மேஷம் :
மேஷம்:புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் இழுபறி விஷயங்கள் முடிவுக்கு வரும். அலட்சியம், மன அழுத்தம் நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். குடும்பத்தில் இனி அமைதி நிலவும். மனைவி உடல்நலம் கூடும். வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும். மகனின் உயர்கல்விக்காக அலைய வேண்டியிருக்கும். மூத்த சகோதரர் தேவையறிந்து உதவுவார். வாங்கிய கடனை வட்டியோடு அடைப்பீர்கள். ராசிக்கு 3ல் கேது வலுவாக இருப்பதால் மனச்சோர்வு நீங்கும். எதிர்பார்க்கும் பணம் கைக்கு வந்து சேரும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயமுண்டு. கன்னிப் பெண்களே தாயாருடன் அடிக்கடி சண்டையிடாதீர்கள். நல்ல மணமகன் வந்தமைவார். 5ல் செவ்வாய் நிற்பதால் உறவினர்கள், நண்பர்களுடன் கருத்துமோதல் ஏற்படும். 6ல் சனி வலுவாக இருப்பதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் இல்ல சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அண்டை மாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ராகு 9ல் நிற்பதாலும், பிதுர்காரகன் சூரியன் கேதுவுடன் சேர்ந்திருப்பதாலும் தந்தையின் உடல்நலம் பாதிக்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றிக் கொள்ளுங்கள். அரசாங்க விஷயங்களில் அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகள் தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் தலைமையிடம் தெரிவித்து விடுங்கள். குருபகவான் 12ல் மறைந்திருந்தாலும் விரயம் இல்லாமல் வீடு கட்டுவது, திருமணம் செய்வது போன்ற சுபச் செலவுகள் வரக்கூடும்.  வியாபாரத்தில் சுறுசுறுப்பாவீர்கள். வேலையாட்களின் பிடிவாதம் தளரும். கூட்டுத் தொழிலில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். கணினி துறையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களே புதிய கோணத்தில் திறமைகளை வெளிப்படுத்துங்கள். அயல்நாட்டு நிறுவனங்கள் வாய்ப்பு தரும். விவசாயிகளே, நல்ல விளைச்சலால் வங்கிக் கடனை ஓரளவு அடைத்து விடுவீர்கள். தொட்ட காரியம் துலங்கும் மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 15, 20, 21, 28, 29, 30, ஜூலை 1, 2, 9, 11, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 23ந் தேதி மதியம் 2.30 மணி முதல் 24, 25ந் தேதி இரவு 7.36 மணி வரை யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள்.
பரிகாரம்:
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆவூர் பசுபதி கோயிலில் அருள்பாலிக்கும் பஞ்சபைரவர்களையும் தரிசியுங்கள். முதியோர் இல்லத்திற்கு சென்று உதவி செய்யுங்கள்.


ரிஷபம் :

ரிஷபம்:பூர்வபுண்யாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் அவர்கள் விரும்பிய உயர் கல்வி திட்டத்தில் சேர்வார்கள். பணவரவால் கடன் பிரச்னைகள் தீரும். தடைபட்டிருந்த தங்கையின் திருமணத்தை தடபுடலாக நடத்துவீர்கள். வீட்டிற்குத் தேவையான டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷின் வாங்குவீர்கள். 2ல் சூரியன் கேதுவுடன் நிற்பதால் பெற்றோர் உடல்நலம் பாதிக்கும். கண்வலி, பணத்தட்டுப்பாடு, வீண் விவாதம் வரக்கூடும்.
ராசிக்கு 11ம் வீட்டில் குரு தொடர்வதால் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ராசிநாதன் சுக்கிரன் பகை வீடுகளில் செல்வதால் சிலசமயம் எதிர்மறை சிந்தனை, வாகனப் பழுது, செலவு என வந்துபோகும். தாய்வழி உறவினரிடம் மனத்தாங்கல் வெடிக்கும். ஆனால், சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்லும்போது தைரியம் பிறக்கும். வீடு கட்டி முடிப்பீர்கள். கன்னிப் பெண்கள் முன் கோபத்தைக் குறைத்து பெற்றோரின் சொல் கேட்டு நடப்பது நல்லது. கனவுத்தொல்லை, வயிற்றுக் கோளாறு நீங்கும்.  அரசு காரியங்களில் இருந்து வந்த முடக்கம் விலகும். பூர்வீகச் சொத்தை மாற்றி புதுச் சொத்து வாங்குவீர்கள். வெளிநாடு, வெளிமாநிலத்தாரால் ஆதாயம் உண்டு. ராசிக்கு 11ல் கேது வலுவாக இருப்பதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தலைமையிடம் புகார் சொன்னவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்கள். மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.
வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். உத்யோகத்தில் மகிழ்ச்சி தங்கும். கலைஞர்கள் சிந்தித்து செயல்படுவார்கள். சம்பளபாக்கி வந்து சேரும். விவசாயிகளின் எண்ணங்கள் பூர்த்தியாகும். பழுதடைந்த மோட்டார் பம்புசெட்டை மாற்றுவீர்கள். நீர்வரத்து அதிகரிக்கும். எதிலும் புதுமையை புகுத்தி ஆச்சரியப்படுத்தும் மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 15, 16, 18, 20, 21, 22, 24, 30, ஜூலை 1, 2, 3, 4, 5, 11, 13, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 25ந் தேதி இரவு 7.36 மணி முதல் 26, 27 ஆகிய தேதிகளில் அவசர முடிவுகளை தவிர்க்கவும்
பரிகாரம்:
மதுரை மீனாட்சி அம்மனை வணங்குங்கள். கட்டடத் தொழிலாளர்களுக்கு உதவுங்கள்.

மிதுனம் :

மிதுனம்:உங்கள் ராசியின் 3ம் வீட்டில் செவ்வாய் செல்வதால் தடைகளை மீறி வெற்றியே  கிட்டும்.  கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். பேச்சில் மிடுக்கு தெரியும். அழகு, இளமை கூடும். பிள்ளைகளால் பெருமை உண்டு. மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை புதிதாக வாங்குவீர்கள். தாயாருடன் விவாதம் வேண்டாம். தவறாகப் பேசிய உறவினர்கள் இனி உங்களைப்பற்றி பெருமையாக பேசுவார்கள். ராசிநாதன் புதன் 12ல் மறைந்திருந்து அலைச்சல், வேலைச்சுமைகளை தந்தாரே, ஜூன் 16ந் தேதி முதல் ஆட்சி பெறுவதால் தெளிவாக முடிவெடுப்பீர்கள். கன்னிப் பெண்களுக்கு தடைபட்ட கல்யாணம் கூடி வரும். உடல் நலம் திருப்திகரமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து, சேமிக்கத் தொடங்குவீர்கள். ராசிக்கு 4ல் சனி நிற்பதால் தாயாரின் உடல்நலம் பாதிக்கும். தாய்வழி உறவினர்களிடையே வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். வீட்டில் கழிவுநீர், குடிநீர் பிரச்னைகள் வரலாம். ராசிக்கு 10ல் குரு நுழைவதால் டென்ஷன், வயிற்றுக்கோளாறு, வீண் பகை வந்து நீங்கும். அரசு காரியங்கள் தடைபட்டு முடியும். சிலருக்கு உதவப்போய் வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். மாணவர்கள் உயர்கல்வியில் போராடி இடம் பிடிப்பார்கள்.  வியாபாரத்தில் அதிரடி மாற்றங்களை நிகழ்த்துவீர்கள். புது சலுகைகளால் வாடிக்கையாளர் வருகை அதிகமாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களின் ஆலோனைகளை ஏற்பார். கண் எரிச்சல், தூக்கமின்மை வந்துபோகும். கலைஞர்களின் சம்பளப்பாக்கி கைக்கு வந்து சேரும். எதிர்பார்த்திருந்த புதிய வாய்ப்புகள் தேடி வரும். விவசாயிகளின் கனவுகள் நனவாகும். அடகிலிருந்த பொருட்களை மீட்பீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டி திட்டமிட்டபடி
காரியங்களை முடித்துக்காட்டும் மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 15, 16, 17, 18, 19, 20, 24, 25, 27, ஜூலை 4, 5, 6, 7, 14, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 28, 29, 30ந் தேதி மாலை 6.20 மணி வரை அவசர முடிவுகளை எடுக்காதீர்கள்.
பரிகாரம்:
சென்னை-மாடம்பாக்கம் தேனு புரீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் சரபேஸ்வரரை தரிசியுங்கள். நீர்மோர் விநியோகம் செய்யுங்கள்.

கடகம் :

கடகம்:சுக்கிரன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் எதிர்பாராத பணவரவு திக்குமுக்காட வைக்கும். இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்னைகள் சுமுகமாகத் தீரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் வெகுநாள் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த
படியே நல்ல வரன் வந்தமையும். 2ல் செவ்வாய் அமர்ந்திருப்பதால் சில நேரங்களில் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று பேசி
விடுவீர்கள்.   ராசிக்கு 6ம் வீட்டில் நிற்கும் ராகுவும், 3ல் நிற்கும் சனியும் பலமாக இருப்பதால் எந்தப் பிரச்னையையும் எளிதாக சமாளித்துவிடுவீர்கள். எதிரிகள்கூட நண்பராவார்கள். அ¬ரகுறையாக நின்ற கட்டட வேலைகள் இனி விரைவாக முடியும். கன்னிப் பெண்களே வெகுளித்தனமாக பேசுவதை குறையுங்கள். தாயாரின் ஆதரவு உண்டு. அரசு காரியங்களில் கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் வெற்றி காண்பீர்கள். புது வாகனத்தில் வலம் வருவீர்கள். பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தும் பயனில்லையே என வருந்தினீர்களே, இனி வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.
ராசிக்கு 9ம் வீட்டில் குரு சாதகமாக இருப்பதால் வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். தாயாரின் உடல்நிலை சீராகும். இழுபறி வழக்குகளில் சாதக மாற்றம் ஏற்படும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் நட்பு வட்டம் விரிவடையும். 12ம் வீட்டில் சூரியன் நிற்பதால் தூக்கமின்மை, அடுத்தடுத்து வேலை, விரயச் செலவு, அலைச்சல் வரக்கூடும். ஆன்மிக காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்வார்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மனப்போர் நீங்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும். விவசாயிகளுக்கு விளைச்சல் இரட்டிப்பாகும். சொன்ன சொல்லை நிறைவேற்றும் மாதமிது.
.
ராசியான எண்கள்:
ஜூன் 18, 19, 20, 21, 26, 27, 29, ஜூலை 6, 7, 9, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 30ந் தேதி மாலை 6.20 மணி முதல் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நிதானமாக செயல்படுங்கள்.
பரிகாரம்:
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் அருளும் துர்க்கையை வழிபடுங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.

சிம்மம் :

சிம்மம்:சாதகமான வீடுகளில் செல்வதால் புத்திசாலித்தனம், வாக்குசாதுர்யம் கூடும். வி.ஐ.பிகள் நட்பால் புதிய திருப்பங்கள் ஏற்படும். வாழ்க்கையில் திடீர் நல்ல திருப்பங்கள் வந்து திகைக்கச் செய்யும். கணவன்-மனைவிக்குள் சிக்கலெல்லாம் நீங்கி மனம்விட்டுப் பேசுவீர்கள். உங்களிடம் பணம் வாங்கியவர்கள், வட்டியையும் அசலையும் சேர்த்துத் தருவார்கள். பாதச்சனி தொடர்வதால் கண் எரிச்சல், உடல் உஷ்ணம் வரக்கூடும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கல்யாணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் என வீடு களைகட்டும். பழைய டிவி, மிக்ஸியை மாற்றுவீர்கள். 5ல் ராகு நிற்பதால் பிடிவாதமாக நடந்து கொள்ளும் பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். மகனின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவப் பதவி கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும். தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். கசந்த காதல் இனிக்கும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வாருங்கள். ராசிக்கு 8ல் குரு நிற்பதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் அதிகரிக்கும். யாரையும் குறை சொல்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது.
உங்கள் ராசிநாதன் 11ல் வலுவாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டாகும். அரசால் நன்மை பிறக்கும். ஆனால் கேதுவுடன் சேர்ந்திருப்பதால் வேலைச்சுமை, முன்கோபம் அதிகரிக்கும். 11ல் நிற்கும் கேதுவால் ஆன்மிகவாதிகளின் ஆசியைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவார்கள். மாணவர்களுக்கு நல்ல கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.  வியாபாரத்தில் கடையை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்திற்கு மாற்றுவீர்கள். கெமிக்கல், மருந்து சம்பந்தமான தொழிலில் நல்ல லாபம் உண்டு. உத்யோகத்தில் கடினமான பணிகளை செய்து முடித்து மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல சம்பளத்தில் வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் உண்டு. வங்கிக் கடனை பைசல் செய்வீர்கள். அனுபவ அறிவால் தடைகளை உடைத்தெறியும் மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 20, 21, 22, 28, 29, 30, ஜூலை 9, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூலை 3, 4, 5ந் தேதி மாலை 4.30 மணி வரை அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.
பரிகாரம்:
மதுரைக்கு அருகிலுள்ள திருமோகூர் சக்கரத்தாழ்வாரை தரிசியுங்கள். அன்ன தானம் செய்யுங்கள்.

கன்னி :

கன்னி:குருபகவான் 7ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் சோர்வு, மன உளைச்சல் அகலும். அழகு, அறிவு கூடும். சாதுர்யமான பேச்சால் காரியங்களை எளிதாக முடிப்பீர்கள். வற்றிய பணப்பை நிரம்பும். கணவன்-மனைவி ஒருவரையொருவர் புரிந்து கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து, சேமிப்பை கூட்டுவீர்கள். ஜென்ம சனியால் மனக்கவலை, முதுகு, மூட்டுவலி வரக்கூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். 4ல் ராகு நிற்பதால் வீண் அலைச்சல், டென்ஷன், தாயாருடன் மனஸ்தாபம் வரக்கூடும்.
யோகாதிபதி சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வருங்காலம் பற்றிய முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கன்னிப் பெண்களுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். காதல் கைகூடும். தந்தைவழி உறவினர்களால் அதிரடி மாற்றங்கள் நிகழும். 12ல் செவ்வாய் நிற்பதால் சகோதர வகையில் பிரச்னை வரக்கூடும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். அரசு சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் சிக்கல்கள் நீங்கும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று நீண்டநாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். 10ல் இருக்கும் கேதுவால் மன உளைச்சல், முன்கோபம் வந்து நீங்கும். ஆனால் 10ல் சூரியனும் இருப்பதால் புது வேலை, கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவார்கள். மாணவர்கள்  சுறுசுறுப்பாவார்கள்.வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் திறமையை கண்டு வியப்பார். பதவி உயர்வு உண்டு. கலைத்துறையினர் பற்றிய கிசுகிசுக்கள் ஓயும். எதிர்பார்த்தபடி நல்ல நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் உண்டு. அடகிலிருந்த பொருட்களை மீட்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு இழுபறியான வேலைகளை முடிக்கும் மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 15, 16, 22, 23, 24, 25, ஜூலை 1, 2, 3, 4, 11, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூலை 5ந் தேதி மாலை 4.30 மணி முதல் 6, 7 ஆகிய தேதிகளில் பொறுமையுடன் செயல்படுங்கள்.
பரிகாரம்:
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள சூரியனார் கோயில் சூரிய பகவானை வணங்குங்கள். வீட்டு மாடியில் பறவைகளுக்காக குடிக்க தண்ணீர் வையுங்கள்.

துலாம் :

துலாம்:ராசிக்கு 8ல் மறைந்து கொண்டு யோசிக்க விடாமல், மழுங்கடித்துக் கொண்டிருக்கும் பாக்யாதிபதி புதன், ஜூன் 16ந் தேதி முதல் ராசிக்கு 9ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். பால்ய நண்பர்கள், உறவினர்களுடன் இருந்த பகையெல்லாம் விலகும்.  வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் எடுப்பீர்கள். குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை ஓரங்கட்டுவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். இழுபறி வழக்குகள் சாதகமாகும். ராசிக்கு 3ல் ராகு வலுவாக இருப்பதால் வேற்று மொழியினர் உதவுவார்கள். புதிய சிந்தனைகள் பிறக்கும்.
  ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். குழந்தை
இல்லாதோருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். கன்னிப் பெண்கள் பெற்றோரின் பேச்சைக் கேட்டு செயல்படுவார்கள். உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். புதிய வாகன யோகம் உண்டு. ராசிக்கு 6ல் குரு தொடர்வதால் வீண் டென்ஷன், அலைச்சல், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல் என வரக்கூடும்.
 ராசிக்கு 11ம் வீட்டில் செவ்வாய் வலுவாக இருப்பதால் சகோதர, சகோதரியின் திருமணம் கைகூடும். பூர்வீகச் சொத்து பிரச்னையில் சுமுக தீர்வு கிடைக்கும். அடகு வைத்திருந்த ஆபரணங்களை மீட்பீர்கள். பேசும்போது கோபம் வேண்டாம். நல்ல வசதியுடன் கூடிய வீட்டிற்கு குடி புகுவீர்கள். அரசியல்வாதிகள் மற்றவர்களை விமர்சித்துப் பேச வேண்டாம். வாகனத்தை
கவனமாக செலுத்துங்கள். மாணவர்கள் போராடி உயர்கல்வியில் இடம் பிடிப்பார்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களை வெல்வீர்கள். புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே சகஜ நிலை ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார். சம்பளப் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். கலைத்துறையினரின் நீண்டநாள் கனவுகள் நனவாகும். வசதி வாய்ப்புகள் கூடும். விவசாயிகள் விளைச்சலை அதிகப்படுத்த நவீனரக உரங்களை கையாளுவார்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும் மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 15, 16, 17, 18, 24, 25, 27, 29, ஜூலை 4, 5, 13, 14, 15.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் முன்னெச்சரிக்கையுடன் செயல் படப் பாருங்கள்.
பரிகாரம்:
திருச்செந்தூர் செந்திலாண்டவரை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

விருச்சிகம் :

விருச்சிகம்:புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தடுமாற்றம், தாழ்வுமனப்பான்மை நீங்கும். வருங்காலத்திற்காக சேமிக்கும் அளவிற்கு பணம் வரும். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ளுவார்கள். ராசிக்கு 2ம் வீட்டில் ராகு நிற்பதால் கண்வலி, வீண் செலவு, வீண்பழி என வந்து நீங்கும். பேச்சில் கவனம் தேவை. ராசிக்கு 5ம் வீட்டில் குரு வலுவாக இருப்பதால் வீட்டில் நல்லது நடக்கும். சொத்து வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். 8ம் வீட்டில் கேது நிற்பதால் மனைவிக்கு உடல்நிலை பாதிக்கும். கர்ப்பப்பை பிரச்னை வரக்கூடும். சில நேரங்களில் முன்கோபம், மனஉளைச்சல்  வந்து நீங்கும். சூரியனும் 8ல் நிற்பதால் அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். சில காரியங்களை பெரும் அலைச்சலுக்குப் பின்னரே முடிக்க முடியும். கன்னிப் பெண்களுக்கு கனவுத்தொல்லை, மாதவிடாய்க்கோளாறு, தலைவலி நீங்கும். மாணவ-மாணவிகளின் திறமைகள் வெளிப்படும். ராசிநாதன் செவ்வாய் 10ம் வீட்டில் வலுவாக இருப்பதால் சகோதர-சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை அமையும். வி.ஐ.பிகள் பக்க பலமாக இருப்பார்கள். ராசிக்கு 11ல் சனி வலுவாக இருப்பதால் திடீர் பணவரவு, வேற்றுமதத்தினரால் ஆதாயம் கிட்டும். அக்கம்-பக்கத்தாரின் அன்புத்தொல்லைகள் விலகும்.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி கலந்தாலோசிப்பீர்கள். வேலையாட்களை திருப்திபடுத்தும் வகையில் அவர்களின் சம்பளத்தை உயர்த்துவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரித்துப் போவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் வாய்ப்பை நழுவ விடாமல் தக்கவைத்துக் கொள்ளுங்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர் மூலம் லாபம் பார்ப்பார்கள். காய்கறி, பழவகைகளால் ஆதாயமடைவீர்கள். எதையும் முடித்துக் காட்டும் மாதமிது.
.
ராசியான எண்கள்:
ஜூன் 17, 18, 19, 20, 21, 26, 27, 29, ஜூலை 2, 6, 7, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூலை 10, 11, 12ந் தேதி காலை 10 மணி வரை நிதானமாக யோசித்து செயல்படுவது நல்லது.
பரிகாரம்:
செங்கல்பட்டு-காஞ்சிபுரம் பாதையிலுள்ள திருமுக்கூடல் தலத்தில் அருளும் வெங்கடாஜலபதியை தரிசியுங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

தனுசு :

தனுசு:குரு 6ல் மறைந்து உறவினர்கள், நண்பர்களிடையே பகை, வீண் செலவு என்று கொடுத்து வந்த புதன், ஜூன் 16ந் தேதி முதல் சொந்த வீட்டிற்குள் நுழைவதால் எதிலும் வெற்றிதான். குடும்பத்தில் அமைதியும் உண்டாகும். ராசிக்குள் நிற்கும் ராகுவால் வீண் அலைச்சல், சந்தேகம், விரக்தி வரக்கூடும். பிள்ளைகளின் உயர்கல்வியை நினைத்து கொஞ்சம் வருந்துவீர்கள். பூர்வீகச் சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்யுங்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் வழக்குகளில் வெற்றி கிட்டும். வீடு, மனை வாங்குவதிலும், விற்பதிலும் இருந்த தடைகள்  விலகும். பாதியிலேயே நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். கன்னிப் பெண்களுக்கு திருமணப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தரும். 7ல் கேது நிற்பதால் வீண் டென்ஷன், அலைச்சல், சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமை என்று வந்துபோகும். மாணவர்கள் விரும்பிய கோர்ஸில் சேர கொஞ்சம் போராடுவார்கள். ஜூலை 6ந் தேதியிலிருந்து சுக்கிரன் 9ம் வீட்டிற்குள் நுழைவதால் தடுமாற்றம், தாழ்வுமனப்பான்மை நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குழந்தையில்லாதோருக்கு அழகான வாரிசு உருவாகும். சனி பலமாக இருப்பதால் வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வேற்றுமதத்தினரின் நட்பினால் பிள்ளையின் படிப்பிற்கு தகுந்த நல்ல உத்யோகம் கிடைக்கும். அரசு காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசியல்வாதிகள் புதுப் பொறுப்புகள் மேற்கொள்வார்கள்.
வியாபாரத்தில் மறைமுக போட்டியாளர்களை வெல்வீர்கள். பங்குதாரர்களுடன் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கலைத்துறையினருக்கு கற்பனைத்திறன் அதிகரிக்கும். விவசாயிகள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். வறட்சி நீங்கி வளம் பெருகும். தன்னம்பிக்கையுடன் செயல்படும் மாதமிது.
.
ராசியான எண்கள்:
ஜூன் 18, 19, 20, 21, 22, 29, 30, ஜூலை 2, 3, 8, 9, 10.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 15, 16 மற்றும் ஜூலை 12ந் தேதி காலை 10 மணி முதல் 13, 14ந் தேதி மதியம் 1 மணி வரை வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள்.
பரிகாரம்:
திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் பாதையில் தகட்டூர் காசி பைரவரை தரிசித்து வாருங்கள். வயதானவர்களுக்கு செருப்பும், குடையும் வாங்கிக் கொடுங்கள்.


 

 

மகரம் :

மகரம்:இதுவரை 5ல் அமர்ந்து மன உளைச்சலையும், ஏமாற்றங்களையும் தந்த புதன், ஜூன் 16ந் தேதி முதல் 6ல் நுழைவதால் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துங்கள். கணவன்-மனைவி ஒருவரையொருவர் புரிந்து செயல்படுவீர்கள். மகளுக்கு சிறப்பாக கல்யாணத்தை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.  குரு ராசிக்கு 3ல் மறைந்தாலும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் தைரிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வி.ஐ.பிகளைச் சந்தித்து முக்கிய உதவிகளை பெறுவீர்கள். 8ல் செவ்வாய் நிற்பதால் சகோதரருடன் கருத்து வேறுபாடு, சொத்துப் பிரச்னைகள் வரக்கூடும். கன்னிப்பெண்களே வீண் அலைச்சல், தூக்கமின்மை விலகும். பெற்றோரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். தந்தையின் உடல்நிலை சீராகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பணம் இல்லாததால் பாதியிலேயே நின்றுபோன கட்டிடப் பணி முழுமையாகும். அரசியல்வாதிகளுக்கு சகாக்களுக்கு மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்கள் விரும்பும் கல்விப் பிரிவில் சேர்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கறாராக இல்லாமல் நட்பாக இருந்தால், அவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் வஞ்சகம் புரிந்த சக ஊழியர்கள் இனி நட்புக்கரம் நீட்டுவார்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலை வாய்ப்பு தேடி வரும். மேலதிகாரியைப்பற்றி குறை கூறவேண்டாம். கலைத்துறையினர் திறமைகள் வெளிப்படும். மூத்த கலைஞர்களின் பாராட்டுதலைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். காய்கறி, பயிறு வகைகளால் ஆதாயம் அடைவார்கள். தளராத மனதால் தடைகளையும் தகர்த்தெரியும் மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 15, 16, 22, 23, 24, 25, ஜூலை 2, 3, 4, 5, 9, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 17, 18 மற்றும் ஜூலை 14ந் தேதி மதியம் 1 மணி முதல் 15, 16ந் தேதி மதியம் 3 மணி வரை காரியத்தடைகள், அலைச்சல் ஏற்படும்.
பரிகாரம்:
திருச்சிக்கு அருகேயுள்ள சமயபுரம் மாரியம்மனை வணங்குங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.

 

 

கும்பம் :

கும்பம்:புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மனதைரியம் பிறக்கும். செல்வாக்கு உயரும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகள் கல்யாணத்தை சீரும், சிறப்புமாக நடத்தி முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். 5ல் சூரியன், கேது நிற்பதால் மனைவிக்கு கர்ப்பச் சிதைவு, உடல்நலக்குறைவு வரக்கூடும். ராசிக்கு 2ல் குரு சாதகமாக இருப்பதால் சகோதரர்கள் ஒத்துழைப்பார்கள். சொத்துப் பிரச்னைகளில் சுமுக நிலை காணப்படும். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். கன்னிப் பெண்களே கல்யாணத்தடைகள் நீங்கும். காதல் விவகாரங்களில் உஷாராக இருங்கள். 7ல் செவ்வாய் நின்று ராசியை பார்ப்பதால் முன்கோபம், வீண் வாக்குவாதம் வரக்கூடும். ஆனால் நிலம், வீடு வாங்குவது&விற்பது லாபகரமாக அமையும். 6ல் மறைந்திருக்கும் சுக்கிரன் ஜூலை 6ந் தேதி முதல் 7ம் வீட்டிற்குள் நுழைவதால் பிரிந்திருக்கும் கணவன்&மனைவி ஒன்று சேருவீர்கள். 11ல் ராகு வலுவாக இருப்பதால் வேற்று மதத்தினர், மொழியினரால் உதவியுண்டு. அஷ்டமத்துச் சனி தொடர்வதால் மறதி, பணம் தொலைதல் ஏற்படும்.
அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுங்கள்.  மாணவர்கள் விரும்பிய பாடப் பிரிவில்
சேர்வார்கள்.  வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபத்தைக் கூட்டுவீர்கள். உத்யோகத்தில் தேங்கிக் கிடக்கும் பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள். மேலதிகாரி சொல்லும் தன் குடும்ப விஷயங்களை, சக ஊழியர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கலைஞர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். விவசாயிகளே, பக்கத்து நிலத்துக்காரருடன் இருந்த தகறாரெல்லாம் சுமுகமாக முடியும். நீர்பாசன வசதி அதிகரிக்கும். புதிய அணுகுமுறையால் நினைத்ததை முடிக்கும்
மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 15, 16, 22, 23, 24, 25, ஜூலை 4, 5, 6, 7, 12, 13, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 19, 20, 21ந் தேதி காலை 10 மணி வரை மற்றும் ஜூலை 16ந் தேதி மதியம் 3 மணி முதல் கவனமாக செயல்படப் பாருங்கள்.
பரிகாரம்:
பிள்ளையார்பட்டி விநாயகரை வணங்குங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு உதவுங்கள்.

 

மீனம் :

மீனம்:ராசிக்கு 6ம் வீட்டில் செவ்வாய் சாதகமாக இருப்பதால் புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். தைரியமாக முடிவெடுப்பீர்கள். வீட்டில் குதூகலத்துக்கு குறைவிருக்காது. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றி ஆழ்ந்து யோசிப்பீர்கள். ஜென்ம குருவால் மன உளைச்சல், காரியத்தடைகள் வரக்கூடும். ஜூலை 5ந் தேதி வரை 5ல் நிற்கும் சுக்கிரனால் எதிலும் வெற்றி கிட்டும். கையில் காசு, பணம் புரளும். ஆனால் ஜூலை 6ந் தேதி முதல் சுக்கிரன் 6ல் நுழைவதால் கணவன்-மனைவிக்குள் வீண் விவாதங்கள், விபத்து, வாகனச் செலவுகள் வந்துபோகும். முன்கோபம், டென்ஷன் அதிகரிக்கும்.
புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். தந்தைவழி உறவினர்களால் பயனடைவீர்கள். 4ல் கேது நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவு, அவருடன் வீண் விவாதங்கள் வரக்கூடும். எதிலும் நிதானமாக யோசித்து செயல்படுங்கள். வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போவீர்கள். கன்னிப் பெண்களுக்கு வயிற்றுவலி, தூக்கமின்மை வந்து விலகும். பெற்றோரின் பேச்சைக் கேட்டு செயல்படுவார்கள். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவார்கள். யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் விரும்பிய கோர்ஸில் சேர போராட வேண்டியிருக்கும்.
வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. வேலையாட்களால் மனஸ்தாபங்கள் வந்து
போகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவி வந்த மனக்கசப்புகள் விலகும். 10ல் ராகு நிற்பதால் உத்யோகத்தில் வேலைச்சுமை வாட்டும். மேலதிகாரி சில சமயங்களில் குறைபட்டுக் கொள்வார். இதைவிட அதிக சம்பளத்துடன் வேறு வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து ஏற்பது நல்லது. கலைத்துறையினருக்கு பழைய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். விவசாயிகளுக்கு பழைய கடன் தீரும். தென்னை, வாழை பயிர்களால் ஆதாயமடைவீர்கள். மனநிறைவுடன் காணப்படும் மாதமிது..
ராசியான எண்கள்:
ஜூன் 17, 18, 19, 20, 26, 27, 29, ஜூலை 6, 11, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
ஜூன் 21ந் தேதி காலை 10 மணி முதல் 22, 23ந் தேதி மதியம் 2.30 மணி வரை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
பரிகாரம்:
மதுரைக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றம் முருகனை தரிசியுங்கள். சுமை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.


0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget