தனது பிறந்த நாளையொட்டி 2 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார் த்ரிஷா  .

த்ரிஷாவுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள். இதையொட்டி சென்னையில் உள்ள உதவும் கரங்கள் இல்லத்துக்கு அவர் சென்றார். அங்குள்ள 2 குழந்தைகளை அவர் தத்தெடுத்துள்ளார்.
இது பற்றி த்ரிஷா கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாளை பிறர்க்கு உதவும் வகையில் கொண்டாட விரும்புவேன். இந்த முறை உதவும் கரங்கள் இல்லத்தில் இருந்த 400 குழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடினேன். அந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக இருந்தது. அப்போதே ஒரு முடிவை எடுத்தேன். அங்கிருந்த இரு குழந்தைகளை தத்தெடுப்பதுதான் அது. மனநலம் குன்றிய 6 வயது சிறுமி மற்றும் 4 மாத ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளேன். அவர்களுக்கான அத்தனை தேவைகளையும் பூர்த¢தி செய்வேன். இது என்னால் முடிந்த சிறு உதவியாக நினைக்கிறேன்.

வால்பையன் கமெண்ட் : ஒவ்வொரு நடிகையும்,நடிகரும் இதுமாதிரி செய்தால் அநாதை குழந்தைகளின் எண்ணிக்கை குறையுமே?
நல்ல மனம் வாழ்க?
நாடு போற்ற வாழ்க?

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget