இதயத்தின் அமைப்பு பற்றியும், அதன் இயக்கம் பற்றியும் பொதுவாக நமக்கு தெரிந்திருக்கும்.பெரும்பாலும் பிறக்கும் பொது எல்லா குழந்தைகளும் ஆரோகியமான இதயத்துடன் தான் பிறக்கிறார்கள்.அவர்களின் இதயத்தின் அமைப்பிலோ அல்லது செயல்பாட்டிலோ எந்தவித குறைபாடும் இருப்பதில்லை.
ஆனால் சில குழந்தைகள் மட்டும் பிறக்கும் போதே இதய கோளாறுடன் பிறக்கின்றன. பிறவியிலேயே குழந்தைகளுக்கு இத்தகைய இதய கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கபடவில்லை என்றாலும் சில அடிப்படை காரணங்களை மருத்துவ உலகம் சொல்கிறது.
       மரபு ரீதியாக நமது பண்புகளை நிர்ணயிக்கும் குரோமோசோம்களின் அமைப்பில்
இயற்கையாகவே குறைபாடுகள் இருந்தால் பிறக்கும்போதே குழந்தைகளுக்கு உருக்குலைந்த இதயம் உருவாகக்கூடும். தாய்மை பேரு அடைந்த சில பெண்கள்
கருவுற்ற தொடக்க நிலையில் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி பலவகையான நோய்களுக்கு இலக்காக நேரிடும்.இந்த வைரஸானது கருவில் வளரும் இதயத்தையும் பாதித்து அதன் அமைப்பையோ அல்லது செயல்பாட்டையோ சிதைத்து விடும்.
எனவே பெண்கள் கருவுற்றா தொடக்க நிலையில் வைரஸ்களால் ஏற்படும் பலவகையான தொற்று நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம்.கருவின் ஆரம்பத்தில் கர்ப்பிணி பெண்கள் ருபெல்லா என்ற german
தட்டம்மை நோய்க்கு ஆளானால் கருவானது பல வகைகளில் பாதிக்கப்படும்.அதோடு
இந்த நோய் இதயத்தையும் உருக்குலைத்து விடுகிறது.இந்நோயை தாய்மை பருவ
தட்டம்மை என்றும் சொல்வதுண்டு.
  பரம்பரை காரணமாகவும் பிறைவியிலேயே இதயக் குறைபாடு நோய்களோடு குழந்தைகள் பிறக்கலாம்.ஒரு குடும்பத்தில் பெற்றோரோ அல்லது அவர்களின் முன்னோர்களோ இதயகுறைபாடால் பாதிக்கப்பட்டுரிந்தால் அந்த குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள்,ஆரோக்கியமான குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளை விட
இதய குறைபாட்டு நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.
   கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் அறியாமல் செய்யும் சில தவறுகள் கூட இதற்க்கு காரணமாக அமைந்து விடுகின்றன.கருவுற்றா தொடக்க காலங்களில் தாய்மார்கள்
சாதாரண உடல் பிரச்சினைகளுக்காக மருத்துவர்களின் தக்க அறிவுரையும் பரிந்துரையும் இல்லாமல் தாங்களாகவே பல வகையான மருந்துகளை எடுத்து கொள்கிறார்கள்,இந்த மாத்திரைகளை கட்டுப்பாட்டின்ரீ பயன்படுத்தும் போது அது கருவில் உள்ள குழந்தையின் இதயத்தையும் கடுமையாக பாதிக்கும்.
    கர்ப்ப காலங்களில் பெண்கள் அளவுக்கு அதிகமாக xray கதிர்விச்சுக்கு ஆளானாலும்
கருவில் உள்ள குழந்தையின் இதயத்தில் உருக்குலைவு ஏற்படுகிறது இவ்வாறு இதய கோளாறுகளுடன் பிறக்கும் குழந்தைகள் மூன்றில் ஒரு பங்கினர் தங்களது முதலாண்டு முடிவதற்குள் இறந்து விடுகிறார்கள்.
    இதய கோளாறுகளில் பல வகைகள் உள்ளன.
எனவே கருவுற்றா தாய்மார்கள் கவனமாக தங்களையும் தங்கள் குழந்தைகளையும்
காத்து கொள்ளவும்.
           மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த வித மருந்துகளும் உட்கொள்ள கூடாது .

4 comments:

  1. உபயோகமான பதிவு. நன்றி

  1. NANTRI THANGAMANI SIR

  1. நல்ல பயனுள்ள பதிவு!!

  1. NANTRI MRS.MENAGASATHIA MADEM

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget