்கூடும். எதிலும் நிதானமாக யோசித்து செயல்படுங்கள். வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போவீர்கள். கன்னிப் பெண்களுக்கு வயிற்றுவலி, தூக்கமின்மை வந்து விலகும். பெற்றோரின் பேச்சைக் கேட்டு செயல்படுவார்கள். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவார்கள். யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் விரும்பிய கோர்ஸில் சேர போராட வேண்டியிருக்கும்.
வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. வேலையாட்களால் மனஸ்தாபங்கள் வந்து
போகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவி வந்த மனக்கசப்புகள் விலகும். 10ல் ராகு நிற்பதால் உத்யோகத்தில் வேலைச்சுமை வாட்டும். மேலதிகாரி சில சமயங்களில் குறைபட்டுக் கொள்வார். இதைவிட அதிக சம்பளத்துடன் வேறு வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து ஏற்பது நல்லது. கலைத்துறையினருக்கு பழைய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். விவசாயிகளுக்கு பழைய கடன் தீரும். தென்னை, வாழை பயிர்களால் ஆதாயமடைவீர்கள். மனநிறைவுடன் காணப்படும் மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 17, 18, 19, 20, 26, 27, 29, ஜூலை 6, 11, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 21ந் தேதி காலை 10 மணி முதல் 22, 23ந் தேதி மதியம் 2.30 மணி வரை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
பரிகாரம்:
மதுரைக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றம் முருகனை தரிசியுங்கள். சுமை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.



மேஷம் :      

மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர் கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங் குவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்

ரிஷபம் :

ரிஷபம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

மிதுனம் :

மிதுனம்: கணவன்&மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். முகப்பொலிவுக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம் :

கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு உடல் நலம் பாதிக்கும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

சிம்மம் :

சிம்மம்: குடும்பத்தினருடன் விவாதங்கள் வரும்.அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். உடன்பிறந்தவர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். வியா பாரம் சுமாராக இருக்கும். உத் யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கன்னி :

கன்னி: பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சாதித்துக் காட்டும் நாள்.

 
துலாம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
துலாம் :

விருச்சிகம் :

விருச்சிகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். புதியவர்கள் நண்பர் களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

தனுசு :

தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் அலைச்சலின் பேரில் முடியும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அநாவசிய பேச்சை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

மகரம் :

மகரம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புதுப்பொருள் சேரும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கும்பம் :

கும்பம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உய ரும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையா ளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும். அமோகமான நாள்.

மீனம் :

மீனம்: புது முயற்சிகள் யாவும் வெற்றி யடையும். சொந்த&பந்தங்களின் அன்புத் தொல்லைகள் நீங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.





சந்திராஷ்டமம் : திருவோணம் 
பஞ்சாங்கம்...
* விக்ருதி வருடம் ஆனி மாதம் 2ம் தேதி, ரஜப் 3
* 16-06-2010 புதன்கிழமை, இன்று காலை 9.36 வரை சதுர்த்தி திதி, அதன்பின் பஞ்சமி திதி. இன்று காலை 6.01 வரை பூசம் நட்சத்திரம், அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்தயோகம்.
* குளிகை: பகல் 10.30 முதல் 12.00 வரை
* சூலம்: வடக்கு * பரிகாரம்: பால்
* பொது: சிறிய நகசு. திருக்கோளக்குடி, கானாடுகாத்தான், கண்டதேவி இத்தலங்களில் சிவபெருமான் உற்சவாரம்பம். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் ஆடும் பல்லக்கில் திருவீதி உலா

மே - 2010 - June
புதன் நல்ல நேரம் 6 - 7.30
16 எமகண்டம்: 7.30 - 9.00
Wednesday, June 16, 2010 இராகு காலம்: 12 - 1.30




  


 போலி டாக்டர்கள் வரிசையாக போலீஸ் பிடியில் சிக்குகிறார்கள். வேட்டை என்று சொல்வது பொருத்தமில்லை. திருடர்கள், மாவோயிஸ்டுகள் மாதிரி தப்பு செய்துவிட்டு தலைமறைவாக திரியவில்லை இவர்கள். பல வண்ண ஃப்ளெக்ஸ் போர்டு செய்து வீட்டு வாசலில் மாட்டியிருந்தவர்கள்.
எட்டாவது ஃபெயிலானவர், எழுதப் படிக்க தெரியாமல் மளிகை கடையில் எடுபிடி வேலை பார்த்தவர், தாசில்தார் ஆபீஸ் வாசலில் மனு எழுதி பிழைத்தவர் என்று இவர்களின் பூர்வாசிரமம் வெளியாவதை பார்த்து காதுவழி புகை விடுவோர் அநேகம். 35 ஆயிரம் போலிகள் தொழில் செய்வதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. மருத்துவ கவுன்சிலின் தமிழக பிரிவு அதில் இரண்டாயிரம் பேரின் பெயர், முகவரி சேகரித்து அரசிடம் கொடுத்திருக்கிறதாம். போலீஸ் நடவடிக்கை அதன் அடிப்படையில் தொடர்வதாக தெரிகிறது.
எம்.பி.பி.எஸ் படிக்காமல் டாக்டர் தொழில் செய்பவர்கள், சித்தா ஆயுர்வேதா போன்ற மாற்று மருத்துவம் படித்து விட்டு எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் போல அலோபதி ‘இங்கிலீஸ் மெடிசின்’ மருத்துவம் பார்ப்பவர்கள். இப்படி போலிகளை இரு பிரிவாக போலீஸ் கணக்கெடுக்கிறது. மருந்துகளை கேப்சூல் வடிவத்தில் பேக்கேஜ் செய்வது, சில மருந்து கலவைகளை ஊசி மூலம் செலுத்த ஏதுவாக திரவமாக தயாரிப்பது எல்லாம் மாற்று மருத்துவத்திலும் வழக்கத்துக்கு வந்து ஆண்டுகள் ஆகிறது. இதை சுட்டிக் காட்டி இந்திய முறை மருத்துவர்கள் முறையிடுகின்றனர்.
ஜுரம், தலைவலி, பேதி போன்ற தொல்லைகளுக்கு விளம்பரங்களில் உபாதை  டாக்டர் சீட்டு இல்லாமலே கடைகளில் மருந்து மாத்திரை விற்கப்படுகிறது. அதை எழுதிக் கொடுப்பது குற்றமா என்றும் இவர்கள் கேட்கிறார்கள். அப்படி பார்த்தால் இலவச ஐடியா தரும் நண்பர்களை, பார்க்கில் வாக் போகிறவர்களையும் போலி டாக்டர் லிஸ்டில் சேர்க்கலாம். அலகாபாத்தில் ஒரு கம்பெனி வைத்ய ரத்னா, வைத்ய விஷாரத் போன்ற பட்டங்கள் விற்கிறது. அது இருந்தால் டாக்டர் தொழில் பார்க்கலாம் என்று ராஜஸ்தானில் சட்டம் இருக்கிறது.
கார்பைடு மூலம் பழுக்க வைப்பது தெரிந்ததும் மாம்பழம் சாப்பிடுவதையே பாதிப்பேர் விட்டு விட்டார்கள். அது மாதிரி, போலி டாக்டர்கள் செய்திகள் அணிவகுப்பதை தொடர்ந்து அசல் டாக்டர்களிடம் கூட்டம் குறைந்து விட்டதாம். நல்லதுதானே.


 மேஷம்:
நட்பு வட்டம் விரியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரி யங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்:
பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். புது வாகனம் வாங்குவீர்கள்.வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றி பெறும் நாள்.
மிதுனம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். சொன்ன சொல்லை நிறைவேற்றும் நாள்.
கடகம்:
ராசிக்குள் சந்திரன் செல்வதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. சிக்கனமாக இருங்கள். உத்யோகத்தில் கூடு தலாக வேலை பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
சிம்மம்:
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேல திகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
கன்னி:
கணவன்,மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
துலாம்:
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். புகழ், கௌரவம் கூடும் நாள்.
விருச்சிகம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த வாக்குவாதம், காரியத் தடை, முன்கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நிம்மதியான நாள்.
தனுசு:
சந்திராஷ்டமம் தொடங்குவதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
மகரம்:
தன் பலம்,பலவீனத்தை உணர்வீர்கள். தாயார் ஆதரித்துப்பேசுவார். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
கும்பம்:
எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்ட காரியம் துலங்கும் நாள்.
மீனம்:
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடி வெடுப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறை வேற்றுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.


 
15.6.2010,
விக்ருதி வருடம்,
ஆனி மாதம் முதலாம் நாள், செவ்வாய்கிழமை,
வளர்பிறை. திருதியை திதி மதியம் மணி 12.06 வரை; பிறகு சதுர்த்தி திதி. சமநோக்குள்ள புனர்பூசம் நட்சத்திரம் காலை மணி 7.41 வரை; பிறகு, மேல்நோக்குள்ள பூசம் நட்சத்திரம். நேத்திரமற்ற, ஜீவனுள்ள சித்தயோக நாள். சதுர்த்தி விரதம்.
நல்ல நேரம்:
காலை மணி 8.00 to 9.00, மதியம் 12.00 to 1.00, இரவு 7.00 to 8.00 மணி வரை. 
ராகுகாலம்:3.00 to 4.30
எமகண்டம்:9.00 to 10.30
மேற்கண்ட நேரங்களில் சுபகாரியங்கள் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: உத்திராடம் நட்சத்திரம் 
மேற்கண்ட நட்சத்திரகாரர்கள் வீண் வாக்கு வாதங்களையும் , புதிய முயற்சிகளையும் 
தவிர்க்கவும்.
பொதுப் பலன்:
வீடு, மனை பார்வையிட, வாங்குவதற்கு முன் பணம் தர நன்று.


 நமது கலாசார மரபில் திருமணம் புனித உறவு. எனினும் மண வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிணக்கும் கொடுமையும் தொடரும்போது புனிதத்தை காரணம்காட்டி அதிலேயே நீடிக்க முடியாது. விடுபட்டு வாழ்வதே சிறந்தது. மூத்தோர் வாக்கும் முது நெல்லிக் கனியும் முன் கசந்து பின் இனிக்கும் என்பார்கள். வாஸ்தவம்தான். ஆனால் பல பழமொழிகள் மூத்தோர் சொன்னது அல்ல. இடைச்செருகல். அதிலொன்றுதான் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற ‘மணிமொழி’. கல், புல் என்று சொல்லி, கொடுமைகளை தாங்கிக்கொண்டு வாழ முடியாது; வாழவும் கூடாது. இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டியவர்கள் திருமண பந்தத்தில் இருந்து சட்டரீதியாக விலகுவது கடினமாக இருந்தது. இதற்கு ஒரு விடிவு வந்திருக்கிறது. விவாகரத்து பெறுவதை எளிதாக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
அற்ப காரணங்களுக்காக அற்புதமான திருமண பந்தத்தை உதறுவதை ஏற்க முடியாது. இந்த வகை தம்பதியர் யோசித்து மனப்பக்குவம் அடைவதற்கு போதிய கால அவகாசம் அளிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். ஆனால் மீண்டும் ஒன்றுசேர முடியாத அளவுக்கு திருமண உறவில் முறிவு ஏற்பட்டால் அவர்களுக்கு விரைவில் மண விலக்கு கொடுப்பதே உரிய நீதியாக இருக்கும். ஆனால் சட்டபூர்வ விவாகரத்து கிடைப்பதற்கு பல்வேறு சிக்கல்களை இவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. விவாகரத்து கிடைக்காமல் காலம் கடந்துகொண்டே போகும்போது, மண வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலுக்கு நிகரான வேதனையை அடைய வேண்டி இருக்கிறது.
விவாகரத்து வழக்குகளை விரைவில் முடிக்க வகைசெய்வதற்காக இந்து திருமண சட்டம் மற்றும் விசேஷ திருமண சட்டத்தில் திருத்தம் செய்து, ‘திருமண சட்ட (திருத்த) மசோதா 2010’ என்ற புதிய மசோதா கொண்டுவர இப்போது ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. இதன்படி, கணவன்&மனைவி இருவரும் மீண்டும் ஒன்று சேர முடியாத அளவுக்கு திருமண உறவில் முறிவு ஏற்பட்டால் அதை விவாகரத்துக்கான காரணமாக கருத வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக பிரிந்து வாழ்பவர்கள் விவாகரத்து பெற வழி பிறக்கும். மேலும் ஒரு தரப்பு கோர்ட்டுக்கு வராமல் வழக்கை இழுத்தடிக்கும் நிலையையும் மாற்றி, உடனடி விவாகரத்துக்கு இந்த மசோதா வகை செய்திருக்கிறது.
இதுபோன்ற சட்டதிருத்தம் தேவை என்பது சட்ட கமிஷன் அறிக்கையிலும் உச்சநீதிமன்றத்தின் சில வழக்குகளிலும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு முற்போக்கானது, பாராட்டத்தக்கது.


  live trading tips visit www.tradersfirst.blogspot.com
கடந்த 9 வர்த்தக தினங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் ரூ.1,576 கோடியை முதலீடு செய்துள்ளதாக செபி புள்ளி விவரம் கூறுகிறது.
இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு நிறுவன முதலீடு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இந்திய பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இவை இருந்து வருகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், கடந்த மாதத்தில் இந்திய பங்குச் சந்தை முதலீடுகளை வெளிநாட்டு நிறுவனங்கள் திரும்பப் பெற்றன. இதனால் கடும் சரிவு ஏற்பட்டது.
இப்போது, அவர்கள் பங்குகளை அதிக அளவில் வாங்கி வருவதால் பங்குச் சந்தை உயர்ந்து வருகிறது. இந்த மாதத்தில் இதுவரை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் ரூ.19,173 கோடிக்கு பங்குகளை வாங்கி உள்ளனர். எனினும், ரூ.17,596 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.
இதையடுத்து, கடந்த 9 வர்த்தக தினங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் நிகர முதலீடு ரூ.1,576 கோடியாக உள்ளது.
கடந்த மே மாதத்தில் ரூ.9,436 கோடி மதிப்பிலான பங்குகளை அவர்கள் விற்றனர். இது இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் விற்கப்பட்ட அதிகபட்ச தொகையாகும்.
எனினும், கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 11 வரையிலான வெளிநாட்டு நிறுவன நிகர முதலீடு ரூ.22,145.5 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் ரூ.83,400 கோடியை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.


 பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முகேஷ் மற்றும் அனில் சகோதரர்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர்.
ரிலையன்ஸ் குழுமத்தை நிறுவிய திருபாய் அம்பானி கடந்த 2002ம் ஆண்டு இறந்தார். அதன் பிறகு சொத்து பிரச்னையால் முகேஷ் மற்றும் அனில் சகோதரர்களிடையே விரிசல் ஏற்பட்டது. பின்னர் 2005ம் ஆண்டு குடும்ப ஒப்பந்தம் மூலம் சொத்துக்களை பிரித்துக் கொண்டனர். எனினும், கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் பிரிந்தே இருந்தனர். ஒரு இடத்துக்கு ஒரே நேரத்தில் செல்வதைக்கூட இருவரும் தவிர்த்து வந்தனர்.
குடும்ப ஒப்பந்தப்படி, தனது நிறுவனத்துக்கு காஸ் தர மறுப்பதாக முகேஷ் மீது அனில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வெளியானது. அதில், குடும்ப ஒப்பந்தத்தின்படி காஸ் வழங்க முகேஷுக்கு உத்தரவிட முடியாது என்றும், ஒப்பந்தத்தை திருத்திக் கொள்ளுமாறும் உத்தரவிட்டது.
இதையடுத்து, பிரச்னைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்ளப் போவதாக அறிவித்தனர். இருவரிடையே சமரசம் ஏற்பட்டதையடுத்து, கடந்த மாதம் 30ம் தேதி திருப்பதிக்கு சென்ற அனில் அம்பானி, தனது அண்ணனுக்கு சொந்தமான விருந்தினர் இல்லத்தில் தங்கினார்.
இதற்கிடையே, உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் துவக்க விழாவைக் காண இருவரது குடும்பத்தினரும் தென்னாப்பிரிக்கா சென்றிருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தனர்.
அங்கு தங்கியிருந்தபோது தொலைத்தொடர்பு மற்றும் நிதித்துறையில் ஒருங்கி ணைந்து செயல்படுவது குறித்து முகேஷின் நெருங்கிய நண்பர் ஆனந்த் ஜெயின் முன்னிலையில் முக்கிய பேச்சு வார்த்தை நடை பெற்றதாக கூறப்படுகிறது. 3 நாட்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு நேற்று மும்பை திரும்பினர்.
இதற்கு முன்பு கடந்த 2000ம் ஆண்டு தந்தை திருபாய் அம்பானி, தாய் கோகிலாபென் உட்பட அம்பானி சகோதரர்கள் ஒன்றாக சுற்றுலா சென்றனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பானி குடும்பத்தினர் மீண்டும் ஒன்றாக இணைந்து சுற்றுலா சென்று வந்துள்ளனர்.


 கம்யூனிச நாடான  கடந்த வாரம் கோடீஸ்வரர்கள் மட்டுமே பங்கேற்ற மில்லியனர்ஸ் ஃபேர் நடந்துள்ளது. வைரம் பதித்த செல்போன், தங்க முலாம் பூசப்பட்ட ஸ்விஸ் வாட்ச் என எந்தப் பொருளை எடுத்தாலும் 20 லட்சம் டாலருக்கு குறையாது. ஆனாலும் கூட்டம் அலைமோதியுள்ளது. பல நூறு கோடி டாலருக்கு விற்பனை நடந்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
சீனாவில் மட்டும் 2.5 லட்சம் கோடீஸ்வரர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலக அளவில் ஆறாவது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் 600 கோடி டாலருக்கு மேல் சொகுசு படகு, ஜெட் விமானம், வைரம் பதித்த செல்போன் போன்ற பொருட்கள் விற்பனையாகிறதாம். இது 2004ம் ஆண்டு புள்ளி விவரம். சீனக் கோடீஸ்வரர்களில் 99 சதவீதம் பேர், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் வாரிசுகள்தான். அவர்களிடம்தான் கோடி கோடியாய் குவிந்து கிடக்கிறது.
அரசுத் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவது இந்த வாரிசுகள்தான். உலகிலேயே மிகப்பெரிய த்ரீ கார்ஜஸ் அணையைக் கட்டி அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல் படுத்தியவர் லீ ஜியோலின். இவர் தியானன்மென் சதுக்க படுகொலைக்கு உத்தரவிட்ட கம்யூனிஸ்ட் தலைவர் லீ பெங்கின் மகள்.
சமீபத்தில் 100 கோடி டாலர் திரட்டிய நியூ ஹாரிஸன் கேப்பிடல் நிறுவனத்தின் தலைவரான வென் யூன்சோங், சீனப் பிரதமரின் மகன். இவருடைய நிறுவனம்தான் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சீன அதிபரின் மகன் ஹூ ஹைபெங்க், நியூக்டெக் நிறுவனத்தின் அதிபர். சமீபத்தில் நமீபியாவில் 3.4 கோடி பவுண்ட் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பெற்றது. இதில் பல கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்து பெரிய பிரச்னை ஆனது. சீனாவின் மிகப்பெரிய 12 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அரசியல் வாரிசுகளுக்குத்தான் சொந்தம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இது தொடர்பாக செய்தி வெளியிடவும் சீன அரசு தடை விதித்துள்ளது.
சீனாவில் அதிக கூலி கேட்டு போராட்டம், வேலை இழப்பால் தற்கொலை ஆகியவை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து கோடீஸ்வர வாரிசுகளின் மீதான மக்கள் வெறுப்பும் அதிகரித்து எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget