டெல்லி: நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் மத்திய அரசு வழங்கவுள்ள தேசிய அடையாள அட்டை 'ஆதார்' என்ற பெயரில் வழங்கப்படவுள்ளது.

இந்த அடையாள அட்டைக்கான புதிய சின்னமும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தேசிய அளவில் போட்டி நடத்தப்பட்டு இந்த சின்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சின்னத்தில் சூரியனும், விரல் ரேகையும் இடம் பெற்றுள்ளது.
திட்டக் கமிஷனின் கீழ் இயங்கும் தேசிய அடையாள அட்டை ஆணையகத்தின் தலைவர் நந்தன் நிலேகனி இதனை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், இந்த அடையாள அட்டை 16 இலக்க அடையாள எண் கொண்டதாக இருக்கும்.
இந்த அடையாள அட்டை வினியோகம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும். 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இவை நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் வினியோகிக்கப்பட்டுவிடும் என்றார்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget