சந்திரனுக்கு 6 ,7 ,8 ல் சுப கிரகங்கள் இருந்தால் சந்திர அதி யோகம்(சுபம்:புதன்,குரு,சுக்கிரன்).
சந்திர அதி யோகத்தில் பிறந்தவர்கள் அரசனுக்கு நிகரான வாழ்வு அமையும்.தீர்காயுள்,பகைவர்களை வெற்றி கொள்வர்.ஆரோக்கிய மணவாழ்வும்,வாழ்வில் சுபமுடன் வாழ்வார்கள்.
   நான் சில ஜாதகங்களில் சந்திர அதியோகம் அமைந்து இருந்தும்
 யோக பலனை அனுபவிக்க முடியாமல் உள்ள ஜாதகங்களை பார்த்தேன்
ஏன் இவர்களுக்கு யோகம் அமையவில்லை என்று எண்ணினேன்.
புலிப்பாணி முனிவரின் பாடல்களை பார்த்தபோது விடை கிடைத்தது.
        ஆரப்பாயின் மொன்று அரிய கேளு
         அப்பனே அம்புலிக்கு ஆறேலேட்டில்
         சிறப்பாக மேதினில் நலமாய் வாழ்வான்
        பூரப்பா பேய் பூதமா வசியமாகும்
        பூதலத்தில் அரசனிடம் சேனை காப்பான்
       கூறப்பாகுடி நாதன் கேட்டானால்
       குமரனுக்கு யோகங்கள் குலைந்து போச்சே!
லக்னாதிபதி  பலம் இழந்து விட்டால் யோகத்தை அனுபவிக்க முடியாது .இது நடை முறையில் சரியாகத்தான் உள்ளது.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget